Friday, June 09, 2006

105.விண்கல் காமடி உலகம் லபோ திபோ

உலகை மாற்றி ஒரு புது பொன்னுலகம் படைப்போம் அப்படின்னு கிளம்பினவங்க எல்லாம் காணாம போயிட்டாங்க.பொன்னுலகம் வரும்,வரும்னு ஆகாசத்தை உத்து பாத்துக் கிட்டிருக்கறவங்களும் பாத்துக்கிட்டே தான் இருக்காங்க. சாமி செத்துட்டார்ன்னு சொன்ன நீட்ச்சேவும் செத்து போயிட்டார்.ஜாதியை அழிக்கறேன்னு சொன்ன பெரியாரும் போய் சேந்துட்டார்.வறுமையை ஒழிக்கறேன்னு கிளம்பின இந்திரா காந்தியும் போய் சேந்துட்டார்.வர்க்க பேதத்தை ஒழிக்கரேன்னு கிளம்பின மார்க்ஸும் போயி சேந்துட்டார்.வறுமை,ஜாதி,சாமி,கொலை,கொள்ளை, கற்பழிப்பு,திருட்டு,புரட்டு,பணம்,பணக்காரன்,ஏழை,கோடீச்வரன், அமெரிக்கா,சுயநலம்,ஈகோ முதலிய அனைத்தும் அப்படியே தான் புடிச்சு வெச்ச சாணி புள்ளயாராட்டா அப்படியே இருக்கு. சுத்தும் பூமி சுத்திக்கிட்டே தாங்க இருக்கு.நிக்கலை.எது எதெல்லாம் ஒழியணும்னு பெரியவங்க நினைச்சாங்களோ,அதுக்காக அவங்க உயிரை குடுத்தாங்களோ அதெல்லாம் ஒழியலீங்க.ஒழியவும் ஒழியாது.பழைய தீமைகள் புது அவதாரத்துல வந்துகிட்டே தாங்க இருக்கும்.அதை ஒழிக்கறேன்னு கிளம்பினவங்களும் முளைச்சுகிட்டே தான் இருப்பாங்க.அதுவும் ஒழியாது,இவங்களும் விடமாட்டாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் குழு மனப்பான்மைங்க.பணக்காரனுக்கு ஏழையை கண்டாலே புடிக்காது.ஏழை ரோட்டுல நின்னு பிச்சை கேப்பான்.பை ஸ்டார் ஓட்டலுக்கு வெளில கப்பரையோட நிப்பான்.பிளாட்பாரத்தை அசிங்கம் பண்ணுவான்.வெளிநாட்டுகாரங்க கண்ணுல பட்டு மானத்தை வாங்குவான். ஏழைக்கும் பணக்காரனை கண்டா ஆகாது.அவன் கார்ல போறது,மாளீகை மாதிரி வீட்ல இருக்கறது,கிளி மாதிரி பொண்ணோட கார்ல போறது இதெல்லாம் கண்டா அவனுக்கு கோபம் வரும்ங்க. பெரும்பாலான பிரச்சனைகளை இந்த ரெண்டு வர்க்கத்துக்கு நடுவுல இருக்கற போராட்டமா சித்தரிச்சார் மார்க்ஸ்.இந்த ரெண்டுல ஒரு வர்க்கத்துக்கு - அதாவது ஏழை வர்க்கத்துக்கு - சக்தி வந்தா உலகத்தோட பிரச்சனைகள் தீர்ந்துடும்ணு சொன்னார் மார்க்ஸ். இவருக்கு முன்னாடி பல பேர் பல யோசனைகளை சொன்னாங்க."அட கூமுட்டைகளா.உலகத்துல ரெண்டு வகையான ஆளுங்க தான் இருக்காங்க.ஒருத்தன் நல்லவன் அப்ப்டிங்கர இனம்.இன்னொருத்தன் கெட்டவன் அப்படிங்கர இனம்.கெட்ட்வன் எனும் இனத்தில் இருப்பவன் எல்லாம் நல்லவன் எனும் இனத்துக்கு வந்துட்டா பிரச்சனை இல்லடா" அப்படின்னு வள்ளுவன்,கண்ணன்,ஏசு மாதிரி ஞானிங்க எல்லாம் சொல்லி நல்லவன் யாரு , கெட்டவன் யாருங்கரதுக்கு விளக்கம் எல்லாம் தலையாணை சைசு புத்தகத்துல போட்டுட்டு போயிட்டாங்க. அப்புறம் லெனின் வந்தாரு.அவரும் நல்லவன் யாரு,கெட்டவன் யாருன்னு ஒரு வெளக்கம் கொடுத்தாரு.நம்ம பெரியாரு வந்தாரு அவரும் நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு ஒரு வெளக்கம் கொடுத்தாரு.இப்படி பல பேரு வர்ரதும் போறதுமா இருக்காங்க. அடிப்படையா பிரச்சனை என்னன்னா ஒரு கும்பலுக்கு இன்னொரு கும்பலை கண்டா ஆறதில்லை.பிடிக்கரதில்லை."என்னை மாதிரி இவன் இல்லையே" அப்படின்னு அடுத்தவனை கண்டா கோபம்.என்னை மாதிரி இல்லாத கும்பலை ஒழிக்கணும்னு ஒரு ஆங்காரம்.அதுக்கு தான் கத்தி எடுத்து சண்டை புடிக்கறது,உபதேசம் பண்ண்றது,புத்திமதி சொல்றது அப்படின்னு நெறைய வழிமுரைகள் வெச்சிருக்கோம். போலிஸ் ஸ்டேஷன்,கோர்ட்டு இதெல்லாம் இப்படி உருவானதுதாங்க.ஒரு சமூகம் தன்னை மாதிரி இல்லாத, தனது பிரதி பிம்பமாக இல்லாத ஒருத்தனை சகிச்சுக்கறதில்லை.அவனை புடிச்சு ஜெயில்ல போட்டு அடிச்சு திருத்தி வழிக்கு கொண்டு வருது. இந்த குழுப்போரையும்,தன்னைபோல் இல்லாதோரை சகிக்கும் தன்மையும் ஒரு விதத்துல உலகை நல்லா வழிநடத்தி போயிருக்கு.வலிமையான குழுக்கள் ஜெயிச்சுட்டே வந்திருக்கு.வலிமையற்ற குழுக்கள் தோத்து போயிருக்கு.தோத்த குழுக்கள் ஜெயிச்ச குழுவோடு இணைக்கப்பட்டு உலகம் முன்னேறி இருக்கு. சகிப்புத்தனமை இல்லாது பல விதத்திலும் நல்லதுங்க.சகிப்புத்தன்மையின்மையின் விளைவே போர்,சண்டை,மானுட முன்னேற்றம்,வலிமையற்ற குழுக்களின் அழிப்பு,வலிமை வாய்ந்த குழுக்களின் உருவாக்கம்,ஜனநாயகம்,அறிவியல்,கருத்துருவாக்கம்,கருத்து பறிமாறல்,கலை,இலக்கியம் ஆகியவை. ஆனா பாருங்க.கடைசில ஒரு விண்கல் இதெல்லாத்தையும் அழிச்சு போட்டுடலாங்க.அதுதாங்க காமடியின் உச்சகட்டம். ஒரே செகண்டில் பூமி முழுவதையும் அழிச்சுட்டு பிரபஞ்சம் சிரிச்சுகிட்டே சுத்தலாங்க.அப்ப இந்த குழு எல்லாம் லபோ திபோன்னு அலறும்.எல்லாரும் ஒண்ணா சேந்தாலும் சேந்துகிடலாம்.அப்ப ஒண்ணு சேந்து ஏதாவது பிரயோஜனம் உண்டா என்ன?

19 comments:

கப்பி | Kappi said...

//"என்னை மாதிரி இவன் இல்லையே" அப்படின்னு அடுத்தவனை கண்டா கோபம்//

இதை விட "அவனால நாம அழிந்து விடுவுமோ" என்கிற பயம் தான் காரணம்..."அவன் நம்மள அடிக்கறதுக்கு முன் அவனை அடித்து அழித்து விடலாம்" என்கிற எண்ணம்...

//ஒரே செகண்டில் பூமி முழுவதையும் அழிச்சுட்டு பிரபஞ்சம் சிரிச்சுகிட்டே சுத்தலாங்க//

ஹி ஹி ஹி

"எல்லாரும் நல்லா சிரிங்க...பூமா தேவி ஒரு நாள் சிரிப்பா..நாம எல்லாரும் உள்ள போகப்போறோம்" -என்ன படம்ங்க இது?? துள்ளித் திரிந்த காலம்??

Sivabalan said...

செல்வன்

நல்ல பதிவு.


//கடைசில ஒரு விண்கல் இதெல்லாத்தையும் அழிச்சு போட்டுடலாங்க.//

ஆர்மெகடான் நாட்களை பற்றி சொல்லிரிங்களா?

இலவசக்கொத்தனார் said...

வெற்றிகரமான தொடர்ந்து இரண்டாவது பதிவுக்கு வெறும் உள்ளேன் ஐயா. இப்படியே எழுதும். நல்லா இருப்பீரு.

Iyappan Krishnan said...

பெரு நகரங்களில் பெரும்பாலான வன்முறைகளுக்கு நீங்கள் சொன்னதும் முக்கிய காரணம்.

ஏதோ ஒரு மாநகரத்தில் முக்கிய புள்ளி இறந்து போகிறார். உடனே கலவரம் வெடிக்கும். அப்பாவி மக்களின் கார்கள் / இருசக்கரவாகனங்கள் வீடுகள் என பலவும் சேதப் படுத்தப் படும். தொலைக் காட்சியில் அதைப் பாருங்கள் .. ஏதோ ஒரு வெறியைத் தாண்டிய செயல் அதில் பொதிந்து கிடக்கும்.

எனக்கு இதெல்லாம் கிடைக்காத போது உனக்கு மட்டும் இது ஏன் அப்படிங்கற மனோபாவம். அதனால் அழிக்கப் படுபவை ஏராளம்.


எல்லப்பன்

Unknown said...

//இதை விட "அவனால நாம அழிந்து விடுவுமோ" என்கிற பயம் தான் காரணம்..."அவன் நம்மள அடிக்கறதுக்கு முன் அவனை அடித்து அழித்து விடலாம்" என்கிற எண்ணம்...//

வாங்க கப்பி பய

உண்மை.அடுத்தவன் நம்மை அழித்துவிடுவானோ என்ற பயமும்,அதற்கு முன் அவனை நாம் அழித்து விட வேண்டுமென்ற பயமும் தான் இன யுத்தத்துக்கு காரணம்

//எல்லாரும் நல்லா சிரிங்க...பூமா தேவி ஒரு நாள் சிரிப்பா..நாம எல்லாரும் உள்ள போகப்போறோம்" -என்ன படம்ங்க இது?? துள்ளித் திரிந்த காலம்?? //

என்ன படம்னு தெரியலைங்க.ஆனா வசனம் நல்லாருந்துச்சு

நன்றி கப்பி பய

Unknown said...

//"இதெல்லம் நீங்க சொன்னதோட வேரியேஷன்ஸ் தான்.//

ஆமா அஷ்லின் ஆனா இதெல்லாம் வெட்டு குத்து ரேஞ்சுக்கு போகாது.சும்மா மனஸ்தாபம் இருக்கும் அவ்வளவுதான்

Unknown said...

//ஆர்மெகடான் நாட்களை பற்றி சொல்லிரிங்களா? //

இல்லை சிவபாலன்.அர்மகாடன் என்பது மதம் சம்பந்தப்பட்ட சொல்.நான் சொல்வது திடீர்னு ஏதாவது விண்கல் வந்து பூமி மேல் மோதி எல்லாம் அழிந்துடலாம் என்பதை

Unknown said...

கொத்தனாரே
வாருங்கள்..வாருங்கள்..அது சும்மா எழுதின பதிவு....அடிக்கடி அந்த மாதிரி எழுதுவேனா என்ன?

Unknown said...

நகரங்கள் மட்டும் இல்லை எல்லப்பான்.கிராமங்களில் பயிர்களுக்கு தீ வைப்பது,வீட்டை கொளுத்துவது ஆகியவையும் இதே மனோபாவத்தின் விளைவுகளே

நன்றி எல்லப்பன்

Anonymous said...

உங்கள் கடைசி வரிகள் கொஞ்சம் முரணாக இருப்பது போன்ற உணர்வு.

விண்கல் எதுக்கு, ஒரு அணுகுண்டு போதுமே!~

பூமி முழுக்க அழிஞ்ச பின்னாடி, குழுக்கள் எப்படி லபோ-திபோன்னு அலறமுடியும்?
அவங்களும் அழிஞ்சுதானே போயிருப்பாங்க!

கொஞ்சம் மாத்தி எழுதறீங்களா?

Unknown said...

அணுகுண்டு போடுபவர் மொத்த உலகத்தையும் அழிக்க மாட்டார் எஸ்.கே.அவர் நாட்டை விட்டுவிட்டு மற்ற இடங்களை தான் அழிப்பார்.

விண்கல் மோதவந்தால் பல மாதத்துக்கு முன்பே அப்படி ஒரு கல் நம்மை அழிக்கப்போகிறது என்பது நமக்கு தெரிந்துவிடும்.அந்த சில மாதங்களவது ஒன்று கூடியிருப்பார்கள் அல்லவா?அதை தான் எழுதினேன்

Thanks a lot

பொன்ஸ்~~Poorna said...

என்னவோ போங்க.. நானும் கொத்தனார் மாதிரி புது லோகோ மாத்தினதுக்கு ஒரு உள்ளேன் ஐயா போடறேன்..:)

Unknown said...

எல்லாரும் அட்டன்டன்ஸ் குடுத்து என்னை வாத்தியார் ரேஞ்சுக்கு ஆக்கிட்டிங்களே:-))

புது லாகோ அருமையா இருக்குங்க பொன்ஸ்.யானை ஒடிகிட்டே இருக்கே.கால் வலிக்காதா பாவம்?

Unknown said...

என்னவோ தத்துவமெல்லாம் சொல்லியிருக்கீங்க செல்வன். நீங்க பி.எச்.டி மாணவர்னு நல்லா தெரியுது ;) என்ன பண்றது செல்வன், நம்ம ஆளுங்களுக்கு யாரையாவது எதையாவது எதிர்த்து பேசலைன்னா வாழ்க்கை சுவாரசியமாவே இருக்க மாட்டேங்குது.

Anonymous said...

Aamaa, adhu enna thalaippu - junior vikatan style?

Unknown said...

தத்துவமெல்லாம் இல்லைங்க ரமணி.சும்மா random ramblings தான்.திடீர்னு தோணிச்சு எழுதினேன்.

Unknown said...

Aamaa, adhu enna thalaippu - junior vikatan style?///

அதுவும் திடீர்னு மனதில் பட்ட தலைப்புதான் அனானி.nothing special abt it.

நரியா said...

வணக்கம் செல்வன்.
அருமையான பதிவு!

// விண்கல் மோதவந்தால் பல மாதத்துக்கு முன்பே அப்படி ஒரு கல் நம்மை அழிக்கப்போகிறது என்பது நமக்கு தெரிந்துவிடும்.அந்த சில மாதங்களவது ஒன்று கூடியிருப்பார்கள் அல்லவா?//

இந்தியா சில வருடங்களில்
"சந்த்ராயன்" என்னும் ஏவுகனை எதற்கு நிலவுக்கு அனுப்பப்போகிறார்கள் என நினைக்குறீர்கள்? இந்த மாதிரி பூமிக்கு அழிவு எற்பட்டால் நிலவுக்கு சென்று பெரும்பாலான நிலத்தை ஆக்கிரமித்து மற்ற நிலங்களை கூறு போட்டு (Real Estate) விற்பதற்கு மட்டுமல்லாமல் அங்கே புதிய மதங்களை உருவாக்கவும் தான் :) (நகைச்வுவைக்கு மட்டுமே).

எல்லோரையும் மாற்றுவது மிக கடினம் தான். நாம் நம்மை மாற்றிக்கோண்டாலே ("எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம்" என நம்புவது) அது நம் சமூகத்திற்கு செய்யும் மிக பெரிய உதவி.

நன்றி,
நரியா

Unknown said...

நாரியா
இந்தியா அப்படி நிலவையாவ்து படை எடுத்து பிடிக்கட்டும்.10,000 வருஷமா படை எடுக்காத நாடு என்று சொல்கிறார்கள்.யாரும் இல்லாத சந்திர மண்டலம் மீதாவது படை எடுக்கட்டும்:-))

//எல்லோரையும் மாற்றுவது மிக கடினம் தான். நாம் நம்மை மாற்றிக்கோண்டாலே ("எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் ஓர் குலம்" என நம்புவது) அது நம் சமூகத்திற்கு செய்யும் மிக பெரிய உதவி.//

முற்றிலும் உண்மை.நன்றி நாரியா