Monday, September 30, 2013

இவரது பிழையா, சமூகத்தின் பிழையா?


டெரெக் நான்ஸ் எனும் இந்த வாலிபருக்கு கடந்த ஆறு வருடமாக வெறும் பச்சை மாமிசம் மட்டுமே உணவு. அதுவும் பெரும்பாலும் செம்மறி ஆடுதான்.

கோதுமை, காய்கறி என பலதை தின்றூ வந்த இவருக்கு கடும் அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டு கடைசியில் காய்கறி அனைத்தையும் நிறுத்தி பச்சை மாமிசம் மட்டும் உண்ண ஆரம்பித்தார். அலர்ஜிகள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டது.

டயட்டில் முதல் வாரம் மட்டும் வயிற்றுபோக்கு இருந்ததாகவும் அதன்பின் உணவுக்கு பழகியவுடன் அது சரியாகிவிட்டதாகவும் கூறுகிறார். நேராக பண்ணைகளுக்கு சென்று ஆட்டை வாங்கி, வெட்டி கொண்டுவந்து பச்சையாக உண்பதாக கூறுகிறார்.

சமைத்த மாமிசத்தில் வைட்டமின் சி இல்லை. ஆனால் பச்சைமாமிசத்தில் வைட்டமின் சி உண்டு. ஆக வைட்டமின் சி பற்றாகுறை எதுவும் இல்லை என்கிறார். ஆட்டின் உடலில் ஒரே ஒரு டிஷ்யுவை கூட விட்டு வைக்காமல் அனைத்தையும் உண்கிறார். அதனால் எந்த வைட்டமின் பற்றாகுறையும் இவருக்கு இல்லை.

நண்பர்கள் வீட்டுக்கு போனால் உணவை கையில் கொண்டு செல்கிறார்.

அதுபோக மாமிசத்தை அழுக வைத்து உண்கிறார். அதில் ஏராளமான ப்ரோபயாடிக்ஸ் இருப்பதாக கூறுகிறார் டெரெக்.

இவரது ஒரே பிரச்சனை சமூகத்தில் பலரும் இவரது டயட்டை கேட்டு பயந்து அலறுவதுதான்.

அது இவரது பிழையா, சமூகத்தின் பிழையா?

No comments: