Friday, January 12, 2007

228. தமிழகத்தை குறிவைக்கும் தீவிரவாதிகள்

திடீரென்று சென்னை போலீஸின் உளவுத் துறையினருக்கு தூக்கமில்லை. சுறுசுறுப்பாய், ரகசியமாய், பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், சமீபத்தில் பெங்களூரிலும் டெல்லியிலும் கைது செய்யப்பட்ட லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகள்.

விசாரணையில் அவர்கள் கூறிய விஜயங்களைப் பார்த்தால் சென்னைவாசிகளுக்கும் தமிழக மக்களுக்கும் தூக்கம் வராது.

‘‘எங்கள் அடுத்த இலக்கு சென்னைதான். அதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து தங்கியிருந்தோம். வெடிகுண்டு வைத்துத் தகர்க்க சென்னையின் முக்கியமான இடங்களைக் கண்காணித்தோம்’’_டெல்லியில் கைது செய்யப்பட்ட சபியுல்லா, அலி அகமது என்ற லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளின் வாக்குமூலம் இது.

இது ஒற்றைச் சம்பவம் அல்ல. சில மாதங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்துக்கு தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் வந்தது. சாதாரண தீவிரவாத இயக்கத்திலிருந்து அல்ல, தீவிரவாதிகளின் தலைமைச் செயலகமான அல்கொய்தாவிடமிருந்து. ஆனால் உடனடியாக இந்தச் செய்தி மறுக்கப்பட்டது. இந்தியாவில் அல்கொய்தா இல்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால், இந்த டிசம்பரில் இன்னொரு திடுக்கிடும் செய்தி. இது நம் உளவுத்துறையிடமிருந்து அல்ல; உலகிலேயே மிகச் சிறந்த உளவுத்துறையான இஸ்ரேலின் மொஸாத்திடமிருந்து. ‘இஸ்ரேல் நாட்டவர் யாரும் இந்தியாவுக்குப் போகவேண்டாம். முக்கியமாய் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக கோவாக் கடற்கரைப் பக்கம் போய்விடாதீர்கள். குறிவைத்து அடிக்க அல் கொய்தா காத்திருக்கிறது’ என்றது அந்தச் செய்தி. ஆகவே, இந்தியாவுக்கு அல்கொய்தா ஆபத்து இருக்கிறது. அதுமட்டுமில்லை, முன்பு தீவிரவாதிகள் என்றால் ஏதோ வடஇந்திய சமாசாரம் என்று நாம் எட்டி நின்று வேடிக்கை பார்ப்போம். நியூஸ் சேனல் மாற்றுவோம். ஆனால் இன்று நம் வீட்டுக் கொல்லைப்புறத்திலேயே கொலைகாரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பகீரென்றுதான் இருக்கிறது.

இதற்கு பிள்ளையார் சுழி போட்ட சம்பவம்தான், 2005 டிசம்பரில் பெங்களூர் விஞ்ஞானிகள் மாநாட்டில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல். அதில் ஒரு விஞ்ஞானி கொல்லப்பட்டார். எம்.டி.ஆரில் டிபன், காபி சாப்பிட்டுவிட்டு ராஜ்குமார் படங்களை அலுப்பில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் பெங்களூர்வாசிகளுக்கு தீவிரவாதம் புதிது. அதிர்ந்து போனார்கள். அவர்கள் அதிர்ந்தது மட்டுமல்ல மொத்த தென்னிந்தியாவுமே அதிர்ந்தது. காரணம், அந்தச் சம்பவத்தில் கைதான தீவிரவாதிகளின் வாக்குமூலம்.

‘‘கர்நாடகாவிலுள்ள அணுசக்தி நிலையத்தைத் தகர்க்க திட்டமிட்டோம். அல்மாட்டி அணையை உடைக்க எண்ணியிருந்தோம். ஷராவதி மின்சக்தி இணைப்புகளைத் துண்டிக்க திட்டமிட்டோம்...’’ இப்படி ஏதோ மளிகைக்கடை லிஸ்ட்போல் தாக்குதல் லிஸ்ட்டை சொல்லச் சொல்ல உளவுத்துறைக்கு அதிர்ச்சி.

இதில் கைதான ராஜி உர் ரஹ்மான் என்ற அப்துல் ரஹ்மான், லஷ்கர் ஈ தொய்பாவின் தென்னிந்திய கொடூரச் செயல்களுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவன். இவன் பதின்மூன்று வருடங்கள் சவுதிஅரேபியாவில் இருந்து லஷ்கர் ஈ தொய்பாவுக்கு நிதி மந்திரியாக செயல்பட்டிருக்கிறான்.

இது என்ன லஷ்கர் ஈ தொய்பா அடிக்கடி வருகிறதே என்று புருவத்தை உயர்த்துபவர்களுக்கு, இது காஷ்மீரைச் சேர்த்த பயங்கரமான தீவிரவாத இயக்கம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத் துறையினரால் சீராட்டி பாராட்டி பணமூட்டி வளர்க்கப்படும் படுபாதக இயக்கம்.

வடஇந்தியா, காஷ்மீர், பெங்களூர் எல்லாம் ஓகே; தமிழ் நாட்டுக்கும் இத்தனை ஆபத்து இருக்கிறதா? இங்கே உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

‘‘முன்பு இருந்த தமிழ்நாடு வேறு. இப்போதுள்ள தமிழ்நாடு வேறு. முன்னேற்றப்பாதையில் படு வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாய் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் ஏராளமாய் பெருகிவிட்டன. இந்த கம்ப்யூட்டர் நிறுவனங்களில் தொண்ணூறு சதவீதம் அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகள் வைத்திருக்கின்றன. இந்த நிறுவனங்களையோ அல்லது சென்னையின் மற்ற இடங்களையோ தாக்குவதன்மூலம் உலகின் கவனத்தைக் கவர முடியும். அதேசமயம் இந்தியாவுக்கு வரும் முதலீடுகளையும் தடுக்க இயலும்.

இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் கால் சென்டர்கள், பி.பி.ஓ.க்களை நம்பி பல அமெரிக்க கம்பெனிகள் இருக்கின்றன. இவற்றை சீர்குலைப்பதன் மூலம் அமெரிக்க கம்பெனிகளை தடுமாறச் செய்ய முடியும். வட இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் இல்லை. சமீபகாலமாக இந்தியாவின் பொருளாதார இதயமாக தென்னிந்தியா மாறி வருகிறது. இந்தப் பகுதிகளைத் தாக்குவதன் மூலம் ஏராளமான நஷ்டத்தை ஏற்படுத்த இயலும். அதனால் நாம் எப்போதும் உஷார் நிலையில் இருப்பது நல்லது.’’ என்று சொல்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

ஆனால் அவர்கள் கூறிய தகவல்களில் நம்மை லேசாக நிம்மதியடைய வைக்கும் செய்தியும் இருக்கிறது.

‘‘வட இந்தியாவில் தீவிரவாதத்தை எளிதில் வளர்த்து விட முடியும். ஏனென்றால் அங்கே மத சகிப்புத் தன்மை கொஞ்சம் குறைவு. அதை வைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆள் பிடித்து விடுவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் இந்தவித இயக்கங்களுக்கு ஆள் பிடிப்பது சிரமமான காரியம். அதுவும் தமிழ்நாட்டில் மிக மிகச் சில பகுதிகளில்தான் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கிச் செல்கிறார்கள். கேரளாவிலும், கர்நாடகாவிலும் காலூன்றிய அளவு தமிழகத்தில் அதிபயங்கர தீவிரவாதிகள் யாரும் ஊடுறுவவில்லை. ஆனால் இதே நிலை நீடிக்கும் என்று சொல்ல இயலாது’’ என்கிறார்கள்அதிகாரிகள்.

இளைஞர்களைத் தீவிரவாதத்துக்குள் இழுக்க இரண்டுவித முறைகளை தீவிரவாத இயக்கங்கள் பயன்படுத்துகின்றன. ஒன்று_மத வெறி. மற்றொன்று_ வேலை வாய்ப்பு. துபாய், சவுதி, குவைத் போன்ற எண்ணெய் வள நாடுகளுக்கு வேலைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி மத்திய கிழக்கு நாடுகளுக்கு இளைஞர்களை அழைத்துச் சென்று, அங்கு மூளைச் சலவை செய்து ஏதாவது ஒரு வகையில் தீவிரவாத இயக்கத்துக்கு உதவ வைத்து விடுகிறார்களாம்.

அதனால் அந்தப் பிரதேசங்களில் வேலைக்குச் செல்வதற்குமுன், யார் மூலம் போகிறோம் என்பதைப் பார்ப்பது நல்லது. இந்த உளவுத்துறை அதிகாரிகளிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்டோம்.

‘‘தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?’’

‘‘கண்டிப்பாய் பாதுகாக்க முடியும். அதற்கு பொதுமக்களும் உதவ வேண்டும். அவர்கள் மதங்களைப் பார்க்காமல் மனித மனங்களைப் பார்த்தால் எந்தவித தீவிரவாதமும் கால் பதிக்க இங்கே இடம் கிடைக்காது. காவல்துறை சார்பில் நாங்களும் மிகவும் விழிப்புடன் இருக்கிறோம். எத்தனையோ ஆபத்துக்களைத் தடுத்திருக்கிறோம். இதையும் தடுப்போம்’’.

அதிகாரிகள் அதிக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். நாமும் நம்புவோம்.

_திருவேங்கிமலை சரவணன்,

படங்கள்: ஆர். சண்முகம். நன்றி: குமுதம் 01-17-2007 Issue

14 comments:

Anonymous said...

//அதற்கு பொதுமக்களும் உதவ வேண்டும். அவர்கள் மதங்களைப் பார்க்காமல் மனித மனங்களைப் பார்த்தால் எந்தவித தீவிரவாதமும் கால் பதிக்க இங்கே இடம் கிடைக்காது.//

உங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்மணத்தில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற ரேஞ்சிற்கு எழுதிக்கொண்டிருக்கும் நேசகுமார்கள், வஜ்ராக்கள், நீலகண்டன்கள், இன்னும் பல "இணையத் தீவிரவாதி"களுக்காகத்தான் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்.

அரவிந்தன் நீலகண்டன் said...

மிகவும் மேலோட்டமான செய்தி இது செல்வன். தமிழ்நாட்டில் பயங்கரவாதம் வேரூன்றி ஆண்டுகள் பத்துக்கும் மேல் ஆகிவிட்டன. அல்-உம்மா, ஜிகாத் பேரவை, முஸ்லீம் டிபென்ஸ் ஃபோர்ஸ் போன்றவை இயங்கி வருகின்றன. இன்றைக்கும் மனித நீதி பாசறை, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் போன்றவை இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஆதரவு இயக்கங்களாக விளங்குகின்றன. அடிப்படைவாத இறையியல், பயங்கரவாத ஆதரவு ஆகியவற்றுக்கு அரசியல் களத்தில் பாதுகாப்பு அளிக்கும் குரல்களாக விளங்குபவை இவை. 'ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஏதோ மதநல்லிணக்க தாயத்து இருப்பதாக' கூறுவது போன்ற பாவ்லா மகா மடத்தனமானது.

உதாரணமாக சில செய்திகளை மட்டும் தருகிறேன். தமிழ்நாடு பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி என்பதனையும் அது வெடிக்க காத்திருக்கும் ஒரு ஜிகாதி டைம்பாம் என்பதனையும் புரிந்து கொள்வீர்கள்:

தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் கறம்பக்குடி மற்றும் ஆவணம் கைகாட்டி கிராமங்களைச் சார்ந்த இரு இந்து இளைஞர்கள் நீலகண்டனும் முருகனும் ஆவணம் அப்துல் அஜீஸ் என்பவர் இல்ல திருமணத்திற்கு சமையல் வேலைக்கு சென்ற போது அங்கே மர்மமான முறையில் மரணமடைந்தனர். இந்த இளைஞர்களின் மரணத்தில் ஜிகாத் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருந்த மக்களை காவல்துறையினர் தடுத்துவிட்டனர். (நக்கீரன் 29-11-2006)

இந்து முன்னணி தலைவர் வெட்டிக்கொலை.
நெல்லை மாவட்டம் தென்காசி மலையான் குளத்தைச் சார்ந்த சொர்ண தேவர் மகன் குமார பாண்டியன். இவர் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக இருந்துவந்தார்.
17-டிசம்பர்-2006 இரவு அவர் வீட்டுப்பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

குமரி மாவட்ட பாஜக தலைவரை கொல்ல முயற்சி. 'தீ வைத்து எரிப்போம்' என மிரட்டல் [மாலை மலர்: 18-12-2006 : நாகர்கோவில் பதிப்பு]

மேலைப்பாளயத்தைச் சார்ந்த அல் உம்மா பயங்கரவாதியை பிடிக்கச்சென்ற ஏட்டு ஏசுதாசன் தாக்கப்பட்டார். கருங்குளம் துரைப்பாண்டி என்ற இந்துவை தாக்கி கொள்ளை
அடித்த கும்பலை சேர்ந்தவன் காடைஹாஜா. இவன் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவன், இவன் மீது கொலை அடிதடி போன்ற பலவழக்குகள் உள்ளன. இவன் இருப்பது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற ஏட்டினை அவன் உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டான். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. (தினகரன் நெல்லை பதிப்பு ஜூலை 20 2006)

மதுரை சிறையில் இந்து கைதியை இஸ்லாமிய பயங்கரவாத கைதிகள் தாக்குதல் (தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் 26-11-2006)

இது குறித்த பேப்பர் கிளிப்பிங்களை http://arvindneela.blogspot.com/2006_12_01_arvindneela_archive.html காணுங்கள். ஒவ்வொரு வருடமும் ஜிகாதி பயங்கரவாதிகளால் இந்துக்கள் தமிழ்நாட்டில் கொல்லப்படுகின்றனர், நாம் கவனிப்பதில்லை. பிறகு ஒரு கட்டத்தில் ஒரு கோவையோ மும்பையோ வாரணாசியோ நடந்த பிறகு வெள்ளை அடிக்கிறோம்.

Unknown said...

அனானிமஸ் நண்பரே

எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை தீவிரவாதிகள் என ஒட்டுமொத்தமாக முத்திரை குத்துவது தவறு.இந்தியாவை எதிர்கொள்ளும் தீவிரவாத பேயை அடித்து விரட்ட மும்மதத்தாரும் கைகோர்த்து செயல்படுவது அவசியம்.தீவிரவாதிகளுக்கு மதம் இல்லை.வன்முறை தான் அவர்கள் மதம்

நன்றி
செல்வன்

மாசிலா said...

மக்களிடம் அளவுக்கு அதிகமக பீதியை கிளப்பிவிடும் செய்தி, பதிவு!
தமிழக இசுலாமிய நண்பர்கள்மீது ஏற்கனவே பயங்கர காழ்ப்புணர்ச்சியின்பேரில் அடிப்படை மதவாத வெறியில் நெருப்புகளை கக்கிகொண்டிருக்கும் சில தமிழ்மண பதிப்பாளர்களுக்கு எண்ணையை வாத்திருக்கிறீர்கள்! முதலில் இந்த செய்தியின் அஸ்திவாரம் சரியா என கவனிக்க வேண்டும். அமெரிக்கர்கள் C.I.A பணம் கொடுத்து பரவவிட்ட செய்தியா? இந்து அடிப்படைமதவாத வெறியர்கள் இயக்கங்கள் பின்னிருந்து இயக்கும் செய்தியா? ஒரு வேலை அல்-கைதாவே கிளப்பிவிட்ட செய்தியா? இஸ்ரேலின் மொசாத்தின் புரளியா? ஒரு வெலை சீனாவின் உளவுப்படையின் புரளியா? அனைத்துலக ஒட்டர்களின் சொர்க்கபூமி இந்தியா என்பது தெரியுமா? எது எப்படியோ, அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நிரவாகங்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக சீரிய உழைப்புடன் சேவைகளை தொடர்ந்து செய்துவருகின்றன. பொறுப்புகளை அவர்களிடம் விட்டுவிட்டு உள்நாட்டில் அனைத்து சமூகத்தினரிடமும் சுமுகமாக தொடர்ந்து பழகி உறவுகளை மேலும் வலுப்படுத்திகொள்வோம். பிரிவினைவாதம் தேவையில்லை. வீண் சந்தேகம் தேவையில்லை. இதுபோன்ற வேலைகளில்தான் நெருக்கமாக இருக்க வேண்டும். ஒற்றுமையே வெற்றிக்கு வழி!

கால்கரி சிவா said...

இதில் இந்துத்வாதிகளின் சதி இருக்கிறாதா என பார்க்கவேண்டும். போலீஸ்காரர்கள் அனைவரும் இந்துக்கள் இதுவே ஒரு சதி. ஒரு இந்து போலீஸ் முஸ்லிமை எப்படி பார்ப்பார் என்பது எங்களுக்கு தெரியாதா?

குமுதம் ஒரு நேர்மையான பத்திரிக்கையா என்பதை கேள்வி கேட்க வேண்டும். மேலும் காலில் கரியையும் மனம் முழுவதும் இருளையும் வைத்துக் கொண்டுள்ள சுடுகாட்டு சாமி பெயரைக்கொண்டவரின் சதியா என்ற ரீதியில் போலீஸ் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் மிக நல்ல நிலையில் வாழும் முஸ்லிம்கள் மேல் பொறாமை கொண்டவர்களின் வயிற்றெரிச்சலில் இந்த மாதிரி பழி சுமத்துவார்களா என்ற ரீதியில் போலீஸ்சார் விசாரணை நடத்த வேண்டும்.

கடைசியாக முஸ்லிமாக இருந்து கொண்டு இந்த காரியங்களில் ஈடுபடமட்டார்கள் என்பதை 1400 ஆண்டுக்களுக்கு முன்பே அத்தியாயம் 34598 இல் 1578 வசனத்தில் சொன்னது இங்கே நினைவு கொள்ளவேண்டியதின் அவசியத்தை உணரவேண்டும். இதே விஷயத்தை காபீர்களின் மலபுராணம் புத்தகம் 5, சாப்டர் 7 வசனம் 13 இல் கூறியுள்ளதிலிருந்து வானத்தில் இருந்து இறங்கியது கடவுளின் நேரடி வசனமென்று நமக்கு புரியும் இந்த கொலைக்கார மோடிகளுக்கு எப்படி புரியும் .

இறைவனே மிக அறிந்தவன்

சாரி செல்வன் இரவு 11 மணி வார இறுதியில் 3 விஸ்கிகளுக்கு பின்னால் எழுதியது

Anonymous said...

ஆகவே அப்சலுக்கு விடுதலை தந்து அவருக்கும் அவருக்காக போராடிய நல்லடியார் வகைதகையறாக்கலுக்கும் பாரதரத்னா விருது வழங்க நாமெல்லாம் போராடவேணும் .

நம்ம எல்லாம் சேப் , நம்ம மேல எப்படியும் குண்டு போடமுடியாது , கேனப்பசங்க ரோட்டுல போறங்க , ரயில்ல போறவங்க இவங்கதான சாவாங்க ? போகட்டும் விடுங்க .

மதநல்லிணக்கம் வாள்க , பாப்பனியம் ஒலிக .

Anonymous said...

"சாரி செல்வன் இரவு 11 மணி வார இறுதியில் 3 விஸ்கிகளுக்கு பின்னால் எழுதியது"

அளவுக்கு மீறி போதையப் போட்டா
வாந்தி வரும். வாந்தி எடுக்கவேண்டிய
இடம் கக்கூஸ்.

வலைப்பதிவில் வாந்திஎடுத்த கால்கரியை வலைப்பதிவர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

கால்கரி சிவா said...

அருள், கண்டிப்புகளுக்கு நன்றி. பாராட்டுகளை விட கண்டிப்புகள் என்னை அதிகம் எழுத தூண்டும்

மூணு விஸ்கிகளுக்கு வாந்தி எடுக்கும் ஆள் நான் இல்லை. மேலும் சிங்கிள் மால்ட்/ புளூ லேபிள்கள் ஒன்றும் திராவிடஸ்தானில் கிடைக்கும் கலப்பட சரக்குகள் அல்ல வாந்தி வருவதற்கு.

நான் எழுதியது போல் வரப்போகும் பின்னூடங்கள் தான் ரியல் வாந்தி அதை உங்கள் மேன்மை தாங்கிய வலைப்பதிவாளர்கள் வந்து துடைத்து விடுவார்களோ?

Anonymous said...

//எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை தீவிரவாதிகள் என ஒட்டுமொத்தமாக முத்திரை குத்துவது தவறு.இந்தியாவை எதிர்கொள்ளும் தீவிரவாத பேயை அடித்து விரட்ட மும்மதத்தாரும் கைகோர்த்து செயல்படுவது அவசியம்.தீவிரவாதிகளுக்கு மதம் இல்லை.வன்முறை தான் அவர்கள் மதம்//

வழி மொழிகிறேன் செல்வன்.

பார்ப்பனர் என்றாலே..அதிகாரத்துக்காக எதையும் செய்யும் இனம் என்ற அளவில் சராமரியாக குற்றஞ்சாட்டுவதும்... முஸ்லிம் என்றாலே .. குண்டு வைப்பவன் என்று பொத்தாம் பொதுவாக குற்றஞ்சாட்டுவதும் வெறுப்பைத்தான் வளர்த்தெடுக்கும்.

எதிரி நாடு வன்முறையை, குழப்பத்தை கட்டவிழ்த்து விட நினைப்பது, நாடுகளுக்கிடையேயான அரசியலில் புதிதில்லை. நாம் தான் ஒற்றுமையாக இருந்து முறியடிக்க வேண்டும். இது தான் சாக்கு என்று நம் சிறுபான்மை சகோதரனை மேலும் குற்றஞ்சுமத்தி வெறுப்பேற்றாமல், அவனையும் அரவணைத்து சென்றால் எளிதாக எதிரியை முறியடிக்கலாம்.

தன்னுடைய மதம் இப்படியெல்லாம் குறையுடையதாகி விட்டதே.. என்று தாழ்வு மனப்பான்மையில் புழுங்குபவன் தான் இன்னொரு மதத்தைப் பற்றி தாறுமாறாக எழுதி திருப்திப்பட்டுக்கொள்கிறான். ((பொதுவாகத்தான் சொல்கிறேன்)).

நெட்டில் காணக்கிடைக்கிற அளவுக்கதிகமான சுதந்திரம், பொறுப்புணர்ச்சி என்பதையே இல்லாமலாக்கிவிட, எதிரியின் கண்குத்த துடிக்கிறவர்கள், தன் விரலை ஒடித்துக் கொடுத்தாலும் பரவாயில்லை என்று நடந்துக் கொள்கிறார்கள். இவர்களை ஒதுக்கிவிட்டாலே, பாதி பிரச்சினையை வென்று விடலாம்.

Anonymous said...

ஹிந்துஸ்தானில் ஜனித்த சிவா,
உங்களூக்கு எதுக்கு நீஸ பாசையான
தமிழ்.

பேசாமல் தேவபாடையான சமஸ்கிருதத்தில் பேசவும் எழுதவும்
வேண்டியதுதானே.

ஆமா,இதுக்கு முன்னாடி சமஸ்கிருத
எழுத்துக்களை பார்த்திருக்கிறீர்களா?

Anonymous said...

குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு.....ஹி ஹி ஹி....

கால்கரி சிவா said...

//ஆமா,இதுக்கு முன்னாடி சமஸ்கிருத
எழுத்துக்களை பார்த்திருக்கிறீர்களா?
//

மிஸ்டர்/மிஸ்/மிஸ்ஸர்ஸ் தமிழ்,

இந்த பதிவின் நோக்கத்தை இதைவிட அதிகமாக திசை திருப்ப விரும்பவில்லை.
என் சமஸ்கிருத புலமை என்ன என்பதை இங்கே நான் நீருபிக்க தேவையில்லை.

தமிழ் நீச பாஷை என சொல்லும் மூடர்களிடன் நான் தமிழில் பேச தயங்கியதில்லை.

பதிவைப் பற்றி பேசலாமா?

நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா படித்தீர்களா?

லஷ்கர் -இ-தொய்பா பற்றிய செய்திகள் ஐந்து. அதாவது அவர்களால் நாட்டுக்கு எற்படும் இழப்பு மிக அதிகம்.

இந்த இயக்கத்தின் தீவிரவாத செயல்களை தடுப்பது இந்தியாவின் முதல் கடமை. அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரயிருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்

சில நூறு அப்பாவிகளை கொன்றுவிட்ட் ஒரு தீவிரவாதி மசூதிக்கு சென்று ஒரு நாளைக்கு 5 முறை தொழுதாலும் அவன் குற்றவாளிதான். அவனின் இறைவன் அவனை மன்னித்தாலும் நம் இந்திய நாட்டின் சட்டபடி அவன் குற்றவாளியே.

இது இந்துகளுக்கும் பொருந்தும். குற்றவாளிகளை தண்டனையிலிருந்து விடுதலை செய் என மதவாதிகள் போராட்டம் செய்வதும் குற்றமே அத்தகைய மதவாதிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். மதவாதிகள் என்றால் எல்லா மதவாதிகளும் இந்துக்களையும் சேர்த்துதான்

மதத்தின் பேரால் கொலைகளை செய்பவர்களுக்கு நம் நாட்டில் இடமில்லை

கால்கரி சிவா said...

முந்தைய பின்னூட்டம் என்னுடையதில்லை.

ஆனால் என்னால் அழிக்க முடிந்தது. ஏதோ சதி நடக்கிறது

Unknown said...

போலிபின்னூட்டமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் சிவா.அதை சுத்தமாக அழித்து விட்டேன்.பிளாக்கர் எண் கூட மாறவில்லை. நீங்கள் சொன்னமாதிரி ஏதோ ஹாக்கிங் முயற்சியாக இருக்கலாம். வரும் காலங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.