Thursday, January 26, 2012

Being Human

Being Human Being-Human-U-S-cast-being-human-us-17453930-337-337.jpg டிவி சீரியலே பார்க்காமல் இத்தனை வருடம் தாக்குபிடித்து கொண்டிருந்தேன். மேனகையாய் வந்து மயக்கிவிட்டது "Being human" எனும் சைஃபை (SYFY) சானல் சீரியல்.
ஐடன் எனும் வேம்பயர் (ரத்தகாட்டேறி), ஜாஷ் எனும் வேர் வுல்ஃப் (மனித ஓனாய்), சாலி எனும் பேய் இந்த மூன்று நண்பர்களை பற்றியதுதான் கதை.இந்த மூவரும் மனித சமூகத்தில் மக்களோடு மக்களாக வாழ முயல்கிறார்கள்.முடிகிறதா என்பதை ஜவ்வாக இழுக்கமால் சிறப்பாக சொல்கிறார்கள். ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக பணியாற்றும் ரத்தகாட்டேரியான ஐடனின் உணவு மனித ரத்தம் தான். தண்ணி அடித்து பழகியவர்களுக்கு அதை விட முடியாதது போல ஐடனுக்கும் மனித ரத்தம் குடிப்பது விட முடியாத கெட்ட பழக்கம்.அதை விட அவன் போராடிகொண்டிருக்கிறான்.அப்போது ரெபெக்கா எனும் அவனுடன் பணியாற்றும் இன்னொரு நர்ஸ் அவனை காதலிக்கிறார்.இருவரும் உறவு கொள்ளுகையில் ஐடனுக்குள்ளிருக்கும் மிருகம் விழித்துகொள்கிறது.ரெபெக்காவை கடித்து கொன்று ரத்தத்தை குடித்துவிடுகிறான்.அதன்பின் ரெபெக்காவும் ரத்தகாட்டேறியாக மாறிவிடுகிறார். ஐடனுடன் அதே ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஜாஷ் பவுர்ணமி இரவு வந்தால் ஓநாயாக மாறிவிடுவான்.அதன்பின் கண்ணில் பட்டவர்களை கடித்து குதறி தின்றுவிட்டு காலையில் மனிதனாகிவிடுவான்.மக்களுக்கு பிரச்சனை வரகூடாது என்பதால் காடுகளுக்கு சென்று பவுற்ணமி இரவில் மிருகங்களை வேட்டியாடுவது அவன் வழக்கம். இந்த இருவரும் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து அங்கே தங்குகின்றனர்.அபார்ட்மெண்ட் ஓனர் டேனி எனும் இளைஞன். அவன் தன் காதலி சேலி இறந்து அதே அபார்ட்மெண்டில் பேயாக வசித்து வருகிறாள்.மனித கண்களுக்கு தென்படாத சேலி பேய் ஐடன் மற்றும் ஜாஷ் கண்களுக்கு மட்டுமே தென்படுகிறது. அதன்பின் சேலியையும் தங்கள் நண்பர்களாக ஏற்றுகொண்டு மூவரும் அபார்ட்மெண்டில் வசிக்க துவங்குகின்றனர். ஜாஷின் தங்கை எமிலி ஒரு லெஸ்பியன். ஓநாயாக மாறியதால் ஜாஷ் வீட்டை விட்டு வெளியேறி தலைமரைவு வாழ்க்கை நடத்தி வருகிறான். லெஸ்பியனாக மாறியதால் எமிலியும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். அண்ணனை ஆஸ்பத்திரியில் சந்தித்த எமிலி அவனை பிந்தொடர்கிறாள்.பவுர்ணமி இரவில் பாதாள அறைக்குள் செல்லும் ஜாஷ் ஓநாயாக மாறுகையில் எமிலி அவன் அருகே வருகிறாள்.அறைகதவு லாக் ஆகிவிடுகிறது.தான் ஓநாயாக மாறினால் தங்கையை கடித்துகுதறி கொன்றுவிடுவோம் என்ற அச்சத்தில் ஜாஷ் ஐடனையும், சேலியையும் தொலைபேசியில் அழைக்கிறான்.சேலியால் வீட்டை விட்டு வெளியேற முடிவதில்லை.காரணம் அவளால் எந்த பொருளையும் நகர்த்தவோ,தொடவோ இயலாது. ஆனால் ஐடன் தகுந்த சமயத்தில் வந்து எமிலியை வெளியே இழுத்துபோய் ஜாஷின் ரகசியம் தெரியாமல் காப்பாற்றிவிடுகிறான். அதன்பின் ஐடனால் கொல்லபட்ட ரெபெக்கா ரத்தகாட்டேறியாக மாறுகிறாள்.ஐடன் மேல் அவளுக்கு ஒருபுறம் கடும்கோபம் இருந்தாலும் மறுபுறம் ரத்தகாட்டேரியாக வாழ்க்கை நடத்துவதும் பழகிவிடுகிறது.மோதலுக்கு பிறகு இருவரும் மீண்டும் காதலிக்கின்றனர்.ஆனால் ரெபெக்கா மனிதர்களை வேட்டையாடுவதை நிறுத்துவதில்லை.இதனால் ஐடனுக்கும் ரெபெக்காவுக்கும் மனதாங்கல் இருந்துகொண்டு அவ்வப்போது ஊடலாக வெடிக்கிறது. இந்நிலையில் சேலியின் காதலன் டேனி சேலியின் தோழி ப்ரிட்ஜெட்டை காதலிக்கிறான்.ப்ரிட்ஜெட்ட் தன் காதலனுடன் நெருக்கமாக இருப்பதை பார்க்கும் சேலிக்கு கடும்கோபம் வருகிறது.ஆனால் ப்ரிட்ஜெட் "உன்னை பார்த்தால் சேலி நினைவுதான் வருகிறது.இந்த உறவு வேண்டாம்" என பிரிந்து செல்கிறாள்.அதன்பின் மனம் மாறும் சேலி ப்ரிட்ஜெட்டிடம் "டேனி நல்லவன்.அவனை நீ காதலிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை" என்கிறாள். அதன்பின் ப்ரிட்ஜெட்டும் டேனியும் காதலிக்க துவங்குகின்றனர்.அப்போதுதான் சேலிக்கு ஒரு அதிர்ச்சி தரும் உண்மை தெரியவருகிறது.தன்னை கொன்றது டேனிதான் என. இந்த இடத்தில் சீரியல் நிற்கிறது..அடுத்த எபிசோடுகளை விடாமல் பார்க்கவேண்டும். லணன்,கனடா,அமெரிக்கா என மூன்றுநாடுகளைல் சக்கைபோடு போட்டுவரும் இந்த சீரியலை தமிழில் யாராவது எடுத்தால் நன்றாக இருக்கும்:-)..ரத்தகேட்டேறி,ஓநாய் மற்றும் பேய்களின் மனிதனாக வாழும் முயற்சி,அவர்கள் சமூகத்தால் நிராகரிக்கபடுவது, சமூகத்தால் நிராகரிக்கபட்டவர்கள் தமக்கென ஒரு குடும்பத்தை ஏற்படுத்திகொண்டு தம் பிரச்சனைகளுடன் போராடியபடி வாழ்வது என மனித உறவுகளை சீரியல் நன்றாக சித்தரிக்கிறது.