Thursday, June 08, 2006

103.இட்லி காப்பி வடை சாம்பார்

இந்த இழை முழுக்க சாப்பாட்டு விஷயம் தான். என் மனம் கவர்ந்த பல ஓட்டல்களை பற்றி எழுதப்போகிறேன். அன்னபூர்ணா கவுரிசங்கர்,கோவை: அன்னபூர்ணாவில் புகழ் பெற்ற விஷயங்கள் இரண்டு.காப்பி மற்றும் சாம்பார் இட்லி.அன்னபூரணா அதிபர் முதலில் கோவை சென்ட்ரல் திரையரங்கில் கேன்டீன் வைத்து நடத்திகொண்டிருந்தார்.கள்ளிசொட்டு போல் அவர் போட்ட காப்பியை குடிப்பதற்காக டிக்கட் வாங்கி வந்து காப்பி மட்டும் குடித்துவிட்டு போனவர்கள் உண்டு. அன்னபூரணா சாம்பார் இட்லிக்கு நான் என்றும் அடிமை.அங்கு சாம்பார் என்ற குளத்தில் இட்லி நீச்சல் அடிக்கும்.வாயில் வைத்தால் அமுதம் தான்.விலையும் அதிகமில்லை,ஜென்டில்மன் 7 ரூபாய் தான். மசால்தோசை தமிழ்நாடெங்கும் பல இடங்களில் ப்பிடிருக்கிறேன்.சரவனபவன் தான் ஓரளவு அன்னபூர்ணா அளவு நல்ல மசால் தோசை தரும்.வேறெங்கும் அன்னபூரணா சுவை வந்ததில்லை. காப்பி,இட்லி ரசிகர்கள் அன்னபூர்ணாவில் ஒருமுறை சாப்பிட்டால் அடிமை ஆய்விடுவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ? கோவை அன்னலட்சுமி அன்னலட்சுமி ஓட்டல் கோவையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ளது.கவுண்டம்பாலயத்திலும் உள்ளது.இது ஒரு மடத்தால் பொதுசேவைக்கு நடத்தப்படும் உணவகமாகும். இங்கு நான் ஒரே முறை தான் போயிருக்கிறேன்.இந்த உனவகம் பற்றி பலவித வதந்திகள் உலா வரும்.இங்கு சமைப்பவர் அனைவரும் கோடீச்வரர்கள்,அந்த சாமியாரின் பக்தர்கள் தான் சமைக்கிறார்கள்,வரும் லாபம் முழுக்க பொதுசேவைக்கு போகிறது என்பார் சிலர். நான் வேலை செய்த அலுவலகத்தில் சிலரோடு அங்கு போன போது எங்களுக்கு அங்கு உணவு பரிமாறியது "அம்மா"வை மிஞ்சும் அளவு நகை அணிந்த ஒரு நடுத்தர வயது மாது.பார்த்தால் ராஜபரம்பரை என்று சொல்லும் அளவு கம்பீரமாக இருந்தார்.அவர் அணிந்திருந்த நகை உண்மையான வைரம் மற்றும் தங்கம் என்று சொன்னார்கள். உணவு அற்புதம்.உனவருந்த வேலைப்படான கலைநயம் மிக்க தட்டு.மிக அற்புதமான தரம்.ஆனால் ஆனைவிலை குதிரை விலை. விலை காரணமாக இரண்டாம் தரம் அங்கு போகவில்லை.ஆனால் மேட்டுப்பாளயம் சாலையிலுள்ள இன்னொரு அன்னலட்சுமியில் சாப்பிட்டு விட்டு நமக்கு எவ்வலவு தொகை தரவேண்டுமென்று தோன்றுகிறதோ அவ்வளவு தரலாம்.மூக்கு பிடிக்க சாப்பிட்டுவிட்டு 2 ரூபாய் கூட தரலாம். இதை கேள்விப்பட்டபிறகு அப்படி ஒரு அதிசயமான ஓட்டலுக்கு போக ஆசை வந்து வீட்டது.ஆனால் என் நண்பர்கள் என்னிடம் அங்கு போகிறவர்கள் பலர் சாப்பிட்டுவிட்டு 2000 அல்லது 10000 என்று கொடுக்கிறார்கள் என்றார்கள்.அதன்பிறகு அங்கு போகும் ஆசையே போய்விட்டது. RK பானிபூரி ஸ்டால. கிராஸ்கட் சாலை 9ம் நம்பர் ரோட்டில் உள்ளது.இதன் உரிமையாளர் ராஜஸ்தானை சேர்ந்தவர்.கோவையில் முதல் முதலில் பானிபூரி அறிமுகப்படுத்தியது இவர் தான் என்பார்கள். இவர் கடையில் ஒரு நாளைக்கு 1000 பானிபூரி சர்வசாதரணமாக ஓடும்.பானிபூரி,கட்லட்,பேல்பூரி,டைபப்படிசாட் போன்றவை இங்கு கிடைக்கும்.சுவை நன்றாக இருக்கும்.அளவும் அதிகம்.விலை 11 ரூபாய் தான். இவரை பார்த்து அந்த தெருவில் பானிபூரி கடை போட்டவர்கள் ஏராளம்.