Wednesday, September 27, 2006

174.முஷாரப்பின் நகைச்சுவை விருந்து

முஷாரப் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டாலும்,வெளியிட்டார்.அதை படித்து விட்டு எல்லாரும் சிரியோ சிரி என சிரிக்கிறார்கள்.பாகிஸ்தானில் பலருக்கு அதை படித்து விட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம். "ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் எனக்கு உதவி செய்யவில்லை என்றால் பாகிஸ்தானில் குண்டு போட்டு கற்காலத்துக்கு கொண்டுபோயிடுவேன்" என ரிச்சார்ட் ஆர்மிடேஜ் சொன்னார் என ஒரு அடி அடித்தார்.அமெரிக்காவே விழுந்து,விழுந்து சிரித்தது.இதுவரைக்கும் எந்த ஜனாதிபதியும் இப்படி "அவன் என்னை கிள்ளினான்,குத்தினான்" என ஸ்கூல் குழந்தைகள் மாதிரி புகார் செய்ததில்லை.இவர் அதை சொல்லிவிட்டு அமெரிக்கா போய் ஜார்ஜ்புஷை சந்தித்து சிரித்து பேசுகிறார்.கை கொடுக்கிறார். இது என்ன காமடின்னு அமெரிக்கவே விழுந்து,விழுந்து சிரிக்குது.பாகிஸ்தானில் அவனவனுக்கு இதை கேட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம்.பின்ன மிலிட்டரி ஜெனெரலே பயந்தா அப்புறம் அந்த நாட்டு ராணுவத்துக்கு என்ன மதிப்பு?"எனக்கு பயமா இருக்கு"ன்னு எவன் வேணா சொல்லலாம்,மிலிட்டரிகாரன் அதுவும் பாகிஸ்தான் முப்படை தளபதி சொல்லலாமோ?:-)) "கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் வெற்றி அடைந்தது" என இன்னொரு ஜோக்கையும் அடித்து வைத்துள்ளார்.முதலில் அண்னாத்தே என்ன சொல்லிட்டிருந்தாருன்னா கார்கிலில் சண்டையிட்டது "சுதந்திர போராட்ட தியாகிகள்" என கதை அடித்தார்.கார்கிலில் ஏதடா தியாகிகள் என குழம்ப வேண்டாம்.சூடான்,வடகிழக்கு பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகளை தான் சுதந்திர போராட்ட தியாகி என்றார்(இப்போது அந்த தியாகிகளை இவரே தடை செய்து விட்டார்.அவர்கள் இவருக்கு 3 பாம் வைத்தார்கள்.தப்பித்து விட்டார்:-) முதலில் அது தியாகிகள் நடத்திய யுத்தம் என்றார்.பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை,அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என பாகிஸ்தான் அரசு ஜோக் எல்லாம் அப்போது அடித்துகொண்டிருந்தது.இப்போது "அது பாகிஸ்தான் ராணுவம் இனைந்து இட்ட் சண்டை,அதில் நாங்கள் ஜெயித்தோம்" என ஒரு அடி அடித்தார் பாருங்கள்,இந்திய ராணுவத்தில் அவனவன் அரண்டு போய்விட்டானாம்.பின்ன?4000 பாகிஸ்தான் வீரர்கள் அதில் செத்ததா பாகிஸ்தான் ரிடையர்ட் ராணுவ அதிகாரிகள் பலர் சொல்லிருக்காங்க.அதை அண்ணாச்சி வெற்றி என்கிறாரே என குழம்பியுள்ளனர் இந்தியாவுக்கு எப்படி அப்துல் கலாமோ பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு ஏ.கியூ.கான்.அவர் தான் பாகிஸ்தானின் அணுஆயுத தந்தை.அப்துல்கலாமுக்கு நாம என்ன மரியாதை தந்தோம்ணு எல்லாருக்கும் தெரியும்.கான் என்ன ஆனாருன்னு தெரியுமா?வீட்டு சிறையில் களிதிண்ணுட்டு இருக்கார்.காரனம் மனுஷன் அணுகுண்டை கடலைமிட்டாய் கணக்கா வர்ரவன் போறவனுக்கெல்லாம் வித்திருக்கார்.அதனால முஷாரப் அவரை பிடிச்சு உள்ளே வெச்சுட்டார். ஆனாலும் பாவம்யா பாகிஸ்தானின் அணுஆயுத தந்தை:-) இப்ப முஷாரப் அண்னாத்தே என்ன கதை அடிக்கிறாருன்னா இந்தியாவின் அணுஆயுத திட்டம் பாகிஸ்தானை பாத்து காப்பி அடிச்சதுன்னு சொல்றார்.நம்ம ஆளுங்க நமட்டு சிரிப்பு சிரிக்கறாங்க.முதல் காரணம் அது பொய் என்பது.ரெண்டாவது காரனம் பாகிஸ்தானிலிருந்து அணுகுண்டை காப்பி அடித்திருக்கவே வேண்டியதில்லை.கான் அண்ணாத்தெக்கு மாமூல் வெட்டிருந்தா அவரே குடுத்திருப்பார். இது எல்லாவற்றையும் விட மிகப்பெரும் கொடுமை என்னவென்றால் புத்தகம் வெளிவந்த சிலநாட்களிலேயே அதை வாங்க ஆளில்லாமல் அமேசான் அந்த புஸ்தகத்துக்கு 50% வரை தள்ளுபடி கொடுத்து விற்கிறது.இதை கேட்டா முஷாரப் அண்ணாத்தேக்கு ரத்தகொதிப்பே வந்துடும்,பாவம்.இதை ஒரு சிறந்த நகைச்சுவை சித்திரமா விற்க அமேசானுக்கு ஐடியா கொடுத்தா விற்பனை பிச்சுகிட்டு ஓடும்.என்ன சொல்றீங்க? எப்படியோ சர்வதேச அளவில் சிரிப்பு மூட்டிய முஷாரப்புக்கு என் பாராட்டுக்கள்.இந்த சிறந்த நகைச்சுவை சித்திரத்தை அனைவரும் வாங்கி படித்து இன்புறுவீர்களாக. ஓம் சாந்தி.

26 comments:

அனுசுயா said...

nalla pathivu musharap ivlo jokara iruparunnu ippo than theriyuthu :))))

நாடோடி said...

அப்பா பாத்து இதுவும் முதலாளித்துவ அமெரிக்கா சதினு யாராவது வந்து கத்தப்போராங்க அல்லது ஒரு சின்ன கட்டுரைய பதிவாவோ அல்லது பின்னூட்டமாவோ போடப்போராங்கோ..

கதிர் said...

:))

ஊரே சிரிக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன்!

உலகமே சிரிக்குதுன்னு இப்பதான் கேள்விப்படறேன்:))

Anonymous said...

முஷாரஃப் அண்மையில் இந்திய இந்துக்களைப் பற்றியும் ஈழத்தமிழர்களைப் பற்றியும் தெரிவித்த கருத்துக்கள்:
பார்க்க

நாமக்கல் சிபி said...

எதுக்கு அவருக்கு இந்த வேண்டாத வேலை???

//4000 பாகிஸ்தான் வீரர்கள் அதில் செத்ததா பாகிஸ்தான் ரிடையர்ட் ராணுவ அதிகாரிகள் பலர் சொல்லிருக்காங்க.அதை அண்ணாச்சி வெற்றி என்கிறாரே என குழம்பியுள்ளனர்
//
40,000 பேர் சாகாமல் 4000 பேர் செத்தது அவருக்கு ஒரு வகையில் வெற்றியாக இருக்கலாம் ;)

சிறில் அலெக்ஸ் said...

செல்வன்,
காமெடி ப்ரொக்ராமை நானும் பார்த்தேன் தைரியமாக மிடுக்கோடுதான் பேசினார். வெறுமனே காழ்புணர்ச்சியோடு அவரை விமர்சிக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.

பாக்கிஸ்தானில் அவருக்கு எதிர்ப்பென்றால் இந்தியாவில் ஆதரவு தரவேண்டுமே. :)

அவர் புத்தகத்துக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பாம்.

குமரன் (Kumaran) said...

:-))

சன்னாசி said...

ஜான் ஸ்டூவர்ட் ஷோவுக்கு இதுவரை எந்த head of stateம் வந்ததில்லை - முஷாரஃப் தான் முதல் ஆசாமி. சி.என்.என்னில், பிற ஊடகங்களில் என்று எங்கே பார்த்தாலும் முஷாரஃப் முகம்தான், அமேசான் bestseller பட்டியலில் இந்தப் புத்தகம் இரண்டாம் இடம், ஆஃப்கானிஸ்தானின் ஹமீது கர்சாயை மண்ணுக்குள் தலையை விட்டுக்கொண்டு கதைவிடும் நெருப்புக்கோழி என்று சி.என்.என் உல்ஃப் ப்ளிட்சரிடம் சொன்னது - ஊடகங்களை எப்படிக் கையாளுவதென்று முஷாரஃபிடமிருந்து இந்திய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள ஏராளமாக இருக்கிறது.

aathirai said...

இந்த பேட்டியை நானும் பார்த்தேன்.
ஏடாகூடமான கேள்விகளை
கூலாக கையாண்டார்.
ஆளுமை பண்புகள்
என்று பார்த்தால் நம் மன்மோகன் சிங்கைவிட முஷாரப்
பல மடங்கு திறமையானவர்.


//ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் எனக்கு உதவி செய்யவில்லை
என்றால் பாகிஸ்தானில் குண்டு போட்டு கற்காலத்துக்கு
கொண்டுபோயிடுவேன்" என ரிச்சார்ட் ஆர்மிடேஜ் சொன்னார்
என ஒரு அடி அடித்தார்.அமெரிக்காவே விழுந்து,விழுந்து சிரித்தது.//

அமெரிக்கா இப்படி சொல்லியிருக்காது என்று சொல்கிறீர்களா?

கால்கரி சிவா said...

அமெரிக்கா இதையும் சொல்லியிருக்கும் இதுக்கு மேலஎயும் சொல்லியிருக்கும்.

இவர் வாயை மூட இர் கணிசமான அமௌண்டையும் செட்டில் பண்ணியிருக்கும்.

இவர் வாய்விட்டு அடுங்குவதை பார்த்தால் இன்னும் இன்கிரிமெண்ட்டும் வழி போடுகிறார்போல் இருக்கிறது.


முஷாராப் ஒரு முறைக் கெட்ட முறையில் ஆட்சியை பிடித்து தீவிரவாதிகளை வளர்த்து அமெரிக்காவை மிரட்டி பணம் சம்பாதிக்கும் ஒரு மோசமான உளவாளி ஜெனரல் அவர் மேல் காழ்புணர்ச்சிக் கொள்வதில் தவறில்லை சிறில்.

மேலும் செல்வன் ஒன்றும் இல்லாததை சொல்லவில்லையே

Santhosh said...

//இந்தியாவுக்கு எப்படி அப்துல் கலாமோ பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு ஏ.கியூ.கான்.//
தலை
கான் நம்ம கலாமுடன் ஒப்பிட எந்த விதத்திலும் தகுதியானவர் கிடையாது.அவர்களின் பெரும்பாலான சரக்கு சீன போன்ற நாடுகளில் இருந்து சுட்ப்பட்டது. கான் ஒரு பாகிஸ்தானின் unofficial ஆயுத வியாபாரி, மாட்டிக்கிட்டாரு உள்ள வெச்சிடாங்க. எனக்கு தெரிந்து அவரை பலிகடா ஆக்கிடாங்கன்னு நினைக்கிறேன்.

Unknown said...

நன்றி அனுசுயா.முஷாரப் மிகவும் நகைசுவை உணர்வு கொண்டவர்.நாம் தான் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லை

மணியன் சார்

உங்க வாய்க்கு சர்க்கரை தான் போடணும்:-))நீங்க சொன்னது நடந்துடுச்சு பார்த்தீங்களா?

தம்பி

உண்மைதாங்க:-)))சிரிக்காமல் சீரியசா ஜோக் அடிப்பது ஒரு கலை.அதில் முஷாரப் மிகவும் வல்லவர்:-)

Unknown said...

அனானி

ஜோக்கர் சொல்வதை எல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது.அப்பப்ப சிரிச்சுட்டு மறந்துடணும்:-))

//40,000 பேர் சாகாமல் 4000 பேர் செத்தது அவருக்கு ஒரு வகையில் வெற்றியாக இருக்கலாம் ;) //

பாலாஜி

எனக்கென்னவோ கைபுள்ளை அடிவாங்கிட்டு வந்து "வெற்றி,வெற்றி"ன்னு உதார் விட்ட மாதிரி தான் முஷாரப்பும் பண்றாருன்னு தோணுது:-)))

Unknown said...

//காமெடி ப்ரொக்ராமை நானும் பார்த்தேன் தைரியமாக மிடுக்கோடுதான் பேசினார். வெறுமனே காழ்புணர்ச்சியோடு அவரை விமர்சிக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது.//

அலெக்ஸ்

பதிவு அந்த டிவி புரொக்ராம் பற்றி அல்ல.புத்தகத்தை பற்றியது.

அவரது நகைச்சுவைக்கு நான் என்றும் ரசிகன்.அவர் மீது எதுக்கு காழ்ப்புணர்வு?:-))

//அவர் புத்தகத்துக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பாம். //

இந்தியர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்கள்.அதனால் தான்

Unknown said...

தலைவர் குமரன்,

நன்றி.

சன்னாசி

உண்மை.முஷாரப் ஊடகங்களை நன்றாக கையாள்வார்.ஆங்கிலம் அருமையாக பேசுவார்.இந்திய அரசியல்வாதிகள் அப்படி இல்லை

Unknown said...

//அமெரிக்கா இப்படி சொல்லியிருக்காது என்று சொல்கிறீர்களா? //

கண்டிப்பா சொல்லிருக்கும்:-)

நான் சொன்னது

பாகிஸ்தானில் அவனவனுக்கு இதை கேட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம்.பின்ன மிலிட்டரி ஜெனெரலே பயந்தா அப்புறம் அந்த நாட்டு ராணுவத்துக்கு என்ன மதிப்பு?"எனக்கு பயமா இருக்கு"ன்னு எவன் வேணா சொல்லலாம்,மிலிட்டரிகாரன் அதுவும் பாகிஸ்தான் முப்படை தளபதி சொல்லலாமோ?:-))

Unknown said...

//என்ன சொல்ல வரிங்கன்னு புரியில்ல.... கலாம் இது மாதரி வித்துயிருந்தால் கூட அவருக்கு நல்லபதிவி கொடுபோன்னா? இல்லா தப்பு செய்தவங்களை சிறைவத்தது தப்புன்னா? அதுவும் அவரிக்கு மரியாதை கொடுத்து வீட்டுகாவலில் வைதது தப்புன்னு சொல்லவரிங்களா?

என்னமோ போங்க.... குற்றம் சொல்லி சந்தோஷம் அடையினும்மு நினைச்சாச்சி.... அப்புறம் என்ன...நடத்துங்க.... //

எலிவால் ராஜா

இரண்டு அணுஆயுத தேசத்தந்தைகளின் தகுதி,தராதரத்தை ஒப்பிட்டேன்.அவ்வளவுதான்.

நகைச்சுவையை ரசிச்சு சிரிச்சா குற்றம் கண்டுபிடிப்பது என பொருளா?நான் அவர் புஸ்தகத்துக்கு விளம்பரம் தானே பண்ணிருக்கென்.பாருங்க அந்த இணைப்புக்கு எத்தனை க்ளிக் வந்திருக்குன்னு:-))

Unknown said...

சிவா

அணுஆயுத வல்லரசுன்னு உதார் விடும் பாகிஸ்தானை ஒரே போன்காலில் மிரட்டி வழிக்கு கொண்டு வந்துள்ளார் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்.முஷாரப் இத்தனை நாள் ஏன் அதை வெளிய சொல்லலைன்னு தெரியலை.இப்ப திடீர்ன்னு ஏன் சொன்னாருன்னும் தெரியலை.சொல்லிட்டு ஏன் இன்னும் அவர்கலுக்கு சப்போர்ட் பண்றாருன்னும் தெரியலை.

புரியாத புதிரா தான் இருக்கார்:-))

Unknown said...

//கான் நம்ம கலாமுடன் ஒப்பிட எந்த விதத்திலும் தகுதியானவர் கிடையாது.அவர்களின் பெரும்பாலான சரக்கு சீன போன்ற நாடுகளில் இருந்து சுட்ப்பட்டது. கான் ஒரு பாகிஸ்தானின் உனொffஇcஇஅல் ஆயுத வியாபாரி, மாட்டிக்கிட்டாரு உள்ள வெச்சிடாங்க. எனக்கு தெரிந்து அவரை பலிகடா ஆக்கிடாங்கன்னு நினைக்கிறேன். //

தலை

இது உண்மைதான்.கான் சகல் அஸ்திரங்களையும் பிரயோகித்து அணுகுண்டையும்,ஏவுகனையையும் சுட்டார்.நடுவே அவருக்கும் கொஞ்சம் சுட்டுகிட்டார்:-))

கானையும் கலாமையும் ஒப்பிட காரணம் இருவரும் அணுஆயுத தந்தை என இரு நாடுகளிலும் அழைக்கப்படுவதே.நல்லதொரு தலைமைக்கு கலாமும்,சுயநல தலைமைக்கு கானையும் உதாரணமாக குறிப்பிட்டேன்

Boston Bala said...

என்னுடைய பங்குக்கு :)

கைப்புள்ள said...

//இது என்ன காமடின்னு அமெரிக்கவே விழுந்து,விழுந்து சிரிக்குது.பாகிஸ்தானில் அவனவனுக்கு இதை கேட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம்.பின்ன மிலிட்டரி ஜெனெரலே பயந்தா அப்புறம் அந்த நாட்டு ராணுவத்துக்கு என்ன மதிப்பு?"எனக்கு பயமா இருக்கு"ன்னு எவன் வேணா சொல்லலாம்,மிலிட்டரிகாரன் அதுவும் பாகிஸ்தான் முப்படை தளபதி சொல்லலாமோ?:-))//

செல்வன், பயங்கர ஜனரஞ்சகமா எழுதிருக்கீங்க. ரசிச்சுப் படிச்சேன்.
:)

Unknown said...

நன்றி தலை.ஜனரஞ்சக காமடியா எழுதினவர் முஷாரப்.நான் வெறும் பொழிப்புரை மட்டுமே தந்தேன்:-)))

ENNAR said...

செல்வன்
பயந்தார் என எப்படிச் சொல்கிறீர்கள்
சொன்னதைச்சொன்னார் அவ்வளவுதானே.

Anonymous said...

//நான் சொன்னது

பாகிஸ்தானில் அவனவனுக்கு இதை கேட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம்.பின்ன மிலிட்டரி ஜெனெரலே பயந்தா அப்புறம் அந்த நாட்டு ராணுவத்துக்கு என்ன மதிப்பு?"எனக்கு பயமா இருக்கு"ன்னு எவன் வேணா சொல்லலாம்,மிலிட்டரிகாரன் அதுவும் பாகிஸ்தான் முப்படை தளபதி சொல்லலாமோ?:-))//


சதாம் உசேன் மாதிரி வீரமா பேசலாந்தான். அப்புறம் முஷாரப்
தலைக்கு அமெரிக்கா பேன் பார்ப்பதை டிவியில் பார்க்க
வேண்டியிருக்கும். யதார்த்தம் நு ஒன்னு இருக்குது.

சதாம் உசேன் மாதிரி வீரமா பேசலாந்தான். அப்புறம் முஷாரப்
தலைக்கு அமெரிக்கா பேன் பார்ப்பதை டிவியில் பார்க்க
வேண்டியிருக்கும். யதார்த்தம் நு ஒன்னு இருக்குது.

நீங்க எழுதறத பாத்தாதான் இப்பல்லாம் நகைச்சுவையா இருக்கு,

வஜ்ரா said...

//
பாக்கிஸ்தானில் அவருக்கு எதிர்ப்பென்றால் இந்தியாவில் ஆதரவு தரவேண்டுமே.
//

சிறில்,

இந்தியர்கள் என்ன பாகிஸ்தானியர்களா, அவனுக்கு பிடிக்காது என்றால் அது எனக்குப் பிடிக்கும் என்று சொல்வதற்கு?

//
அவர் புத்தகத்துக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பாம்.
//

இந்தியர்கள் என்ன தான் சொல்கிறார் இந்த ஆசாமி என்று பார்த்து வாங்குகின்றார்கள்...

பாகிஸ்தானில் இதற்கு முன்னால் இருந்த ஒரு சர்வாதிகாரி இதே போல் புஸ்தகம் எழுதினது என்ன ஆயிற்று தெரியுமில்ல?

..

//
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் எனக்கு உதவி செய்யவில்லை
என்றால் பாகிஸ்தானில் குண்டு போட்டு கற்காலத்துக்கு
கொண்டுபோயிடுவேன்" என ரிச்சார்ட் ஆர்மிடேஜ் சொன்னார்
என ஒரு அடி அடித்தார்.
//

யாருக்கு தெரியும், சொன்னாலும் சொல்லியிருக்கும் யூ. எஸ். ஆனால் அதை சி. என். என்னில் வாய் தவறி வந்திருக்கும்...அதற்கு அப்புறம் புஷ் மாமா பர்ஸைக் கொஞ்சம் டைட்டாக மூடியவுடன்...இல்லை அப்படிச் சொல்லவில்லை என்கின்றார் போலும்.

Unknown said...

என்னார் ஐயா

ஆர்மிடேஜின் ஒரே போன்காலில் பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கையே மாறிவிட்டது.அதற்கு ஆர்மிடேஜின் மிரட்டலே காரணம் என முஷாரப்பே சொல்லிவிட்டார்.இது பயம் அன்றி வேறென்ன?

அனானிமஸ்,

//சதாம் உசேன் மாதிரி வீரமா பேசலாந்தான். அப்புறம் முஷாரப்
தலைக்கு அமெரிக்கா பேன் பார்ப்பதை டிவியில் பார்க்க
வேண்டியிருக்கும். யதார்த்தம் நு ஒன்னு இருக்குது.

நீங்க எழுதறத பாத்தாதான் இப்பல்லாம் நகைச்சுவையா இருக்கு,//

ஒண்ணு சதாம் உசேன் மாதிரி வீரமா பேசிட்டு ஜெயிலில் களிதின்னுட்டு இருந்திருக்கலாம்.

இல்லை மிரட்டலுக்கு பயந்து அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு கொடுத்துட்டு வெளியே சொல்லாமல் இருந்திருக்கலாம்.

இவர் இரண்டையும் செய்யாமல் மிரட்டலுக்கு பயந்துகொண்டே அமெரிக்காகாரன் காலால் இட்ட வேலையை தலையால் செய்துகொண்டு நைசாக அதை வெளியே சொல்லி புலம்பிக்கொண்டே,அதையும் புஸ்தகமாக எழுதி அமெரிக்காவில்யேயெ விற்று காசு பண்ணி பாகிஸ்தானில் 'பயமா எனக்கா' என உதார் விட்டுக்கொண்டு ஒரே குழப்படி செய்து கொண்டிருக்கிறார்.

/நீங்க எழுதறத பாத்தாதான் இப்பல்லாம் நகைச்சுவையா இருக்கு,/

என்னங்க பண்றது?முஷாரப் பண்றதை எல்லாம் எழுதினா நகைச்சுவையா தான் இருக்கும்.எல்லாரும் சிரிச்சு சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும்:-)