Tuesday, November 15, 2011

ஆவ்சம் அமெரிக்கா


நேஷனல் ஜியாக்ராபிக் டாக்குமெண்டரி ஒன்றில் பேனாமா கால்வாய் கட்டபட்ட வரலாற்றை பார்த்துகொண்டிருந்தேன். மெய் சிலிர்க்க வைக்கும் அந்த வரலாற்றின் சிறுதுளிகள்

19ம் நூற்றாண்டின் இறுதியில் சூயஸ் கால்வாய் கட்டபடுகிறது. சூயஸ் கால்வாயை கட்டி முடித்த பிரெஞ்சு எஞ்சினியர் லெஸ்ஸாப்ஸ் அதில் நான்கில் ஒரு பங்கு தூரமே உள்ள பேனாமா கால்வாயை கட்ட களம் இறங்குகிறார்.

பனாமா கால்வாய் உலகின் மிகபெரும் எஞ்சினியரிங் புராஜக்ட். சூயஸ் எல்லாம் அதன் அருலிகேயே வர முடியாது.காரணம் பேனாமா கால்வாய் அமைந்த சிக்கலான நிலபரப்பு.மலை,ஆறு,காடுகள் அனைத்தும் இருந்தன.சூயஸ் கால்வாய் பாலைவனத்தின் குறுக்கே சென்றது.அதனால் அதை கட்டுவது சாத்தியமானது.ஆனால் பேனமா அப்படி அல்ல.அடர்ந்த காடுகளில் பணிபுரிந்த தொழிலாளிகள் மலேரியா,டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள்.தோண்டப்பட்ட கால்வாய் முழுக்க மீண்டும் மண்சரிந்து மூடியது. 22,000 உயிர்களை இழந்த பிறகு சூயஸ் கால்வாயால் உலகபுகழ் பெற்ற லெஸ்ஸாப்ஸ் பேனமா கால்வாயால் திவால் ஆகி ஏழையாக இறந்தார்

Ferdinand_de_Lesseps_1.jpg

(சூயஸ் கால்வாயை கட்டிய பிரெஞ்சு பொறியாளர் லெஸ்ஸெப்ஸ்)

1903ல் அமெரிக்கா வல்லரசு அல்ல.ஆனால் வளர்ந்து வரும் அரசு.அன்று ப்ரிட்டன் மற்றும் ஜெர்மனி தான் சூப்பர் பவர்கள்.டெட்டி ரூஸவெல்ட் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் சுமார் 10,000 மைல் பயணதூரத்தை மிச்சபடுத்தும் பேனமா கால்வாயை வெட்டினால் தான் அமெரிக்கா மேலும் வளரமுடியும் என்பதை உணர்கிறார்.கால்வாயை வெட்ட முடிவெடுக்கிரார்.(டெட்டி ரூஸவெல்ட் நினைவாக தான் குழந்தைகள் மனம் கவர்ந்த கரடிக்கு டெட்டி பேர் எனும் பெயர் சூட்டபட்டது.அது தனி கதை)

teddy-roosevelt-pince-nez.jpg

(டெட்டி ரூஸவெல்ட்)

அன்று பேனமா தனிநாடாக இல்லை.கொலம்பியாவின் ஆதிக்கத்தில் இருந்தது.பேனமாவுக்கு குறுக்கே கால்வாய் வெட்ட கொலம்பியாவிடம் அனுமதி கேட்கிறார் ரூஸவெல்ட்.கொலம்பிய அரசு அனுமதி மறுக்கிறது.அதன்பின் டெட்டி ரூஸவெல்ட் செய்த காரியம் தான் அமெரிக்காவின் பிற்கால சண்டியர்தனத்துக்கு முதல்படி என பலரும் சொல்கிரார்கள்.அப்படி என்ன செய்தார் டெட்டி? சிம்பிள்..பேனமா நாட்டின் "சுதந்திர போராட்ட அமைப்புக்கு" நிதி உதவி செய்தார்.ஆயுதம் கொடுத்தார்.புரட்சியை அடக்க வந்த கொலம்பிய படை துறைமுகத்தில் அமெரிக்க போர்கப்பல்கள் நிற்பதை கண்டு பின்வாங்கின. துளி ரத்தம் சிந்தாமல் பேனமா என்ர நாடு புதிதாக பிறந்தது.பேனமா கால்வாய் கட்டுமானமும் உடனே துவங்கியது

1904 முதல் 1914 வரை கட்டுமானம் நிகழ்ந்தது. பிரெஞ்சுகாரர்களை வாட்டி வதைத்த அதே மலேரியாவுன், மஞ்சள் காய்ச்சல் என்ர நோயும் மீண்டும் தொழிலாளரை துன்புறுத்தின.பல நூறு தொழிலாளர்கள் மஞ்சள் காய்ச்சல் எனும் நோய்க்கு பலியானார்கள்.இந்த நோய் ஏன் வருகிறது என்பதே தெரியவில்லை.சாரி,சாரியாக தொழிலாளர் மரணிக்க துவங்கியதும் பலர் கட்டுமான பணிகளை விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.கால்வாய் கட்டும் பணி ஸ்தம்பித்தது.

