அமெரிக்காவுடனான இரானின் பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.அகமெதானிஜாத் அமெரிக்காவை ஒழிக்க சர்வதேச அளவில் வெனிசுவேலாவின் சாவேசுடன் கூட்டணி அமைத்தார்.டாலரை சர்வதேச கரன்சி எனும் ஸ்தானத்தில் இருந்து அகற்ற முயன்றார்.யூரோ மூலம் ஆயில் விற்பனை செய்யும் மையம் ஒன்றை அமைத்தார்.ஆனால் யூரோ சரிந்தது இந்த மையத்துக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியது.அதன்பின் பலநாடுகளிடம் பேசி அவர்கள் கரன்சியை டாலருக்கு பதில் பெறுவதாக ஒத்து கொண்டார்.ஜப்பானிய யென்னை வாங்கிகொண்டு ஜப்பானுக்கு ஆயிலை விற்றார்.ஆனால் டாலரை போன்ற மவுசு இந்த கரன்சிகளுக்கு இல்லை என்பதால் இத்திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. யூத இன அழிப்பு நடைபெறவில்லை (ஹோலோகஸ்ட் டினயல்) என்ற வாதத்தை கையில் எடுத்த அகமெதானிஜாத் ஐநா சபையில் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் திட்டி தீர்த்தார்.லெபனான் ஹிஸ்புல்லாவுக்கு நிதி உதவி,ஆயுத உதவி செய்து 2006ல் நடந்த யுத்தத்தில் இஸ்ரேலுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தினார். மறுதரப்பின் நடவடிக்கை மிக கடுமையாக இருந்தது.ஒபாமா பதவியேற்றபின்னர் ராஜதந்திர ரீதியில் இரானுடனான யுத்தத்தில் பல மாறுதல்களை கொண்டுவந்தார்.போர் மூலம் தீர்வு எனும் சித்தாந்தத்தை நிராகரித்த ஒபாமா ராஜதந்திர ரீதியில் இரானின் அணு உலைகளை முடக்க உத்தரவிட்டார். இரான் 2011ல் அணுகுண்டு தயாரிக்கும் என நம்பபட்டது.இதை முன்பு செய்யவிருந்த இராக் அணு உலைகள் மேல் இஸ்ரேல் குண்டுவீசி இராக்கிடம் அணு ஆயுதம் இல்லாமல் செய்தது.இப்ப இரான் மேல் குண்டு வீச முடியாத அளவுக்கு டெக்னிகலாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், பூமிக்கு அடியில் குண்டுகள் துளைக்காத நிலவறைகளில் அணு ஆயுதம் தயாரித்து வருகிறது இரான். என்ன செய்யலாம் என யோசித்த இஸ்ரேல் ஸ்டக்ஸ்நெட் என்ற வைரசை ஏவியது.காற்றுபுகாத இடத்திலும் கணிணி வைரஸ் புகுந்துவிடுமே?இரானின் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட அணு வால்வுகள் இதனால் பழுதடைந்தன.தற்போது 2015 வரை அணு ஆயுதம் தயாரிக்கும் வலிமையை இரான் இழந்துவிட்டிருக்கிறது.
இரானுக்கு பொருளாதார ரீதியாக அணு ஆயுதத்தை கைவிட சொல்லி நெருக்கடிகள் வருகின்றன.போன வருடம் மின்ன்சோட்டாவில் கம்பனி துவக்க ரிலையன்ஸும், ஜிண்டால் க்ரூப்பும் மனுபோட்டன.மின்னசோட்டா கவர்னர் டிம் பாவ்லெண்டி இரானில் இந்த கம்பனிகள் துவக்கவிருந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை கைவிட்டால் அனுமதி அளிப்பதாக கூறினார்.கணக்கு போட்டு பார்த்த இந்த இரு கம்பனிகளும் இரானிய ஆலைகளை கைவிட ஒப்புகொண்டன. சமீபத்தில் இந்தியாவிடம் கெஞ்சி,கூத்தாடி இரானுடனான ஆயில் எக்ஸ்சேஞிலிருந்து இந்தியாவை விடுவித்தது அமெரிக்கா.சர்வதேச அணுசக்தி கவுன்சிலிலும் இரானுக்கு எதிராக இந்தியா ஓட்டளித்தது.இரானிடமிருந்து வருடம் 3.5 லட்சம் பேரல்கள் ஆயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது.இனி இதை அரேபியாவிடமிருந்து இரானை விட குறைந்த விலையில் வாங்க அமெரிக்கா உதவியுள்ளது. இதற்கு பதிலாக நமக்கு கிடைத்தது என்ன? காஷ்மிர் பற்றி அமெரிக்கா வாய் திறவாமல் இருத்தல், இந்திய - அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம், ஆசிய வங்கியிடமிருந்து கிடைத்த 3 பில்லியன் டாலர் மதிப்பிலான குறைந்த வட்டி கடன், பி 8 பொசிடான் எனப்படும் அதிநவீன விமான விற்பனை ஒப்பந்தம்..இந்தியாவின் வரலாற்றில் அதிக மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் இது என சொல்லபடுகிறது.அதே சமயம் ரஷ்யா,சீனா,இந்தியா போன்ற பலநாடுகளை ராஜதந்திர நகர்த்தல்கள் மூலம் இரானுக்கு எதிராக அமெரிக்கா திருப்பியது.ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனாவும், ரஷ்யாவும் இரானுக்கு எதிராக திரும்பியது இரானுக்கு ராஜதந்திர/ பொருளாதார ரீதியில் பலத்த பின்னடைவாக அமைந்தது. இரானில் ஆயில்வளம் குவிந்திருந்தாலும் ஆயிலை சுத்திகரித்து பெட்ரோலை எடுக்கும் ஆலைகள் அங்கே அதிகம் இல்லை.ஆயிலை ஏற்றுமதி செய்துவிட்டு பதிலுக்கு பெட்ரோலை இறக்குமதி செய்துகொண்டிருந்தது.அங்கே செக் வைக்கபட்டவுடன் இரானில் பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும் என்ற நிலை உருவானது.உடனே அகமெதானிஜாத் "சொந்த காலில் நிற்போம்" என முழங்கி இரானின் பெட்ரோகெமிக்கல்ஸ் தொழிற்சாலைகளை பெட்ரோல் உற்பத்திக்கு மாற்றினார்.விளைவாக பெட்ரோகெமிக்கல்ஸுக்கு இரானில் தட்டுபாடு ஏற்பட்டது.அதுபோக உள்ளூர் பெட்ரோல் சுத்தமில்லாமல் இருந்ததால் சுற்றுபுற சூழலில் சீர்கேடு ஏற்பட்டது.டெஹ்ரானை மூன்று நாட்கள் மூடவேண்டிய அளவுக்கு நகரில் புகை மண்டியது. ரஷ்யா,சீனா,ஐரோபா,வலைகுடா நாடுகளின் உதவியுடன் இரானிய பொருளாதாரம் முடக்கபட்டது.துபை இரானிய கம்பனிகளுடன் வர்த்தகம் செய்யபோவதில்லை என அறிவித்தது.இரானிய தொழிற்சாலைகளையும் துபையில் அனுமதிக்கவில்லை.உலகெங்கும் இரானிய கப்பல்கள் துறைமுக அதிகாரிகளால் கடும் சோதனைகுள்ளக்கபட்டன.இரானிய விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப பல ஐரோப்பிய நாடுகள் மறுத்தன. விளைவுகள் இரானிய பொருலாதாரத்தில் கடுமையாக எதிரொலித்தன.சமீபத்தில் அகமெதானிஜாத் டிவியில் தோன்றி பல வெட்டுக்களை அறிமுகபடுத்தினார்.பெட்ரோல் விலை 75% உயர்த்தபடுவதாகவும், டீசல் விலை 2000% (தட்டச்சு பிழை எல்லாம் இழை.2000% தான்) உயர்த்தபடுவதாகவும் அறிவித்தார்.உடனே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தன.ரொட்டி விலை நான்கு மடங்காக உயர்ந்தது.ஆயில் விலை உயர்ந்ததால் இரானிய தொழில்துறை விலைவாசி உயர்வில் சிக்கியது.விலை உயர்வை கண்டித்து இரானிய டாக்சிகள் நகரெங்கும் காலியாக ஓடி எதிர்ப்பை காட்டின. தடை நடவடிக்கைகளை அகற்ற மூன்றாம் நாடுகளில் கம்பனிகளை உருவாக்கி அவற்றின் பேரில் ஏற்றுமதி,இறக்குமதி செய்து கணக்கு காட்டும் உத்தியை துவக்கியது இரான்.இதை ஐரோப்பிய நாடுகளால் தடுக்க இயலவில்லை எனினும் இத்தகைய நடவடிக்கைகளால் இரானிய கம்பனிகளுக்கு கடுமையான அளவில் கூடுதல் செலவுகள் உருவாகியுள்ளன. இரானிய வேலை இல்லா திண்டாட்டம் தற்போது 20% ஆக உயர்ந்துவிட்டது.வெளிநாட்டில் எழுந்த எதிர்ப்புகளை சமாளிப்பது போல உள்நாட்டில் எழும் எதிர்ப்புகளையும் சமாளிப்பேன் என்கிறார் அகமெதானிஜாத்.
இரானுக்கு பொருளாதார ரீதியாக அணு ஆயுதத்தை கைவிட சொல்லி நெருக்கடிகள் வருகின்றன.போன வருடம் மின்ன்சோட்டாவில் கம்பனி துவக்க ரிலையன்ஸும், ஜிண்டால் க்ரூப்பும் மனுபோட்டன.மின்னசோட்டா கவர்னர் டிம் பாவ்லெண்டி இரானில் இந்த கம்பனிகள் துவக்கவிருந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை கைவிட்டால் அனுமதி அளிப்பதாக கூறினார்.கணக்கு போட்டு பார்த்த இந்த இரு கம்பனிகளும் இரானிய ஆலைகளை கைவிட ஒப்புகொண்டன. சமீபத்தில் இந்தியாவிடம் கெஞ்சி,கூத்தாடி இரானுடனான ஆயில் எக்ஸ்சேஞிலிருந்து இந்தியாவை விடுவித்தது அமெரிக்கா.சர்வதேச அணுசக்தி கவுன்சிலிலும் இரானுக்கு எதிராக இந்தியா ஓட்டளித்தது.இரானிடமிருந்து வருடம் 3.5 லட்சம் பேரல்கள் ஆயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது.இனி இதை அரேபியாவிடமிருந்து இரானை விட குறைந்த விலையில் வாங்க அமெரிக்கா உதவியுள்ளது. இதற்கு பதிலாக நமக்கு கிடைத்தது என்ன? காஷ்மிர் பற்றி அமெரிக்கா வாய் திறவாமல் இருத்தல், இந்திய - அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம், ஆசிய வங்கியிடமிருந்து கிடைத்த 3 பில்லியன் டாலர் மதிப்பிலான குறைந்த வட்டி கடன், பி 8 பொசிடான் எனப்படும் அதிநவீன விமான விற்பனை ஒப்பந்தம்..இந்தியாவின் வரலாற்றில் அதிக மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் இது என சொல்லபடுகிறது.அதே சமயம் ரஷ்யா,சீனா,இந்தியா போன்ற பலநாடுகளை ராஜதந்திர நகர்த்தல்கள் மூலம் இரானுக்கு எதிராக அமெரிக்கா திருப்பியது.ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனாவும், ரஷ்யாவும் இரானுக்கு எதிராக திரும்பியது இரானுக்கு ராஜதந்திர/ பொருளாதார ரீதியில் பலத்த பின்னடைவாக அமைந்தது. இரானில் ஆயில்வளம் குவிந்திருந்தாலும் ஆயிலை சுத்திகரித்து பெட்ரோலை எடுக்கும் ஆலைகள் அங்கே அதிகம் இல்லை.ஆயிலை ஏற்றுமதி செய்துவிட்டு பதிலுக்கு பெட்ரோலை இறக்குமதி செய்துகொண்டிருந்தது.அங்கே செக் வைக்கபட்டவுடன் இரானில் பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும் என்ற நிலை உருவானது.உடனே அகமெதானிஜாத் "சொந்த காலில் நிற்போம்" என முழங்கி இரானின் பெட்ரோகெமிக்கல்ஸ் தொழிற்சாலைகளை பெட்ரோல் உற்பத்திக்கு மாற்றினார்.விளைவாக பெட்ரோகெமிக்கல்ஸுக்கு இரானில் தட்டுபாடு ஏற்பட்டது.அதுபோக உள்ளூர் பெட்ரோல் சுத்தமில்லாமல் இருந்ததால் சுற்றுபுற சூழலில் சீர்கேடு ஏற்பட்டது.டெஹ்ரானை மூன்று நாட்கள் மூடவேண்டிய அளவுக்கு நகரில் புகை மண்டியது. ரஷ்யா,சீனா,ஐரோபா,வலைகுடா நாடுகளின் உதவியுடன் இரானிய பொருளாதாரம் முடக்கபட்டது.துபை இரானிய கம்பனிகளுடன் வர்த்தகம் செய்யபோவதில்லை என அறிவித்தது.இரானிய தொழிற்சாலைகளையும் துபையில் அனுமதிக்கவில்லை.உலகெங்கும் இரானிய கப்பல்கள் துறைமுக அதிகாரிகளால் கடும் சோதனைகுள்ளக்கபட்டன.இரானிய விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப பல ஐரோப்பிய நாடுகள் மறுத்தன. விளைவுகள் இரானிய பொருலாதாரத்தில் கடுமையாக எதிரொலித்தன.சமீபத்தில் அகமெதானிஜாத் டிவியில் தோன்றி பல வெட்டுக்களை அறிமுகபடுத்தினார்.பெட்ரோல் விலை 75% உயர்த்தபடுவதாகவும், டீசல் விலை 2000% (தட்டச்சு பிழை எல்லாம் இழை.2000% தான்) உயர்த்தபடுவதாகவும் அறிவித்தார்.உடனே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தன.ரொட்டி விலை நான்கு மடங்காக உயர்ந்தது.ஆயில் விலை உயர்ந்ததால் இரானிய தொழில்துறை விலைவாசி உயர்வில் சிக்கியது.விலை உயர்வை கண்டித்து இரானிய டாக்சிகள் நகரெங்கும் காலியாக ஓடி எதிர்ப்பை காட்டின. தடை நடவடிக்கைகளை அகற்ற மூன்றாம் நாடுகளில் கம்பனிகளை உருவாக்கி அவற்றின் பேரில் ஏற்றுமதி,இறக்குமதி செய்து கணக்கு காட்டும் உத்தியை துவக்கியது இரான்.இதை ஐரோப்பிய நாடுகளால் தடுக்க இயலவில்லை எனினும் இத்தகைய நடவடிக்கைகளால் இரானிய கம்பனிகளுக்கு கடுமையான அளவில் கூடுதல் செலவுகள் உருவாகியுள்ளன. இரானிய வேலை இல்லா திண்டாட்டம் தற்போது 20% ஆக உயர்ந்துவிட்டது.வெளிநாட்டில் எழுந்த எதிர்ப்புகளை சமாளிப்பது போல உள்நாட்டில் எழும் எதிர்ப்புகளையும் சமாளிப்பேன் என்கிறார் அகமெதானிஜாத்.