Friday, September 22, 2006

168.நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?

"நாடு சரியில்லை,அரசியல்வாதி சரியில்லை,மாநகராட்சி சரியில்லை" என அனைவரும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள்.கோயமுத்தூர்காரர்கள் அப்படி சொல்ல மாட்டார்கள்.பொறுப்புள்ள குடிமகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை செய்து காட்டுவார்கள். கோவையில் ஏகப்பட்ட பிரச்சனைகள்.அனைத்துக்கும் அரசையே நம்பியிருக்க முடியுமா?மக்களுக்கு மக்கள் தான் உதவ முடியும் என்ற நோக்கில் துவக்கப்பட்டது தான் சிறுதுளி இயக்கம்.இன்று இது மக்கள் இயக்கமாக மாறி கோவையையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. சிறுதுளி என்பது கோவை பிரிகால் இயக்குனர் வனிதா மோகன்,பண்னாரி அம்மன் சுகர்ஸ் தலைவர் திரு பாலசுப்பிரமணியன்,சங்கரா கண் மருத்துவமனை தலைவர் திரு வெங்கட்ரமணி ஆகியோர் தலைமையில் துவக்கப்ப்ட்ட ஒரு மக்கள் தன்னார்வலர் இயக்கம்.இதன் நோக்கம் என்னவெனில் 1.குளங்களை சுத்தப்படுத்துதல் 2.மழைநீர் சேகரிப்பு 3.பாலிதீன் பைகள் மற்றும் நசிவு கழிவுகளுக்கு எதிரான போர் 4.மரங்களை நடுதல் 5.ஏழைகளுக்கு கல்வி அறிவு புகட்டுதல் 6.சமூக நலத்திட்டங்கள் செய்தல் குமாரசாமி குளம் - சுத்தப்படுத்தி தூர்வாரியதற்கு முன்பகுமாரசாமி குளம் - சுத்தப்படுத்தி தூர்வாரியதற்கு பின்ப செல்வம்பதி குளம் - சுத்தப்படுத்துவதற்கு முன்பசெல்வம்பதி குளம் - சுத்தப்படுத்தியதற்கு பின்ப சிறுதுளி வருவதற்கு முன் இருந்த கிருஷ்ணாம்பதி குளம் சிறுதுளி வந்தபின் இருக்கும் கிருஷ்ணாம்பதி குளம் சிறுதுளியின் சாதனைகள் 1.கோவையின் மிகப்பெரும் குளங்களான கிருஷ்ணாம்பதி, நரசம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வசிந்தாமணி, குறிச்சிகுளம் மற்றும் பெரியகால்வாய் ஆகியவற்றை சீரமைத்தது சிறுதுளி.குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு,தூர் வாரப்பட்டு,கரைகள் பலப்படுத்தப்பட்டன.இதனால் குளங்களில் நீர் சேகரிப்பு அதிகரித்து இந்த 7 குளங்களால் பாசன வசதி பெறும் இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்தது.808 ஏக்ரா நிலங்கள் நீர் வசதி பெற்றன. 2.அழிவை நோக்கி போய்கொண்டிருக்கும் நொய்யல் நதியை காக்க நதியின் கரைகள் பலப்படுத்தப்பட்டன நதியில் உள்ள 8 சிறு அணைகள் பலப்படுத்தப்பட்டன ஐம்பது கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்பட்டது ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி உதவியுடன் அகற்றப்பட்டன குளம் வெட்டினால் போதுமா?மரம் இருந்தால் தானே மழை வரும்?இதுவரை 1 லட்சம் மரக்கன்றுகளை இந்த ஏரிகளின் கரையோரங்களில் சிறுதுளி நட்டுள்ளது.கோவை போலிஸ் டிரெய்னிங் கல்லூரி மாணவர்கள் இதற்கு உதவினர்.மேலும் ஒரு நாலைக்கு 500 மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய பூங்கா அமைத்துள்ளனர். அம்மன்குள சாக்கடைகழிவை அகற்ற நுண்ணுயிரிகளை வளர்த்து குளத்தில் இட்டதில் ஒரே வாரத்தில் 7% அளவுக்கு அம்மன்குளத்திலிருந்த சாக்கடைநீர் சுத்தமானது வீடுவீடாக குப்பை அள்ளி,சிறுதுளி குப்பைத்தொட்டிகளை அமைதத்து.100 மெட்ரிக் டன் அளவு குப்பைகளை அகற்ற ஒரு திட்டமும் தீட்டியுள்ளது. இதுவரை 180 போர்வெல்கள் அமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் பல அமுல் செய்யப்பட்டுள்ளன. இது அத்தனைக்கும் நிதி கோவை மக்களிடமிருந்தும்,நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் பல தன்னார்வல தொண்டர்கள் மூலமுமே சாத்தியமானது என்பதை குறிப்பிட வேண்டும்.மக்கள் பணி செய்ய தொழிலதிபர்களும்,பொதுமக்களும்,கோவை மாநகராட்சியும் இனைந்தே இந்த சாதனைகளை செய்ய முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இது ஒரு மக்கள் இயக்கம்.இதில் யாரும் ஜாதி வித்யாசம் பார்க்கவில்லை,மதபேதம் இல்லை,ஏழை - பணக்காரன் என்ற பேதமில்லை.அனைவரும் பொருள் தந்தோம்,முடியாதவர் உடல் உழைப்பை தந்தோம். சிறுதுளி பெருவெள்ளம்.உங்கள் ஊரிலும் ஒரு சிறுதுளீ இயக்கத்தை துவக்குங்கள்.மக்களுக்கு உதவுங்கள்.மக்களுக்கு உதவுவதுதான் தேசபக்தி,தேச சேவை. உன்னை சுற்றியுள்ள மக்கள் தான் தேசம்.அவர்கள் மேல் நீ காட்டும் அன்புதான் தேச பக்தி.அவர்களுக்கு செய்யும் சேவை தான் தேச சேவை. அதில் எங்கள் கோவைக்குதான் முதலிடம்.கோயமுத்தூர் ஏன் முன்னேறுகிறது என்று கேட்டால் இதனால் எல்லாம் தான். It is so easy to talk the talk. But it all comes down to doing the deed. இதுபற்றிய சுட்டிகள் சிறுதுளி வலைத்தளம் சிறுதுளி பற்றிய பத்திரிக்கை செய்திகள

20 comments:

Anonymous said...

நல்ல விஷயம் செல்வன்

Unknown said...

நன்றி கேள்விகள் கேட்கிறேன்

SP.VR. SUBBIAH said...

நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் உணமை!
திருமதி வனிதா மோகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
நான் கோவை வர்த்தக சபை உறுப்பினர்களில் ஒருவன்
வனிதா அம்மையார் அவர்களை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு அங்கே கிடைக்கும்
அடுத்தமுறை அவர்களைச் சந்திக்கும்போது உங்கள் கட்டுரையைப்பற்றிச் சொல்கிறேன் மிஸ்டர் செல்வன்

Unknown said...

நன்றி வாத்தியாரய்யா

நிச்சயமாக வனிதா மோகன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.கோவைக்கு மிகப்பெரும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

Amar said...

ஹிஹி கோயம்புத்தூரு கொயம்புத்தூரு தான்.

ஊரு தலைகீழா மாறிகிட்டு இருக்குது..

Unknown said...

சமுத்ரா

அதைத்தான் நான் பலகாலமா சொல்லிகிட்டி இருக்கேன்.

கோயமுத்தூரா கொக்கான்னு:-))

குசும்பன் said...

$சல்வன்,

உமது பதிவை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நான் என்ன செய்தேன் நாட்டுக்கு என்பதே தவறான தலைப்பு. தயவு செய்து மாற்றவும்.

ஆயிரமாயிரமாண்டுகளாய் அடக்கி வைக்கப்பட்டவன் நான். வேண்டுமென்றால் நேரில் நிரூபணம் என்னால் செய்ய முடியும். நாடு எனக்கென்ன செய்தது என்பதே என் தலையாய கேள்வி.

இப்போது இணைய புரட்சியே எனது தலையாய கடமை. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட திராவிடனை கைதூக்கி விடுதலே எனது தலையாய பணி.

ஏனுங்க நீங்க கோயம்புத்தூரா? அட தேசபக்தி நெறைஞ்ச குசும்பு ஊரய்யா அது :-) கோலிவுட் லொள்ளன் சத்யராஜ்'ஜ பாத்தா ஒரு வார்த்தை நம்மளப் பத்திச் சொல்லுங்க. வேரோடு பிடுங்கி நடப்பட்ட மரமாய் சில பல பேரு தேச சேவை அங்கேயிருந்து செய்யிறாங்கன்னு நமக்கும் நியூஸ்தான்.

ஸார் நல்ல சேதி சொல்லியிருக்கீங்க. எல்லா ஊரிலேயும் கண்டிப்பா செயல்படுத்த முடியும். சிறுதுளிதான் பெருவெள்ளம். ஒரு பில்லியன் மக்கள் சேர்ந்தால்... சுனாமியக் கூட தூர விரட்டலாம்.

இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தது. தயவு செய்து இது போல நெறைய எழுதுங்க. பகிர்ந்துக்குங்க.

மூச்சு வாங்குதுங்க. ஆப்புறம் வாரன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தக் குளங்களில் எல்லாம் நீர் ததும்பி நிற்கும் காட்சியையும் பார்க்க வேண்டும் போல் உள்ளது.

//குளம் வெட்டினால் போதுமா?மரம் இருந்தால் தானே மழை வரும்//
கோவை மாவட்ட ஆட்சியர், தன் அலுவலகத்தில் சிறு தவறு செய்யும் அதிகாரிகளுக்கும் பிறர்க்கும் என்ன தண்டனை வழங்குவாராம் தெரியுமா? 10 மரக்கன்றுகளை ஸ்பான்ஸர் செய்ய வேண்டும்! எல்லாம் சிறுதுளியின் தாக்கம் !!

//உன்னை சுற்றியுள்ள மக்கள் தான் தேசம்.அவர்கள் மேல் நீ காட்டும் அன்புதான் தேச பக்தி.அவர்களுக்கு செய்யும் சேவை தான் தேச சேவை//
-நச்!

Unknown said...

வாங்க குசும்பரே

பதிவு அளவுக்கு பின்னூட்டம் போட்டு அசத்திட்டீங்க?

//இப்போது இணைய புரட்சியே எனது தலையாய கடமை.//

இணையத்தில் புரட்சி செய்யலாம்.இணையமே ஒரு புரட்சிதானே?ஆனா இங்கிருந்துகிட்டு ஏழை மக்களுக்கு ஒரு நற்செய்தி என்று புரட்சி செய்துகொண்டிருந்தால் அது ஜோக்கா தான் இருக்கும்.

இணையத்தில் இருப்பவர் முக்கால்வாசி பேர் ஓரளவு நல்ல பொருளாதார நிலைமையில் இருப்பவர்கள்.நாட்டுக்கு அவர்களால் நல்லது செய்ய முடியும்.அதனால் அதைப்பற்றி எழுதினால் நிச்சயம் பலன் இருக்கும்.ஆனா நம் மக்களுக்கு இது புரிவதில்லையே?:-))

Unknown said...

//இந்தக் குளங்களில் எல்லாம் நீர் ததும்பி நிற்கும் காட்சியையும் பார்க்க வேண்டும் போல் உள்ளது.//

ஜூன் மாதத்தில் நல்ல மழைபெய்து கண்மாய்கள் நிரம்பி வழிவதாக செய்தி கண்ணபிரான்.கண்டிப்பா சிறுதுளிக்கு இதில் பெருமளவு பங்கு உண்டு.

கோயமுத்தூர் மாநகராட்சி முன்னாள் மேயர் மலரவனுக்கும் இதில் பங்குண்டு.சிறுதுளி வளர்ச்சியில் அவர் நல்ல ஊக்கம் எடுத்துகிட்டார்

குசும்பன் said...

//இணையத்தில் இருப்பவர் முக்கால்வாசி பேர் ஓரளவு நல்ல பொருளாதார நிலைமையில் இருப்பவர்கள்.நாட்டுக்கு அவர்களால் நல்லது செய்ய முடியும்.அதனால் அதைப்பற்றி எழுதினால் நிச்சயம் பலன் இருக்கும்.ஆனா நம் மக்களுக்கு இது புரிவதில்லையே?//

செல்வன் ஸார்,

//It is so easy to talk the talk.//

குசும்பன் நாஞ் சொல்றேன்

It's tough to walk the talk

ஆனாலும் நம்மால முடியுங்ற சேதிகளை இப்பிடி படம் புடிச்சி காட்டுங்க ராசா...

அதுதான் நீங்க சொல்ற புர்ச்சி ஸாரி புரட்சி...

பதிவு கண்டிப்பா உண்மையான ஊக்கங் கொடுக்கும் என்பது என் நம்பிக்கை.

வாழ்த்துக்கள்!

Anonymous said...

சிறுதுளி இயக்கம் கோவை மாநகரம் மற்றும் சுற்றியுள்ளப்பகுதியில் செய்யும் பணிகள்
மகத்தானவை. கோவை மக்கள் முழு மனதுடன் இதற்கு தங்களால் முடிந்த நிதி உதவியையும்,
ஒத்துழைப்பையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள். இதில் செல்வந்தர்கள்,
ஏழைகள், வெவ்வேறு சாதியினர், கட்சியினர் என எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் கோவை
மக்கள் அனைவரும் பங்குப் பெறுகிறார்கள். கல்லூரி பள்ளி மாணவர்களும் பெருமளவில் இச்சேவையில் கலந்துக் கொள்கிறார்கள்.

கோவை மற்ற நகரங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது.

அரசாங்கத்திடம் ஒவ்வொன்றுக்கும் கையேந்தாமல் நமது நகரத்தை நாம் தான் பாதுகாக்க
வேண்டும் என்ற நிலையில் அனைத்து தரப்பு மக்களும் இதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு செயல்படுவதை காண்கையில் மிக சந்தோசமாக இருக்கிறது.

Unknown said...

14

குசும்பன் said...

//http://siruthuli.org//

லிங்க்கை சரி செய்யச் சொல்லுங்க. அமேரிக்காவுல தெரியல பாஸு.

குசும்பன் said...

//http://siruthuli.org//

லிங்க்கை சரி செய்யச் சொல்லுங்க. அமேரிக்காவுல தெரியல பாஸு.

Unknown said...

குசும்பரே

மிக்க நன்றி.அதாவது பொதுவா நம் மக்களுக்கு நெகடிவான நினைப்புக்களும்,தோல்வி மனப்பான்மையும் நிறைய இருக்கும்.ஜப்பான்காரன்,சீனாகாரன்,அமெரிக்காகாரன் எல்லாம் குப்பையா இருந்த தேசத்தை தேசபக்தியால் இன்று சொர்க்கமாக மாற்றி இருக்கிறான்.

அணுகுண்டு விழுந்த தேசத்தை புனர்நிர்மாணம் செய்யவைத்தது அவன் தேசபக்தி.அதே போல் நம்ம மக்களையும் விழிப்படைய வைக்கணும்.நம் நாட்டை புதிய நாடாக உருவாக்க இவர்கள் உழைக்கணும்.இவர்கள் சொல்லும் குறையை இவர்கள் தான் சீர்திருத்தணும்.அதுக்குதான் எழுதறேன்.எத்தனை பேர் குறை சொல்வதோடு நிறுத்திக்கொள்கிரார்கள்,எத்தனை பேர் தேசத்தை புனர்நிர்மாணம் செய்கிரார்கள் என்று பார்க்கலாம்.

நன்றி தலைவா

Unknown said...

குசும்பரே,

சரி செய்துவிட்டேன்

சுட்டிகாட்டியதற்கு நன்றி.இப்போது சுட்டி வேலை செய்கிறது

அன்புடன்
செல்வன்

குமரன் (Kumaran) said...

மிக நல்ல பதிவு செல்வன். இது வரை 'சிறுதுளி'யைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இன்று அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.

பதிவின் தலைப்பிலுள்ள கேள்வியைக் கேட்டுக் கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் பலர் நாட்டிற்குத் தங்களாலானதைச் செய்யத் தொடங்கிவிட்டனர். இந்தியக்கனவு குழுவினைப் பற்றி படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

Unknown said...

குமரன்

நிறைகுடம் என்றும் சப்தம் செய்யாது.குறைகுடம் தான் கூத்தாடும். நாட்டுக்கு செய்பவர்கள் அமைதியாக தங்களால் இயன்றதை செய்து கொண்டு தான் இருப்பார்கள். ஒன்றும் செய்ய வக்கில்லாதவர்கள் தான் "நாடு எனக்கு ஒன்றும் செய்யவில்லை" என புலம்புவார்கள்

Sud Gopal said...

இதுபத்திய என்ற பதிவைப் பார்க்கலியா நீங்க??

http://konjamkonjam.blogspot.com/2006/08/blog-post_07.html