ஆனால் கூட்டம் போவது இவர் கடைக்குத்தான்.அதிக அளவில் இனிப்பு கலக்கிறார்,அதனால் தான் சுவை என்று பக்கத்து கடைக்காரர்கள் கோள் மூட்டுவார்கள்.ஆனால் அது உண்மையில்லை. ஆனால் மற்ற பானிபூரி கடைகளை விட இவர் நல்ல சுவையாய் கொடுப்பது உண்மைதான். டெக்ஸாஸ் எனது கனவு தேசம்.வீரத்துக்கு புகழ் பெற்ற மானிலம்.அங்கு காலடி எடுத்து வைத்ததும் நான் கேள்விபட்டதெல்லாம் உண்மை என புரிந்தது. ஆஜானுபாகுவாய் டெக்ஸாஸ் மக்கள்.கவ்பாய் தொப்பி அணிந்துகொண்டு வாழ்க்கையை இன்பமாய் அனுபவிக்கிறார்கள்.சங்கீதமும்,காதலும் வீரமுமே அவர்கள் வாழ்க்கை.ஆண்கள் ஆஜானுபாகர்களாய் இருக்கிறார்கள்.அமெரிக்கன் என்பதில் பெருமை கொள்கிறார்கள்.டெக்ஸாஸை சேர்ந்தவன் என்று பெருமை கொள்கிறார்கள்.டெக்ஸாஸின் பெருமை பேசும் ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டிகொள்கிறார்கள்.சிவாஜி படத்தில் வருவது போல் நீளமான வேட்டை துப்பாக்கிகளை கடைகளில் சர்வசாதரணமாக விற்கிறார்கள்.அற்புதமான மார்கரிட்டா எனும் மதுவை அருந்துகிறார்கள்,.ஏசுபிரான் மீது எல்லை கடந்த காதல் கொண்டுள்ளார்கள்.பக்தி,காதல்,வீரம் இவை மூன்றும் சேர்ந்த அற்புத மானிலம் தான் டெக்ஸாஸ். டெக்ஸாஸில் நான் பிரமித்து போனேன் என்பது மிகையல்ல.சான் அன்டோனியோவில் ஹில்டன் ஓட்டலில் தங்கினோம்.ஆரியக்கூத்தாடி ஓரளவு டிஸ்கவுண்ட் வாங்கினோம்.ஆனால் அங்கு எந்த உணவையும் சாப்பிட முடியவில்லை.மருந்துக்கு கூட ஒரு சைவ உணவு இல்லை. சான் அன்டோனியோ என்றதும் அனைவரும் ரிவர்சைட் போங்கள் என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள்.அப்படி என்ன அங்கு இருக்கிறது என்று பார்க்க அனைவரும் கிளம்பினோம்.ஒரு அழகான ஆறு.அமைதியாய் கான்க்ரீட் கரைகளுக்கு நடுவே தூய்மையாய் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.அதன் இரு புறங்களிலும் மெக்ஸிகன் ரெஸ்டாரண்ட்கள்.உணவு பரிமாற அழகிய மயில்கள்.ஆற்றின் அழகை ரசித்துகொண்டே சாப்பிடலாம். ஒவ்வொரு உணவகமாய் சைவ உணவு இருக்கிறதா என்று கேட்டுகொண்டே போனோம்.என் நண்பர்களுக்கு எப்போதும் நான் தரும் சிரமம் இதுதான்.கடைசியில் ஒரு ரெஸ்டாரண்டில் எனக்காக சைவ பரிட்டோ செய்து தர ஒத்துகொண்டார்கள். அனைவரும் நதிக்கரையில் ஒரு இடத்தை தேர்வு செய்து அமர்ந்தோம்."சிங்கார வேலன்" கமல் போல் உடல் முழுவதும் இசைகருவி வைத்திருந்த ஒரு ஸ்பானியர் வந்து இசைகருவி வாசிக்கட்டுமா என கேட்டார்.45 நிமிடம் நாங்கள் சாப்பிட்ட நேரம் முழுவதும் இருந்து பாடி கணிசமான பரிசுலும் பெற்றுகொண்டு தான் சென்றார். மார்கரிட்டா எனும் ஸ்பானிய ஒயினை கொடுத்தார்கள்.நண்பர்கள் ஆகா ஓகோ என்றார்கள்.எனக்கு கோக்கும் பரிட்டோவுமே துணை.ஸ்டப்ப்ட் பொட்டேட்டொ என்று ஒன்றை கொண்டு வந்து கொடுத்தார்கள்.சகிக்கவில்லை.கடைசியில் கொண்டுவந்த பில்லும் சகிக்கவில்லை.போதாகுறைக்கு பெண் வெயிட்டர்கள் என்றால் டிப்ஸ் நிறைய கொடுத்தாகவேண்டும் என்ற மூட நம்பிக்கையும் எங்கள் குழுவில் நிலவுகிறது. ரிவர்ஸைடில் சாப்பிடுவது இனிய அனுபவம்.ஆனால் அங்கு சைவர்கள் போவது வீண் வேலை

42 comments:

முகமூடி said...

// மார்கரிட்டா எனும் ஸ்பானிய ஒயினை கொடுத்தார்கள்.// மார்கரீட்டாவை ஸ்பானிய ஒயின் என்று சொல்லலாமா?

மெக்ஸிகோ தேசத்து டெக்கீலா பிராந்தியத்தில் கிடைக்கும் blue agave வகை செடியிலிருந்து காய்ச்சி வடிக்கப்படுவது டெக்கீலா எனும் சரக்கு (ABV 38%). கரீபிய தீவுகளில் கிடைக்கும் ஆரஞ்சுகளிலிருந்து தயாரிக்கப்படுவது நிறமற்ற ஆனால் ஆரஞ்சு வாசனை கொண்ட பட்டையான ட்ரிபிள் செக் (ABV 30%). எலுமிச்சையிலிருந்து தயாரிக்கப்படுவது எலுமிச்சை சாறு (ABV 0%) இந்த மூன்றையும் அவரவர் வசதிக்கேற்ற அளவையில் கலந்து தயாரிப்பது மார்க்கரீட்டா எனப்படும்.
அல்லது கடையில் கிடைக்கும் மார்க்கரீட்டா மிக்ஸ் எனப்படும் விஷயத்தை டெக்கீலாவுடன் கலந்து நமக்கு நாமே திட்டத்திலும் மார்க்கரீட்டா செய்து கொள்ளலாம்.
மார்கரீட்டா என்பது நண்பர்களுடன் வெளியே செல்லும்போது, வீட்டில் பார்ட்டி கூட்டம் போன்ற சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். மற்ற நேரங்களில் shot glass எனப்படும் குடுவையின் விளிம்பில் எலுமிச்சையை ஒரு இழுப்பு இழுத்து அந்த ஈரத்தில் லேசாக உப்பு தடவி குடுவைக்குள் டெக்கீலாவை ஊற்றி, கலக்க வேண்டாம் அப்படியே அடிக்கலாம் என்று ஒரே மடக்கில் அடிப்பதுதான் நல்ல "குடி"மகனுக்கு அழகு என்கிறார் வள்ளுவப்பெருந்தகை...

*

// போதாகுறைக்கு பெண் வெயிட்டர்கள் என்றால் டிப்ஸ் நிறைய கொடுத்தாகவேண்டும் என்ற மூட நம்பிக்கையும் எங்கள் குழுவில் நிலவுகிறது //
அதற்கு பெயர் மூட நம்பிக்கை அல்ல... ஜொள்ளு நம்பிக்கை... (பொதுவான டிப்ஸ் கணக்கு ஆண் பெண் பேதமில்லாமல், சர்வீஸ் நன்றாக இருந்தால் 15%)

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

பிளாக்கர் கடவுள் பிணக்கு பண்ணுகிறார் :-))

சரவண பவனுக்கு ஒரு பட்ட பெயர் இங்கே உண்டு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் இடம் என்று, இட்லி ,தோசை எல்லாம் அநியாத்திற்கு சின்னதாக இருக்கும் டயட் போல ,கொடுக்கும் காசுக்கு வயிறு நிறையாது சுவைக்காக தான் சாப்பிடலாம்.கோவைப்பக்க்ம் வந்த போது ஆன்னபூரனாவில் ஒரு முறை சாப்பிட்டதாக நினைவு நன்றாக தான் இருந்தது!

இந்த கை ஏந்தி பவன்களை பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் சுத்தம் வீசம் என்ன விலை என்று கேட்டாலும் சுவையாகவும், பசி தீர்க்கவும் அவையே உகந்தது.பேச்சிலர்களின் பேவரைட் கை ஏந்தி பவன்களே!

Anonymous said...

வணக்கம் செல்வன்!

பிளாக்கர் கடவுள் பிணக்கு பண்ணுகிறார் :-))

சரவண பவனுக்கு ஒரு பட்ட பெயர் இங்கே உண்டு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் இடம் என்று, இட்லி ,தோசை எல்லாம் அநியாத்திற்க

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

பிளாக்கர் கடவுள் பிணக்கு பண்ணுகிறார் :-))

சரவண பவனுக்கு ஒரு பட்ட பெயர் இங்கே உண்டு சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் இடம் என்று, இட்லி ,தோசை எல்லாம் அநியாத்திற்கு சின்னதாக இருக்கும் டயட் போல ,கொடுக்கும் காசுக்கு வயிறு நிறையாது சுவைக்காக தான் சாப்பிடலாம்.கோவைப்பக்க்ம் வந்த போது ஆன்னபூரனாவில் ஒரு முறை சாப்பிட்டதாக நினைவு நன்றாக தான் இருந்தது!

இந்த கை ஏந்தி பவன்களை பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம் சுத்தம் வீசம் என்ன விலை என்று கேட்டாலும் சுவையாகவும், பசி தீர்க்கவும் அவையே உகந்தது.பேச்சிலர்களின் பேவரைட் கை ஏந்தி பவன்களே!

துளசி கோபால் said...

நம்ம சம்பந்தப்பட்ட பதிவாச்சேன்னு வந்தேன்:-)))))

இலவசக்கொத்தனார் said...

அன்னலட்சுமி ரொம்ப ரிச். வவ்வால் சொன்னா மாதிரி கையேந்தி பவன்களை மறக்க முடியாது. அதுவும் அங்க மஷ்ரூம்ன்னு ஒன்னு குடுப்பாங்க. அது எதுல செய்வாங்களோ தெரியாது. ஆனா நல்ல டேஸ்டா இருக்கும்.

அப்புறம் ஆச்சி கடை, அண்ணாச்சி கடை என்ற பெயரில் பகுதிக்கு ஒண்ணாவது இருக்கும். ரொம்ப சூப்பரா இருக்கும். டாடாபாத், ராம்நகர், சாய்பாபா காலனி, ஆர் எஸ் புரம், காந்திபுரம் என கோவையின் எல்லா இடங்களுக்கும் போய் மேய்ந்ததெல்லாம் ஒரு காலம்.

பழசையெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்கப்பூ.

Anonymous said...

"அன்னலட்சுமியில் நானும் சாப்பிட்டிருக்கேன்.. டேஸ்ட் சூப்பர். இதே கதையும் கேட்டிருக்கேன். ஆனா ரொம்ப காஸ்ட்லி... அன்ன பூர்ண ட்ரை பண்ணணும்..."

Unknown said...

பிளாக்கர் சொதப்பல் காரனமாக ஏதேனும் பின்னூட்டம் விட்டு போயிருந்தால் மன்னிக்கவும்.

முதலில் தலை முகமூடி:

//மார்கரீட்டாவை ஸ்பானிய ஒயின் என்று சொல்லலாமா? //

அது மெக்ஸிகன் தான்.ஆனா மெக்சிகனை ஸ்பானிஷ் என்று சொல்லியே பழகிவிட்டது.டெக்ஸாசுக்கு கீழே ஸ்பெயின் இருப்பது போலவே தான் தோன்றுகிறது:-)))

எப்படிண்ணே இப்படி எல்லா சரக்கு செய்முறையும் அறிந்து வைத்திருக்கிறீர்கள்?பீர் பற்றி முன்பு எழுதியிருந்தீர்கள்.

//அதற்கு பெயர் மூட நம்பிக்கை அல்ல... ஜொள்ளு நம்பிக்கை...பொதுவான டிப்ஸ் கணக்கு ஆண் பெண் பேதமில்லாமல், சர்வீஸ் நன்றாக இருந்தால் 15% //

ஹி..ஹீ...

Unknown said...

அஷ்லின்

கரப்பான்ன்பூச்சியில் புரோட்டீன் அதிகம்.மேலும் நீங்கள் வெஜெடேரியன் சாப்பிட போய் நான் வெஜிடேரியன் கொடுத்திருக்கிறான்.நியாயத்துக்கு எக்ஸ்ட்ராவாக காசு கொடுத்திருக்க வேண்டும்

Unknown said...

சரவணபவனில் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன் வவ்வால்.நீங்கள் சொன்னமாதிரி அளவு குறைவு,விலை சிறிது அதிகம்.கைஏந்தி பவன் பற்றி எழுதியுள்ளேன்( RK பானிபூரி ஸ்டால்)சென்னையில் எந்த கையேந்தி பவனிலும் சாப்பிட்டதில்லை.கோவையில் புகுந்து வெட்டியுள்ளேன்

Unknown said...

துளசி அக்கா
வாங்க..வாங்க...காப்பி சாப்பிடறீங்களா,,டீ சாப்பிடறீங்களா:-)))

(டிப்சை மறந்துடாதீங்க...)

Unknown said...

கொத்தனார் நீங்களும் கோவை வந்து கலக்கீருக்கிங்களா?

பிரைட் மச்ரூம் நல்லா இருக்கும்(வருத்த காளான்..எப்படி தமிழாக்கம்?:-))ஆனா ஆயில் அதிகம்,பழைய எண்ணை ஊத்தி பொறிச்சும் பல இடங்களில் தருவான்.கையேந்தி பவனில் அதுதான் பிரச்சனை

Unknown said...

அன்னபூர்ணா நல்லாருக்கும் பொன்ஸ்.மத்யதர குடும்பங்களுக்கு கோவையில் ஓடல்னாலே அன்னபூர்ணான்னு தான் சொல்லுவாங்க.இப்ப ஆர்யாஸ் வந்து ஒரு கலக்கு கலக்கிகிட்டிருக்கு

Sivabalan said...

செல்வன்

RK பானிபூரி ஸ்டால பற்றி எழுதி பழைய நியாபகத்தை தூண்டிவிட்டீர்கள். உண்மையாகவே அருமையாக இருக்கும்.

ஆனால் R.S.புரம் பழமுதிர்சோலையை விட்டுவிட்டீர்கள் செல்வன்.


மிக்க நன்றி.

Anonymous said...

//RK பானிபூரி ஸ்டால.
கிராஸ்கட் சாலை 9ம் நம்பர் ரோட்டில் உள்ளது.//

பழைய நினைவுகள்.
நான் 8ம் நம்பர் ரோட்டில் உள்ள மேன்ஷனில் நான்கு வருடம் இருந்தேன். அந்தப் பகுதியைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக நூறு உணவு விடுதிகளாவது இருக்கும். பகுதி நேர வகுப்பு சில சமயங்கள் சீக்கிரம் முடிந்துவிட்டால், கூடப்படிக்கும் நண்பர்களோடு ஏதாவது ஒரு திரைப்படம் அல்லது சாப்பாடு என்று என் வாழ்க்கையின் மிகவும் சந்தோசமான காலங்கள்.

சாய்பாபா காலனி அன்னப்பூரணாவில் சிஸ்ஸிலர்.
இரவில் அன்பு மெஸ் இட்லி.
காலையில் 5ம் கிராஸ்க்குப் பக்கத்தில் உள்ள கடையில், மலையாளிகளுடையது, பெயர். நினைவில்லை, இட்லி மிளகாய்ப்பொடி, பூரி.
7ம் கிராஸ் இயற்கை மருத்துவமனையில் அருகம்புல் சாறு :-P
அரசினர் பெண்கள் பாலிடெக்னிக் எதிரில் (ஏதோ ?)ரொட்டி,
8ம் கிராஸ்ஸிலேயே ஆச்சி (வருமான வரி கட்டுபவர்) தள்ளுவண்டியில் வைத்து விற்கும் வாழைப்பழம்.
உடனே ஞாபகத்தில் வருவது இவ்வளவுதான். இந்த மாதம் ஊருக்குப்போகும் போது குறிப்பு எடுத்துக்கொண்டு வரவேண்டும்.

அன்புடன்
குலவுசனப்பிரியன்

ilavanji said...

செல்வன்$, (அதென்னப்பா $ ? )

போன பதிவை படித்து மண்டை காய்ந்துபோயிருந்த எனக்கு இந்த பதிவு ஒரு அருசுவை விருந்து (குமுதம் வாசகர் கடிதம் மாதிரி இருக்கா?! :) )

RK பானிபூரி ஸ்டால நாங்க சேட்டுகடைன்னு சொல்லுவோம். கூட்டம் அம்மும்! காந்திபுரம் போனா இங்க போயே ஆகனும்க்கறது எழுதப்படாத விதி! அழுக்கு ஸ்பூனா? அதையெல்லாம் யாருங்க பார்க்கறாங்க?

மதுரைக்கு ரோட்டுக்கடைன்னா கோவைக்கு மெஸ்ஸுங்க. வீட்டின் முன்பகுதியில் 4 டேபிளை போட்டு நடத்தப்படும் இவைகளில் மாசம் 500 ரூவா இருந்தா வீட்டை அருமையான சாப்பாட்டுல வாழ்க்கையை ஓட்டலாம். இப்போ மெஸ் எல்லாமே அசூர வளர்ச்சில ஓட்டல் ரேஞ்சுக்கு போயிருச்சு.

Ashlyn,

அம்மா மெஸ்ஸு அனாதைக நடத்தறதா? நீங்க வேற! இப்போ அது அண்ணந்தம்பி சண்டைல ரெண்டு கடையாகி முட்டிக்கிட்டு நிக்கிது. இன்னொரு கடை பேரு அன்னை மெஸ்ஸுன்னு நினைக்கறேன். பூண்டு தோசை, ராகி தோசைன்னு 40 வெரைட்டி வைச்சிருப்பாங்க.

ம்ம்ம்.. கெளப்பி விட்டுட்டீங்க! சீக்கிரம் கோவைக்கு டிக்கெட் போடனும்! :)

Unknown said...

இளவஞ்சி

RK பானிபூரி இன்டர்னேஷனல் லெவல்ல பிரபலம் போல.ஆமாங்க.ஸ்பூன் சுத்தம் பாத்தா வேலை ஆகுமா?சாயந்திரம் அஞ்சு மணிக்கு கடைதிறந்தது முதல் நைட் 11 மணிவரை கூட்டமோ கூட்டம்.நேருஸ்டேயட்த்தில் எல்லாம் அதே மாதிரி செஞ்சு பாத்தாங்க.பெருசா பாப்புலர் ஆகலை.க்ரிஷ்ணா ஸ்வீட்ஸ்ல கூட பானிபூரி போட்டாங்க.இந்த மாதிரி வரலை.

//இன்னொரு கடை பேரு அன்னை மெஸ்ஸுன்னு நினைக்கறேன். பூண்டு தோசை, ராகி தோசைன்னு 40 வெரைட்டி வைச்சிருப்பாங்க. //

ஆமாம்.அந்த தெருவில் ஏகப்பட்ட தோசை கடைகள் உண்டு.விலை மிக,மிக குறைவு.10 ரூபாய்க்கு 15,20 இட்லி எல்லாம் அப்ப சாப்பிட்டேன்..

ஹ்ம்ம்..அதெல்லாம் ஒரு காலம்.

Unknown said...

//subbu mess idyaappaththa vuttutiye raasaa//

சுப்பு மெஸ்..கேள்விப்பட்ட மாதிரி இருக்கு.எங்க இருக்கு பாண்டிண்ணே?

Unknown said...

//எண்ணையில் போட்டு வறுத்தா அது வருத்தப்படாமல் என்ன செய்யும் //

ஆனாலும் இது ஓவரண்ணா.:-))

அது வருத்தத்தை பார்த்தால் நம்ம மன கவலை தீர்வது எப்படி?

Unknown said...

//ஆனால் R>S.புரம் பழமுதிர்சோலையை விட்டுவிட்டீர்கள் செல்வன்.//

இல்லை சிவபாலன்.அது வெறும் ஜூஸ் கடைதானே?பிரபலம் தான்.ஆனால் ஸ்பெஷலா எந்த உணவும் கிடையாது.பழரசமும்,பழமும் தானே கிடைக்கும்?

ilavanji said...

கோவைல இன்னொரு நல்ல விசயம் பேக்கரிங்க. சிங்கிள் டீய வாங்கிக்கிட்டு 4 மணிநேரம் ஒக்கார்ந்து பொங்கல் போடலாம். தொரத்தவே மாட்டாங்க :)

சைக்கிள் கேப்புல என்னோட லிஸ்ட்:

1. அம்மா மெஸ் (லெமன் சேவை + பூண்டு தோசை)
2. லட்சுமி மெஸ் (அடை + காபி)
3. ஹோப் காலேஜ் SKP (முட்டை கொத்து பரோட்டா, முட்டைதோசை )
4. அண்ணலட்சுமி (வேறென்ன? புல்மீல்ஸ் தான் )
5. அரோமா பேக்கரி (ஒரு பப்ஸ் + ஒரு சிங்கிள் டீ + ஒரு கிங்ஸ் + 4 Hrs :) )
6. பீளமேடு பழமுதிர்சோலை (இதுதாங்க மொதல்ல ஆரம்பிச்சது...ஜீஸ்க்கு மட்டும்... )
7. நீல்கிரிஸ் ( கடலை போட மட்டும்! ;) )
8. சோமனூர் டாபா கடைகள் ( Water sports...)
9. அங்கனங்கடை பிரியாணி ( காக்கா கறிங்கற வதந்தி இன்னும் இருக்கு...)
10. காந்திபுரம் சிக்கன் சம்பூர்ணா ( சிக்கன் 65 மட்டும்.. )
11. பூமாராங் ( ஐஸ்க்ரீம் வெறும் மாவுனாலும் ராத்திரி 11மணிக்கு மேல அங்க போறதே சுகம்! )
12. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா (Export செய்யறாங்கப்பா.. )
13. ரயில்வேஸ்டேசன் எதுத்தாப்புல ராமூஸ் மெஸ் ( பசங்க ட்ரீட் குடுக்கறாங்கன்னா அது இங்கதான்.. சோமா..சுரா.. எல்லாத்தோடவும் கலந்துரையாடிக்கிட்டே சாப்பிடலாம்)

அடடா... போதுண்டா இளவஞ்சி...

Unknown said...

இளவஞ்சி
கோயமுத்தூரையே ஒரு கலக்கு கலக்கிருக்கீங்க போல.

அம்மா மெஸ்/லட்சுமி மெஸ் - எங்க இருக்குன்னு ஞாபகமில்லை
எஸ்.கே.பி - இங்க ரெண்டு 3 தரம் போயிருக்கேன்.ஆனா மெஸ் என்பதால் அதன்பின் போகலை
அரோமா திடீர்னு வந்து கோவை முழுக்க பாபுலராயிடுச்சு.அதுக்கு முந்தி கீர்த்தி பேக்கரி, தான் பேமஸ்.இதுவந்து குறுகிய காலத்தில் பட்டையை கிளப்பிடுச்சு
நீலகிரி- ஆகா..நம்ம பட்ஜெட்டுக்கு இது அப்ப ஒத்து வந்ததே இல்லை.ஏக்கப் பெருமூச்சுதான்.
சோமனூர்-இதை எப்படி எழுத மறந்தேன்?10 ரூபாக்கு கொண்டைகடலை சைடிஷ் தருவார்கள்.ரொட்டி 2 ரூபா,நான் 5 ரூபா...வாட்டர் ஸ்போர்ட்ஸ் என் நண்பர்கள் புகுந்து விளையாடுவார்கள்.பக்கத்திலேயே கருமத்தம்பட்டி போலிஸ் ஸ்டேஷன்.ஒரு நாள் கூட எட்டி பார்த்ததில்லை:-)))

பூமராங்--எப்படிங்க?நானும் நைட் 11 மணிக்கு மேல் அங்க நிரைய தரம் போயிருக்கேன்.

Sivabalan said...

இளவஞ்சியின் லிஸ்ட் சூப்பர்.

ஆனால் மகாலட்சுமி பேக்கரியை( Chain of Bakery)விட்டுட்டார்.

செல்வன்,

என்ன இப்படி சொல்லிடீங்க, நம்ம டவுனுக்குள்ள போனால் R.S.Puram போகாமா வருவதே கிடையாது. (எங்க பெரியம்மா வீடு அங்கதான் அதுனால)

வஜ்ரா said...

வெஜிடேரியன், நொ தண்ணி, ஐயோ சிரமம் தான்...

oosi said...

மேட்டுபாளையம் ரோட்டில் உள்ள அன்னலட்சுமி உண்மையில் சேவைக்காத்தான் ...சிறிய தொகை கூட தந்து விட்டு வரலாம் ...

RS Puram.. Richie Rich நன்றாக இருக்கும்...

கவுண்டம்பாளையம் ..ஐயப்பா உணவகம்...அதே கவுண்டம்பாளையத்தில் sree krishna sweets சுட சுட மைசூர் பாகு சுவை அலாதி...

வெற்றி said...

செல்வன்,

//என் மனம் கவர்ந்த பல ஓட்டல்களை பற்றி எழுதப்போகிறேன்.
அன்னபூர்ணா கவுரிசங்கர்,கோவை://

//
அன்னபூரணா சாம்பார் இட்லிக்கு நான் என்றும் அடிமை.அங்கு சாம்பார் என்ற குளத்தில் இட்லி நீச்சல் அடிக்கும்.வாயில் வைத்தால் அமுதம் தான்.விலையும் அதிகமில்லை,ஜென்டில்மன் 7 ரூபாய் தான்.//

நான் தமிழகத்திற்கு இதுவரை வந்ததில்லை. அதனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள உணவகங்களில் சாப்பிடக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அன்னபூர்ணா உணவகம் கனடாவில் ரொரன்ரோ நகரில் இரு கிளைகளை சில வருடங்களுக்கு முன் துவக்கியுள்ளதாக அறிந்தேன். இதுவரை இவ் உணவத்திற்குச் செல்லவில்லை. உங்களின் பதிவைப் படித்த பிறகு போக வேணும் போல் உள்ளது. எதற்கும் இவ் வார இறுதியில் போய்விட்டு வந்து என்ன மாதிரி என்று சொல்கிறேன்.

நன்றி.

அன்புடன்
வெற்றி

ilavanji said...

செல்வன்,

//பக்கத்திலேயே கருமத்தம்பட்டி போலிஸ் ஸ்டேஷன்.ஒரு நாள் கூட எட்டி பார்த்ததில்லை:-))) //

நான் அடிக்கடி போயிருக்கிறேன்! என் கல்லூரி வாழ்க்கை அப்படி! :)))

பாண்டி,

நீங்க சொல்லற எடமேதான்!

அந்தக்காலத்துல நாங்க அங்க ஆடிய ஆட்டத்தை.. சரிசரி.. செய்த கேவலங்களை ஒரு பதிவாகவே போட்டிருக்கிறேன்! நீங்க கூட பின்னூட்டம் போட்டிருக்கீங்க! :))

http://ilavanji.blogspot.com/2005/03/blog-post_111155703949437853.html

Unknown said...

இளவஞ்சி
நான் சொல்லவந்தது பக்கத்தில் போலிஸ் ஸ்டேஷன் இருந்தும் அவர்கள் இந்த தாபாக்கள் பக்கமே எட்டிபார்த்ததில்லை என்பதைத்தான்.

நீங்கள் Tamilnadu engg college(TCE) மாணவரா?நான் அங்குதான் படித்தேன்

ilavanji said...

அய்யா என் செல்வா!

//நீங்கள் Tamilnadu engg college(TCE) மாணவரா?நான் அங்குதான் படித்தேன் //

நைட்டு 12 மணி இங்க! இந்நேரத்துல என் காதுல தேன் பாய்ச்சிட்டீங்க! :) எங்க காலேஜில படிச்சிட்டா இம்புட்டு தெளிவா எழுதறீங்க?! :)))

நான் அங்கதான் படிக்கலை! இருந்தேன்! :))) 90-94 EIE

Unknown said...

தெய்வமே

நீங்க TCEya?ஆகா?

நான் 94- 96 MBA.முதல் பேட்ச்.கம்ப்யூட்டர் எஞினீயரிங் மாணவர்களை தெரியும்.

வாழ்க TCE.இனிமேல் உங்க கூட நிரைய இது பத்தி பேசணும்.

I am so happy

கால்கரி சிவா said...

செல்வன். டெக்ஸன் எல்லாம் வீரர்களா? அதுக்குத் தான் புஷ் எப்ப பார்த்தாலும் போரிடுகிறாரா?

கால்கரி சிவா said...

முகமூடி, உமக்கு சரக்கு ஞானம் மிக அதிகமய்யா. சரக்கடிக்கும் போது முகமூடியே தூக்கிதானே குடிப்பீங்க

கால்கரி சிவா said...

TCE என்பது எங்கள் Thiagarajar College of Engg இன் ட்ரேட் மார்க்

Unknown said...

அமெரிக்காவிலேயே வீர விளைந்த மண் என்றால் அது டெக்சாஸ் என ஒரு பிரமை உண்டு சிவா.இங்கு ஏராளமான கவ்பாய்கள் இருந்ததாக கூட சொல்வார்கள்.கன்பிடரேட் ஆர்மியை துவக்கி அமெரிக்காவையே ஒரு கைபார்த்த மாநிலம் டெக்சாஸ்

புஷ் அதனால் தான் சண்டை பிடிக்கறாரான்னு தெரியலை.க்ளின்டன் கூட சண்டை பிடிச்சார்.அவர் மாநிலம் பக்கத்து ஆர்கன்சா:-))

//TCE என்பது எங்கள் Thiagarajar College of Engg இன் ட்ரேட் மார்க் //

நாங்களும் அந்த பேரை கொஞ்சம் கடன் வாங்கிக்கறமே.காசா பணமா?

கால்கரி சிவா said...

செல்வன், கால்கரிகூட கௌபாய்களின் ஊர். அடுத்தமாதம் கௌபாய்களின் திருவிழாவான கால்கரி ஸ்டாம்பீட் நடைபெறும். அங்கு போய் கௌபாய் டிரஸ் போட்டு போட்டோ எடுத்து ப்ளாக்கில் போடுவதாய் உத்தேசம்

Unknown said...

உங்க நெருப்புகோழி படத்தை பாத்துட்டு சிரிப்பே நிக்கலை சிவா.

சரி...கவ்பாய் வேஷம் கட்டி,துப்பாக்யோடு போட்டோ எடுத்து போடுங்க.குதிரை ஏற மறந்துடாதீங்க:-))

இலவசக்கொத்தனார் said...

//கொத்தனார் நீங்களும் கோவை வந்து கலக்கீருக்கிங்களா?//

வந்திருக்கேனாவா? கிட்டத்தட்ட 4 வருஷம் குப்பை கொட்டி இருக்கேன். நம்ம 4X4 பதிவு படியுங்கள்.

//மார்கரீட்டாவை ஸ்பானிய ஒயின் என்று சொல்லலாமா? //
//அது மெக்ஸிகன் தான்.ஆனா மெக்சிகனை ஸ்பானிஷ் என்று சொல்லியே பழகிவிட்டது.டெக்ஸாசுக்கு கீழே ஸ்பெயின் இருப்பது போலவே தான் தோன்றுகிறது:-)))//

ஸ்பானிஷை சமாளிச்சாச்சு. சரி. ஒயினாயா அது? அதுக்கு என்ன கதை கட்டப் போறீரு?

Unknown said...

//ஸ்பானிஷை சமாளிச்சாச்சு. சரி. ஒயினாயா அது? அதுக்கு என்ன கதை கட்டப் போறீரு? //

தலைவா கொத்தனார்
முன்ன பின்ன செத்தா தான சுடுகாடு தெரியும்.எனக்கு எந்த மதுவகை,என்ன,எப்படி இருக்கும்னு எதுவும் தெரியாது.நம்மூர்ல எல்லா மதுவையும் ஒயின் கடைல தான விப்பாங்க.அதனால எல்லாத்தையும் ஒயின்னு சொல்லி பழகிடுச்சு.

எப்படி சமாளிபிகேஷன்?:-)

Unknown said...

ஊசி
கோவைல இருந்துகிட்டு மேட்டுபாளையம் அன்னலட்சுமி ஒரு தரம் கூட போனதில்லைங்க.ரிசிசி ரிச் வழில பாத்திருக்கேன்.ஆனா போனதில்லை.மல்லிகை டிபார்மென்ட் கிட்ட இருக்கற ஐஸ்க்ரிம் கடை தான் நம்ம பேவரைட்.

Unknown said...

சிரமம் இல்லை வஜ்ரா.ஏகப்பட்ட காசு மிச்சமாகுது.ஆனா வெளியூர் போனா ஏகப்பட்ட கஷ்டம்.பர்கர் கிங்ல வெஜ்ஜி பர்கர் போட்டுட்டுடிருந்தான்.இப்ப நிறுத்திட்டான்:-(

Unknown said...

குலவுசனப்ரியன்
(பேரு சூப்பருங்க...)சிஸ்லர் அன்னபூர்ணாவில் சாப்பிடிருக்கேன்.அப்பவே 40 ரூபான்னு நினைக்கறேன்.அப்ப அதெல்லாம் பெரிய காசுங்க.பலூட்டான்னு ஒண்ணு விப்பாங்க.அன்னபூர்ணாவில் மட்டுமே (ஆர்.எஸ்.புரம்) கிடைக்கும்.அதுன்னா ஒரு காலத்துல பைத்தியம்.

அருகம்புல் ஜூஸ் ரேஸ்கோர்ஸில் விற்பார்கள்.அது சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றார்கள்.குடித்ததில்லை.கசப்பு அடிக்கும் என்ற பயத்தில்

நரியா said...

வணக்கம் செல்வன்.
சாப்பிடாம இந்த பதிவை படிச்சது தப்பா போச்சு :). இந்த அறுஞ்சுவை உணவிலிருந்தே இந்தியா எவ்வளவு ரசனை மிக்க நாடு என்று அனைவருக்கும் தெரிய வருகிறது :).

கையேந்தி பவன் உணவு சுவையாகத்தான் இருக்கும். அங்கே கிடைக்கும் உணவோடு, பக்கதில் ஓடும் சாக்கடை வாசமும், சாலையிலே ஓடும் வாகனங்களின் தூசியும் சேந்தல்லவா உணவு பரிமாரப்படுகிறது.
இங்கே சாப்பிடும் மக்களுக்கு நிறைய எதிர்ப்பு சக்தி உடலில் இருப்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

நாம் சாப்பிடும் உணவில் சுவைமட்டும் இல்லாமல் ஆரோக்கியமும் சேர்ந்து இருந்தால் அனைவருக்கும் நன்மையே!

நன்றி,
நரியா