கோர்காஸ் என்ற ராணுவ டாக்டர் அப்போது புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பை கூறினார். மஞ்சல் காய்ச்சல் வர காரணம் கொசுகடிதான் என்றார்.கொசுவை ஒழியுங்கள்..மலேரியா மற்றும் மஞ்சள் காய்ச்சலும் ஒழியும் என்றார்.அன்று எல்லாம் யாருக்கும் இந்த வியாதி பரவ காரணம் கொசு என தெரியாது.அதனால் யாரும் அதை சீரியசாக எடுக்கவில்லை.கொசுவை ஒழிக்க மில்லியன் டாலர்(அன்று அது மிகபெரும் தொகை) திட்டம் ஒன்றை தீட்டி கொடுத்தார் கார்கோஸ்.அதை கிடப்பில் போட்டுவிட்டு ஐம்பதாயிரம் டாலரை கொடுத்து "இதை வைத்து கொசுவை ஒழி" என சொல்லி நிதி ஒதுக்கினார்கள்.

கோபமடைந்த கார்கோஸ் ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.கார்கோஸின் நண்பர் ரூஸவெல்டை சந்தித்து "கார்கோஸ் திட்டத்தை நீங்கள் ஒத்துகொண்டால் உங்களுக்கு கால்வாய் கிடைக்கும்.இல்லையேல் பேனமா கால்வாயை நீங்கள் மறக்கவேண்டியதுதான்" என்றார்

யோசித்த ரூஸவெல்ட் வரலாற்றி மாற்றும் அந்த முடிவை எடுத்தார்.காரகோஸின் திட்டத்தை ஒத்துகொண்டார்

கொசுவை ஒழிக்க காரகோஸ் களம் இறங்கினார்.கோசு உற்பத்தி அவாது நீர்நிலைகளில்.அதனால் குளம்,குட்டை என நீர்நிலைகள் தேங்கி நிற்கும் பகுதிகள் அனைத்திலும் நீரின் மேல் க்ரூட் ஆயிலை ஊற்றுங்கள் என ஆலோசனை கூறினார்.க்ரூட் ஆயில் நீரில் கலந்ததும் கொசுமுட்டைகளில் இருந்து கொசு உற்பத்தி ஆகி வருவது நின்றது.பிரமிக்கதக்க வைக்கும் விதத்தில் மலேரியா,மஞ்சள் காய்ச்சல் வியாதிகளும் உடனே நின்ரன.(மருத்துவ உலகமும் அன்றுமுதல் கொசுவால் வியாதிகள் பரவும் என்பதை அறிந்து கொசுக்களை டார்கெட் செய்ய துவங்கியது தனிகதை)

e_today_02.jpg
(கொசு மூலம் மலேரியா பரவும் என்பதை கண்டுபிடித்த டாக்டர் காரகோஸ்)


அதன்பின் உற்சாகத்துடன் களம் இறங்கிய குழுவினர் பேனமா கால்வாயை கட்டிமுடித்து 1914ல் திறப்பு விழா நடத்தினர்.அதே மாதத்தில் முதல் உலகயுத்தம் துவங்கியது

பேனமா கால்வாய் அமெரிக்கா எனும் வல்லரசின் வருகையை உலகுக்கு அறிவித்தது....22,000 உயிர்பலிகளுக்கு பிறகு பிரெஞ்சு அரசால் சாதிக்க முடியாததை ஐந்தாயிரம் உயிர்களை மட்டுமே இழந்து சாதித்து காட்டிய பேனமா கால்வாய் கட்டுமானம் இன்றும் உலகின் தலைசிறந்த எஞ்சினியரிங் புராஜக்டாக பார்க்கபடுகிறது.அன்றுதான் முதல் முதலாக அமெரிக்கா ஆவ்சம் நாடு என்பதை உலகம் அறிந்தது:-)


No comments: