Thursday, May 11, 2017

சிறுகதை பயிலரங்கம்

சிறுகதை பயிலரங்கம் குறித்து திருமதி லாவண்யா சுந்தர்ராஜன் அனுப்பிய மடல். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வலைபதிவுகள், முகநூல் தமிழ் குழுக்களில் பங்கேற்கிறார். தமிழ் மற்றும் தமிழ்பள்ளிகளில் மிகுந்த ஆர்வமுடையவர். விரும்பும் நண்பர்கள் உதவ வேண்டுகிறேன்

---------------------------------------

வணக்கம் ,

தமிழ் இலக்கியச் சூழலில் நல்ல சிறுகதைகள் எழுதுவது மிகவும் குறைந்து வரும் சூழலில், நல்ல சிறுகதைகளை படிக்கவும், உணரவும், பின் எழுதவும் ஏதுவான ஒரு தளத்தை உருவாக்க நினைத்து  நாங்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சிறுகதை பயிலரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்தோம். அதன் புகைப்படங்கள் பதிவுகள் பின்வரும் இணைப்புகளில்.
  


அதை தொடர்ந்து பலர் அதை போன்ற பயிலரங்கத்தில் ஆர்வமாக இருக்கும் காரணத்தால் மீண்டும் ஆகஸ்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த முறை நிகழ்வுக்கு 1,24,000/- செலவு ஆகியது. இம்முறை குறைந்தபட்சம் 80,000/- ஆகுமென்று திட்டமிட்டுள்ளேன். இதில் தங்குமிடம் உணவு பயிற்சியாளர்கள் போக்குவரத்து மற்றும் நடத்தித் தர ஊக்கத்தொகை மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பரிசாக அளிக்கப்படும் புத்தகம் போன்ற செலவுகள் அடங்கும். கடந்த முறை நிதியளித்த அனைவர்க்கும் காலச்சுவடி அறக்கட்டளை வழி முறையான ரசீதை அனுப்பி வைத்தோம். ஆனா எல்லா செலவுக்களையும் நிதியளித்த அனைவருக்கும் அனுப்பி வைத்தோம். பயிலரங்கத்தின் நன்றியுரையின் போது நிதியளித்தவர் பட்டியலை வாசித்தோம். அதே போல இந்த முறையும் முறையாக ரசீதினை வழக்குவோம். வரவு செலவு கணக்குகளை அனுப்புவோம். 

 நிதி திரட்ட உங்களுக்கு தெரிந்த இலக்கிய ஆர்வமுள்ளவர்களிடம் சொல்லி இந்த நிகழ்வுக்கு நிதி பெற்று தர உதவுகள்.

நிதி அளிக்க வேண்டிய விபரம்

A/C Num: 002101521166
Name: LAVANYA SUNDARARAJAN
Bank: ICICI
Branch: BANGALORE-Whitefield Hope Farm circle
IFSC: ICIC0002181
MICR : 560229066


நன்றி,

லாவண்யா சுந்தர்ராஜன்

No comments: