Sunday, October 31, 2010

கடவுளின் நண்பன்

அந்த கடவுள் ஒரு மிக பெரிய வழிபாட்டு தளத்தை நடத்தி வருபவர். யதேச்சையாக ஒரு உறவினர் வீட்டில் அவரை சந்திக்க நேர்ந்தது. அவரை நடுவே உட்கார வைத்து எல்லோரும் பயபக்தியுடன் அமர்ந்திருந்தனர்.

உறவினர் என்னை கடவுளிடம் அறிமுகபடுத்தினார். "எனக்கு சாமி நம்பிக்கை இல்லை" என்றேன்.

கடவுள் என்னிடம் விவாதத்தை தொடங்கினார். "உன்னை பெற்றது உன் அம்மா என உனக்கு எப்படி தெரியும்?நம்பிக்கை தானே?" வகையறா லாஜிக் இல்லாத கேள்விகள். அசுவாரசியமாக பதில் சொல்லிகொண்டிருந்தேன்.

விவாதத்தை கேட்டுகொண்டிருந்த பக்தர் ஒருவருக்கு கோபம் வந்தது. "இந்த மாதிரி திக காரன் கிட்ட பேசாதீங்க சாமி" என்றார். சாமியும் "ஆமாம்.." என்றார்."திகன்னா என்னன்னே தெரியாது கடவுளே" என்றேன்.

"அப்புறம் இந்த மாதிரி எல்லாம் எப்படி பேசுகிறாய்?அவர்கள் தான் இந்த மாதிரி பேசுவார்கள்"

"அவர்கள் யார்ன்னே எனக்கு தெரியாது"

கடவுளுக்கு சிரிப்பு வந்தது."நல்லது" என்றார்.பிரசாதம் கொடுத்தார்.

ஆறுமாதம் கழித்து கடவுளை மீண்டும் ஒரு கல்யாண மண்டடபத்தில் சந்தித்தேன்.என்னை அடையாளம் கண்டுகொண்டார்.அன்று அவரை பார்க்க மட்டும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வந்திருப்பார்கள்.என்னை இரு என உட்கார வைத்து விட்டு வந்தவர்களுடன் பேசி கொண்டிருந்தார்.

அந்த கூட்டத்தை கண்டு எனக்கே பயம் வந்தது.இவருடனா சண்டை போட்டோம் என நினைத்து கொண்டேன்.அப்புறம் என்னை அருகே அழைத்தார்.

"அன்னைக்கு பேசினதை மனசுல வெச்சுக்காதீங்க" என்றேன்.

அவருக்கு ஒரே சிரிப்பு.

"என்னை எதாச்சும் துணிகடைக்கு கூட்டி போ.கோயமுத்தூர்ல எனக்கு கடையே தெரியாது" என்றார்.

"என்கிட்ட கார் இல்லை.பைக் தான் இருக்கு"

"பைக்குல நான் வரமாட்டேன்னு சொன்னேனா?"

பைக்கில் போகும்போது "என்னை எல்லோரும் கடவுள் என்கிறார்கள். வயசு வித்தியாசம் இல்லாமல் காலில் விழுகிறார்கள். நீ தான் பயம் இல்லாம பேசினாய்" என்றார்.

"நீங்க கடவுளா?" என கேட்டேன்

பதில் சொல்லாமல் "பரம்பரையா இந்த வழிபாட்டு தளத்தை நிர்வகிச்சுகிட்டு வர்ரோம்.பரம்பரையா பக்தர்கள் இருக்கிறார்கள்.மாசம் ரெண்டு லட்சத்துக்கு பக்கம் செலவு ஆகுது" என்றார்.

மாதம் ரெண்டு லட்சம் வருமானம் வருகிறது என சுற்றி வளைத்து சொல்லுகிறார் என புரிந்தது.

"ஆன்மிகம் உண்மையா?" என மறுபடி கேட்டேன்.

"வீட்டுக்கு போயி உன் கால் முட்டிக்கு பின்புறம் பக்கம் பக்கமா ரெண்டு மச்சம் இருக்கான்னு பாரு" என சொன்னார்.

"இருந்தால்.."

"ஆன்மிகம் உண்மை."

துணிகடையில் பைக் நின்றது.

துணி வாங்கினார்.வாங்கிவிட்டு பில் போடும்போது கையில் இருந்த பையை திறந்து அதில் இருந்த சிலை ஒன்றை எடுத்தார். "இந்த சிலை ஐநூறு வருஷமா வெச்சு பூஜை பண்ணுறோம்.இது உன் கடைக்கு வந்துவிட்டது.உனக்கு இனி ராஜயோகம் தான்"

கடைகாரர் மெய்சிலிர்த்தார்.பில்லுக்கு பணம் வேண்டாம் என சொல்லி கைகூப்பி அனுப்பி வைத்தார்.

அடுத்து என்.ஆர்.ஐ பக்தர் ஒருவர் வீட்டுக்கு போக சொன்னார்.அங்கே போனதும் பக்தருக்கு அந்த துணியை கொடுத்தார்.பக்தர் வழக்கத்தை விட அதிகமாகவே காணிக்கை கொடுத்தார்.

கடவுளை மண்டபத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன்.முட்டிக்கு பின்னால் பார்த்தேன்.

அருகருகே இரண்டு மச்சம் இருந்தது.

அதன்பின்னர் இரண்டு வருடம் கழித்து அவர் மீண்டும் கோயமுத்தூர் வந்தார்.தொலைபேசியில் அழைத்தார்.

"இருக்கா?" என கேட்டார்

"இருக்கு" என்றேன்.

"ஆன்மிகம் நிஜமா?" என கேட்டார்.

"தெரியலை" என்றேன்.

"தெரியாத வரைக்கும் தான் நீ எனக்கு நண்பனா இருப்பாய்.தெரிந்தால் நீயும் என்னை பார்த்ததும் காலில் விழுந்து கும்பிட ஆரம்பித்துவிடுவாய்.."

சிரித்துகொண்டே போனை வைத்தார்.

Thursday, October 28, 2010

வாழ்த்துக்கள் மணிஜி

சிறந்த இந்திய படங்களை பட்டியலிட்ட டைம் பத்திரிக்கை மூன்று தமிழ்படங்களை (நாயகன், பாம்பே, தில்சே) அதில் சேர்த்துள்ளது.மூன்றும் மணிரத்தினம் படங்கள்.வாழ்த்துக்கள் மணிஜி

Tuesday, October 12, 2010

ஆயிஷாவின் மூக்கு - பாகம் 2

ஆயிஷாவின் மூக்கு - பாகம் 2

மூக்கு அறுக்கப்பட்ட ஆயிஷா பீபியின் கதையை அறிவோம்.டைம் பத்திரிக்கையின் புண்ணியத்தால் ஆயிஷாவின் கதை உலகெங்கும் பரவியது.அதன்பின் கலிபோர்னியாவின் தொண்டுநிறுவனம் ஒன்று ஆயிஷாவை தத்தெடுத்தது.கலிபோர்னியாவுக்கு ஆயிஷா அழைக்கபட்டார்.அங்கே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று புதிதாக மூக்கு பொருத்தப்பட்டது.அதன்பின் கலிபோர்னியா கவர்னர் ஆர்னால்டின் மனைவி மரியா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் "தாங்கும் இதயம் (enduring heart)" என்ற விருது ஆயிஷாவுக்கு வழங்கபட்டது.வாழ்க்கையில் துன்பங்களை தாங்கி போராடி வெல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை ஆயிஷா வாங்கினார்

ஆயிஷா அன்று

l7q4yb-l7q4wytime3.jpg

ஆயிஷா இன்று

article-1319804-0B952C9F000005DC-161_306x423.jpg

God Bless America

Monday, October 11, 2010

ஆயுதமா அகிம்சையா?

காந்தியம் இன்றைக்கு முழுமையாக ஜனநாயக நாடுகளில் அமுலுக்கு வந்துவிட்டது. காந்திய வழியில் வென்ற ஆயிரகணகான போராட்டங்களை குறிப்பிட முடியும்.சென்னையில் விமானநிலையம் கட்ட நிலத்தை கையகப்படுத்த வழிதெரியாமல் விவசாயிகளின் எதிர்ப்புக்கு அஞ்சி இங்கே சர்வாதிகாரியாக கூறப்படும் கருணாநிதி முழித்துகொண்டிருக்கிறார். வன்னியர்களை அரசியலுக்கு கொண்டுவந்து ராமதாசால் இடஒதுகீடு வாங்க இயலுகிறது. அருந்ததியினர் உள் ஒதுகீடு கேட்டு போராடி அதுவும் ஜெயிக்கிரது.அரசுகள் வாக்குசீட்டு மூலம் கவிழ்கின்றன.போலிசுக்கு எதிராக கட்டுரை எழுதிய சவுக்கு கைதுசெய்யபட்டு ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆகிறார்.அரசும் போலிசும் முகத்தில் கரியை பூசிகொண்டு நிற்கின்றன.

உலகில் எங்கும், எப்போதும் சுதந்திரம் வேண்டும் என்றால் போராடதான் வேண்டும்.இந்தியா அமெரிக்கா/ப்ரிட்டன் மாதிரி மெச்சுர்டான ஜனநாயகம் அல்ல. சீனா, கியூபா மாதிரி சர்வாதிகாரமும் அல்ல.இரண்டுக்கும் மத்தியில் உள்ளது."மோசமான ஜனநாயகம் கூட நல்ல சர்வாதிகாரத்தை விட சிறப்பானது" என்பார்கள்.அதுதான் இங்கும் நடக்கிறது.

இன்றைய ஜனநாயக அரசுகளிடம் மோதும்போது நீங்கள் மோதுவது பெரும்பான்மையுடன்..அதாவது பெரும்பான்மை மக்களுடன்.அவர்கள் ஆதரவு இல்லாமல் உங்கள் போராட்டம் ஜெயிக்காது.அரவழியில் போராடும் எல்லா கோரிக்கையும் பலனளிக்கும் என்ற பொருளும் இல்லை.அறவழியோ,ஆயுதவழியோ எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் வெற்றியை போலவே தோல்வி அடையும் சாத்தியகூறும் உண்டு.பர்மாவில் ஆங்க்சான்சூகி அரவழியில் முப்பது ஆண்டுகளாக போரிடுகிறார்.அவர் போராட்டம் பர்மிய அரசால் கடுமையாக ஒடுக்கபடுகிறது.சூகி 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கிறார்.அதேசமயம் பர்மா அரசு உலகநாடுகள் பலவற்றால் ஒதுக்கபட்டு சர்வதேசகுற்ரவாளி ரேஞ்சில் சர்வதேச சமூகம் முன்பு தலைகுனிந்து நிற்கிறது.சூகியின் தலைமுறையில் அந்த போர் வெற்றி அடையாவிட்டாலும் வரும்காலத்தில் வெற்றி அடையும் வாய்ப்பு அதிகம்.இதே சூகி ஆயுதம் ஏந்தியிருந்தால் அது பர்மிய உள்நாட்டு போராக மாறி ரத்தாறு ஓடி ஏதோ ஒருதரப்பு வெற்றியும் இன்னொரு தரப்பு தோல்வியும் அடைந்திருக்கும்.இலங்கை நிலை அங்கேயும் வந்திருக்கலாம்.

ஜனநாயக நாடுகளில் "ஜனநாயகம் தோற்றுவிட்டது, காந்தியம் தோற்றது" என புலம்புகிறவர்கள் போர்க்களத்தின், போராட்டத்தின் அடிப்படை அறியாதவர்கள்.ஊறுகாய் மாதிரி ஒரு சில அகிம்சை வழி போராட்டங்களை தொட்டுகொண்டு "இதோ அகிம்சையை கையில் எடுத்தேன்.போராட்டம் தோற்றது.இனி அடுத்து ஆயுதம் எடுப்பேன்" என கூறதான் அவர்கள் விரும்புகிறார்கள்.அகிம்சை மூலம் கோரிக்கை வைத்தீர்கள்.நடக்கவில்லை...அடுத்து ஆயுதம் ஏந்தினீர்கள்.அப்பவும் எதுவும் கிடைக்கவில்லை..அடுத்து என்ன செய்ய போவதாக உத்தேசம்?பேக் டு ஸ்க்யுஅர் ஒன்?

ஜனநாயக நாடுகளில் போராட்டங்கள் வெற்றி பெற மக்கள் ஆதரவு வேண்டும்.அதை ஜனநாயக முறையில் அடைதல் வேண்டும்.பெரும்பான்மையுடன் உரையாடி அவர்கள் மனதை மாற்றி அவர்கள் ஆதரவை பெற்று அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் தந்து அல்லது நாமே ஆட்சியை பிடித்து மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.இங்கே நடந்த அரசியல்புரட்சிகள் எல்லாம் அப்படி உருவானவையே.இதில் சில கோரிக்கைகள் நமக்கு என்னதான் நியாயமாக தென்பட்டாலும் பொதுமக்களுக்கு ஏற்பில்லாமல் போகலாம்.அப்போது போராட்டம் தோல்வி அடையும்..இதை செய்ய சோம்பேறிதனபட்டு "உண்னாவிரதம் இருந்தேன்.போலிஸ் அடித்துவிட்டது.அதனால் கத்தி எடுத்தேன்" என சிறுபிள்ளைதனமாக பேசி ஆயுதம் எடுப்பவர்கள் அதை கீழே போட முடியாமல் காடுகள்,மலைகள் என பதுங்கி பதுங்கி ஓடி உயிர்வாழ்கிறார்கள்.அவர்கள் எடுத்த கத்தி அவர்கள் குடும்பம்,ஊர்,உறவு,சுற்றம் என பலநூறு பேரை பலிவாங்கிவிட்டு தான் ஓய்கிறது.

அருந்ததி மாதிரி போலிமுற்போக்குவாதிகள் மக்களுக்காக போராடுவதோ எழுதுவதோ கிடையாது. பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்பதும் அவர்கள் நோக்கம் கிடையாது.தண்டகாரண்ய பிரச்சனை பற்றி லாஸ்வேகஸ் ஜர்னல் ரிவ்யூவில் கட்டுரை எழுதுவதுதான் அவர்கள் நோக்கம்.கட்டுரை எழுதினால் பணமும்,புகழும்,விருதும் கிடைக்கும்.அதுக்கு மேல் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதுமில்லை.பிரச்சனையை தீர்ப்பதுமில்லை. ஒரு ராமதாஸ், விஜயகாந்திடம் இருக்கும் பிராக்டிகல் அப்ரோச் கூட இவர்களிடம் இல்லை. ஒரு பிரச்சனை என வந்தால் ராமதாஸ், விஜயகாந்த் களத்தில் இரங்குகிறார்கள்.பொராடுகிறார்கள்.இப்படி களத்தில் இறங்கி வேலைசெய்வது அல்லது பிரச்சனையை தீர்ப்பது அருந்ததிக்கு உவப்பானதே இல்லை.அவர் வழக்கமான டெம்ப்ளேட் ஒன்ரை எல்லா கட்டுரைக்கும் வைத்திருப்பார். "காலனி ஆதிக்க அரசு, குரூரமான போலிஸ் இயந்திரம், லஞ்ச ஊழல் அரசியல்வாதிகள், அப்பாவி மக்கள், அவர்களை காக்க வந்த அவதாரபுருஷனாக ஒரு இயக்கம்,தலைவன்" இதுதான் இவரது டெம்ப்ளேட். வடதுருவம் முதல் தென் துருவம் வரை உள்ல எல்லா பிரச்சனைகளையும் இதே டெம்ப்ளேட்டை வைத்தே அவர் அணுகுகிறார்.விளைவு எல்லா பிரச்சனைகளிலும் தோல்வி, மக்களால் புரக்கணிக்கபடுதல். ஒரு சின்ன சர்க்கிளில், அவர் மாதிரியே நம்பிக்கைகளை கொண்ட சர்க்கிளில் மட்டுமே அவரது புலம்பல்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.

