உன் வழி உனக்கு. என் வழி எனக்கு. சரியான வழி, நேரான வழி, ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது.
Friday, December 24, 2010
பாதாள பைரவி (1951)
Sunday, December 19, 2010
குடிகாரர்கள், வேசிகள், கடல் கொள்ளையர்
Saturday, December 11, 2010
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
கதை ரொம்ப சிம்பிள்.ராஜகுரு ஒருவர் மூன்று கேள்விகளுக்கு விடை சொல்பவரை தான் சிந்தாமணி மணக்கவேண்டும் என ஆலோசனை சொல்லுகிறார்.தவறான பதில் சொன்னால் தலை துண்டாடபடும்.இப்படி 999 பேரின் தலையை சிந்தாமணி வெட்டுகிறார்.ஐந்து அண்ணன்களை சிந்தாமணியிடம் இழந்த நாயகன் (கோவிந்தன் என்பவர் என நினைவு) அந்த கேள்விக்கு விடைதேட மூன்று ஊர்களுக்கு செல்கிறான்.பதிலை அறிகிறான்.சிந்தாமணியை திருத்தி அவர் அத்தைமகனுக்கு மணமுடித்து வைத்து, அண்ணன்களை காளியின் அருளால் உயிருடன் எழுப்பி ஊர் போய் சேர்கிறான்.
மிக நீளமான படம்.இது அந்தகாலத்தில் சூப்பர் ஹிட் படமாம்.நாடகபாணியில் பாத்திரங்கள் அசையாமல் நின்றுகொண்டு எந்த உணர்ச்சியுமின்றி காமிராவை பார்த்து வசனம் பேசுகின்றனர்.நகைச்சுவை காட்சிகள் ரொம்ப எலிமெண்டரி. (நரிகொம்பு கொண்டா உன்னை கட்டிக்கறேன் என சொல்லி சற்று லூசு மாதிரி இருக்கும் அத்தைமகனை காட்டுக்கு அனுப்புவது ஒரு ஜோக்).ஆனால் இதை எல்லாம் தாண்டி படத்தை ரசிக்க முடிகிறது.கதைக்குள் கதை, கிளைகதை, நிறைய கதாபாத்திரங்கள் போன்ற உத்திகள் படத்தில் உள்ளன.சண்டை காட்சி எல்லாம் கிடையாது.நாயகனை சரமாரியாக கீழே போட்டு அடிக்கிறார் ஒரு வயதான ராஜா.நாயகன் ஈகோ பார்க்காமல் அடிவாங்குகிறார்.சும்மா நோஞ்சான் மாதிரி இருக்கும் இரு காவலாளிகள் நாயகனை கைதுசெய்கின்றனர்.க்ளைமேக்ஸ் என்பது அரசவை காட்சியில் சிந்தாமணியின் கேள்விக்கு பதில் சொல்லி சாமியார் தலையை வெட்டுவதுதான்.
அடுத்து குலேபகாவலி என்ற எம்ஜிஆர் படம் பார்த்தேன்.பகாவலி பட்டினத்தில் உள்ள குலே எனும் மலரை எடுத்துவந்து தந்தைக்கு எம்ஜிஆர் கண்பார்வை தருவதுதான் கதை. டணால் தங்கவேலு,சந்திரபாபு காமடியில் கலக்குகிறார்கள். எம்.ஜி.ஆர் மூன்று தாரம் கட்டும் படம் எனக்கு தெரிந்து இதுவாக தான் இருக்கும்.பாகவலி நாட்டில் ஆண்கள் இல்லதரசர்கள்,பெண்கள் எஜமானர்கள்.எம்ஜிஆரிடம் திருவிளையாடல் பாணியில் ராணி கேள்வி எல்லாம் கேட்கிறார்.அதில் ஒரு கேள்வி "பெண்ணை கல்யாணம் செய்துகொள்வதில் உள்ள நன்மை என்ன?".பதில் "ஊர் உலகில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் அறிய முடியும்.."
ரொம்ப எளிமையான கதை.குழந்தைதனமான உத்திகள்...தாயம் ஆடி ஆண்களை அடிமைபடுத்த நினைக்கும் லதீஷா தாயம் உருட்டுவார்.அப்போது தங்கவேலு விளக்கை அணைப்பார்.விளக்கு மீண்டும் எரியும்.அப்போது தாயகட்டை மாற்ரஒபட்டு இருக்கும்.உடனே அந்த ஆண் அடிமை ஆக்கபடுவார்.எம்ஜிஆர் விளக்கை அணைக்கவிடாமல் தங்கவேலு கையை பிடித்து கொண்டு ஜெயித்துவிடுவார்
90களில் பார்த்த சரத்குமார் படமான கூலியில் தந்தை ராதாரவி தங்கம் கடத்துவதை தடுக்க மகள் மீனாவும், மாப்பிள்ளை சரத்குமாரும், மாமியார் மனோரமாவும் மாறுவெஷம் போட்டுகொண்டு போய் ஆடுவார்கள்.அடையாளத்தை மறைக்க மனோரமா கூலிங்க்ளாஸ் போட்டுக்குவார்,சரத்குமார் கருப்பு மச்சம் ஒன்றை முகத்தில் வைத்துகொள்வார், மீனா வடநாட்டு பாணியில் டிரஸ் போட்டுக்குவார்.உடனே ராதாரவிக்கு அவர்களை அடையாளம் தெரியாமல் போயிடுமாம்.
தமிழ்சினிமா உத்திகள் மாறவே இல்லை போல:-)
Wednesday, December 08, 2010
காமமும் கற்பும்: சமண பெண்ணியல்
Wednesday, December 01, 2010
வினாயக புராணம்: