Friday, May 31, 2013

கொழுப்புக்கு எதிரான போர்



அரசு "நல்ல எண்னத்தில்" செய்யும் பல விஷயங்கள் நேர்மாறான விளைவுகளை அளிப்பது வியப்பல்ல. கொழுப்புக்கு எதிரான போர் மக்களை மேலும் குண்டர்கள் ஆக்கியது தான் மிச்சம். இந்த அழகில் மிசல் ஒபாமா பள்ளிகுழந்தைகளின் உணவை ஆரோக்கியமானதாக்குகிறேன் பேர்வழி என சொல்லி உணவுகளில் காய்கறிகள், சாலட்டை அதிகபடுத்தி, பீட்சா, உப்பு, கொழுப்பு என அனைத்தையும் குறைத்தார்.

விளைவு பள்ளிகளில் மதிய உணவுகளை ஏராளமான மாணவர்கள் குப்பைகளில் வீசுகிறார்கள்.பள்ளிகளில் கிட்டத்தட்ட 50% "ஆரோக்கியமான உனவுகள்" குப்பைகளில் வீசபடுகின்ரனவாம். குப்பைதொட்டியில் வீசப்படும் சாலடும், ஆப்பிளும் எப்படி ஒபிசிட்டியை குறைக்கும்?

http://www.youtube.com/watch?v=olZVsiH3qrY



Tuesday, May 21, 2013

ரொசெட்டோ விளைவு

பென்சில்வேனியா மாநிலம் ரொசெட்டோ நகரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இன்னொரு ஊர் மருத்துவரை ஒரு உனவகத்தில் சந்தித்தார். பேச்சுவாக்கில் ரொசெட்டோ மருத்துவர் தன் ஊரில் இதய அடைப்பு வந்தவர்களை பார்ப்பதே அரிது என்றார். அந்த ஊருக்கு சென்று பார்த்த இன்னொரு மருத்துவர் அது உண்மை என்பதை அறிந்து வியந்தார். அதன்பின் 30 ஆண்டுகள் ரொசெட்டோ, பென்சில்வேனியா இதய அடைப்பை ஆராயும் மருத்துவர்கள் பலரின் சோதனைகூடமானது. இத்தனை ஆரோக்கியமாக ரொசெட்டோ மக்கள் இருக்க காரணம் அவர்கள் தினம் மூன்று வேளையும் ஆரோக்கியமாக உண்டு, உடல்பயிர்சி செய்து வருவதுதான் காரணம் என நினைக்கவேண்டாம். 


ரொசெட்டோ நகரம் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கலால் நிரம்பியது. குடி, தம், துரித உணவு என அமெரிக்கர்களுக்கு இருக்கும் எல்லா கெட்ட பழக்கமும் உண்டு. ஆனால் அமெரிக்கர்கள் மறந்த ஒரு நல்லபழக்கமும் உண்டு. அதாவது ரொசெட்டோ கூடி வாழும் சமூகம். ஒவ்வொரு வீட்டிலும் மூன்று தலைமுறையாக மக்கள் கூடி வாழும் சமூகம். வயதானவர்கள் அனாதை விடுதியில் சேர்க்கபடுவது இல்லை. குடும்பத்தில் வைத்து போற்றபடுகிறார்கள். அதனால் மன அழுத்தம் குறைந்து அங்கே மாரடைப்பும் குறைந்துவிட்டது.ரொசெட்டோவில் நடந்த ஆய்வுகளுக்கு பின்னர்தான் உணவுப்ழாக்கம் மட்டும் அன்றி மன அழுத்தம், குடும்ப வாழ்க்கை ஆகியவை இதய அடைப்பில் வகிக்கும் பெரும்பங்கை மருத்துவர்கள் உணர்ந்தார்கள்.மருத்துவ உலகில் இதன் பெயர் “ரொசெட்டோ விளைவு”

Thursday, May 16, 2013

பூஜ்யத்தை கண்டுபிடித்தது எந்த இந்தியர்கள்?



பூஜ்யத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள் என்பது தெரியும்.

ஆனால் எந்த இந்தியர்கள்?

உலகின் மிக தொன்மையான பூஜ்ஜியம் கிபி 876ம் ஆண்டு க்வாலியர் நகரில் உள்ள விஷ்ணு கோயிலில் உள்ள பூஜ்ஜியம் தான் என இதுவரை நம்பபட்டு வந்தது.

இந்திய கணிதவியல் சங்க வலைதளத்தில் இருந்து

http://www.ams.org/samplings/feature-column/fcarc-india-zero


270 என எழுதியிருப்பது இன்றைய எண்கணித முறையை ஒத்து இருப்பதை கவனிக்கவும்.

ஆனால் இப்போது அதை விட தொன்மையான பூஜ்ஜியம் கம்போடியாவில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது.  அன்றைய காம்போஜம் இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதியாக தான் கருதபட்டதால் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தது இந்தியா என்பதில் மாற்றம் இல்லை.

இந்த கம்போடீய பூஜியம் "சக ஆண்டு 605.." என குறிப்பிடுகிறது

சக ஆண்டு 605 என்பது கிபி 683ம் ஆன்டை குறிக்கும்.

இந்த கம்போடிய பூஜ்ஜியம் K - 127 என அழைக்காப்டுகிறது. அங்கோர்வாட் கோயிலில் இந்த பூஜ்ஜியம் பாதுகாககப்டுகிறது. (ஆனால் அங்கோர்வாட்டில் இது பொறிக்கபடவில்லை.அங்கோர்வாட் பின்னாளில் கட்டபட்டது)


சூன்யம் என்ற கருத்து அரிஸ்டாட்டில் காலத்தில் இருந்ததாக தெரிகிறது. ஆனால் இதை கணிதத்தில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவின. பூஜ்யம்/சூனியம் என ஒன்று இருக்கிறதா என்பதே முடிவாகவில்லை. இன்று ஒன்றுக்கு பின்னால் பூஜ்யத்தை போட்டு 10 ஆக்குகிறோம். அம்மாதிரி எண் முறை அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்து, நூறு என்பதற்கு தனியாக எண்களை கொடுத்துகொன்டே போனார்கள்.

இந்த சர்ச்சையை கிபி 650ம் ஆண்டு பிரம்மகுப்தர் எழுதிய பிரம்மஸ்புத சித்தாந்தா எனும் நூல் தான் தீர்த்து வைத்தது. பூஜ்யத்துடன் நெகடிவ் எண்ணை கூட்டினால் நெகடிவ் வரும், பூஜ்யத்துடன் பாஸிடிவ் எண்னை கூட்டினால் பாஸிடிவ் வரும், பூஜ்யத்தை எதில் பெருக்கினாலும் பூஜ்யம் வரும் என்பது மாதிரி கணித சித்தாந்தங்களை இந்த நூல் தான் அறிமுகபடுத்தியது.

 விக்கியில் பண்டைய தமிழ் எண்முறை கீழ்கண்டவாறு கொடுக்கபட்டு உள்ளது.