Tuesday, September 27, 2011

மடாதிபதிகள், ஞானிகள் ஏன் சமூகத்தின் தீமைகளை ஒழிக்கவில்லை?


கண்ணனை நேருக்கு நேர் சந்தித்து அவன் கடவுள் என்பதை அறிந்தும், விசுவரூப தரிசனத்தை கண்டும் திருந்தாமல் கவுரவர்கள் போரில் உயிரை விட்டனர்

பீஷ்ம,துரோணாதிகள் பெரிய ஞானிகள். சிறந்த ஆன்மிகவாதிகள்.ஆனால் கடவுள் தரிசனத்தை கண்டபின்னரும் செஞ்சோற்றுகடன், தனிமனித வெறுப்பு ஆகிய குனாதிசயங்களை கொண்டிருந்தனர்.

பாண்டவர்கள் மிகபெரும் பக்திமான்கள்.தனிப்பட்ட அளவில் நல்லவர்கள்.ஆனால் அவர்களிடமும் பிழைகள் இருந்தன.கர்ணனை தேரோட்டி மகன் என்பதால் வெறுத்தார்கள்.மனைவியை வைத்து சூதாடினார்கள்.இந்த காலத்தில் இப்படி ஒருவன் செய்தால் அவனை கடுமையாக வைவோம்.ஆனால் இதை காரணமாக வைத்து கண்ணன் அவர்களை வெறுக்கவில்லை,அவர்கள் ஆபத்தில் இருந்தபோது உதவ தயங்கவில்லை.

வில்லன், ஹீரோ, கவுரவ வேஷம் என எந்த ரோலில் உள்ளவர்களாக இருந்தாலும் குற்றம்,குறை உள்ள மனிதர்களாக தான் உள்ளனர்.பக்தியை வைத்து அவர்களில் நல்லவர்கள் தம்மை செப்பனிட்டு கொள்ள முயல்கின்றனர்.தீயவர்கள் முனைவதில்லை.அதே சமயம் என்ன முயன்றாலும் யாராலும் எந்த குற்றமும் இல்லாத மனிதனாக மாற இயலுவதில்லை.

ஆழ்வார்கள்,ஆச்சாரியார்கள் ஆகியோரை நாம் "இத்தனை நல்லவர்கள் ஏன் சமூக குற்றங்களை கண்டுகொள்லாமல் இருந்தார்கள்/" என வியக்கிறோம்.

ஆனால் அவர்களோ தம்மை உத்தமர்களாக கருதுவதில்லை.கடைந்தெடுத்த பாவியாக தான் கருதுகின்றனர்.தம் பாவங்களில் இருந்து தம்மை விடுவிக்க இறைவனை வேண்டி அழுகின்றனர்

மணவாள மாமுனிகள் சொல்வதை பாருங்கள்

இராமானுசா! உயர்ந்த உத்தமமான ஆசார்யர்களான ஆளவந்தார், கூரத்தாழ்வான், பராசர பட்டர் போன்றோர் வெளிப்படுத்திய சுய கண்டன உணர்வுகள் அனைத்தையும் முழுமையாக நான் சொந்தமாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால், யதிராசனே! உம்முடைய கருணைக்கு நானே பொருத்தமானவன்.

இராமானுசா, ஆசாரியனே! இந்த உலகிலே தண்டனைக்குரிய, குற்றமுடைய, உபயோகமற்ற குணங்களையெல்லாம் பொருந்திய ஒருவன் நான் ஒருவனாகவே இருக்கமுடியும். என்னைத்தவிர வேறு எவரும் இதற்க்குப் பொருத்தமாகவே முடியாது. ஆகையினாலேயே, என்னுடைய இந்த குற்றங்களிலிருந்தும், தடைகளிலிருந்தும் என்னை நீக்க உம்முடைய கருண ஒன்றே பொருத்தமானது என்று முடிவுற்றேன். அக்கருணையால் என்னை காக்க வேண்டுகிறேன்.

சந்யாசிகளின் அரசனே! மூன்று விதமான தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களினால் என் உடம்பு துன்பமும், வேதனையும், நோய்களையும் அடைகிறது. என்னால் அத்துன்பங்களைத் தாங்கமுடியவில்லை. இருப்பினும், இவ்வுடலை விட்டு நீங்க எனக்கு எனக்கு எந்த விருப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் நான் இந்த உடலை நன்கு பேணிப் பாதுகாக்கிறேனே! நான் குவித்து வைத்திருக்கும் என்னற்ற பாபங்களே என்னுடைய இந்த மனநிலைக்குக் காரணம். எந்தோ பரிதாபம்! என்னுடைய பரமாசாரியனே! தாப த்ரயங்களினால் உண்டாகும் துன்பங்களிலிருந்து நான் விடுபட என் பாபங்களையெல்லாம் அகற்ற இறைஞ்சுகிறேன்.

யதிராஜா! தங்கள் முன் நிற்க்கவும் நான் தகுதியற்றவன். எங்கனம் பிறவிக் குருடனைப் தன் முன்னே உள்ளவற்றை அறியும் திறன் இல்லாதிருக்கிறனோ, அங்கனம் நானும் அந்தர்யாமியாய் எல்லாவற்றின் உள்ளும் புறமும் நிறைந்து இருக்கும் எம்பெருமானை அறியத் திறன் அற்றவனாயிருக்கிறேன். எப்பொழுதும் மோகத்திற்க்குக் கட்டுப் பட்டவனாய் உள்ளேன். என்னே பரிதாபம். தங்கள் முன் இங்கனம் நிற்க யாதொரு தகுதியுமற்று இருக்கிறேனே!



மணவாளமாமுனி போன்ற மிகபெரும் மகானே தன்னை பாவியாக கருதினார் என்றால் மற்ற சாமியார்கள்,மடாதிபதிகளை பற்றி கூறவேண்டுமா?

நாம் அனைவரும் தவறுகள் இழைக்கும் சராசரி மனிதர்கள்.நம்மை காக்கும் வலிமை இறைவனிடம் உள்ளது.அவன் நம்மை காப்பது நாம் செய்யும் தவத்தால், யோகத்தால் அல்ல.அவனது அளப்பரிய கருணையால் மட்டுமே நம்மை காக்கிறான்.அந்த கருனைக்கு நாம் தகுதியானவர்கள் அல்ல எனினும்...

அதனால் சாமியார்கள் என்பதால் அவர்கள் புடம் போட்ட தங்கமாக இருக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.அத்தகைய மனிதன் யாரும் உலகில் இல்லை.சுயகண்டனம்



--
செல்வன்


Sunday, September 25, 2011

மரணதன்டனைகெதிராக மீண்டும் ஒரு பிரெஞ்சு புரட்சி

ட்ராய் டேவிஸ் எனும் காப் கில்லர் சென்ற வாரம் விஷ ஊசி போட்டு கொல்லபட்டான்.அவனை கொல்வதற்குள் மரணதண்டனை எதிர்ப்பாளர்களும், மனித உரிமை மகாத்மாக்களும் ஆடிய நாடகங்களுக்கு ஆஸ்கார் விருதே தரலாம்.

ட்ராய் டேவிஸின் பின்புலம்

1989ல் பர்கர் கிங் எனும் துரித உணவக வளாகத்தில் ட்ராய் டேவிஸும் அவன் கூட்டாளி ஒருவனும் ஹோம்லஸ் ஒருவரை போட்டு தாக்கி கொண்டிருந்தார்கள்.அதை கண்ட காவலர் மார்க் மெக்பில் அடிவாங்கிகொண்டிருந்த ஹோம்லஸ் நபரை காக்க முயன்றார்.உடனே ட்ராய் டேவிஸ் தன் துப்பாக்கியை எடுத்து ஆபிசரை முகத்திலும், மார்பிலும் சுட்டான்.இதற்கும் காவலர் மார்க் மெக்பில் தன் துப்பாக்கியை உருவவோ,ட்ராய் டேவிஸை தாக்கவோ கூட முனையவில்லை. இது ஒரு கோல்ட் பிளட்டட் மர்டர்.

இந்த சம்பவம் நடந்ததற்கு 34 நேரடி சாட்சிகள் உண்டு.சாட்சிகள் என்பது சாதாரன சாட்சிகள் அல்ல.கொலை நடந்தது ட்ராய் டேவிஸின் வீட்டருகே என்பதால் சாட்சிகளில் பலருக்கும் ட்ராய் டேவிஸை நன்கு தெரியும்.அதில் மூன்று விமானபடை அதிகாரிகளும் அடக்கம்.இதுபோக ஆபிசர் மார்க் மெக்பில்லை சுட்ட துப்பாக்கி குண்டுகள் ட்ராய் டேவிஸின் துப்பாக்கியில் இருந்தவை என்பதும் ஆதாரபூர்வமாக நிருபிக்கபட்டது.எப்படி எனில் இதற்கு முன் ட்ராய் டேவிஸ் அதே துப்பாக்கியை பயன்படுத்தி இன்னொருவரை கொல்ல முயன்றான்.அந்த வழக்கில் அதே துப்பாகியும், அதில் இருந்த குண்டுகளும் ஆதாரமாக பயன்பட்டது.

இந்த காரணங்களால் ட்ராய் டேவிஸ் குற்றவாளி என்பதை நிருபிக்க நீதிமன்றத்துக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.7 கருப்பின ஜூரர்களும், 5 வெள்ளை இன ஜூரர்களும் அடங்கிய நீதிமன்றம் ட்ராய் டேவிஸுக்கு மரணதண்டனை விதித்தது.

ட்ராய் டேவிஸ் கருப்பினம்.இறந்த காவலர் வெள்லையர்.அதனால் உடனே இனவெறி எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் வழக்கமான மனித உரிமை ஆதரவு இயக்கங்கள் ட்ராய் டேவிஸுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின.அமெரிக்க மக்களில் 80% பேர் மரனதண்டனை ஆதரவாளர்கள்.அதனால் ட்ராய் டேவிஸை காப்பாற்ற வேறு விதமான குயுக்திகளில் இந்த இயக்கங்கள் இறங்கின.அவர்கள் எடுத்து வைத்த வாதம்

1) ட்ராய் டேவிஸ் நிரபராதி

2) ட்ராய் டேவிசுக்கு மரணதண்டனை அளிப்பது இனவெறி

இந்த வாதங்களை மட்டும் வைத்துகொண்டு இந்த கோமாளிகள் அமெரிக்காவின் ஒவ்வொரு அப்பீல் கோர்ட்டாக ஏறி தோற்றார்கள்.சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு நடந்து அனைத்து நீதிபதிகளும் ஏகமனதாக ட்ராய்டேவிஸ் குற்ரவாளி எனவும் மரணதண்டனை விதிக்கபட்டது சரியே எனவும் தீர்ப்பளித்தார்கள்.

அதன்பின் கருணை மனு போட்டுவிட்டு ட்ராய் டேவிஸ் நிரபராதி என நாடகம் ஆடினார்கள்.34 சாட்சிகளில் 7 பேர் பல்டி அடித்துவிட்டதாக மீண்டும் சுப்ரீம் கோர்ட் போனார்கள்.சுப்ரீம் கோர்ட் அந்த வழக்கை மீண்டும் எடுத்து நடத்த உத்தரவிட்டது.அந்த 7 சாட்சிகளில் இருவரை கோர்ட்டுக்கு வந்திருந்தும் கூண்டில் ஏற்ற ட்ராய் டெவிஸின் வழக்கறிஞர் மறுத்துவிட்டார்.கூண்டில் ஏற்ரபடாத சாட்சிகளில் ட்ராய் டேவிஸால் தாக்கபட்ட ஹோம்லஸ் நபரும் அடக்கம்.அவர் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்ல தயாராக இருந்தும் அவரை கூண்டில் ஏற்ற ட்ராய் டேவிஸின் வழக்கறிஞர் விரும்பவில்லை.

கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்த 7 பேரில் ஐந்து பேர் தாம் எந்த பல்டியும் அடிக்கவில்லை என்பதை தெரிவித்தனர்.மீதமுள்ல இரண்டுபேரின் சாட்சிகள் சந்தேகத்துக்கு இடமானவை என முன்பே கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.அவர்களை மீண்டும் கோர்ட்டில் ஏற்றி விசாரித்து தண்டனையை தாமதபடுத்தியதுதான் இந்த முற்போக்குவாதிஅக்ளின் நோக்கமே ஒழிய வேறு எதுவும் இல்லை.அதனால் இந்த வழக்கை மீண்டும் கோர்ட்டு தள்ளுபடி செய்து ட்ராய் டெவிஸின் மரனதண்டனையை ஊர்ஜிதம் செய்தது.

அதன்பின் இந்த முற்போக்குவாதிகள் ட்ராய் டெவிஸை விடுவிக்க மிகபெரும் ஊடகயுத்தத்தை துவக்கினர். "இது இனவெறி படுகொலை, ட்ராய் டேவிஸ் கருப்பன் என்பதால் கொல்லபடுகிரான்" என சொல்லி ஏதோ வீதியில் போய்கொண்டிருந்த அப்பாவி கருப்பினத்தவர் ஒருவரை பிடித்து தூக்கில் போடபட்டது போல் பிரமையை இந்த முற்போக்கு,இடதுசாரி,லிபரல் ஊடகங்கள் உண்டாக்கின."7 பேர் பலடி அடித்துவிட்டார்கள்" என திரும்ப, திரும்ப ஊடகங்கள் எழுதினவே ஒழிய அந்த வழக்கே தள்ளுபடி செய்யபட்டது, 7 ஜூரர்கள் கருப்பர்களாக இருந்தௌ என எதையும் அவர்கள் எழுதவில்லை.

"ஐ ஏம் ட்ராய் டேவிஸ்" என வாசகங்கள் எழுதப்பட்ட டிசர்ட்டுகளை சேகுவேரா டிசர்ட் ரேஞ்சுக்கு விற்று தீர்த்தன.ஐரோப்பாவில், லண்டனில் அவற்ரை அணிந்துகொண்டு விவரம் தெரியாத கல்லூரி இளைஞர்கள், இடதுசாரிகள் ஆகியோர் அமெரிக்க தூதரகங்கள் முன்னே ஊர்வலம் வந்தனர். அம்னெஸ்டி இன்டெர்ன்நேஷனலின் தலைவரே போராட வீதியில் இறங்கி அமெரிக்க தூதரகத்துக்கு எதிரே போராட்டம் நடத்தினார். போப் பெனடிக்ட், முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் முதலானோரிடம் ட்ராய் டேவிஸை விடுவிக்க கோரும் பெட்டிஷன்களில் கையெழுத்து வாங்கபட்டது.இதை எல்லாம் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி ஏதோ பிரெஞ்சு புரட்சியே மீண்டும் மண்ணில் நடப்பது போன்ர பிரமையை உண்டாக்கின.

Troy+Davis+17.jpg

2966971955_2cf98fb353.jpg

இந்த போராட்டங்களில் கலந்துகொண்ட அமெரிக்க லிபரல்கள் "நான் அமெரிக்கன் என சொல்ல வெட்கபடுகிறேன்" என்பது போன்ர கோஷங்களை எழுப்பி தாம் தேசதுரோகிகள் என உலகமே அறிந்த ரகசியத்தை மீண்டும் பகிரங்கமாக முழக்கமாக எழுப்பிகொண்டு ஊர்வலம் போனார்கள்."ட்ராய் டெவிஸை கொல்ல இருப்பதால் ஜார்ஜியாவில் தயாரிக்கபடும் எந்த பொருளையும் வாங்காதீர்கள்" என ஜார்ஜியாவை சேர்ந்த முற்போக்குவியாதிகளே பேட்டி கொடுத்து கொண்டிருந்தார்கள்.லிபரல் ஊடகங்கள் "விஷ ஊசி போடுவது எப்படி உலகிலேயே வலிமிகுந்த சாவு" என்பதை சில நடிகர்களை வைத்து நேரடியாக டிவியில் டெமான்ஸ்டிரேட் செய்து காட்டினார்கள்.அதில் கருனையே உருவான மரணதண்டனை கைதி ஒருவரும், விஜயகாந்த் படத்தில் வருவது போன்ர ரவுடிகளை போன்ர காவலர்களும் காட்டபட்டனர்.

ட்ராய் டேவிஸின் மரண நாள் நெருங்க,நெருங்க இவர்களின் ஹிஸ்டீரியா உச்சிக்கு ஏறியது.சிரைசாலை காவலர்களை ஸ்ட்ரைக் செய்ய சொல்லி அழைப்பு விடுப்பது, அன்று காவலர் அனைவரையும் லீவு எடுக்க சொல்லுவது, ட்ராய் டெவிஸின் மரணதண்டனையை உறுதி செய்த ஜூரர்களின் முகவரிகளை இனையத்தில் ஏற்றுவது என்ர ரேஞ்சுக்கு சென்ரார்கள்.

இது அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதத்தில் கொல்லபபட்ட காவலர் மார்க் மெக்பில்லின் குடும்பத்தை கேவலமாக நரமாமிச காட்டுமிராண்டிகள் போல் சித்தரித்து பிரச்சாரம் நடக்க துவங்கியது.அதற்கு காரணம் கொல்லபட்ட காவலரின் குடும்பத்தினர் ட்ராய் டெவிஸை விடுவிக்க கோரும் பெட்ட்சிஷனில் கையெழுத்திட மறுத்ததுடன் "ட்ராய் டெவிஸுக்கு மரணதண்டனை வழங்கபட்டே ஆகவேண்டும்" எனும் நிலையிலிருந்து கடைசிவரை பின்வாங்கவில்லை என்பதுதான்.

"இராக்கில் பல லட்சம் பேரை கொன்ற புஷ்,செனியை கொல்லும்படி ஏன் நீங்கள் கோரிக்கை விடுக்கவில்லை" போன்ர அதிபுத்திசாலி கேள்விகளை கொல்லபட்ட காவலரின் குடும்பத்தை நோக்கி எழுப்பினார் நடிகர் அலெக் பால்ட்வின்.

alec-baldwin-tweet_504x263.png

இது அனைத்தையும் கண்டு துளியும் கலங்காமல் உறுதியாக நின்றது ஜார்ஜிய அரசு."எங்கள் மாநில விவகாரத்தில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை" என்பது சுதந்திரத்தை விரும்பும் ஜார்ஜியர்களின் தாரகமந்திரம்.இடதுசாரிகள் ஒப்பாரி ஊர்வலம் நடத்திய ப்ரிட்டனிலும் கூட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் மரணதண்டனைக்கு ஆதரவாகவே உள்லனர்.ஆனால் மக்கள் விருப்பத்தை தாண்டி பிளாக்மெயில் டெக்னிக்குகளால் இங்கிலாந்தில் மரணதண்டனை ஒழிக்கபட்டது.ஆக மரணதண்டனை ஒழிப்பாலர்கள் திரிப்பதுபோல் மரணதண்டனை அளிப்பது சர்வாதிகாரமல்ல, அளிக்காமல் இருப்பதுதான் மக்கள் கருத்தை புறக்கணிக்கும் சர்வாதிகாரம்.இது ஐரோப்பாவில் வேலை செய்யலாம்.ஆனால் சுதந்திரத்தை விரும்பும் ஜார்ஜியாவில் வேலை செய்யாது.

ஆக, அனைத்து ஒப்பாரிகளையும் தாண்டி ட்ராய் டேவிஸ் சென்ற வாரம் விஷ ஊசி போட்டு கொல்லபட்டான்.

அவன் கொல்லபட்ட சிறை முன் (கண்ணில் கண்ணீரே வராமல்) அழுத மனித உரிமை ஆர்வலர்கள் "அடுத்த கைதியை கொல்ல முற்படும்போது மீண்டும் போராட போவதாக" உறுதிமொழி எடுத்தவாறு தம் வீடுகளுக்கு சென்றார்கள்.

தொடரும்.....*

*(கட்டுரை அல்ல மரணதண்டனை எதிர்ப்பு போராட்டம்)


Tuesday, September 20, 2011

கூடங்குளம்-- அத்தியாவசியமா, ஆபத்தா?


அதீதம் இதழில் கூடங்குளம் குறித்து நான் எழுதிய கட்டுரை

கூடங்குளம்: அத்தியாவசியமா, ஆபத்தா?

reactor_533f.jpg

கூடங்குளம் அணுமின் நிலையம் மீண்டும் சர்ச்சைகுள்ளாகி இருக்கிறது.முதல்வர்,எதிர்கட்சி தலைவர் உட்பட பலரும் இதை எதிர்த்துள்ளார்கள். அந்த ஊர் மக்களும் இதை எதிர்க்கிறார்கள்.சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டு போராடுவதாக தெரிகிறது.மேதா பட்கர், அருந்ததி ராய் உட்பட பிற சுற்றுபுற சூழலியலாலர்களும் இதில் களமிறங்கலாம் என தெரிகிறது.இந்த சூழலில் இந்த அணுமின் நிலையம் தேவையா என ஆராயலாம்.

மின்சாரம் நம் நாட்டுக்கு தேவை.நம் நாட்டில் கடும் மின் தட்டுபாடு உண்டு.இந்த சூழலில் "இந்த வகை மின்சாரம் நமக்கு வேண்டாம், அது வேண்டும்" என தேர்ந்தெடுக்கும் நிலையில் நாம் இல்லை.நமக்கான தேர்வுகள் வெகு சிலவே.அதனால் அனைத்து வகை மின்சாரத்தையும் ஏற்கும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.எதையும் தள்ளும் நிலையில் இல்லை.

அனல் மின்சாரம், புனல் மின்சாரம்,அணு மின்சாரம் போன்றவை பாரம்பரிய மின்சார தயாரிப்பு முறைகள்.இதில் நீரிலிருந்து எடுக்கபடும் மின்சாரம் நதிநீரை அடிப்படையாக கொண்டது.நம் நதிகள் பலவும் மழைநீரை அடிப்படையாக கொண்டவை.மழை வராவிடில் மின்சாரம் நின்றுவிடும்.அதனால் கோடையில் நாட்டில் கடும் மின் தட்டுபாடு ஏற்படுகிறது.

புனல் மின்சாரம் எடுக்க நிலக்கரியை வெட்டி எடுத்து அல்லது இறக்குமதி செய்து எரித்து மின்சாரம் எடுக்கவேண்டும்.சுற்றுசூழல் இயக்கங்கள் உலகெங்கும் இதை எதிர்த்து வருகின்றன.இவ்வகை மின்சாரத்தால் கரியமலவாயு அதிகரிக்கும்,புகை வந்து மாசுபடும் என்ற குற்றசாட்டுகள் உண்டு.ஆனால் இதை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்பது என் கருத்து.இந்தியாவில் சுமார் 70% மின்சாரம் நிலக்கரி மூலம் தான் கிடைக்கிறது.இதை எத்தனை தூரம் விரிவாக்க இயலும் என்பது கேள்விக்குரியது.காரணம் நிலக்கரி எல்லா மாநிலங்களிலும் கிடைப்பதில்லை.பெரும் தொலைவுகளுக்கு நிலக்கரியை கொண்டு செல்ல நிறைய செலவு ஆகிறது.அதனால் இந்தியா தன் நிலக்கரியில் சுமார் 12% இறக்குமதி செய்கிறது.

காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் ஆகியவை தற்போது பிரபலம் ஆகி வருகின்றன.இவற்றால் ஒரு எல்லை வரைதான் உற்பத்தியை அளிக்க இயலுமே ஒழிய பெருமளவில் நம் நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வலிமை இவற்றுக்கு இல்லை.காற்று வந்தால் தான் மின்சாரம் என்பது காற்றாலைகளின் நிலை.சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க யூனிட் ஒன்றுக்கு 15 முதல் 30 ரூபாய் வரை செலவு ஆகிறது.இது வழக்கமான உற்பத்தி செலவை விட மூன்று நான்கு மடங்கு அதிகம்.ஏழைநாட்டின் தேவைக்கு ஏற்ற மின் உற்பத்தி முறை அல்ல இது.

ஆக அணுமின்சாரம் தான் நம் நாட்டின் மிந்தேவையை பூர்த்தி செய்யும் வலிமை வாய்ந்தது.ஆனால் இது பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது.அதற்கான விடைகளை பார்ப்போம்.

கூடங்குளம் பகுதி பூகம்பம் வராத நிலபகுதி - ஸோன் 2.ஜப்பானில் பூகம்பம் வந்தது போல இங்கே பூகம்பம் வரும் வாய்ப்பு இல்லை.

ஜப்பானில் விபத்து நடந்த புக்யுஷீமா அணு உலை 1971ல் கட்டபட்டது.தற்போது உள்ள பல பாதுகாப்பு ஏற்பாடுகள் அதில் இல்லை.பழைய அணு உலை என்றாலும் அது வெடிக்காமல் ரிச்டர் ஸ்கேல் 9 அளவு உள்ள பூகம்பத்தையும், சுனாமியையும் தாங்கி நின்றது.புதிய அணு உலைகள் இதை விட வலிமையான பூகம்பத்தையும், சுனாமியையும் தாங்கும் சக்தி கொண்டவை.உதாரணமாக கூடங்குளம் உலை சுனாமி தாக்கும் அபாயத்தை கணக்கில் கொண்டு கட்டபட்டது.2004ல் தமிழகத்தை சுனாமி தாக்கியபோது இந்த பாதுகபபு ஏற்பாடு பரிட்சித்து பார்க்கபட்டது.அது நன்றாக வேலை செய்வதும் தெரிந்தது.

புகுயுஷிமா அணு உலையின் பாதுகபபு ஏற்பாடுகள் பூகம்பத்தால் மின்சாரம் தடைபட்டதும் செயலிழந்தன.கூடங்குளத்தில் உள்ல உலை மூன்றாம் தலைமுரை அணு உலை.என்ன பூகம்பம் வந்தாலும் செயல்படும் ஜெனெரேட்டர்கள் நிறுவபட்டுள்ளன.ஜெனெரேட்டர்கள் செயல்படவில்லையெனினும் அணு உலையில் ஆபத்தான அளவு ஹைட்ரஜன் தேங்காத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளன.இவை இந்தியா - ரஷ்யாவில் உள்ள மதிப்புமிக்க அணுவிஞ்ஞானிகளால் சோதிக்கபட்டு இந்திய அணுசக்தி கழகத்தின் சான்றிதழை பெற்றுள்ளன.அதனால் ஜப்பானில் நடந்தது போன்ற சம்பவம் இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு இல்லை.

மற்றபடி வர்ஸ்ட் கேஸ் சினாரியோ என பார்த்தால் மேட்டுர் அணையில் பூகம்பம் வந்தால் எத்தனை லட்சம் பேர் மடிவார்கள், அதனால் மூடு மேட்டூர் அணையை என சொன்னால் எப்படி இருக்குமோ அதுபோன்றதுதான் கூடங்குளத்தில் விபத்து நடந்தால் எத்தனை லட்சம் பேர் மடிவார்கள் என்ற கணக்கு எல்லாம்.கேரள அரசு இதைபோன்ற பீதியை கிளப்பிதான் முல்லைபெரியார் அணையில் நீர்மட்டம் உயர்த்துவதை தடுத்துள்ளது.அதை நாம் ஒருபுறம் எதிர்த்துகொண்டு மறுபுறம் அதே கணக்கை சொல்லி கூடங்குள அணு உலையை தடுப்பது சரியா என நம்மை நாமே கேட்டுகொள்ள வேண்டும்.

சீன அரசு தற்போது சீனாவில் 25 அணு உலைகளை வேக வேகமாக கட்டி வருகிறது.இன்னும் 75 அணு உலைகளை 2020க்குள் கட்ட திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.நம் நாட்டில் நமக்கு தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்க தற்போதுள்ள மின்நிலையங்கள் போதாது.புதிதாக கட்டவும் முன்னே சொன்னதுபோல நிலக்கரி,நீர்,காற்று ஆகியவற்ரை நம்புவதில் சிக்கல்கள் உள்ளன.இந்த சிக்கல் எதுவுமின்றி எக்காலத்திலும் இயங்ககூடிய சக்தி படைத்து அணு உலை மட்டுமே.

ஆக நம் நாட்டுக்கு நிறைய அணு உலைகள் தேவை.அணு உலை ஆபத்தானது அல்ல.அணைக்கட்டு, புனல் மின் நிலையம் ஆகியவை போல அதிலும் ரிஸ்க் உண்டுதான்.ஆனால் அது எல்லாவற்ரையும் விட பெரிய ரிஸ்க் மின்சாரம் இல்லாமல் இருப்பதுதான்.மின்சாரம் இல்லாமல் ஏற்படும் உற்பத்தி இழப்பு, உயிர் இழப்பு, பொருளாதார இழப்பு எல்லாவற்றையும் கணக்கு போடவேண்டும். ஜப்பானில் பூகம்பம் வந்ததுபோல மேட்டூரில் வந்து அணை இடிந்து விழுந்தால் எத்தனை லட்சம் பேர் சாவார்கள், பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் பக்ராநங்கலில் குண்டு வைத்தால் எத்தனை லட்சம் பேர் இறப்பார்கள் என்பது போன்ற கணக்குகளை போடும் நபர்கள் முன்பு இருந்திருந்தால் இந்த அணைகள் கட்டபட்டு இருக்காது. 

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அணு உலைகள் கட்டபட்டு மின்சார தட்டுபாடே நாட்டில் இல்லை என்ற நிலை வரவேண்டும்.



Saturday, September 17, 2011

அரசவையில் ஒரு ஆசிரியை

Anna and the king of Siam என்ற நூலை படித்து கொண்டிருக்கிறேன்.அதில் வரும் தகவல்கள் வியப்பூட்டுகின்றன.

அன்னா லியானோவன்ஸ் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் (இது சிப்பாய் கலகத்துக்கு முந்தைய இந்தியா.) சிறுமியாக இருக்கும்போது இந்தியா வருகிறார்.மும்பை மாநகரம் அவருக்கு பெரும் வியப்பை ஊட்டுகிறது. ஒரு விருந்தில் சக ஆங்கிலேயர் "இந்தியர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டும்" என பேசுகையில், அதற்கான திட்டங்கள் வகுக்கபடுகையில் அன்னா அதிர்ச்சி அடைகிறார். "இது இந்தியர்கள் நாடு.அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க நீங்கள் யார்?" என்ற கேள்வி அவர் மனதில் எழுகிறது,.

அவருக்கு இருந்த இந்த அறவுணர்ச்சி கூட இன்றி அங்கே ஆங்கிலேயருடன் வளைய வந்த, இந்தியர்களை ஆங்கிலேயருடன் சேர்ந்து அவமதித்த இந்திய பிரபுக்களை காண்கையில் அன்னாவுக்கு மனதில் பீதியும் வியப்பும் ஏற்படுகின்றன."ஐயோ...இந்தியர்களை இவர்கள் இப்படி மிருகம் மாதிரி நடத்துகிறார்களே?எந்த நிமிடத்தில் எந்த இந்தியன் கொதித்தெழுந்து நம்மை கத்தியில் குத்துவானோ?" என்ற பீதியில் பல நாட்கள் இருக்கிறார்.ஆனால் அப்படி எந்த இந்தியனும் செய்யவில்லை.ப்ரிட்டிஷார் நம்மை ஆள முழுதகுதியும் படைத்தவர்கள்,நாம் அவர்களை விட இழிவானவர்கள் என்ற நம்பிக்கை இந்தியர்கள் மனதில் இருப்பதை காண்பதாக அன்னா எழுதுகிறார்.

அதன்பின் ப்ரிட்டிஷ் ஆர்மி ஆபிசர் ஒருவரை மணக்கிறார்.மிக இனிமையான காதல் வாழ்க்கையின் பயனாக இரு குழந்தைகள் பிறக்கின்றன.சிப்பாய் கலகத்தின்போது அன்னா சிங்கபூரில் (அப்போது அது மலேஷியாவின் ஒரு மாநிலம்) இருக்கிறார்.சிப்பாய் கலகத்தில் பல வங்கிகள் இந்தியாவில் கவிழ்கின்றன.அன்னாவின் சொத்துக்கள் அனைத்தும் பறிபோகின்றன.சிப்பாய் கலகத்தில் கர்னகொடூரமான வன்முரைகள் இந்திய வீரர்களால் ப்ரிட்டிஷார் மேல் நிகழ்த்தபடுகின்றன.அன்னாவுக்கு தெரிந்த அனைவரும் அதில் இறக்கின்றனர்.ஆனாலும் அன்னாவால் இந்தியர்களை குறை சொல்ல இயலவில்லை."அது அவர்கள் நாடு.அங்கே நாம் போனது மிகபெரும் தவறு.வன்முரை மூலம் அவர்கள் நாட்டை பிடுங்கியதால் பதில் வன்முறை மூலம் அதை பிடுங்குகிறார்கள்" என எழுதுகிறார்.

அதன்பின் அவரது கணவனும் ஒரு புலிவேட்டையில் இறக்க அன்னா இரு குழந்தைகளூடன் நிர்க்கதியாக நிற்கிறார்.

அதன்பின் வேறு வழியின்றி பிழைப்புக்காக ஆங்கில பள்ளி ஒன்றை துவக்கி நடத்துகிறார்.அப்போது பல அமெரிக்கர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது.அவர்கள் அப்போது அமெரிக்காவில் அடிமைகளின் விடுதலைக்காக போராடும் ஆபிரகாம் லிங்கனின் வரலாற்ரை எடுத்துரைக்கின்றனர்.இந்தியாவில் இந்தியர்கள் அடிமைகளாக நடத்தபட்டதை கண்ட அன்னாவுக்கு லிங்கனின் செயல் மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது.

அவரை அணுகிய தாய்லாந்து அரசு அதிகாரிகள் தாய்லாந்து மன்னர் நான்காம் ராமரின் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிதர அவரை தாய்லாந்து வரும்படி அழைப்பு விடுக்கின்றனர்.மாத சம்பளம் $100.

அந்த அழைப்பை ஏற்று அன்னா தாய்லாந்து செல்கிறார்.

மன்னரின் அந்தபுரம் முழுக்க அடிமை பெண்களும், வைப்பாட்டிகளும் நிரம்பி வழிகின்றனர்.மன்னர் முன் யாரும் நின்று கூட பேசுவது இல்லை.தரையில் விழுந்து சேவித்தபடி தான் பேசவேண்டும்.அடிமை வியாபாரம் தாய்லாந்தில் கொடிகட்டி பறக்கிறது.மலேசியாவில் இருந்து இளம்பெண்கள் பிடிக்கபட்டு தாய்லாந்து கொண்டுவரப்பட்டு மந்திரிகள்,மன்னர்,பணகாரர்களின் அந்தபுரங்களீல் அடிமைகளாக விற்கபடுகின்ரனர்.

ஆசிய பெண்களின் இந்த நிலை அன்னாவின் மனதில் பெரும் துயரை ஊட்டுகிறது.மன்னரின் மகனுக்கு ஆங்கிலம் சொல்லிதர வந்தவர் ஆபிரகாம் லிங்கனையும், அடிமை முறையை ஒழிக்க லிங்கன் நடத்திய உள்நாட்டு யுத்தத்தையும் சொல்லிதருகிறார்.மனம் மாறிய இளவரசன் மன்னனானதும் தாய்லாந்தில் அடிமை வணிகத்தை ஒழிக்கிறான்.தன் ஆசிரியை சொல்லிதந்த பல சீர்திருத்தங்களை நாட்டில் கொண்டுவருகிறான்.

ஆக தாய்லாந்தில் அடிமை முறை ஒழிந்ததற்கு ஒரு விதத்தில் இந்தியாவும், ஆபிரகாம் லிங்கனும், ஒரு ஆசிரியையும் காரணம்.ஆசிரியர்கள் சமூகத்தில் எத்தகைய நல்ல மாற்றங்களை உண்டாக்க முடியும் என்பதை அன்னா லியோவான்ஸ்

Sunday, September 11, 2011

கந்தவேல்

"யார் அது?" இஸ்கந்தர் என்றழைக்கபட்ட மாமன்னர் அலெக்சாந்தர் வினவினார்

"சசிகோடஸ் என்பவர்..பாடலி நாட்டின் முன்னாள் அரசனாம்.இப்போதைய நந்த வம்ச அரசன் அவரது நாட்டை பிடுங்கிகொண்டு அவரை துரத்தி விட்டான். அந்த நாட்டின் மேல் நீங்கள் படையெடுக்க போவதை அறிந்து உங்களை சந்திக்க வந்துள்ளார்"

'நந்தர்களை நான் ஜெயித்தால் பாடலிபுதிரத்தின் ஆட்சியை என்னிடம் கேட்டு பெறபோகிறாரா?நல்லது..நந்தர்களை ஜெயிக்க எனக்கு இவர் உதவவேண்டும்.முடியுமா என பார்க்கலாம்.வரச்சொல்.."

சசிகோடஸ், அவரது மகன் சந்திரகோடஸ், கூட ஒரு பண்டிதர் மூவரும் அந்த கூடாரத்தினுள் நுழைந்தார்கள்.

சிறுவனான சந்திரகோடஸ் அங்கே கண்ட காட்சி அவனால் வாழ்நாள் முழுக்க மறக்க இயலாத காட்சி

சிம்மாசனம் ஒன்றில் வேலை கையில் ஏந்தி மாமன்னர் இஸ்கந்தர் வீற்றிருந்தார்.அருகே பட்டத்து அரசி ரோக்சேனா அமர்ந்திருந்தார்.

"உலகம் இதுவரை கண்டிராத கேட்டிராத வீரர் இவர்" பண்டிதர் சந்திரகோடஸின் காதுகளில் முணுமுணுத்தார்.

சசிகோடஸ் மன்னருக்கு வணக்கம் செலுத்தினார்

"நந்தர்களை ஜெயித்து இந்தியாவை பிடிக்க எனக்கு உதவபோகிறாயா சசிகோடஸ்?" இஸ்கந்தர் வினவினார்.

"இல்லை மன்னா...நந்தர்களை ஜெயிக்க தங்களால் இயலாது என்பதை தெரிவிக்கவே வந்தேன்"

"என்னால் இயலாதா?" இஸ்கந்தர் சிரித்தார்.கூடவே கிரேக்க தளபதிகள் அனைவரும் சிரித்தார்கள்.

"மாசிடோனியம் முதல் எகிப்து வரை,பாரசிகம் முதல் சிந்துநதிவரை ஜெயித்தவன் நான்.நான் ஜெயிக்காத போர் இல்லை.பாரசிக மன்னன் டேரியஸை விட உன் தன நந்தன் வலிமையானவனா?"

"மன்னரே...நீங்கள் இதுவரை பார்த்ததிலேயே மிக பெரிய நதியான கங்கை நதியின் மறுகரையில் தனநந்தன் தன் படைகளுடன் உங்களுக்காக காத்திருக்கிறான்.அதில் பத்து லட்சம் வீரர்கள் உள்ளனர்.ஆயிரகணகான யானைகள் உள்ளன.கங்கைநதியில் உங்களை எதிர்கொள்ள ஆயிரகணக்கில் படகுகளில் வீரர்கள் உள்ளனர்.நீங்கள் இந்த போரில் ஜெயித்தாலும் உங்கள் படையில் முக்கால்வாசி பேர் அழிந்துவிடுவார்கள்..மீதமுள்ளவர்களை வைத்துகொண்டு நீங்கள் மேலே முன்னேறமுடியாது..நீங்கள் திரும்ப பாரசிகம் சென்றுவிடுவதே புத்திசாலித்தனம்.."

இஸ்கந்தரின் தளபதிகள் முகத்தில் கவலை படர்ந்தது.மாசிடோனியாவை விட்டு அவர்கள் வந்து ஆண்டுகள் 12 ஆகியிருந்தன.வந்தவர்களில் பாதிபேர் இன்று இல்லை...10 லட்சம் பேர் தனநந்தனின் படையில் உள்ளனர் என்பதை அறிந்ததும் ஏனோ அவர்களிடம் கவலை தோன்றிவிட்டது.

"நீ தனநந்தனின் எதிரி என நினைத்தேன்" என்றார் இஸ்கந்தர்."ஆனால் அவனை என்னிடம் இருந்து காக்க முனைகிறாய்.ஏன்?"

"நான் மகதத்தை அதிகம் நேசிக்கிறேன் சக்ரவர்த்தி" என்றார் பணிவுடன் சசிகோடஸ்

"அதனால் பொய் சொல்கிறாய்" என்றார் இஸ்கந்தர்

"இல்லை" என்றார் கூட வந்த பண்டிதர்.."மன்னா...உன் ஜாதகப்படி நீ ஜெயித்த கடைசி யுத்தம் போனவாரத்துடன் முடிவடைந்தது.இனி நீ எந்த யுத்தத்தில் இறங்கினாலும் தோல்வியையே அடைவாய்"

"உன் குதிரை மேல் ஏறி நீ போரிடும்வரை உனக்கு தோல்வி என்பதே இல்லை" எகிப்தில் பூசாரிகள் சொன்ன வார்த்தை அலெக்சாந்தர் மனதில் நிழலாடியது.இந்த பண்டிதரும் அதே போல சொன்னதை கேட்டதும் அவர் சிந்திக்க தொடங்கினார்

"சரி...நீ இப்போதைக்கு செல்லலாம்" மன்னர் கைகாட்டினார்

சிறுவன் அவரையே உற்றுபார்த்தான்."உங்களை போல நானும் பெரிய ராஜ்ஜியத்தை அமைப்பேன்" என்றான்

ராணி ரோக்சேனாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது."இந்தா.." என கணவனின் வேலை எடுத்து சந்திரகோடஸிடம் அளித்தாள்."இது உலகம் முழுவதையும் ஜெயித்தவேல். வைத்துக்கொள்..நீயும் இதேபோல உலகை ஜெயித்து காட்டு"

மூவரும் மன்னரை வணங்கிவிட்டு வெளியே வந்தனர்.

"என்னை ஏன் சசிகோடஸ் என்கிறார்கள்?" சசிகுப்தர் ஆச்சரியபட்டார்.

"குப்தன் என அவர்களுக்கு சொல்ல வராது.குப்தனை கிரேக்கமொழியில் கோடஸ் என்பார்கள்" என்றார் பண்டிதர் சாணக்கியர்.

"உள்ளே இருந்த மன்னர் கடவுளா?" என்றான் சிறுவன் சந்திரகோடஸ்."அவர் கடவுள் என எல்லோரும் சொல்கிறார்கள்"

சானக்கியர் அவனை உற்றுபார்த்தார்.

"ஆம்.அவர் பெயர் ஸ்கந்தர்.கூட இருந்தது அவர் மனைவி தேவசேனா.அவர் கையில் வேலை வாங்கிய நீ தனநந்தனை ஜெயித்து மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்ரை நிறுவாமல் ஓயகூடாது"

"நிச்சயம் ஓயமாட்டேன்.ஸ்கந்த கடவுள் அளித்த வேலின் மேல் ஆணை" என முழங்கினான் சந்திரகோடஸ் எனப்படும் சந்திரகுப்தன்.



Saturday, September 10, 2011

மனிதர்களால் செவ்வாய் கிரகம் போக முடியுமா?

நெட்ப்ளிக்ஸில் இந்த தலைப்பில் ஒரு டாக்குமெண்டரியை பார்த்தேன்.

நிலவுக்கு செல்ல முடிந்த மனிதனால் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல முடியுமா என்பதுதான் விவாதபொருள்.தற்போது இருக்கும் டெக்னாலஜியை வைத்து செல்லமுடியாது என அந்த டாக்குமெண்டரி கூறுகிறது.இதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1) புவியீர்ப்பு விசையின்மை

ஸ்பேசில் புவியீர்ப்பு விசை இல்லை.செவ்வாய் கிரகம் செல்வது 2 - 3 வருட திட்டம்.இத்தனை வருட காலம் விண்வெளியில் புவியீர்ப்பு விசையின்றி இருப்பது மனித உடலில் பல மாற்றங்களை தோற்றுவிக்கும்.குறிப்பாக எலும்பு இழப்பு (போன் லாஸ்) அதிகரிக்கும். இதற்கு முன்னர் 7 - 8 மாதம் ரஷ்ய ஸ்பேஷ்ஷிப்பில் வசித்த ரஷ்ய ஆஸ்ட்ரானெட் ஒருவருக்கு அந்த 7 - 8 மாத காலத்தில் சுமார் 14% எலும்பு இழப்பு ஏற்பட்டது.2 - 3 வருட காலம் விண்வெளியில் இருந்தால் இதனால் உயிரிழப்பே ஏற்பட்டுவிடும்

இதற்கான தீர்வாக உடல்பயிற்சியை முயன்றார்கள்.ஆனால் அது பலன் அளிக்கவில்லை.ஆர்தர் கிளார்க் எழுதிய 2001 எ ஸ்பேஸ் ஓடிஸி எனும் நாவலில் இதற்கு ஒரு தீர்வு முன்மொழியபட்டது.அதாவது விண்கலத்தை சுழல வைத்து செயற்கையாக புவியீர்ப்பு விசையை உருவாக்கல்.ஆனால் இத்தகைய சுழலும் விண்கலத்தை உருவாக்குவது மிக செலவு பிடிக்கும் விஷாய்ம் என்பதால் விண்கலனுக்குள் சுழலும் சேம்பரை வைத்து சென்ட்ரிபியூகல் போர்ஸ் மூலம் புவியீர்ப்பு விசைக்கு நிகரான சக்தியை உருவாக்கி எலும்பு இழப்பை தடுக்கலாம் எனும் ரீதியில் ஆய்வுகள் நடந்துவருகின்றன.இது வெற்றி அடைந்தால் செவ்வாய் பயணத்துக்கான தடைக்கல்களில் ஒன்று அகலும்.

astronaut.gif

2) காற்றழுத்தம்

வாயுமண்டலம் நம் உடலை நாலாபக்கமும் அழுத்துகிறது.பூமிக்கு பல மைல் தொலைவில் இருந்து நம்மை காற்று அழுத்துவது நம் ஒவ்வொருவர் உடலின் ஒவ்வொரு இஞ்சிலும் 15 பவுண்டு எடையை வைத்து அழுத்துவதுக்கு சமம்.இந்த அழுத்தத்துக்கு நம் உடலின் உள்ளே இருக்கும் காற்றானது எதிர் அழுத்தம் தருவதால் நமக்கு எந்த வித்தியாசமும் தெரிவதில்லை.

விண்வெளியில் இந்த அழுத்தம் இல்லை.அதனால் விண்வெளியில் நாம் ஸ்பேஸ் சூட் இன்றி நடந்தால் நம் உடலில் ரத்த நாளங்களில் ஓடும் காற்று சோடாவை திரந்தால் எப்படி பொங்குமோ அப்படி குமிழியாக பெருகி ரத்தத்தை விட்டு வெளியேறும்..அதாவது நம் உடல் நாலாபக்கமும் இழுபட்டு ஜூஸாக மாறி உடனடி மரணம்.இதை தடுக்க ஸ்பேஸ்சூட்டில் செயற்கையாக காற்ரழுத்தம் உண்டாக்கபடுகிறது.

இந்த ஸ்பேஸ் ஸூட் ஒரு பிரமாண்டமான பலூன் மாதிரியானது.இதற்குள் ஆள் இருப்பது பெரிய பலூனுக்குள் ஆள் இருப்பதுபோல.இந்த உடையை வைத்துகொண்டு ஸ்பேஸில் நம்மால் நடக்க இயலும்.ஆனால் புவியீர்ப்புவிசை உள்ள பகுதியில் இதை அணிந்தால் நம்மால் சாதாரணமாக நடக்கவே முடியாது.

நிலவுக்கு சென்ற ஆஸ்ட்ரநாட்டுகளால் துள்ளி குதித்து தான் பயணிக்க முடிந்ததே ஒழிய சாதாரணமாக பூமியில் நடப்பது போல் நடக்க இயலவில்லை.நடக்கமுயன்றபோது அவர்கள் கீழே விழுந்தனர்.நிலவில் புவியீர்ப்பு விசை பூமியை விட ஆறுமடங்கு குறைவு என்பதால் அவர்களால் துள்ளிகுதித்து தாவ முடிந்தது.ஆனால் நடக்க இயலவில்லை

செவ்வாயில் நிலவை விட புவியீர்ப்பு விசை அதிகம் என்பதால் துKKஇ குதிக்கவும் முடியாது.பூமியை போல நடக்கவும் முடியாது.விண்வெளியை போல மிதக்கவும் முடியாது.

ஆக நமக்கு புதுடெக்னாலஜியில் அமைந்த ஸ்பேஸ் சூட் தேவை.

அதற்கான ஆய்வுகள் நடந்துவருகின்றன.மனித உடலை இறுக்கமாக பிளாஸ்திரி போன்ர துணியால் இறுக்க கட்டி,ஒவ்வொரு இஞ்சிலும் அழுத்தத்தை செய்ற்கையாக உருவாக்ககூடிய ஸ்பேஸ்சூட்டை ஆராய்ந்து வருகிரார்கள்..அதாவது சுருக்கமாக சொன்னால் உலகின் மிக,மிக இறுக்கமான ஆடை.அதை பூமியில் அணிந்தால் உடலெங்கும் வலி பின்னி பெடலெடுத்துவிடும்.ஆனால் செவ்வாயில் பிரச்சனை இல்லாமல் அதை அணிந்துகொண்டு நடக்க இயலும்.

P8080014-HumanOnMars.jpg

3) உணவு:

spacefood.jpg

2 - 3 வருடம் கெட்டுபோகாமல் இருக்கும் உனவுகலை கண்டறிவதிலும் சிக்கல்கள் உள்ளன.செவ்வாய்க்கு செல்பவர்களுக்கு பேலன்ஸ்டு உணவு வேண்டும்.ஆனால் செவ்வாய்க்கு செல்பவர் ஒருவருக்கு 7000 மீல்ஸ்கலை தயார் செய்யவேண்டும்.எல்லா உனவும் 2 - 3 வருடம் தாக்குபிடிப்பதில்லை.பல உணவுகளில் வேதியல் மாற்ரஙக்ள் நிகழ்ன்கின்ரன.விண்வெளியில் பாக்டிரியாக்கள் இல்லையெனினும் உணவில் உள்ல சர்க்கரை,பிற அமிலங்கள் இயல்பாக கலந்து வேதியல் மாற்ரத்தை உண்டுபண்ணி உணவை பாழடித்துவிடுகின்றன.ஆக உனவு பிரச்சனையையும் ஆராய்ந்து வருகிரார்கள்

செவ்வாய்க்கு மனிதன் போகிறானோ,இல்லையோ....இந்த ஆய்வுகள் வெற்றி அடைந்தால் நமக்கு 2 - 3 வருடம் கெடாத உணவுகள்,செயற்கை புவியீர்ப்பு விசை,புதிய ஸ்பேஸ்சூட் போன்ரவை கிடைக்கும்.யார் கண்டார்கள்...பூமியில் காற்ரழுத்தம் குரைவாக உள்ல பகுதிகளில் இருப்பவர்கள்,நீண்டதூர பயணம் செல்கிரவர்கள் கூட இவற்றை பயன்படுத்தும் நிலை வரலாம்.இப்படிதான் முன்பு அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்குமான விண்வெளி போட்டி இன்டெர்னெட்டை கண்டுபிடிப்பதில் வந்து முடிவடைந்தது.அதேபோல இனிய விபத்து இப்போதும் நிகழ்ந்தால் மனித இனத்துக்கு நன்மைதானே?


Sunday, September 04, 2011

வன்டர்புல் வர்ல்ட்

குரு கைலாஸ் சிங் என்பவருக்கு மகன் பிறக்கவேண்டும் என கொள்ளை ஆசை.மகன் பிறக்கும்வரை குளிப்பதில்லை என சபதம் எடுத்தார்.அதன்பின் விடாமுயற்சி,தன்னம்பிக்கையுடன் போராடியதில் 7 குழந்தைகள் பிறந்தன.ஏழும் பெண்.

இந்த சபதத்தால் மனிதர் 37 வருடமாக குளிக்காமல் இருந்து உலகசாதனை படைத்துவிட்டார்.

slide_24351_297118_large.jpg?1315120585969


டோனா சிம்ப்சன்..

உலகிலேயே அதிக எடையுள்ல பெண்மணி எனும் பட்டத்துடன் கின்னஸில் இடம்பிடித்தவர் ஒரு பிள்ளையையும் பெற்று காட்டி அசத்தி உள்ளார்.உலகிலேயே அதிக எடையுடன் பிள்ளை பெற்ர பெண்மணி என்ற புகழும் சேர்ந்துவிட்டது

slide_24351_337433_large.jpg?1315120792023

உலகின் அதிக கோரமான பழிப்பை காட்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜேலிசா தாம்சன்

slide_24351_347253_large.jpg?1315120916878

உலகில் அதிக தடவை பியர்சிங் செய்த சாதனை பெண் எலின் டேவிட்சன்.6925 குத்தல்கள் உடல் முழுக்க.சமீபத்தில் தான் இவருக்கு கல்யாணமும் ஆனதாம்

slide_24351_290568_large.jpg?1315120989686