Wednesday, January 19, 2011

USA Vs. Iran

அமெரிக்காவுடனான இரானின் பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.அகமெதானிஜாத் அமெரிக்காவை ஒழிக்க சர்வதேச அளவில் வெனிசுவேலாவின் சாவேசுடன் கூட்டணி அமைத்தார்.டாலரை சர்வதேச கரன்சி எனும் ஸ்தானத்தில் இருந்து அகற்ற முயன்றார்.யூரோ மூலம் ஆயில் விற்பனை செய்யும் மையம் ஒன்றை அமைத்தார்.ஆனால் யூரோ சரிந்தது இந்த மையத்துக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியது.அதன்பின் பலநாடுகளிடம் பேசி அவர்கள் கரன்சியை டாலருக்கு பதில் பெறுவதாக ஒத்து கொண்டார்.ஜப்பானிய யென்னை வாங்கிகொண்டு ஜப்பானுக்கு ஆயிலை விற்றார்.ஆனால் டாலரை போன்ற மவுசு இந்த கரன்சிகளுக்கு இல்லை என்பதால் இத்திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

யூத இன அழிப்பு நடைபெறவில்லை (ஹோலோகஸ்ட் டினயல்) என்ற வாதத்தை கையில் எடுத்த அகமெதானிஜாத் ஐநா சபையில் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் திட்டி தீர்த்தார்.லெபனான் ஹிஸ்புல்லாவுக்கு நிதி உதவி,ஆயுத உதவி செய்து 2006ல் நடந்த யுத்தத்தில் இஸ்ரேலுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தினார்.

மறுதரப்பின் நடவடிக்கை மிக கடுமையாக இருந்தது.ஒபாமா பதவியேற்றபின்னர் ராஜதந்திர ரீதியில் இரானுடனான யுத்தத்தில் பல மாறுதல்களை கொண்டுவந்தார்.போர் மூலம் தீர்வு எனும் சித்தாந்தத்தை நிராகரித்த ஒபாமா ராஜதந்திர ரீதியில் இரானின் அணு உலைகளை முடக்க உத்தரவிட்டார்.

இரான் 2011ல் அணுகுண்டு தயாரிக்கும் என நம்பபட்டது.இதை முன்பு செய்யவிருந்த இராக் அணு உலைகள் மேல் இஸ்ரேல் குண்டுவீசி இராக்கிடம் அணு ஆயுதம் இல்லாமல் செய்தது.இப்ப இரான் மேல் குண்டு வீச முடியாத அளவுக்கு டெக்னிகலாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், பூமிக்கு அடியில் குண்டுகள் துளைக்காத நிலவறைகளில் அணு ஆயுதம் தயாரித்து வருகிறது இரான்.

என்ன செய்யலாம் என யோசித்த இஸ்ரேல் ஸ்டக்ஸ்நெட் என்ற வைரசை ஏவியது.காற்றுபுகாத இடத்திலும் கணிணி வைரஸ் புகுந்துவிடுமே?இரானின் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்ட அணு வால்வுகள் இதனால் பழுதடைந்தன.தற்போது 2015 வரை அணு ஆயுதம் தயாரிக்கும் வலிமையை இரான் இழந்துவிட்டிருக்கிறது.


இரானுக்கு பொருளாதார ரீதியாக அணு ஆயுதத்தை கைவிட சொல்லி நெருக்கடிகள் வருகின்றன.போன வருடம் மின்ன்சோட்டாவில் கம்பனி துவக்க ரிலையன்ஸும், ஜிண்டால் க்ரூப்பும் மனுபோட்டன.மின்னசோட்டா கவர்னர் டிம் பாவ்லெண்டி இரானில் இந்த கம்பனிகள் துவக்கவிருந்த பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை கைவிட்டால் அனுமதி அளிப்பதாக கூறினார்.கணக்கு போட்டு பார்த்த இந்த இரு கம்பனிகளும் இரானிய ஆலைகளை கைவிட ஒப்புகொண்டன.

சமீபத்தில் இந்தியாவிடம் கெஞ்சி,கூத்தாடி இரானுடனான ஆயில் எக்ஸ்சேஞிலிருந்து இந்தியாவை விடுவித்தது அமெரிக்கா.சர்வதேச அணுசக்தி கவுன்சிலிலும் இரானுக்கு எதிராக இந்தியா ஓட்டளித்தது.இரானிடமிருந்து வருடம் 3.5 லட்சம் பேரல்கள் ஆயிலை இந்தியா இறக்குமதி செய்கிறது.இனி இதை அரேபியாவிடமிருந்து இரானை விட குறைந்த விலையில் வாங்க அமெரிக்கா உதவியுள்ளது.

இதற்கு பதிலாக நமக்கு கிடைத்தது என்ன? காஷ்மிர் பற்றி அமெரிக்கா வாய் திறவாமல் இருத்தல், இந்திய - அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம், ஆசிய வங்கியிடமிருந்து கிடைத்த 3 பில்லியன் டாலர் மதிப்பிலான குறைந்த வட்டி கடன்,  பி 8 பொசிடான் எனப்படும் அதிநவீன விமான விற்பனை ஒப்பந்தம்..இந்தியாவின் வரலாற்றில் அதிக மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் இது என சொல்லபடுகிறது.அதே சமயம் ரஷ்யா,சீனா,இந்தியா போன்ற பலநாடுகளை ராஜதந்திர நகர்த்தல்கள் மூலம் இரானுக்கு எதிராக அமெரிக்கா திருப்பியது.ஐநா சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனாவும், ரஷ்யாவும் இரானுக்கு எதிராக திரும்பியது இரானுக்கு ராஜதந்திர/ பொருளாதார ரீதியில் பலத்த பின்னடைவாக அமைந்தது.

இரானில் ஆயில்வளம் குவிந்திருந்தாலும் ஆயிலை சுத்திகரித்து பெட்ரோலை எடுக்கும் ஆலைகள் அங்கே அதிகம் இல்லை.ஆயிலை ஏற்றுமதி செய்துவிட்டு பதிலுக்கு பெட்ரோலை இறக்குமதி செய்துகொண்டிருந்தது.அங்கே செக் வைக்கபட்டவுடன் இரானில் பெட்ரோல் தட்டுபாடு ஏற்படும் என்ற நிலை உருவானது.உடனே அகமெதானிஜாத் "சொந்த காலில் நிற்போம்" என முழங்கி இரானின் பெட்ரோகெமிக்கல்ஸ் தொழிற்சாலைகளை பெட்ரோல் உற்பத்திக்கு மாற்றினார்.விளைவாக பெட்ரோகெமிக்கல்ஸுக்கு இரானில் தட்டுபாடு ஏற்பட்டது.அதுபோக உள்ளூர் பெட்ரோல் சுத்தமில்லாமல் இருந்ததால் சுற்றுபுற சூழலில் சீர்கேடு ஏற்பட்டது.டெஹ்ரானை மூன்று நாட்கள் மூடவேண்டிய அளவுக்கு நகரில் புகை மண்டியது.

ரஷ்யா,சீனா,ஐரோபா,வலைகுடா நாடுகளின் உதவியுடன் இரானிய பொருளாதாரம் முடக்கபட்டது.துபை இரானிய கம்பனிகளுடன் வர்த்தகம் செய்யபோவதில்லை என அறிவித்தது.இரானிய தொழிற்சாலைகளையும் துபையில் அனுமதிக்கவில்லை.உலகெங்கும் இரானிய கப்பல்கள் துறைமுக அதிகாரிகளால் கடும் சோதனைகுள்ளக்கபட்டன.இரானிய விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்ப பல ஐரோப்பிய நாடுகள் மறுத்தன.

விளைவுகள் இரானிய பொருலாதாரத்தில் கடுமையாக எதிரொலித்தன.சமீபத்தில் அகமெதானிஜாத் டிவியில் தோன்றி பல வெட்டுக்களை அறிமுகபடுத்தினார்.பெட்ரோல் விலை 75% உயர்த்தபடுவதாகவும், டீசல் விலை 2000% (தட்டச்சு பிழை எல்லாம் இழை.2000% தான்) உயர்த்தபடுவதாகவும் அறிவித்தார்.உடனே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தன.ரொட்டி விலை நான்கு மடங்காக உயர்ந்தது.ஆயில் விலை உயர்ந்ததால் இரானிய தொழில்துறை விலைவாசி உயர்வில் சிக்கியது.விலை உயர்வை கண்டித்து இரானிய டாக்சிகள் நகரெங்கும் காலியாக ஓடி எதிர்ப்பை காட்டின.

தடை நடவடிக்கைகளை அகற்ற மூன்றாம் நாடுகளில் கம்பனிகளை உருவாக்கி அவற்றின் பேரில் ஏற்றுமதி,இறக்குமதி செய்து கணக்கு காட்டும் உத்தியை துவக்கியது இரான்.இதை ஐரோப்பிய நாடுகளால் தடுக்க இயலவில்லை எனினும் இத்தகைய நடவடிக்கைகளால் இரானிய கம்பனிகளுக்கு கடுமையான அளவில் கூடுதல் செலவுகள் உருவாகியுள்ளன.

இரானிய வேலை இல்லா திண்டாட்டம் தற்போது 20% ஆக உயர்ந்துவிட்டது.வெளிநாட்டில் எழுந்த எதிர்ப்புகளை சமாளிப்பது போல உள்நாட்டில் எழும் எதிர்ப்புகளையும் சமாளிப்பேன் என்கிறார் அகமெதானிஜாத்.

Friday, January 14, 2011

பெண்களால் அழிந்த சாம்ராஜ்ஜியங்கள்

பெண்களால் அழிந்த சாம்ராஜ்ஜியங்கள்

ரேப் - ரேப் என்பது பரிணாமவியல் கோட்பாட்டில் தனக்குரிய பங்கை வகிக்கிறது.பல மிருக இனங்களில் ரேப் உண்டு.காரணம் அவற்றில் வலிமை வாய்ந்த ஆண் பல பெண் துணைகளை தன் அந்தபுரத்தில் சேர்த்து கொள்ளும்.பலவீனமான ஆண் மிருகங்கள் ஒன்று பிரம்மச்சாரியாக காலம் கழிக்க வேண்டும், அல்லது..

இப்படி பரிணாமவியலில் ஒரு பங்கை வகிக்கும் ரேப்பை மனித இனம் துஷ்பிரயோகம் செய்வது போல மற்ற மிருக இனங்கள் செய்வதில்லை.மிருகங்கள் செய்யும் ரேப் பெரும்பாலும் இனவிருத்திக்கு.ஆனால் மனிதர்கள் செய்யும் ரேப் பல சமயங்களில் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே அமைகிறது.கெங்கிஸ்கான் சொன்னதுபோல "இருப்பதிலேயே மிகபெரும் மகிழ்ச்சி என்னவெனில், உன் எதிரியை தோற்கடித்து,அவனை உன் காலில் மண்டியிட வைத்து,அவன் நாடு,நகரங்களை தரைமட்டமாக்கி,அவன் மகள்களையும்,மனைவிகளையும் அடைதல்.."..இந்த கொள்கையை எல்லை மீறி பின்பற்ற்றிய கெங்கிஸ்கான் கடைசியில் தான் கைபற்றிய சீன ராஜகுமாரியால் பாபிட் செய்யபட்டு அந்த வலியிலேயே உயிரை விட்டான் என்பது உபரி செய்தி.

மனோகரா

உஸ்பெகிஸ்தான் மன்னனான தைமூருக்கும் துருக்கி சுல்தான் பெயசித்துக்கும் பலநாட்களக அவமானகரமான கடித போக்குவரத்து நடைபெற்று வந்தது.பெயசித் தனக்கு சமமான மன்னன் என தைமூரை கருதவில்லை.குறுநில மன்னனுக்கு அனுப்புவது போல தைமூருக்கு கடிதம் எழுதி வந்தார்.கோபமடைந்த தைமூர் பெயசித் மேல் படை எடுத்தான்.அந்த காலத்தில் பேயசித்தை எதிர்க்கும் மன்னனே உலகில் இல்லை.ஐரோப்பிய மன்னர்கள் அனைவரையும் தோற்கடித்து ஐரோப்பாவை பிடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் பேயசித்.செர்பிய மன்னன் அவரிடம் போரில் தோற்று தன் தங்கை டெஸ்பினாவை அவருக்கு திருமணம் செய்து வைத்து தன் நாட்டை காப்பாற்றி கொண்டான்.

இத்தகைய வலிமை வாய்ந்த மன்னர் மத்திய ஆசிய நாட்டோடி கூட்டம் ஒன்றின் தலைவனான தைமூரை தனக்கு சமமானவனாக ஏற்காததில் வியப்பில்லையே?எப்படியோ..போர் மூண்டது. தோல்வியே அடையாத ஆட்டோமான் படை ஒரே நாளில் தைமூரிடம் தோற்று பேயசித் தன் குடும்பத்துடன் தைமூரிடம் பிடிபட்டார்.பெயசித்தை கூண்டில் அடைத்து வைத்த தைமூர் அவர் கண்முண் டெஸ்பினாவை பலாத்காரம் செய்தான்.அதன்பின் அவரை விடுதலையும் செய்துவிட்டான்.

அவமானமடைந்த பேயசித் அதன்பின் ரொம்பநாள் உயிரோடு இருக்கவில்லை.அதன்பின்னர் ஆட்டோமான் வம்சத்தில் பத்துராணி என ஒருவர் இருக்கும் வழக்கமே ஒழிந்து விட்டது.பட்டத்து ராணி இருந்தால் தானே இப்படி அவமரியாதைக்கு உள்லாவார்கள்?மன்னர் யாரையும் கல்யாணம் செய்துகொள்லாமல் அடிமைகளாக மட்டுமே பெண்களை வைத்திருந்தால்??

அதன்பின் இருநூறு வருடங்களுக்கு ஆட்டோமான் சுல்தான்கள் யாரும் பட்டத்து அரசிகளை வைத்திருக்கவில்லை.ஆட்டோமான் வம்சத்தின் ஒப்பற்ற மாமன்னரான சுல்தான் சுலைமான் மட்டுமே இந்த பழக்கத்தை உடைத்தெறிந்து உக்ரேனிய அழகி ரோக்சலீனாவை மணந்துகொண்டார்.ரோக்சலினாவும் ஒன்றும் சாதாரண பெண் இல்லை.ஆட்டோமான் வம்சத்தையே முடித்து கட்டியவர் என வரலாற்றில் திகிலுடன் கூறபடுபவர்.

ரோக்சலினாவும் கைபற்றபட்ட அடிமைதான்.அனால் மன்னரை வெகுவிரைவில் மயக்கி தன் கைபிடிக்குள் கொண்டுவந்துவிட்டார்.மன்னரின் முதல் மனைவிக்கு பிறந்த மூன்று குழந்தைகளை மன்னரை கொல்ல வைத்தார்.மன்னரின் நம்பிக்கைக்கு உரிய வசீரையும் கொல்ல வைத்தார். வசீர் (மந்திரி) அன்றைய ஐரோபாவின் நிகரற்ர ராஜதந்திரி. மன்னரின் நெருங்கிய நண்பர்."நான் உயிருடன் இருக்கும் வரை உனக்கு எந்த ஆபத்தும் இல்லை" என மன்னர் அவருக்கு உறுதிமொழி அளித்திருந்தார்.ஆனால் ரோக்சலீனாவுக்கு இத்தகைய ஆபத்தான ஆள் மந்திரியாக இருப்பது பிடிக்கவில்லை.வசீரை மன்னரை விட்டே கொல்ல வைத்தார்.."நீங்கள் தூங்கும்போது வசீர் கொல்லபட்டால் அது உங்கள் சத்தியத்தை மீறியதாகாது" என்ற ரோக்சலினாவின் ஐடியாவுடன்..

இப்படி போட்டியாளர்கள் அனைவரையும் கொன்று தன் மகனை அரியணையில் ஏற்றினார் ரோக்சலினா.

இது அப்படியே மனோகரா படத்தில் வருவது போன்ற கதை.மன்னரின் முதல் மனைவி குல்பஹார்( பத்மாவதி).அவர் மகன் முஸ்தஃபா (மனோகரன்) மாபெரும் வீரன்.அவன் மட்டும் சுலைமானுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருந்தால் ஆட்டோமான் வம்சமே எங்கோ போயிருக்கும் என்பார்கள்.ஆனால் வசந்தசேனை சித்தி ரோக்சலினா மனோகரனை தந்தையின் கையால் கொல்ல வைத்தார்.தன் மகனான திறமையற்ற சலீமை (வசந்தகுமாரன்) அரியணையில் ஏற்றினார்.

ஆட்டோமான் வரலாற்றை சலிமுக்கு முந் சலிமுக்கு பின் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.சலீமுக்கு முந்தைய பத்து ஆட்டோமான் சுல்தான்களும் நிகரற்ற வீரர்கள்.சலீமும் அவரது வம்சாவழியினரும் புஸ்வாணங்கள் தான்.சலீம் காலத்தில் லிபாண்டே போர்க்களத்தில் ஒன்றினைந்த ஐரோப்பிய கடல்படையிடம் ஆட்டோமான் படை தோல்வி கண்டது.அதுதான் ஐரோப்பியர்களின் எழுச்சியின் முதல்படி.ஆட்டோமான்களின் வீழ்ச்சிக்கும் முதல்படி.

இத்தனைக்கும் காரணம் என ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுவது ராணி ரோக்சலீனா மேல் தான்.ஆனால் அவர் ஒரு கைபற்றபட்ட அடிமை.தன்னை அடிமையாக்கிய அரச வம்சத்தினரை சரியாக பழியெடுத்தார் எனவும் மறுதரப்பு சொல்கிறது.

Sunday, January 09, 2011

உதிர்ந்த முத்துக்கள்

சொர்க்கம் மதுவிலே

ரஜினி படம் எல்லாம் ஒரு நாலஞ்சு வருஷம் கழிச்சு பார்த்தால் பிடிக்காது என முன்பு சொன்னார்கள்.சமீபத்தில் முரட்டுகாளை பார்த்தேன்.தலைவர் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.கிராமம், பலாத்காரம் செய்யும் பண்ணையார்,கோபகார கிராமத்து இளைஞன், ஹீரோவர்ஷிப் செய்யும் அறிமுக பாடல் என பல படங்களுக்கு டெம்ப்ளேட்டை அமைத்து கொடுத்த படம்.ரஜினி படம் எல்லாம் ஒயின் மாதிரி.நாள்பட,நாள்பட தான் சுவை ஏறும்.

அரசும் ஆப்பும் - 1

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மேல்படிப்புக்கான செலவை முழுக்க அரசே ஏற்பதாக ஒரு அரசாணை வந்தது.இதை நம்பி பல ஏழைமாணவர்கள் கல்லூரியில் அப்ளிகேஷன் போட்டார்கள்.இந்த அரசாணை இல்லையெனில் இவர்கள் எல்லோரும் கல்லூரியை நினைத்தே பார்த்திருக்க முடியாதாம்.இப்படி கலர் கனவுகளுடன் அப்ளிகேஷன் போட்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களை தலைக்கு ஐயாயிரம் தான் தர்வோம் என சொல்லி பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது அரசு.ஐயாயிரம் பீஸில் இன்று எல்.கே.ஜி கூட படிக்க முடியாது என்ற நிலையில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.கல்லூரி நிர்வாகங்களும் "கவர்மெண்ட் பணத்தை தந்தா உன்கிட்டேயே குடுக்கறோம்.நீ முதலில் பீசை கட்டு" என மாணவர்களை நெருக்கி வருகின்றன.

அரசும் ஆப்பும் - 2

சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட தொழிலாளருக்கு இலவசமாக வீடு கட்டி தருவதாக அறிவித்து அதற்கு அவர்கள் மூணுநாள் லீவு போட்டு பாராட்டுவிழா எடுத்தார்கள்.அப்புறம் சென்னையை விட்டு ஐம்பது மைல் தொலைவில் இடத்தை கொடுத்து "வீடு நீயே கட்டிகோ" என சொல்லிவிட்டது அரசு.வீட்டையும் அரசு கட்டி தரும் என நம்பியிருந்த தொழிலாளர்கள் பேரதர்ச்சி அடைந்தனர்.வீட்டை கட்டி கொடுத்தால் திட்டத்துக்கு ஆயிரம் கோடி செலவாகுமாம்.அதனால் தான் அரசு பின்வாங்கிவிட்டதாம்.அப்ப்றம் நிலத்தை வாங்குவோம், வீட்டை பெப்ஸி கட்டிதரும் என சொல்லி நிலத்தை வாங்கினார்கள்.அப்புறம் பார்த்தால் வீட்டுக்கு பத்து லட்சம் செலவு வரும், அதை இரண்டு வருடத்தில் திருப்பி கட்டு என்கிறதாம் பெப்ஸி.

இரண்டு வருடத்தில் பத்து லட்சத்தை எப்படி சம்பாதிப்பது என நாள்கூலி வாங்கும் லைட்மேன்கள், மேக்கப்மேன்கள் யோசித்து கொண்டிருக்கிறார்களாம்

அரசும் ஆப்பும் - 3

மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து கிராமபுறத்தில் 21 லட்சம் குடிசைகளை அகற்றி அங்கே கான்க்ரீட் வீடுகள் கட்டுகின்றன.இதனால் தமிழத்தில் வரும்காலத்தில் குடிசை என்பதை மியூசையத்தில் பார்க்கும் நிலை தான் உருவாகும் என சொன்னார்கள்.இதுக்கு மத்திய அரசு 45,000 ரூபாயும், மாநில அரசு 15,000 ரூபாயும் தருகின்றன.அறுபதாயிரம் செலவில் வீடு எப்படி கட்டுவது என யோசிக்கிறீர்களா?அதுவும் அரசு கட்டி தரும் வீடு எப்படீருக்குன்னு யோசிக்கறீங்களா?அட போங்கப்பா..சந்தேககார தாமஸ்களா