மக்களை திரட்டி, அரசியலுக்கு கொண்டுவந்து போராடி பெரும்பான்மை மக்களிடம் உரையாடி அவர்கள் ஆதரவை பெற்ரால் அந்த போராட்டத்துக்கு தோல்வி என்பதே கிடையாது.அதை செய்ய இயலாத போர்கள் ஜனநாயகத்தில் தோல்வியையே சந்திக்கும்.உண்னாவிரதம் இருப்பதோ, சாலைமறியல் செய்வதோ வெற்றியை தேடி தராது.மக்கள் ஆதரவை உங்கள் கோரிக்கைக்கு திரட்ட இயலுகிறதா இல்லையா என்பதே வெற்றியை தீர்மானிக்கும்.அரசும் போலிசும் அனைத்து கட்டங்களிலும் அதற்கு முட்டுகட்டை போடும்.உங்களை ஆயுதம் ஏந்தவைக்கவே அது விரும்பும்.ஆயுதம் ஏந்தியவர்களை சமாளிப்பது அரசுக்கு எளிது.ஆயுதம் ஏந்தாதவர்களை சமாளிப்பது அரசுக்கு எளிதான விஷயமல்ல.

எந்த போரிலும் வெற்றி,தோல்வி சகஜம், ஜனநாயகத்தில் வெற்றி என்பது மக்கள் ஏற்பே.அதை உங்களால் செய்ய இயன்றால் உங்கள் போர் வெல்லும்.அதை உங்களால் செய்ய இயலாது என்றால் உங்கள் கோரிக்கையை மூட்டை கட்டி வைத்துவிட்டு ரெஸ்ட் எடுப்பது நல்லது.சினேகா என்னை கல்யானம் செய்யவேண்டும் என்ர கோரிக்கைக்கு உண்னாவிரதம் இருக்க பலர் தயார்.அந்த போருக்கு மகக்ள் ஆதரவு கிடைக்குமா?

Saturday, October 09, 2010

காந்தி

காந்தி

இந்த கட்டுரைக்கு கோபமான எதிர்வினைகள் வர காரணம் இதில் உள்ள சொற்பிரயோகங்களே."காந்தி மனிதனே இல்லை" என்று கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.இம்மாதிரி அதீதமான சார்புநிலைகள்,வார்த்தைகளே இதற்கு இத்தனை கடுமையான எதிர்வினைகளை சில நண்பர்களை அளிக்க தூண்டியிருக்கும் என கருதுகிறேன்.

இதில் கூறப்பட்ட கருத்துக்கள் அனைத்துக்கும் இதே இழையில் பதில் அளித்தேன்.காந்தியை பிடிக்காதவர்கள் அதனால் திருப்தியடைவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.நாள்பட,நாள்பட தான் மனதில் ஆழபதிந்த கருத்துக்களை மாற்ர இயலும்.

இந்த கட்டுரையில் காந்தி மீது சுமத்தபடும் குற்றசாட்டுகள் பெரும்பாலும் கான்ஸ்பைரசி தியரி.தாஜ்மகால் சிவன் கோயிலாக இருந்தது, நிலவில் மனிதன் காலடி எடுத்து வைக்கவில்லை, ஒபாமா ஒரு முஸ்லிம், 9/11 நிகழ்த்தியது யூதர்கள்/அமெரிக்க அரசு என்பது போல ஆதாரமே இல்லாத, வரலாற்று ஆய்வாளர்களால் புறக்கணிக்கபட்ட/ஒதுக்கப்பட்ட கான்ஸ்பைரசி தியரிகள்.கான்ஸ்பைரசி தியரிகளுக்கு ஒரு சந்தை உண்டு.அதை நம்புகிறவர்களை மாற்ரவே இயலாது.அடிப்படையில் நமக்கு காந்தியை பிடிக்காது என்றால் அவர் மேல் சுமத்தபடும் எந்த குற்றசாட்டையும் ஏற்கும் மனோநிலைக்கு தள்ளபடுவோம்.அவரது சாதனைகள் சாதனைகளே இல்லை என வாதிடுவோம்.அதேபோல் தான் இங்கேயும் நடக்கிறது.நேதாஜியை காந்தி கொன்றார், பகத்சிங்கை காப்பாற்றவில்லை, இந்திய சுதந்திரம் கிடைக்க காந்தி காரணம் அல்ல, கடற்படை ஸ்ட்ரைக்கே காரணம் என்பது எல்லாம் அடிப்படை ஆதாரம் இல்லாத, மெயின்ஸ்ட்ரீம் வரலாற்று ஆசிரியர்களால் நிராகரிக்கபட்ட தியரிகள்.

வெல்பவர்களால் வரலாறு எழுதபடுகிறது என்பது உண்மை.அந்த லாஜிக்படி இங்கே வரலாறு காந்தியின் சீடர்களால் எழுதபட்டதே வென்றது காந்திதான் என்பதை அல்லவா காட்டுகிறது?உலகெங்கும் உள்ல வரலாற்று ஆசிரியர்கள், மாபெரும் ஞானிகள், தலைவர்கள், மேதைகள், பொதுமக்கள் அனைவரும் காந்தியின் ஆளுமை குறித்தும் அது உலக வரலாற்றில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் பேசுகிறார்கள்.நோபல் அமைதி விருதுக்கு காந்தியின் பெயர் பலமுறை பரிசீலிக்கபட்டு அன்றைய அரசியல் சூழல் காரணமாக,ப்ரிட்டனை பகைத்துகொள்ள விருப்பாததன் காரனமாக காந்திக்கு வழங்கபடவில்லை.கருப்பர்களின் விடுதலை இயக்க பேரொளிகளான மார்ட்டின் லூதர் கிஙும், மண்டேலாவும் காந்திய வழிமுரையே தமக்கு ஆதர்சத்தை அளித்தது என்கிரார்கள்.அதே அகிம்சையை பயன்படுத்தி வெற்றி அடைகிறார்கள்.அப்புறமும் காந்தி கயவன் என கூறுபவர்களுக்கு வரலாற்று புரிதல் எந்த அளவுக்கு உள்லது என்பதே எனக்கு சந்தேகமாக உள்லது.ஒரு பரந்துபட்ட வரலாற்று பார்வை இவர்களிடம் இல்லை.ஒரு சித்தாந்தத்தின் ஊடாக நின்று அதனுள் நிற்காத அனைவரையும் எதிரிகளாக,மூடர்களாக பார்க்கும் மனபோக்கு மட்டுமே இவர்களிடம் உள்ளது.பொதுமக்கள் மூடர்கள், உலக மக்கள் மூடர்கள், காந்தி நயவஞ்சகர் அனைவரையும் ஏய்த்து வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்று விட்டார்.நான் தான் அதிமேதாவி.இதை உலகுக்கு எடுத்து சொல்லி அனைவரையும் திருத்த போகிரேன் என்ர மனஒப்போக்கு தான் இங்கே காந்தி மனிதனே இல்லை என கூறுபவர்களிடம் காணபடுகிறது.

"காந்தி மகாத்மா இல்லை, மனிதன் மட்டுமே" என இன்னொரு தரப்பு கூறுகிறது.இதை முதலில் யாரும் மறுக்கவில்லை.காந்தி மனிதர்,ஆனால் அவர் சாதாரண மனிதர் அல்லர்.அசாதாரணமானவர். உலக வரலாற்றில் காணகிடைத்த மனிதர்களில், தலைவர்களில் மிக மேன்மையானவர்.அவருக்கு ஒப்பான விடுதலை போராட்ட தலைவர்களை காண்பதே மிக அரிது.மொழியால், இனத்தாம்,மதத்தால் பிரிந்து கிடந்த மக்களை கட்டி இனைத்து ஒரு தேசத்தை உருவாக்கியவர்.சூரியனே அஸ்தமிக்காத ப்ரிட்டிஷ் அரசை வெறும் முப்பதாண்டு கால போரில் தோற்கடித்து காட்டியவர். ராஜதந்திரத்தால் இந்தியாவை கைபற்றி ஆண்ட ப்ரிட்டிஷாரை அதே ராஜதந்திரத்தால் ஜெயித்து காட்டிய ஸ்ட்ராடஜிஸ்ட்.காந்தியின் நிர்வாக மேலாண்மை திறன்கள் என ஒரு புத்தகமே எழுதி கல்லூரியில் வைக்கும் அளவுக்கு ராஜதந்திரத்தில் கைதேர்ந்தவர்.

சுயநலனை துறந்து,பொதுநலனை,தேசநலனை மட்டுமே சிந்தித்த தலைவர்.அவர் பதவி வெறியர், சர்வாதிகாரி என குற்றம் சாட்டுபவர்கள் அவர் எதற்கு அதிகாரத்தை விரும்பினார் என்பதை மறந்துவிடுகிரார்கள்.அவர் என்ன காசுக்கும், பதவிக்குமா அதிகாரம் கேட்டார்?அவர் அப்படிப்பட்டவராக இருந்திருந்தால் இந்தியாவின் ஒருங்கினைந்த பிரதமராக அவரால் ஆகியிருக்க முடியும்.அவர் அதை முற்றிலும் மறுத்தவர்.காசு பனம் சேர்க்காதவர்.வாரிசுகளை அரியணையில் அமர்த்தாதவர்.தன் உயிர்மூச்சான சத்தியாகிரக கொள்கையிலிருந்து கட்சி விலை செல்வதை தடுக்கவே அவர் நேதாஜியை சகலவிதமான ராஜதந்திரஙக்ளை பயன்படுத்தியும் வென்றார்.அவரை வழிநடத்தியது அவரது கொள்கை.அந்த கொள்கைக்கு தான் அவர் உயிர்வாழ்ந்தார்.அதனாலேயே உயிரையும் இழந்தார்.

இப்படிப்பட்ட மனிதரை உலகவராற்றில் எங்கும் காண்பது அரிது.காந்திக்கு ஒப்பன மனிதனே பூமியில் இதுவரை பிறந்ததில்லை.இனியும் பிறக்க வாய்ப்பு இல்லை.காந்தி ஏசுவை போன்ற கருணாமூர்த்தி, ஜார்ஜ் வாஷின்டனை போன்ற தேச தந்தை, கார்ல் வான் க்ளாஸ்விட்சையொத்த ராஜதந்திரி, கரிபால்டியை போன்ற அப்பழுக்கற்ற தேசபக்தர், முனிவர்களை ஒத்த ஆன்மிகவாதி, வள்ளுவரை ஒத்த செக்யூலரிஸ்ட், இத்தனைபேரையும் ஒரு தராசில் நிறுத்தி மறுதராஅசில் காந்தியை நிறுத்தினால் வேண்டுமானால் காந்திக்கு சமமானவர்கள் கிடைத்தார்கள் என கூறலாமே ஒழிய காந்திக்கு சமமான இன்னொருவரை உலகவராலற்றில் நாம் எங்கும் கானவே இயலாது.இத்தகையவருக்கு மகாத்மா பட்டம் பொருந்தாது என கூறினால் அப்புறம் அது வேறு யாருக்கு தான் பொருந்தும் என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

காந்தியிடம் தவறுகள் இல்லையா?இருந்தது.பெரும் தலைவர்கள் அனைவரிடமும் காணப்படும் தவறுகள் காந்தியிடமும் இருந்தது.மார்ட்டின் லூதர் கிங் விபசாரிகளுடன் க்ரூப் செக்ஸ் வைத்து கொண்டவர், மண்டேலா பெண்கள் விசகய்த்தில் படுவீக், ஜார்ஜ் வாசிங்க்டன் அடிமைகளை வைத்திருந்தவர்,,,அடுக்கிகொண்டே போகலாம்...குரைகள் இல்லாத மனிதன் இல்லை.நான் சொல்லுவது குறை,நிறை இரண்டையும் வைத்து ஒரு மனிதனை அளவிடுங்கள் என்பதே.அந்த அளவீட்டின்படி பார்த்தால் காந்திக்கு அருகே கூட யாரும் தென்படவில்லை.ஒப்புயர்வற்ற மாபெரும் மனிதர் அவர்.அவரை பற்றி உங்களுக்கு நல்ல கருத்து இருக்கோ, கெட்டவர் என்ற கருத்து இருக்கோ..அது வேறு விஷாய்ம்.அவரை குழுவதும் படியுங்கள் உள்வாங்குங்கள்.ஒற்றைபரிமான கண்ணோட்டங்களையும், சித்தாந்த பின்புலத்தின்பாற்பட்டும் அவரை அணுகாதீர்கள்.அதன்பின் காந்தி மகாத்மாவா,மனிதனா,கயவனா என யாரும் சொல்லாமலே உங்களுக்கே புரியும்.