Sunday, November 20, 2011

பால், மின்சாரம், பஸ்கட்டண உயர்வு எதை காட்டுகிறது?


பால், மின்சாரம், பஸ்கட்டண உயர்வு எதை காட்டுகிறது?

இந்தியா இன்னும் ஒரு கண்ட்ரோல் அன்ட் கமாண்ட் எகானமி தான் என காட்டுகிறது. பால் விலையேற்றத்தை ஒரு முதல்வர் அறிக்க வேண்டி இருப்பது அரசு தன் கடமைகளை மறந்து தான் இருக்க கூடாத துறைகளில் இருப்பதை காட்டுகிறது. இதுதான் வருத்ததுகுரிய விஷயமே ஒழிய விலையேற்றம் அல்ல.

அமெரிக்காவில் பால் விலை தினம்,தினம் மாறும். அதை மாநில கவர்னர்கள் டிவியில் அறிவிப்பதில்லை.பால் விலை ஏறுவதுக்கும், குறைவதுக்கும் அரசியல்வாதிகளால் செய்ய முடிய கூடியது எதுவும் இல்லை. பெட்ரோல் விலையும் தினமும் மாறும். எனக்கு தெரிந்து மூன்று மாதத்தில் பெட்ரோல் விலை இரு மடங்கு எல்லாம் கூடியிருக்கிறது. இரு மடங்கு விழுந்தும் இருக்கிறது.நிலையான விலை இல்லை. சந்தை பொருளாதாரத்தில் நிலையான விலை என எதுவும் இருக்க முடியாது.ஆனால் விலை இப்படி ஏறினாலும், இறங்கினாலும் அது மக்களின் வாங்கும் சக்தியை பாதிப்பதில்லை. காரணம் பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதில்லை.

நம் அரசு பால் வியாபாரம் கரண்டு வியாபாரம் பஸ் வியாபாரம் என அனைத்து துறைகளிலும் புகுந்து குழப்படி செய்து வருவதால் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதும், தேர்தல் சமயத்தில் விலையை ஏற்ராமல் தேர்தல் முடிந்தபின்னர் சாமர்த்தியமாக விலையை ஏற்றுவதும் வாடிக்கை.இந்த மாதிரி கூத்துக்கள் தடுக்கபட ஆவின், அரசு போக்குவரத்து கழாங்கள் முதலியவை தனியார் மயமாக்கப்பட்டு, பஸ் போக்குவரத்தில் உள்ள பெர்மிட் முறை ரத்து செய்யபடுவதே தீர்வு.பெர்மிட் ஒழிந்தால் தமிழ்நாடெங்கும் பஸ் வசதி இல்லாத அனைத்து ஊர்களுக்கும் ஒரே மாதத்தில் பஸ் வசதி கிட்டும்.ஆயிரகனக்கில் வேலைவாய்ப்புகள் பெருகும்.மக்களின் வாழ்க்கைதரம் உயரும்.ஆனால் அதன்பின்னர் போக்குவரத்து துறை வலம் கொழிக்கும் துறையாக இருக்காது.அதனால் அது எந்த ஜென்மத்திலும் நடக்கபோவதில்லை என்பதை அறியலாம்.

No comments: