Wednesday, September 06, 2006

152.சமண முனிக்கு கோவணம் கட்டுவதா பகுத்தறிவு?

சமண முனிவர்கள் நிர்வாணமாக போனதற்கு திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் எத்தனை அழகாக வளர்ச்சி பெற்றுள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.உலகெங்கும் தனிமனித சுதந்திரத்தின் காவலனாக பகுத்தறிவு இயக்கங்கள் செயல்படும்போது தமிழ்நாட்டில் மட்டும் கற்புக்காவலனாகவும்,பண்பாட்டுக் காவலனாகவும் பகுத்தறிவு இயக்கங்கள் செயல்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது.தமிழ்நாட்டின் பால்தாக்கரேக்களாக இவர்கள் மாறிவிட்டது போல் தோன்றுகிறது. சமண முனிவர்கள் ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக நிர்வாணமாக தான் இருக்கின்றனர்.அவர்களை நிர்வாணமாக பார்த்து எந்த பெண்ணாவது உனர்ச்சி வசப்பட்டிருக்கிரார்களா?போலீஸில் புகார் தெரிவித்திருக்கிரார்களா?முகலாய ஆட்சியில்,வெள்ளையன் ஆட்சியில் எல்லாம் அவர்கள் நிர்வாணமாகத்தானே சென்றார்கள்?யாராவது புகார் கூறியிருக்கிறார்களா? சமணத்தை பார்ப்பனிய்யத்தோடு இணைத்து ஜல்லி அடித்திருக்கிறார் ராஜேந்திரன்.பார்ப்பனியத்தை எதிர்த்து ஜாதி கொடுமையை அழிக்க தோன்றியவையே பவுத்தமும்,சமணமும்.காலம்,காலமாக பிராமணீயத்தை எதிர்த்தெ வந்த,வேதத்தை மலத்தோடு ஒப்பிட்ட சமணத்தை,சமண முனிவர்களை,வைதீக மதத்தை ஏற்பதை விட கழுவேறுவதே மேல் என கழுவில் ஏறிய சமண மதத்தாரை இன்று பாரதீய ஜனதா கட்சியினர் வந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு பகுத்தறிவு இயக்கத்தினர் கொண்டுவந்து விட்டுள்ளனர்.எங்கே சொல்லி அழ இந்த கொடுமையை? பெரியார் ஜெர்மனியில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டது எதனால்?அந்த விஷயத்தை ராஜேந்திரன் பூசி மெழுகுகிரார். //அய்ரோப்பாவில் - பூர்ஷ்வா நிர்வாண சங்கம் மற்றும் பூர்ஷ்வா அல்லாத நிர்வாண சங்களுக்கும் நாத்திகர் சங்கங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் என்று பல இடங்களுக்குப் போய் நேரில் பார்த்தார் பெரியார். புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த நாட்டின் ‘நிர்வாண சங்கங்கள்’ மக்களை ஏமாற்றும் மதத் தத்துவங்களோடு தொடர்புடையவை அல்ல. சூரியக் குளியல், உடல் பயிற்சி என்று உடலைப் பாதுகாக்கும் கண்ணோட்டத் தோடு உருவாக்கப்பட்டவை. அவை அரசின் அனுமதியோடு செயல்பட்ட அமைப்புகள், பொது ஒழுங்குக்கு எதிராக - வீதிகளில் கண்டபடி நிர்வாணமாக திரிகிறவர்கள் அல்ல// ஆக நிர்வாணமாக பொது இடங்களில் இருப்பது இவருக்கு பிரச்சனையில்லை.அதை மதத்தின் பெயரால் செய்வதுதான் பிரச்சனை.தன் மதத்தை பின்பற்றுவது ஒருவனின் தனிமனித உரிமை என்பது கூட தெரியாத அளவுக்கு பகுத்தறிவு இயக்கம் இவரது கண்களை குருடாக்கி உள்ளது. விக்டோரியா காலத்து இங்கிலாந்தின் ஒழுக்க நடைமுரைகளை இன்னுமும் பிடித்துக்கொண்டு பகுத்தறிவு இயக்கத்தினர் பண்பாட்டு,கலாச்சார காப்பாளர்களாக மாறி சமன முனிவர்களுக்கு கோவணம் கட்டும் வேலையில் இறங்கியுள்ளனர். //ஆடு மாடு, மிருகங்களைத் தவிர மனிதர்கள் எவராக இருந்தாலும், ‘எந்தத் தத்துவத்தையும்’ கூறிக் கொண்டு வீதிகளில் நிர்வாணமாகத் திரிவது சட்டத் துக்கு எதிரானது; தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.// ஏன் ஆடு,மாடு மட்டும் நிர்வாணமாக திரியவேண்டும்?அதையும் பிடித்து தமிழ்பண்பாட்டுப்படி வேட்டி,சட்டை,புடவை அணிவிக்க வேண்டியதுதானே?அதுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? அப்படிப்பட்ட சட்டம் இருந்தால் அது முட்டாள்தனமான சட்டம்.கும்பமேளாவில் எத்தனையோ நூறாண்டுகளாக நிர்வாண சாமியார்கள் பலலட்சம் மக்களுக்கு முன் பல்லாயிரம் போலிசாருக்கு முன்,குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் முன் போகிறார்கள்.யாராவது தவறாக நினைக்கிறார்களா?புகார் தந்திருக்கிறார்களா? எந்த மதத்தையும் எதிருங்கள்.ஆனால் மதத்தை பின்பற்ற மக்களுக்கு இருக்கும் உரிமையை எதிர்க்காதீர்கள்.முன்னது எப்படி உங்கள் உரிமையோ,பின்னது அப்படி அவர்களது உரிமை. கொல்லாமையை,சூத்திரனுக்கு மறுவாழ்வை,அனைத்து உயிர்களுக்கும் அன்பை வலியுறுத்திய சமணத்தை மதிக்காவிட்டாலும் மிதிக்காதீர்கள். இதுபற்றிய ரோசா வசந்தின் பதிவை நிச்சயம் படியுங்கள்.

64 comments:

Anonymous said...

பகுத்தறிந்து இவர்கள் அறிவை தொலைத்து விட்டார்கள்.இப்போது இவர்களிடம் இருப்பது வெறும் 'பகு' தான்

Anonymous said...

நல்ல பதிவு.ரோசா வசந்த் கூட முன்பு இதைப் பற்றி ஒரு பதிவிட்டிருந்தார்.தன்னைத் தானே சீர்படுத்திக் கொள்ள பகுத்தறிவு இயக்கத்தினருக்கு இது ஒரு வாய்ப்பு.

ஓகை said...

செல்வன், நீங்கள் பதிவு எழுதும் வேகத்திற்கு என்னால் பின்னூட்டங்கள் இட முடியவில்ல. வாழ்த்துக்கள்-பரிட்சையில் வெற்றி பெற.

Amar said...

//தமிழ்நாட்டின் பால்தாக்கரேக்களாக இவர்கள் மாறிவிட்டது போல் தோன்றுகிறது.//

Good observation.குஷ்பு விவகாரம் (Part I & II) இதுக்கு ஒரு நல்ல உதாரனம்.

//இன்று பாரதீய ஜனதா கட்சியினர் வந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு பகுத்தறிவு இயக்கத்தினர் கொண்டுவந்து விட்டுள்ளனர்//

இதே ப.ஜ.காவை சேர்ந்த ஒரு பென் NDTV We the People நிகழ்ச்சியில் பேசியது ரொம்ப தமாசாக இருந்தது.

"What are you talking? Tamil Culture is eternal culture.It is a great culture...yada yada yada"

கால்கரி சிவா said...

//'பெரியாரிஸ்ட்கள் இந்து மதம் கடந்து மற்ற மதத்தையும் எதிர்க்கிறார்கள்' என்பதற்கான ஆதாரம் தான் இது. //

ஆஹா..கேட்கவே அருமையாக இருக்கிறது.

அப்படியே முல்லாக்களின் தாடியையும் வெட்ட பெரியாரிஸ்ட்களுக்கு தைரியம் வருமா?

Unknown said...

அனானிமஸ் 1&2 நன்றி

ஓகை.இன்று கம்ப்யூட்டரில் புள்ளியியல் தட்டிக்கொண்டிருந்தேன்.நிரைய நேரம் கம்ப்யூட்டர் முன் அமரவேண்டி இருந்தது.அதனால் தான் இன்று இரண்டு பதிவுகள்:)

Unknown said...

வணக்கமுடன்

நீங்கள் நெத்திப்பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிட்டீர்கள்.:)

தனிமனித சுதந்திரத்தையும்,பேச்சுரிமையும் கட்டிகாக்க வேண்டியது பகுத்தறிவு இயக்கங்களின் முக்கிய பணி.இனியாவது அதை செய்யட்டும்

Unknown said...

நன்றி சமுத்ரா,கால்கரி சிவா

சமூக சீர்த்திருத்தத்தில் ஈடுபடவேண்டிய ஒரு இயக்கம் திசைமாறி போகிறது என்றுதான் இதை எழுதினேன்.சாமியை ஒழிக்கிரேன் என்று சொல்லிவிட்டு தமிழை அம்மனாக்கி இவர்கள் பூசாரியாகிவிட்டார்கள் என்று தோன்றுகிறது.ஆங்கிலத்தில் இதை reification என்பார்கள்.:)

Anonymous said...

மிக சரியான அடி கொடுக்கிரீர்கள் செல்வன் பாராட்டுக்கள்

VSK said...

அருமையான நடை!
ஆழமான வாதங்கள்!
அழுத்தமன சொல்லாற்றல்!
தேவையான பதிவு!

வாழ்த்துகள், செல்வன்!

Unknown said...

//ஆதனால், திராவிட கழகத்தினர் எதிர்க்க வந்தது எல்லாம் : தமிழ் நாடு, தமிழனுக்குத்தான் சொந்தம். மற்ற கலாச்சாரத்தை எல்லாம் இங்கு கொண்டுவந்து அமைதியாக வாழும் மக்களை கலாட்டா பண்ணேதே! //

இது என்ன பேச்சு என்றே புரியவில்லை.தமிழ்நாட்டில் எந்த மொழி பேசுபவனும் வாழலாம்,வசிக்கலாம்.எந்த மதத்தையும் பின்பற்ரலாம்.பேச்சுரிமை,எழுத்துரிமை எல்லாம் இருக்கு.இனியும் இருக்கவேண்டும்.தமிழ் கலாச்சாரத்தை தவிர வேறேதும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பது பாஸிச கருத்து.பாசிசம் தான் தன்னைத்தவிர வேறெந்த கருத்தியலையும் சகித்துக்கொள்லாது.

//உனக்கு உன் மதம் தான் ஒஸ்தி என்றால், அதை உன் ஊரோடு உன் சனங்களோடு மட்டும் நடத்தி வா! பொது இடத்துக்கு வராதே அதுவும் வெளிமாநிலத்தில்.//

சமணர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பவர்கள்.மஹேந்திரவர்ம பல்லவன் எல்லாம் சமணன் தான்.இதெல்லாம் என்ன லாஜிக்கின் அடிப்படையிலான வாதம் என்றே புரியலை.

//நம் குழந்தைகள், சிறாராய் இருக்கும் போதே தங்களது பாலின உறுப்புகளை மறைத்து உடை அணிய கற்றுக் கொடுக்கிறோம். அப்படி வளர்ந்தவர்கள், இது போன்ற காட்சிகளை கண்டால்,உள் மனப்பிரச்சினை உருவாகுவது இய்ற்கை. //

இதுவரை ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக சமணமுனிகள் அப்படித்தான் நடமாடினார்கள்.எந்த குழந்தைக்கு மனநிலை பாதித்தது?கும்பமேளாவில் அம்மணமாகத்தான் சாமியார்கள் நடமாடுகிரார்கள்.அவதூதராக பல முனிவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்திலும்,இந்தியாவிலும் நடமாடியுள்லனர்.எந்த குழந்தைக்காவது மனநிலை பாதிக்கப்பட்டதாகவோ,பெண்கள் அறுவறுப்படைந்ததாகவோ செய்தி உண்டா?

மாறாக குழந்தைகளை கூட்டிக்கொண்டு ஆசிர்வாதம் வாங்கத்தானே செல்கின்றனர் பெண்கள்?இந்த வாதங்களை ஏற்க முடியவில்லை.

நன்றி
செல்வன்

Unknown said...

//மக்கள் முட்டால்கள் இல்லை. மக்கள் எடுக்கும் முடிவை மதித்து நட!//

:-))))

மக்கள் இவர்களின் நிர்வாணத்தை ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சேபித்ததில்லை.ஆக இந்த அம்பு எய்தவரை நோக்கியே திரும்பி வருகிறது.

பகுத்தறிவுவாதிகளே,மக்கள் முட்டால்கள் இல்லை. மக்கள் எடுக்கும் முடிவை மதித்து நட.

:-)))))))

Unknown said...

//இல்லை அன்பரே! பகுத்தறிவு இயக்கங்கள் செய்வது சரியே. பண்பாட்டு காவலன் என்கிற முறையில், பொது வீதிகளில் மதத்தின் பெயரைச் சொல்லி அம்மனமாக திரியும் பைத்தியக்காரர்களை மாநிலத்தை விட்டே வெளியே விரட்டுவதற்கு அவர்கள் செய்யும் செயல்கள் தார்மீகமானது.//

:-))

ஜெர்மானிய வீதியில் அம்மணமாக திரிந்த பெரியாரை என்ன செய்வது?:-)))அதுவும் தார்மீகமா?:-)))))

பெரியாரை எதில் பின்பற்ற வேண்டுமோ அதில் பின்பற்றாதீர்கள்.:-))

Unknown said...

//ஊருடன் ஒத்து வாழ்!//

ஊரில் எல்லா பயலும் சாமி கும்பிடுகிறான்.

ஆக ஊருடன் ஒத்து வாழ்.

சாமி கும்பிடு:-))))

Unknown said...

மிக்க நன்றி எஸ்.கே.

அருண்மொழி said...

//ஜெர்மானிய வீதியில் அம்மணமாக திரிந்த பெரியாரை என்ன செய்வது? //

பெரியார் நிர்வாண சங்கத்திற்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டதற்கும், ஜெர்மானிய வீதியில் அம்மணமாக திரிந்ததற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு.

அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்ட வேண்டாம்.

Anonymous said...

Wait, soon they will announce model dress code for all Tamils
and will mandate that all males
should grow beard :)

Unknown said...

ஜெர்மானிய கலாச்சாரப்படித்தான் நிர்வாணமாக இருக்ககூடாது.ஜெர்மனி கிறிஸ்துவ நாடு.நிர்வாணமாக இருப்பதா அவர்கள் கலாச்சாரம்?தனிமனித சுதந்திரத்தின் பேரில் தான் அவர்கள் அதை அனுமதிக்கிரார்களே தவிர கலாச்சாரத்தால் அல்ல.

ஆனால் ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக நிர்வாண சாமியார்களையும்,சமண முனிவர்களையும்,அவதூதர்களையும் பார்த்துக்கொண்டு தான் வருகிறது தமிழ்கலாச்சாரம்.அவர்களை அது ஏற்றுக்கொண்டு தான் இருக்கிறது.

ஜெர்மனியில் பெரியார் செய்தது ஜெர்மானிய கலாச்சாரத்துக்கு எதிரானது.

தமிழ்நாட்டில் சமண முனிவர்கள் செய்தது தமிழ் கலாச்சாரத்துக்கு உட்பட்டதே.

Unknown said...

பெரியார், ஜெர்மானிய 'தெருக்களில்' நிர்வாணமாக அலையவில்லை.

அங்கே உள்ள நிர்வாண சங்கத்தில் உறுப்பினராகி, அச்சங்கத்தினுள் நிர்வாணமாக நின்று புகைப்படமும் எடுத்து வந்துள்ளார்.//

அப்படியா?

இது உண்மையாயின் தவறான தகவலுக்கு வருந்துகிறேன்.

இருந்தாலும் இது இந்த வாதத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.பெரியார் செய்தபடி எல்லாம் செய்வது அல்ல பகுத்தறிவு.சிந்தித்து செயல்படுவதே பகுத்தறிவு.

Unknown said...

//என்ன வாதம் இது? இதை என் குழந்தைகள் கேட்டாள் கூட வாய்விட்டு சிரிப்பார்களே! இந்த 21ஒன்றாம் நூற்றாண்டிலும் உங்களைப்போல் சிந்திக்கும் மனிதர்கள் இருக்கிறார் என் நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
அடுத்த பெரியார் எப்போது பிறப்பார் என ஆவலாய் இருக்கிறது!//

இதில் வாய் விட்டு சிரிக்க தான் எழுதியது.That was a satire and supposed to make people laugh:-)

தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் இன்னொரு மதமாக,மடமாக வளர்ந்து வருகிறது எனும் சூழலில் அதை திருத்த கண்டிப்பாக ஒரு பெரியார் வந்தே ஆகவேண்டும்.மற்றபடி பெரியார் எல்லாம் பிறக்கமாட்டார்.தானே உருவாக வேண்டியதுதான்.சிந்தித்து,செயல்பட்டால் நாம் அனைவரும் இன்னொரு பெரியார் தான்.சிந்திக்காமல் செயல்பட்டால் நாம் மதவாதிகள் தான்.

rv said...

அருமையான பதிவு செல்வன்.

Unknown said...

//அருமையான பதிவு செல்வன்//

நன்றி தலை.

ROSAVASANTH said...

என் கருத்து -

http://rozavasanth.blogspot.com/2006/06/blog-post_114941788384702017.html

rv said...

//நன்றி தலை.//
எனக்கும் சந்தனம் பூசுவீங்களா? :))

Unknown said...

//என்னய்யா, வரவர மரியாதை தேய்ந்து கொண்டு வருகிறது. சாமி கும்பிடுகிறவர்களை "பயல்", "வா,போ" என்று உரைக்கிறீர். உங்கள் வார்த்தையை கொஞ்சம் அளந்த்து பேச உங்களை எச்சரிக்கிறேன்!//

இது என்ன வம்பா இருக்கு?:-)))

நானும் சாமி கும்பிடுகிறவன் தான்.அக்மார்க் தமிழன் தான்.'வா,போ,பயல்' என்றால் என்ன மரியாதை குறைவு வந்தது?:-)

முதல் மரியாதையில் சிவாஜி "ஊர்ல ஒரு பய புள்ள என்னை மதிக்க மாட்டேன் என்கிறான்" என்பாரே?அது எல்லாம் மரியாதை குறைவா?

//என்னுடன் போர் வேண்டுமா? எனக்கு போர் என்றால் ரொம்பவே இஷ்டம். என் சன கலாச்சாரத்தை கெடுக்க புறப்பட்டிருக்கின்ற கயவர்களை வேருடன் அழிக்க! //

ஆரம்பிச்சுடாங்கையா...ஆரம்பிச்சுட்டாங்க:-)))))

ஏணுங்கனா...பகுத்தறிவோடு விவாதம் நடத்தினா இப்படித்தான் போருக்கு அழைப்பீங்களா?இது தான் பகுத்தறிவா?:-))

//என் குலம் பல தடங்கள்களையும் போர்களையும் தாங்கி தாண்டி இன்னும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. அதை ஏலனம் செய்வது என் ரத்தம் சூடேரி மண்டைக்கு ஏரி நரம்புகள புடைத்து என் போர் குணத்தை எழுப்பி விட்டிருக்கிறது. எச்சரிக்கிறேன்! //

போச்சுடா....:-)

வாழ்க பகுத்தறிவு.

Unknown said...

//எனக்கும் சந்தனம் பூசுவீங்களா? :))//

எதுக்கு என்னை புடிச்சு உள்ள வைக்கவா?:-)))

நியாயமா இது ராம்ஸ்?

Unknown said...

ரோசா

சுட்டிக்கு நன்றி.விரிவான பின்னூட்டம்ன் உங்கள் பதிவில் இட்டிருக்கிறேன்.

நன்றி

அன்புடன்
செல்வன்

Unknown said...

செல்வன்,
திராவிடர்கழம் செய்தது சரியா தவறா என்று விவாதிப்பது ஒரு புறம் இருந்தாலும் , சமணச் சாமிகள் தமிழகத்தில் செய்தது சரியா என்று ஒவ்வொருவரும் திறந்த மனதுடன் (மனதுக்கு ஏது கோவணம்?) அலசி ஆராய வேண்டும்.

சமணமும் கோவணமும்
http://kalvetu.blogspot.com/2006/09/blog-post.html

Hariharan # 03985177737685368452 said...

செல்வன்,

ஒரு இயக்கம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் எனில் சலசலப்பு, சர்ச்சையில் இடம் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற "சர்வைவல் ஆஸ்பெக்ட்" தான் தமிழக பகுத்தறிவு இயக்கங்களின் ஒன் லைன் கொள்கை என்ற சூழலில் இவைதான் நடந்தேறுகிறது.

நேற்று தான் சென்னையில் இருந்து வந்தேன். சென்னை கல்கத்தா காளி கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணர், சாரதா தேவியை சாதாரண தமிழன், பூக்கார அம்மணி போன்றோர் விகல்பமில்லாமல் வழிபட்டுச் செல்கின்றனர்.

தமிழனின் தினசரி வாழ்வுக்குத் தேவையான மன அமைதியை பெரியாரிஸ்டுகளோ, பகுத்தறிவு இயக்கங்களோ முறையாக டந்ததில்லை, தெய்வ வழிபாடுகள் தான் தந்து வருகிறது.

S.L said...

great post

Anonymous said...

//
யார் இவர்களை தமிழ் நாட்டுக்கு அழைத்தது? நீயாகத்தானே வந்தாய்! வந்த இடத்தில் பொது மக்கள் எந்த உடை உடுத்து கட்டுக்கோப்புடன் கன்னியமாக வாழ்கிறார்களோ, அதைப்போல் நீயும் நடந்துகொள். உன்னுடைய சிந்தனையையும் எண்ணங்களையும் விருந்தாளியாக வந்த இடத்தில் மற்றவர்களுக்கு திணிக்க முயற்சிக்காதே!
மக்கள் முட்டால்கள் இல்லை. மக்கள் எடுக்கும் முடிவை மதித்து நட!
//
முஸ்ஸிம்களை நாம எல்லாம் என்ன விருந்து வைத்தா இந்தியாவிற்குள் கூட்டிவந்தோம். பொது சிவில் சட்டத்தை எதிர்கிறார்களே...தனி சட்டம், தனி கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார்களே....

இதற்கு தங்கள் பதில் என்ன மாசிலா?..

Anonymous said...

//ஜெர்மனியில் பெரியார் செய்தது ஜெர்மானிய கலாச்சாரத்துக்கு எதிரானது.//

அண்ணே, உங்க நகைச்சுவைக்கு அளவே இல்லாமல் போச்சு போங்க. இந்த தற்கால தி.க முண்டங்களைத் திட்டினது சரிதான், ஆனா பெரியார் நிர்வாண சங்கத்துல படம் எடுத்துக்கிட்டது ஜெர்மானிய கலாச்சாரத்துக்கு எதிரானதா? தெருவில நிர்வாணமா அலைஞ்சிருந்தா ஜெர்மன் போலீஸ் தூக்கி உள்ளே போட்டிருக்காதா? இல்லைன்னா தமிழ்நாட்டுலர்ந்து போன தி.க படை அப்போ ஜெர்மன் போலீஸைத் தாக்கி பெரியாரை விடுவிச்சிருச்சா? சொன்னா சரியாச் சொல்லணும், இல்லைன்னா கம்முன்னு இருக்கணும். Nothing is better than nonsenseன்னு கேள்விப்பட்டிருக்கீங்களோன்னோ?

இதுக்கு கட்டம் கட்டி மறுபடி ஒரு வழவழா கொழகொழான்னு முழம் பத்து ரூவா கணக்கா பதில் எழுதத்தான் போறீங்கோ அடிச்சு ஆடுங்க.

நாமக்கல் சிபி said...

செல்வன்,
அருமையான பதிவு.

திருவள்ளுவர், இளங்கோவையே சமணர்னு சொல்றாங்க... அப்பறம் சமணம் எப்படி தமிழ் பண்பாடிலிருந்து தனித்திருக்கிறது என்று புரியவில்லை.

அப்பர் பிரானே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறி மீண்டும் சைவரானார். மகேந்திரவர்ம பல்லவனும் பல ஆண்டுகள் சமண மதத்தியே பின்பற்றினான்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிற சமணம் தமிழர் பண்பாட்டில் இல்லை என்பது சிரிப்பைத்தான் தருகிறது.

Anonymous said...

Selvan, dont waste your time with people like Maasila. You can read for your exams instead of replying to those people. They will never understand what you are trying to say.

கால்கரி சிவா said...

//மதச்சண்டையை கிளப்பிவிட்டு அந்த அனலில் குளிர்காய பார்கிறீரோ!
உங்களது வாதம் கண்டிக்கத்தக்கது. உமக்காக வருந்துகிறேன்!//

மாசிலா, சமணர்களுக்கு கோமணம் கட்டியது அவர்கள் சணடைக்கு வரமாட்டார்கள் என்ற தைரியம் தானே உங்கள் பெரியார் முதல் மு.க. வரை செயவ்து.

எதிர்ப்பது என்றால் முழுமையாக எதிருங்கள் இப்படி மொன்னையாக எதிர்ப்பது தான் உங்கள் திராவிட பகுத்தறிவு கொளகை என்பதை உலகம் அறியும்.

Unknown said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்க முடியவில்லை.பொதுவாக சில கருத்துக்களை கூறி நன்றி தெரிவிக்கிறேன்.

சமணம் தமிழோடும்,தமிழ் சமூகத்தோடும் பின்னிப்பினைந்தது.சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ சமணர்தான்.மணிமேகலை,சீவசிந்தாமணி ஆகிய ஐம்பெரும் காப்பியங்கள் சமண காப்பியங்கள்.தமிழர் வாழ்வோடும்,இலக்கியத்தோடும் பின்னிப்பினைந்த சமணத்தை தமிழ் கலாச்சாரம் அல்ல என்பது தமிழன் கலாச்சாரத்தை கேவலப்படுத்துவதாகும்.இளங்கோ அடிகள் போன்ற தமிழ் அறிஞர்களை இழிவுபடுத்துவதுமாகும்.

ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக தமிழோடும்,தமிழ் சமூகத்தோடும் இணைந்தே வாழ்ந்து வந்துள்ள சமண முனிவர்களை,சமண சமயத்தை அவர்களின் வழிபாட்டு உரிமைகளை பலவந்தமாக மாற்றுவது மிகப்பெரும் கொடுமையாகும்.

சமணத்தின் ஜென்மவிரோதிகளான சோழ,பல்லவ அரசர்கள் கூட சமண முனிவர்கள் நிர்வாணமாக செல்வதை தடை செய்ததில்லை.சமணம் என்றாலே நிர்வாணம் என்றுதான் பொருள்.அம்மணம்(அமணம்) என்பதே சமணம் என்பதின் திரிபுதான்.

சமண முனிவர்கள் மனதை பிரச்சாரத்தின் மூலம் மாற்றி அவர்களை ஆடை அணிய வையுங்கள்.யார் வேண்டாம் என்றது?பலாத்காரம்,வன்முறை,அடிதடி என்றெல்லாம் போவதைத்தான் நான் எதிர்க்கிறேன்.

மாசிலா,

உங்களை நான் எந்த விதத்திலும் இழுவுபடுத்தவில்லை.அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு எற்பட்டிருப்பின் வருந்துகிறேன்.சமணர்கள் தமிழர்கள் என்பதை ஏற்க மறுக்கும் நீங்கள் இன எதிரிகளோடு போர் புரியவில்லை.நம் சொந்த சகோதரனோடு போர் புரிகிறீர்கள்.அவனது மத சுதந்திரத்தை,மதத்தின் உயிர்நாடியான கோட்பாட்டை பறிக்கிறீர்கள்.சமணர் தமிழரெ.சமணம் தமிழ் மதமே.இளங்கோ அடிகள் தமிழர் இல்லையா?சிலப்பதிகாரம் தமிழ் இல்லையா?

அனானிமஸ்,

/அண்ணே, உங்க நகைச்சுவைக்கு அளவே இல்லாமல் போச்சு போங்க. இந்த தற்கால தி.க முண்டங்களைத் திட்டினது சரிதான், ஆனா பெரியார் நிர்வாண சங்கத்துல படம் எடுத்துக்கிட்டது ஜெர்மானிய கலாச்சாரத்துக்கு எதிரானதா?/

பெரியார் ஜெர்மானிய தெருக்களில் நிர்வாணமாக் போட்டொ எடுத்தார் என நான் தவறாக நினைத்துக்கொண்டேன்.அது அப்படி இல்லை என தெரிந்தபின் மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன்.

பாலாஜி,கால்கரி சிவா,எஸ்.எல்,கல்வெட்டு,அனானிமஸ் நண்பர்கள்,ஹரிஹரன் அனைவரின் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

அன்புடன்
செல்வன்

மாசிலா said...

//சென்னை கல்கத்தா காளி கோவிலில் இருக்கும் ராமகிருஷ்ணர், சாரதா தேவியை சாதாரண தமிழன், பூக்கார அம்மணி போன்றோர் விகல்பமில்லாமல் வழிபட்டுச் செல்கின்றனர்//
இதிலிருந்து தமிழன் பரந்த மனப்பான்மை உடையவன் என தெரிகிறது. பண்டைய இந்தியாவில், பூர்விக மக்கள் பெரும்பாலும் பெண் தெய்வங்களை போற்றி வந்தவர்கள். கூட்டமாக கும்பலாக வாழ்ந்து வந்த அவர்கள் பலவித படையெடுப்புகளால் பிளந்து, சிதறி மண்ணின் நாலா பக்கமும் வாழ்ந்தனர். ஆதியில், அம்மன்கள் எல்லோருக்கும் மூளம் ஒரே அம்மன் தான். இடையில் வந்து நுகர்த்தப் பட்டவர்கள்தான் ராமன், சிவன் எல்லாம்.

மாசிலா said...

எது எப்படியாகினும், எந்த மதமும் ஆனாலும் சரி, எந்த புது வித கடவுள்கள் ஆனாலும், அம்மனச் சாமியார்கள் ஆனாலும் சரி, நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்த பறந்த இந்தியாவில், இருக்கும் கணக்கில் அடங்கா "சமுத்திரம்" போன்ற எண்ணற்ற குலங்களிலும், கூட்டங்களிலும், இவர்களது தெய்வ நம்பிக்கைகளிலும், கலாச்சாரங்களிலும், சம்பிரதாயங்களிலும், பண்பாட்டுகளிலும், வரலாறுகளிலும் நீங்கள் அனைவரும் இம்மாபெரும் கலாச்சார கடலில் இட்டு கரைத்த உப்பு மாதிரி மறைந்து போவீர்கள். புதிதாக ஒரு கலாச்சார வரலாறு படைக்க நினைப்பது அர்த்தமில்லாதது! இல்லாதைதான் புதிது எனச்சொல்லி கண்டுபிடிக்க முடியும். ஏற்கனவே இருப்பதை கண்டுபிடிக்க நினைப்பது என்பதை என்சொல்ல!

மாசிலா said...

ஓ! பாரத மாதவே!
உன் பிள்ளைகளில் ஒரு சிலர் கெட்ட பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர்.
கூடிய சீக்கிரம் அவர்கள் நல்லவழிக்கு திரும்பி விடுவர்.
எப்போதும் போல்,
உன் பரந்த, விரிந்த, திரந்த மனதால் ஏற்றுக்கொள்வாயாக!
தத்தம் இட்டத்திற்கு கண்டதை நம்பி, மனதை தொலைத்து விட்டிருக்கிறார்கள்
அவர்கள் மீது கருணை காட்டம்மா.
அங்கீகரிக்க வேண்டி முழங்கால் மண்டியிட்டு உனை யாசிக்கின்றனர்.
அம்மாவே, நீ அவர்களை மன்னிப்பாயாக!
உன் நூறு கோடி குழந்தைகளில் அவர்களையும் ஒருவராக ஏற்றுக்கொள்வாக!
கடலெனும் உன் படர்ந்த உள்ளத்தில் யாருக்கும் பாரமில்லாமல் விரைவில் மறைந்து போவார்கள்.
தேவியே, இப்படி தன்னந்தனியாய் அவர்களை தவிர்க்க விடுவது சரியில்லை அம்மா!
ஒன்றும் அறியா இப்பிள்ளைகளின் மனதை மாற்றிய கயவர்களின் கழுத்தை நெறித்து கொல்,
கண் தெரியா குருடனாக்கு,
காலில்லா முண்டமாக்கு,
உடலை கழுகுக்கு இரையாக்கு,
அவர்களது எழுத்துகளை எரி,
அவர்கள் வாழ்ந்த குகைகளை இடித்து நாசமாக்கு!
துணிமணிகளை தீக்கிரயாக்கு,
உனை அண்டி திரும்பி வரும் குழந்தைகளுக்கு ஆதரவு கொடு தாயே, மாகாளி!
நீ வாழ்வாயாக!
எமப்பிறவிகளிடமிருந்து எமை காப்பாயாக!

உனை வணங்குகிறேன் அம்மா!

கால்கரி சிவா said...

மாசிலா, உங்கள் முந்தைய பின்னூட்டத்தின் அர்த்தம் என்ன?

என்னை கண்டித்தது சரி, நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே மாசிலா?

எதிர்ப்பு காட்டாதவர்களிடம் தான் உங்கள் வீரத்தை காட்டுவீரோ?

நல்ல வீரமையா அது. இதுதான் பெரியாரிசமா?

Unknown said...

//ஒன்றும் அறியா இப்பிள்ளைகளின் மனதை மாற்றிய கயவர்களின் கழுத்தை நெறித்து கொல்,
கண் தெரியா குருடனாக்கு,
காலில்லா முண்டமாக்கு,
உடலை கழுகுக்கு இரையாக்கு,
அவர்களது எழுத்துகளை எரி,
அவர்கள் வாழ்ந்த குகைகளை இடித்து நாசமாக்கு!
துணிமணிகளை தீக்கிரயாக்கு,//

இதுக்கெல்லாம் என்னங்க அர்த்தம் மாசிலா?

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சேன்னு சொன்ன கலாச்சாரம் நமது.

சமணர்கள் ஒன்றும் கெட்டு அலையவில்லை.கொல்லாமை,மிருகங்கள்,புழு,பூச்சிகள் என அனைத்து உயிர்க்கும் அன்பு செலுத்தி வாழு என்ற உயர்ந்த தத்துவத்தை பின்பற்றுகிறார்கள்.

Anonymous said...

Very Good Post. You are right on target.

ENNAR said...

செல்வன்
நல்ல விளக்கம்

Muse (# 01429798200730556938) said...

செல்வன், ஈவேரா குழுக்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? முடிந்தால் இதைவிட கீழான செயல்களிலும் ஈடுபடுவார்கள். அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை என்று ஸந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

ஆரம்பித்த காலத்திலிருந்து இவர்களுக்கு வேலையே இவர்களுடைய உண்மையான முதலாளிகளுக்கு ஆதரவாக இந்தியத்தன்மையுள்ள விஷயங்கள் அனைத்தையும் அழித்துவிடுவதுதானே. முதலாளிகளுக்கு நன்றியுள்ள இவர்களின் குணத்தை தாங்கள் குறைவாக மதிப்பிடமுற்பட்டிருப்பது வருந்துவதுற்குரிய ஒன்று.

Unknown said...

அனானிமஸ்,என்னார்,மியூஸ்
நன்றி

மியூஸ்

மத நம்பிக்கைகளை எதிர்ப்பதை குற்ரம் சொல்ல முடியாது.ஆனால் அதை எதிர்க்கும் முறை என்று ஒன்று உள்ளது.ஜனநாயக நாட்டில் சமணருக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

அவர்கள் மதத்தின் பெயரே அமணம்(நிர்வாணம்).சிக்கியர்களுக்கு தலைக்கட்ட்டை அகற்ர சொன்னால் எப்படி உயிரே போய்விடும் போல் பதறுவார்களோ,அப்படித்தான் சமண முனிவர்களும் உடை அணீய சொன்னால் பதறுவார்கள்.

அவர்கள் மத சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்க அரசு முனையக்கூடாது.

Anonymous said...

என் மதத்தில் உடன்கட்டை ஏறும் உரிமை, நரபலி கொடுக்கும்
உரிமை எல்லாம் இருக்கிறது. இனி இந்த மத உரிமைக்கெல்லாம்
போராடலாமா?

Unknown said...

//என் மதத்தில் உடன்கட்டை ஏறும் உரிமை, நரபலி கொடுக்கும்
உரிமை எல்லாம் இருக்கிறது. இனி இந்த மத உரிமைக்கெல்லாம்
போராடலாமா?//

நல்ல கேள்வி.பாராட்டுக்கள்.

நரபலியும்,உடன்கட்டையும் அடுத்தவனை கொல்ல கேட்கும் உரிமை.அதாவது அடுத்தவர்களை பாதிக்கும் செயல்.நம் சுதந்திரம் அடுத்தவன் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் முடிந்துவிடுகிறது.

சமணர்கள் அடுத்தவரை ஒன்றும் நிர்வாணமாக்கும் உரிமை கேட்கவில்லை.தாங்கள் நிர்வாணமாக இருக்கத்தான் உரிமை கேட்கின்றனர்.ஆக இந்த ஒப்பீடே தவறு.

அதுவும் ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக இந்து,பவுத்த,மொகலாய,பிரிட்டிஷ் என அனைத்து அரசாங்கங்களிலும் அவர்கள் அனுபவித்து வந்த மத சுதந்திரம் அது.மேலும் சமணம் என்பது தமிழ் மதம்.தமிழ்நாட்டில் செழித்து வளர்ந்த மதம்.நம் வீர சைவ ராஜாக்கள் கூட சமணர்களின் நிர்வாணத்தை தடுத்ததில்லை.ஜனநாயகத்தின் பேரில் அதை தடுப்பது முட்டாள்தனம்.

Anonymous said...

என் உடல், நான் உடன் கட்டை ஏறுகிறேன், தற்கொலை செய்துகொள்கிறேன்.
இந்த ஜனநாயகத்தில் இதற்கு தனிமனித உரிமை உண்டா?

பெண்களும் , குழந்தைகளும் இருக்கும் பொது இடத்தில் என்
உடலைத்தானே நிர்வாணமாக காட்டுகிறேன் என்பதும் ஊரில் இருப்பவர்களின்
மீதான வன்முறைதான்.

Unknown said...

//என் உடல், நான் உடன் கட்டை ஏறுகிறேன், தற்கொலை செய்துகொள்கிறேன்.
இந்த ஜனநாயகத்தில் இதற்கு தனிமனித உரிமை உண்டா?//

நல்ல கேள்வி.தற்கொலை பல ஜனநாயக நாடுகளில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படுகிறது.தற்கொலை செய்ய வழிகாட்டும் புத்தகங்கள் பல நாடுகளைல் சர்வசாதாரணமாக விற்கப்படுகின்றன.மற்ற ஜனநாயக நாடுகளில் இதற்கு அனுமதி இல்லை.

தற்கொலை செய்து கொள்ளும் உரிமை ஒருவருக்கு உண்டா இல்லையா என்பது பற்றி ஜனநாயக நாடுகள் இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை.

//பெண்களும் , குழந்தைகளும் இருக்கும் பொது இடத்தில் என்
உடலைத்தானே நிர்வாணமாக காட்டுகிறேன் என்பதும் ஊரில் இருப்பவர்களின்
மீதான வன்முறைதான்//

ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக பொதுமக்கள் எதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவித்ததில்லை.பகுத்தறிவு இயக்கத்தினர் தான் எதிர்ப்பு தெர்விக்கிறார்கள்.ஜனநாயகத்தில் மெஜாரிட்டி கருத்து தான் ஜெயிக்க முடியும்.இது குறித்து பொதுமக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தினால் அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பற்றி சந்தேகமே வேண்டியதில்லை.கும்பமேளாவில் நிர்வாண சாதுக்களை வணங்கும் கூட்டமே இதற்கு சான்று.

இந்திய மக்கள் சகிப்புதன்மை மிக்கவர்கள்.அதனால்தான் இன்னும் நம் நாட்டில் ஜனநாயகம் தழைக்கிறது

Anonymous said...

//ஜனநாயகத்தில் மெஜாரிட்டி கருத்து தான் ஜெயிக்க முடியும்.
இது குறித்து பொதுமக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தினால்
அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பற்றி சந்தேகமே
வேண்டியதில்லை //

இது உங்களுடைய assumption. உண்மை ஓட்டெடுத்து
பார்த்தால்தான் தெரியும்.

//ஆயிரம்,ஆயிரம் ஆண்டுகளாக பொதுமக்கள் எதற்கு
எந்த எதிர்ப்பும் தெரிவித்ததில்லை.பகுத்தறிவு
இயக்கத்தினர் தான் எதிர்ப்பு தெர்விக்கிறார்கள் //

ஆயிரம் ஆண்டுகளாக ஜனநாயகமா இருந்தது?

இது குற்றம் என்று சட்டமே இருக்கும்போது மீண்டும் மீண்டும்
இதையே சொல்கிறீர்கள்.

யாரும் ஆட்சேபிக்காவிட்டால் சட்டமன்றத்தில் போய் இந்த
சட்டத்தை மாற்றுங்களேன்.

Anonymous said...

உலகின் மீது பற்றற்றவர்கள்தான் நிர்வாணமாக முடியும். இவர்களோ
உலக அமைதிக்கு ஊர்வலம் போகிறார்கள். இதுவே முரண்பாடுதான்.
மார்வாடிகளின் சொகுசு கெஸ்ட் ஹவுசில் தங்கும் பற்றற்ற சாமியார்கள்
இவர்களாகதான் இருப்பார்கள்.

திககாரர்கள் இவர்களை இவ்வளவு தீவீரமாக துரத்தியிருக்க வேண்டியதில்லை
என்றே வைத்துக்கொண்டாலும், நிர்வாணமாக ஊருக்குள் திரிவது
மத உரிமை என்று ஜல்லியடிக்க வேண்டாம்.

Unknown said...

//இது உங்களுடைய அச்சும்ப்டிஒன். உண்மை ஓட்டெடுத்து
பார்த்தால்தான் தெரியும். //

ஆம்.அது என் யூகம் தான்.ஆனால் எந்த காரணத்தால் அப்படி யூகிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

//ஆயிரம் ஆண்டுகளாக ஜனநாயகமா இருந்தது? //

அதைத்தான் நானும் கேட்கிறேன்.சர்வாதிகார,மாற்றுமத ஆட்சியாளர்களே பறிக்காத மத உரிமையை ஜனநாயக ஆட்சியா பறிப்பது?

//இது குற்றம் என்று சட்டமே இருக்கும்போது மீண்டும் மீண்டும்
இதையே சொல்கிறீர்கள்.யாரும் ஆட்சேபிக்காவிட்டால் சட்டமன்றத்தில் போய் இந்த சட்டத்தை மாற்றுங்களேன்.//

சட்டம் இதற்கு ஒன்றும் தடை விதிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.சமண முனிவர்களை போலிஸ் கைது செய்யவில்லை.பகுத்தறிவுவாலாக்கள் தான் போய் கலாட்டா செய்துள்ளனர்.போலிஸ் வந்து சமண முனிவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளது.

நாடெங்கும் அவர்கள் நிர்வாணமாக போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.எந்த போலிஸ் கைது செய்து வழக்கு போட்டது?இதுவரை எந்த வழக்குமன்றத்திலும் அவர்கள் மீது யாரும் வழக்கு தொடர்ந்ததில்லை,இனி யாராவது தொடர்ந்தாலும் அது செல்லாது என்றே தீர்ப்பு வரும் என நினைக்கிரேன்.

(இதுவும் என் யூகம் தான்.அப்படி வழக்குபோட்டால்,பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவந்து சமணர்களுக்கு நிர்வாணமாக செல்லும் உரிமையை வழங்குவார்கள்.இதுதான் நடக்க போகிறது.இதுவும் என் யூகம் தான்:)

Unknown said...

//உலகின் மீது பற்றற்றவர்கள்தான் நிர்வாணமாக முடியும். இவர்களோ
உலக அமைதிக்கு ஊர்வலம் போகிறார்கள். இதுவே முரண்பாடுதான்.
மார்வாடிகளின் சொகுசு கெஸ்ட் ஹவுசில் தங்கும் பற்றற்ற சாமியார்கள்
இவர்களாகதான் இருப்பார்கள்.//

அவர்கள் பற்றை அகற்ற முயல்கின்றனர்.தாங்கள் கடவுள் என்றா அவர்கள் சொன்னார்கள்?பற்றை அகற்றும் முயற்சிதான் நிர்வாணம்.

மார்வாடிகள் பெரும்பாலும் பணக்காரர்களாக இருக்கிரார்கள்.பக்தன் பணக்காரனாக இருந்தாலும்,ஏழையாக இருந்தாலும் அழைத்தால் போக வேண்டியது அவர்களின் கடமை.

//நிர்வாணமாக ஊருக்குள் திரிவது மத உரிமை என்று ஜல்லியடிக்க வேண்டாம். //

சொன்னாலும்,சொல்லாவிட்டாலும் அது அவர்கள் மத உரிமைதான்.

Anonymous said...

//சொன்னாலும்,சொல்லாவிட்டாலும் அது அவர்கள் மத உரிமைதான்//
அப்படியானால் உடன்கட்டை ஏறும் உரிமையை மட்டும் ஏன் விட்டுவிட்டோம்.
அதையும் வைத்துக்கொள்ளலாமே. காலத்துக்கு பொருந்தாத மத
பழக்கங்களை ஒழித்து சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன. இதுவும்
அதே லிஸ்ட் தான்.

Unknown said...

//அப்படியானால் உடன்கட்டை ஏறும் உரிமையை மட்டும் ஏன் விட்டுவிட்டோம்.
அதையும் வைத்துக்கொள்ளலாமே. காலத்துக்கு பொருந்தாத மத
பழக்கங்களை ஒழித்து சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன. இதுவும்
அதே லிஸ்ட் தான்.//

காலத்துக்கு பொருந்தாது என்று எதையும் சட்டம் போட்டு யாரும் தடுத்ததில்லை.மற்றவர்களுக்கு தீமை விளைவிப்பதைத்தான் சட்டம் போட்டு தடுத்துள்ளனர்.உடன்கட்டை ஏரூவதில் உயிர் போகிறது.மனிதாபிமான அடிப்படையில் தடுத்தனர்.சமணர்கள் நிர்வாணமாக போவதால் யாருக்கும் எந்த கெடுதலும் இல்லை.அதனால் அதை யாரும் தடுக்க வேண்டியதில்லை.அவ்வளவுதான்.

VSK said...

செல்வன், வேண்டுமென்றே வந்து வம்பு சண்டை போடும் இவர்களுடன் ஏன் மல்லுக்கட்டி நிற்கிறீர்கள்?

உண்மை நிலை தெரியாது பிதற்றுபவர்களிடம் பேசிப் பயன் என்ன?

இந்த சமண முனிவர்கள் செல்லும் நேரம் என்ன தெரியுமா?

அனைவரும் தூங்கிய பின், ஒரு நடமாட்டமும் இல்லாத நேரம் பார்த்து, ஓரிடத்திலிருந்து வேறிடம் சென்று அடைகிறார்கள்.
அதுவும் எப்படி?
அவர்கள் அடியார்கள் ஒரு மறைப்பை அவர்களைச் சுற்றி அணைத்துப் பாதுகாத்த வண்ணம்!

இவர்கள் சொல்வது போல பட்டப்பகலில் அனைவருக்கும் காட்டி அலைய வில்லை.

அதை ஒரு பைத்தியம்தான் செய்யும்!

அப்போது ஒரு துணி கூட அவர்கள் மேல் போர்த்தாமல் ஜொள்ளு விடும் கூட்டம் தான் இது!

அந்த நேரம் விழித்திருந்து, இவர்கள் நிர்வாணத்தைப் பார்க்க அலைகின்ற கூட்டத்தின் அவல நிலையை என்னவென்று சொல்ல!

பேசாமல் படிக்கப் போங்கள்!

VSK said...

எனக்கு முந்தைய 'ஷோக்காளி' பதிவின் கடைசி சொல்லை நீக்க முடியுமா, செல்வன்!

Unknown said...

ஷோக்காளி,எஸ்.கே

/ஒரு பயலும் கண்டுக்காட்டி தண்ணியப்போட்டு அரமணி நேரம் சவுண்ட கொடுத்தா நாலு பேரு கவனிப்பாய்ங்கல்ல, அதேன், எவனாச்சும் இளிச்சவாயன் மாட்டினா வுடு ரவுச, எவன் கவனிக்காம போவான்னு பாத்துருவோம்/

உண்மைதாங்க.சமணருக்காக குரல் கொடுக்க தமிழ்நாட்டில் ஒரு ஈ,காக்கா கூட கிடையாது.அது அக்மார்க் தமிழ் மதம்.இளங்கோ அடிகள் போன்றோர் பின்பற்றிய மதம்.நம் தமிழ்ராஜாக்கள் சமணர்களை கழுவிலேற்றி தமிழ்நாட்டை விட்டு அடித்து துரத்திவிட்டனர்.இல்லாவிட்டால் இன்னும் தமிழ்நாட்டில் அது செல்வாக்கோடு இருந்திருக்கும்.இப்படி தமிழனின் மதமான சமணத்தை வடநாட்டு மதம்,அன்னிய மதம் என்கிறார்களே...என்ன செய்வது என்றே தெரியலை.

நிர்வாணமா அனைத்தையும் துறந்து ஈ,எறும்புக்கு கூட துன்பம் வரக்கூடாது என்று வாயை துணியால் கட்டி மறைத்து செல்லும் அந்த அப்பிராணிகளை நடுராத்திரியில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்களே இதை என்ன என்று சொல்ல?

Unknown said...

//எனக்கு முந்தைய 'ஷோக்காளி' பதிவின் கடைசி சொல்லை நீக்க முடியுமா, செல்வன்! //

அவர் யாரையும் திட்டின மாதிரி தெரியலை.கிராம மக்கள் சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் சொல்லாடலை பேச்சு வாக்கில் பயன்படுத்தியிருக்கிறார்.பதிவில் வரும் பின்னூட்டங்களில் இருப்பது என் கருத்து அல்ல.அவற்றை நான் ஆமோதிக்கிறேன் என்றும் அர்த்தம் அல்ல.யாரையாவது குறிப்பிட்டு கெட்ட வார்த்தையில் திட்டியிருந்தால் எடுத்திருப்பேன்.ஒருத்தரையும் அப்படி சொல்லாததால் விட்டுவிட்டேன்

Anonymous said...

May be related , May be Not, Read them if you want:

http://www.maraththadi.com/article.asp?id=2696

http://www.maraththadi.com/article.asp?id=2698

Thanks
Sa.Thirumalai

Unknown said...

Dear Thirumalai,

Welcome to my blog.I am very happy to see encouraging comments from experienced bloggers like you.

I saw the links which you provided,which give valuble info about jainism in TN.I will read them in full and post my feedbacks.

Anonymous said...

பெரியார் நிர்வாணமாக இருக்கலாம்,அப்படியே குரூப் போட்டோ எடுத்துக்கலாம்.ஆனால் சமண முனிவர்கள் நிர்வாணமாக இருந்தால் உங்களுக்கு பிடிக்காது?

பெரியார் நிர்வாணமாக இருந்தது தமிழ் கலாச்சாரமா?அந்த காட்சியை பெண்கள் பார்க்கலாமா?

நிர்வாணமாக இருக்கும் முனிவர்கள் உடைகள் உடுத்தினால் அது பகுத்தறிவு.போட்டுருந்த உடைகளை களைந்து எறிந்த பெரியாரின் செயலை என்னவென்று சொல்வது?பகுத்தறிவா அல்லது முட்டள்தனமா?

Anonymous said...

தமிழ் மணப் பதிவாளர்கள் கவனத்திற்கு!

விடாது கருப்பு என்ற பெயரில் ஒருவர் இறைவனையும், மதத்தையும் ஒன்றாகக் குழப்பி, பிராமிணர்களையும், பிராம்ணீயம் என்ற சொல்லையும் ஒன்றாக வைத்துக் குழப்பித் தினம் 'விடாது' பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்.
அசிங்கம், அசிங்கமாக எழுதிக்கொண்டிருக்கிறார்

இன்றைய பதிவில் அவர், 'கோவணத்துக்குள்ளா கடவுள் இருக்கிறான்?" என்று ஒரு பதிவு போடிருக்கிறார்

இது என்னைப் போன்ற இறை நம்பிக்கையுள்ளவர்களின் மனதை மிகவும் புண்படுத்துவதாக உள்ளது

என்னை மட்டுமல்ல என்னைப்போன்று அவர் எழுதியதைப்படிக்கும், இஸ்லாமியச் சகோதரர்களையும், கிறிஸ்தவச் சகோதரர்களையும் அது புண்படுத்துவதாக உள்ளது

இந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குரிய தாக்குகிறது!

அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கும் இறைவனை இதைவிடக் கேவலமாக யாராலும் எழுத முடியுமா?

இறைவன் என்பவர் ஒருவர்தான். அவரை வழிபடும் முறைகள்தான் வேறு படுகின்றன!

பெரியார் அவர்கள் சொன்னவற்றில் சமதர்மத்தை மட்டும்தான் என்னைப்போன்ற பாமர மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்!

கடவுளைப் பற்றி அவர் சொன்னதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை

அதனால்தான் அவர் ஆரம்பித்த இயக்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறவில்லை!

இப்போது மிஞ்சி இற்கும், எஞ்சி நிற்கும் கருப்பு போன்ற பெரியார் அவர்களின் ஆதரவாளர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீம்பு கட்டிகொண்டு அசிங்கமாக எழுதக்கூடாது

ஆகவே இன்னும் 24 மணி நேரத்திற்குள் அந்தப்
பதிவை அவர் நீக்கி விட்டு, புதுப்பதிவு ஒன்றைபோட்டு இறையன்பர்கள் அனைவரிடமும் தன் வருத்தத்தைத் தெரிவிக்கவேண்டும்

இல்லையென்றால், அவர் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை போட்டிருக்கும் அத்தனை பதிவுகளையும் Laser Print எடுத்து அல்லது மின்னஞ்சலில் நமது மதிப்பிற்குரிய, குடியரசுத் தலைவர், மேன்மை மிகும் டாக்டர் திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக உள்ளேன்

என்னைபோன்று புண்பட்ட நண்பர்களையும் அதைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

அவர் சிந்தாரிப்பேட்டையிலிருந்தாலும் சரி, சிங்கப்பூரிலிருந்தாலும் சரி, தர்மமும், சட்டமும் தன் கடமையைச் செய்யட்டும்!

குடியரசுத் தலைவர் அவர்களின் பிரத்தியேக இணையதளம்

The President of India :
The official website of the President of India (Dr. Avul Pakir Jainulabdeen (APJ) Abdul Kalam)
presidentofindia.nic.in/ - 37k - Cached - Similar pages
Write to the President -
http://presidentofindia.nic.in/scripts/writetopr...

Anonymous said...

தமிழ்நாட்டில் பல சாமியார்கள் தங்கள் வியாபாரம்,
மற்றும் 'லீலை'களை நடத்தியபடிதான் உள்ளனர்.?
அவர்களை யாரும் தமிழ்நாட்டை விட்டு போ என்று
சொன்னார்களா? அப்படி செய்திருந்தால் அவர்களுக்கு
சகிப்புத்தன்மை இல்லை என்று சொல்லலாம்.