Thursday, September 24, 2009

417.கயானாவின் கலாசாரம் காப்பாற்றப்பட்டது


"என் பெயர் மிஸ்டர் தீமை

நான் இந்த ஏகே 47 வாங்கியது

ஓரினசேர்க்கையாளர் மேல் தோட்டாக்களை தூவ

தோட்டாக்களுடன் வெறியையும் தூவுவேன்

இசைதொகுப்பாளரை வேண்டுவேன்

பின்புறபுணர்ச்சியாளருக்கு வைப்போம் குண்டு

உங்களை வெறுக்கிறேனடா புழுக்களா.."

கயானாவில் புகழ்பெற்ற இசைகுழுவான மிஸ்டர் ஈவில்(Mr.evil) பலத்த கரகோஷங்களுக்கிடையே பாடும் பாடலின் சில வரிகள் இவை.

கயானா..மேற்கிந்திய தீவுநாடுகளில் ஒன்று.ஓரினசேர்க்கையாளரை மற்ற நாடுகள் ஜெயிலில் போடும் என்றால் கயானாவில் கைக்கு கிடைத்தால் அடித்தே கொல்வார்கள்.சில மாதங்களுக்கு முன்பு பார்க்கில் பிடிபட்ட இரு லெஸ்பியன் பெண்களை கயானிய கலாசார காவலர்கள் பலாத்காரம் செய்து அதன்பின் நாயை அடிப்பது போல் அடித்து கொன்று கயானிய கலாசார்த்தை காப்பாற்றினார்கள்.

கயானா ஓரினசேர்க்கையாளர் மேல் நடக்கும் தாக்குதலை நிறுத்த சொல்லி கயானா ஓரினசேர்க்கையாளர் மற்றும் அரவாணிகள் சங்கம் விட்ட வேண்டுகோள் காற்றில் பறக்கும் பஞ்சாய் போனது.இன்று உயிர்பிழைக்க கயானாவை விட்டு ஓரினசேர்க்கையாளர்கள் அருகிலிருக்கும் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் குடிபெயர்கிறார்கள்.கயானாவின் விஞ்ஞானிகளும், படித்தவர்களும் இவர்களில் அடக்கம் என்பதால் கயானிய அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.அதேச்டமயம் "ஓரினசேர்க்கையை குற்றமற்றதாக்க அமெரிக்காவும் மேலைநாடுகளும் தரும் பிரஷருக்கு அடிபணிய போவதில்லை" என கயானிய பாராளுமன்றத்தில் அரசு உறுதிமொழி கொடுத்து கயானிய கலாசாரத்தை காப்பாற்றி உள்ளது.

ஓரினசேர்க்கையாளர் மேல் வெறுப்பை பரப்பும் கயானிய இசைகுழுக்களுக்கு அமெரிக்கா ஐரோப்பாவில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.இதனால் இந்த இசைகுழுக்களில் இருந்து பலர் விலகினாலும் கயானியர்கள் கவலைபடுவதாக தெரியவில்லை.ஓரினசேர்க்கையாளர்கள் மேல் வெறுப்பை பரப்பும் கலாசாரகாவலர் கடமையை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்த மிஸ்டர் ஈவில் மாதிரி நடனகுழுக்களை தடை செய்யாமல் வேடிக்கை பார்க்கும் கயானிய சுற்றுலாதுறை அமைச்சர் இந்திய வம்சாவழியை சேர்ந்த மணிராம் பிரசாத் என்பதுதான் எனக்கு வருத்தமளிக்கும் செய்தி.

No comments: