Sunday, April 29, 2012

அடுத்த மதுரை ஆதீனமாக யாரை நியமிக்கலாம்?

என் பரிந்துரைகள்
 
முக அழகிரி: சேரன் செங்குட்டுவனுக்கு பதவி கிடைக்க தம்பி இளங்கோ துறவியானார். அது மாதிரி முக ஸ்டாலினுக்கு பதவி கொடுத்துவிட்டு அழகிரியை மதுரை ஆதீனமாக்கலாம்.
 
 
கி வீரமணி:
 
 மடத்தின் சொத்துக்களை சரியாக பராமரிக்க இவரை விட்டால் யாரும் இல்லை.ஆத்திகம், நாத்திகம் இரண்டும் இணையும் புள்ளீயாக ஏன் இவரை ஆதினகர்த்தராக்க கூடாது?
 
பிரபுதேவா
 
இவரை ஆதீனமாக்கினால் மாற்றுமத பெண்களை லவ் செய்து கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்தே இந்துமதத்துக்கு மாற்றிவிடுவார்.இதைவிட பெரிய சேவை இந்துமதத்துக்கு என்ன இருக்கு?
 
 
அருந்ததி ராய்
 
இதுவரை ஆதீனமாக இந்து ஆண்கள் மட்டுமே பதவி ஏற்று உள்ளனர். கிறிஸ்தவ பெண் ஒருவருக்கு அந்த பதவியை வழங்கி ஏன் புரட்சி செய்ய கூடாது?
 
 
பெரியார் தாசன்
 
இந்து, நாத்திகம், பவுத்தம், இஸ்லாம் என சகல மதங்களிலும் நுழைந்து அனுபவம் பெற்ற இவரை ஆதீனமாக்கினால் "ஈஸ்வர அல்லா தேரே நாம்" என்பதுக்கு சரியான உதாரணமாக இருக்கும் அல்லவா?
 
சச்சின் டெண்டுல்கர்
 
இவர் ஓய்வுக்கு பின் கமெண்ட்டேட்டர் ஆவார், கோச் ஆவார் என அனைவரும் எதிர்பார்க்க அனைவருக்கும் கடுக்காய் கொடுத்துவிட்டு எம்பி ஆகிவிட்டார்.கூடவே இவரை ஆதீனமாகவும் ஆக்கினால் ஸ்பான்சர்ஷிப், விளம்பரம் எல்லாம் குவிய வாய்ப்புகள் உள்ளன. :"ஆதீனத்தின் ஆசி பெற்ற பெப்சி வழங்கும் ருத்ரயாகம்" என விளம்பரம் செய்யலாம்
 
துக்ளக் சோ
 
சபாரியை கழட்டிவிட்டு வேட்டி கட்டினால் ஆதீனம் மாதிரியே இருப்பார்,. மேக்கப்பே வேண்டியதில்லை. தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு ராஜகுருவாகவும் இருப்பார்.பாலிடிக்ஸ் செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை ஆதீனத்தின் பிடியில் கொண்டுவர இவரை விட்டால் சரியான ஆள் கிடைப்பது அரிது
 
சாரு நிவேதித்தா
 
எக்சிஸ்டென்ஷியலிசமும் காவி அங்கியும், பின் நவீனத்துவமும் புலிதோலும் மாதிரி படைப்புகள் தமிழ்கூறும் நல்லுலகுக்கு கிடைக்க இவர் ஆதீனமாவது அவசியம் ஆகிறது.
 
அண்னாச்சி ஆசிப் மீரான்
 
ஆண்களின் உரிமைக்கு குரல் கொடுக்க அண்னாச்சியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?சாத்தான்குளத்தின் சார்பில் இதுவரை ஒரு ஆதீனம் கூட பதவி ஏற்றதில்லை என்பது குறிப்பிடதக்கது.
 
 

 

1 comment:

வவ்வால் said...

செல்வன்,

ஏன் இந்த ஓரவஞ்சனை என்னை எல்லாம் பார்த்தால் ஆதினமாக தெரியவில்லையா... என்னை 5 நிமிஷம் குறு குறுனு உத்து பார்த்தா பெரிய மஹான் போலவே தெரிவேன்னு எல்லாம் சொல்லுறாங்க, எல்லா கோயில்லயும் வவ்வால் இருக்கும் ஆனா ஒரு வவ்வால் கூட ஆதினம் ஆனதில்லை எனவே என்னை ஆதினம் ஆக்கலாம்..ஹி..ஹி அப்புறம் ரஞ்சிதாவும் மதுரை ஆதினத்தில் சேர்ந்தாச்சு தானே :-))