Monday, June 28, 2010

441.யூனியன் புகுந்த யுபிஎஸ்

பெட் எக்ஸ் (fed ex), யுபிஎஸ் (UPS) இரண்டும் அமெரிக்காவின் பார்சல் சர்வீஸ்கள். யுபிஎஸ் முழுக்க யூனியன் மயமான கம்பனி.பெடெக்ஸில் தொழிற்சங்கமே கிடையாது.ஆமை புகுந்த வீடும், தொழிற்சங்கம் புகுந்த கம்பனியும் உருப்பட்டதா தான் வரலாறே கிடையாதே?அப்புறம் யூனியன் புகுந்த யுபிஎஸ் மட்டும் என்ன விதிவிலக்கா?

கொஞ்ச நாள் அடக்கி வாசித்த யூனியன் தன் வழக்கமான வேலையை காட்டியது.அதான் ஸ்ட்ரைக்.பலநாள் வேலைநிறுத்த நீடித்ததால் யுபிஎஸ்ஸை நம்பி இருந்த நிறுவனங்கள் அனைத்தும் பெடெக்ஸுக்கு தம் வணிகத்தை திருப்பின.அப்புறம் அடித்து பிடித்து ஸ்ட்ரைக்கை முடித்த யுபிஎஸ் ஒவ்வொரு வாடிக்கையாளரா போய் "ஐயா,சாமி ஆர்டர் போடுங்க.இனிமேல் ஒழுங்கா பார்சலை டெலிவரி செய்யறோம்" என கெஞ்சியது.ஆனால் வாடிக்கையாளர்கள் பலரும் "உன் கம்பனி யூனியன் கம்பனி.எப்ப வேணா ஸ்ட்ரைக் நடக்கும்.பெட்.எக்ஸில் யூனியன் இல்லை.அதனால் அதில் ஸ்ட்ரைக் பயமே இல்லை.அதனால் எங்க ஆர்டர்கள் இனி பெடெக்ஸுக்கே" என சொல்லிவிட்டன.

"உன்னால நான் கெட்டேன்,என்னால் நீ கெட்டாய்" என உட்கார்ந்து அழுத யுபிஎஸ்ஸும், யூனியன்களும் ஒரு முடிவுக்கு வந்தன.பெடெக்ஸில் யூனியன்களை அனுமதிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரவேண்டும் என அரசை நெருக்க ஆரம்பித்தன."எங்கள் கம்பனியில் யூனியன் இருக்கு.அதனால் யாரும் எங்களை நம்ப மாட்டேன் என்கிரார்கள்.பெடெக்ஸிலும் யூனியனை ஆரம்பித்து அவர்களையும் யாரும் நம்பாமல் செய்தால் தான் எங்களால் அவர்களுடன் போட்டி போடமுடியும்" என்ற வித்தியாசமான கோரிக்கையுடன் களம் இறங்கிய யுபிஎஸ்ஸை பார்த்து அமெரிக்காவே சிரித்தது.

யுபிஎஸ் யூனியன்களும் களமிறங்கி "எங்களால் தான் எங்கள் கம்பனிக்கு ஆர்டர்கள் கிடைப்பது இல்லை.பெடெக்ஸையும் எங்களை மாதிரி ஆக்குங்க.இல்லைன்னா எங்க கம்பனி இழுத்து மூடப்பட்டு, யூனியனும் காலி ஆயிடும்,எல்லோருக்கும் வேலையும் காலி ஆயிடும்" என நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொண்டனர்.இப்படி யூனியனால் ஒரு கம்பனிக்கு என்னென்ன இழப்பு ஏற்படும் என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் போலவே இந்த போராட்டம் இருந்தது.

பெடெக்ஸும், யுபிஎஸெஸும் இப்போது அமெரிக்க காங்கிரஸில் இந்த போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இது குறித்து பேட்டியளித்த பெட்கெஸ் சேர்மன் "யுபிஎஸ்ஸிடம் யூனியன் இருப்பதால் அது நம்பகதன்மையை இழந்தது அவர்களுக்கு பிரச்சனை என்றால், நான் உங்களிடம் ஒரு உண்மையை சொல்லுகிறேன்..இதை கேட்டு என் கண்ணில் முதலை கணீர் வழிந்தோடுகிறது" என சொல்லிவிட்டு போனார்.

யூனியன் கோமாளிகள் இன்னும் என்னென்ன காமடிகளை அரங்கேற்றுவார்கள் என்பதை மக்கள் கான ஆவலுடன் இருக்கிறார்கள்.

Sunday, June 27, 2010

440. முதலில் வந்தது முட்டையா,கோழியா

முதலில் வந்தது முட்டையா,கோழியா என்பது சுவாரசியமான கேள்வி.ஆனால் பதிலளிக்க முடியாததல்ல.

கோழி என்ற உயிரினம் தோன்றுவதற்கு முன்னரே டைனசார்கள் முட்டை போட்டுக்கொண்டிருந்தன.மனிதன் முதலிய பாலூட்டிகள் எல்லாம் கூட முட்டை மூலம் தான் குட்டி ஈனுகின்றன (பாலூட்டிகளுக்கு கருமுட்டை மூலம் குட்டி வயிற்றில் ஈனபடுகிறது). அதனால் கோழிக்கும் முந்தியே உலகில் முட்டை தோன்றிவிட்டது

கோழி என்பது red jungle fowl & Grey jungle fowl என்ற இரு பறவைகளின் கலப்பினம்.முதல் முதலில் இந்த இருபறவைகளும் அகஸ்மாத்தாக இனம் மாறி காதல் புரிந்த போது இடப்பட்ட முட்டை தான் உலகின் முதல் கோழி முட்டை.அதிலிருந்து தோன்றியதுதான் உலகின் முதல் கோழி.

அதனால் முட்டை தான் முதலில்.கோழி பிறகுதான்.

Friday, June 25, 2010

439.என் கொள்கைக்கு விரோதமான படங்கள்

அந்த 7 நாட்கள்: "உன் காதலி என் மனைவி ஆகலாம்.ஆனால் என் மனைவி உன் காதலி ஆக முடியாது" என்ற வசனத்தை கேட்டாலே நான் கடுப்பாவது வழக்கம்.இந்த சினிமாவை நான் எடுத்திருந்தால் படம் இன்டெர்வெல்லுக்கு முந்தியே முடிந்திருக்கும்.அதாவது அம்பிகாவே ராஜேஷிடம் சொல்லி பாக்கியராஜுடன் போயிருப்பார்.

நிலவே மலரே: ராஜேஷ்,ரகுமான்,நதியா நடித்த படம்.காதலியை நண்பனுக்கு "விட்டுகொடுக்கும்" படம்.இதனாலேயே எனக்கு இது பிடிக்காது.

சுயம்வரம்: உடல் ஊனமுற்ற சுவலட்சுமியை திருமணம் செய்ய ஏழை பார்த்திபன் போடும் நிபந்தனை "உன் காசு,பணம் எனக்கு வேண்டாம்.என் வருமானத்தில் தான் நீ வாழவேண்டும்"....என்ன ஆணாதிக்கம் என எனக்கு அப்பவே சரியான கடுப்பு.பொண்டாட்டி வருமானத்தில் வாழ்வது இவரது ஆண்மைக்கு இழுக்காம்...இவன் வருமானத்தில் வாழ்வது மனைவிக்கு இழுக்கில்லையா?படத்தில் இதை கேட்டு சுவலட்சுமி ஆனந்தகண்ணீர் விடுவார்.எனக்கு பயங்கர கடுப்பு ஆகும்.

மன்னன்: மனைவியின் திமிரை அடக்கும் படம்...என்ன சம்பாதித்தாலும், எத்தனை உயர்பதவியில் இருந்தாலும் பொம்பளை,பொம்பளையாதான் இருக்கணும் ஆண்மைக்கு அடிபணியவேண்டும் என்பதை சித்தரிக்கும் படம்.

ல்கி: புரட்சி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் பாலசந்தர் எடுத்து குட்டையை குழப்பிய படம்.ஆணாதிக்கம் பிடித்த ஒருவனை திருத்த அவனுடன் படுத்து அவன் குழந்தைக்கு தாயாகி அந்த குழந்தையை அவன் மனைவியிடம் தந்து....ஸ்ஸ்..அப்பா....

சிந்து பைரவி: மனைவி கணவனின் "கலைதாகத்தை" புரிந்துகொள்ளவில்லையெனில் அவன் சின்னவீடு வைத்துகொள்வது நியாயமே என்ற கருத்தை வலியுறுத்திய படம்.

என்றென்றும் காதல்: அக்கா ஒத்துகொண்டால் தான் காதலனை கைபிடிப்பேன் என தங்கௌ கூற,அதற்காக அக்காவிடம் அனுமதி வாங்க காதலனின் குடும்பம் நாய் மாதிரி வந்து அக்கா வீட்டில் விழுந்து கிடக்கிறது....நான் இதை எடுத்திருந்தால் பத்தே நிமிடத்தில் படம் முடிந்திருக்கும்...அதாவது தங்கை காதலனை கல்யாணம் செய்துகொண்டு அக்காவுக்கு லெட்டர் போட்டுவிட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.சுபம்.

Friday, June 18, 2010

438.ஐடியா மணி

ராமநாதபுரத்தில் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓடுவது அதிகமாகிவிட்டது என வருத்தப்படும் தினமலர் இதை தவிர்க்க ஒரு சூப்பரான ஐடியாவை பெற்றோருக்கு கொடுத்துள்ளது.

அது என்ன தெரியுமா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22151

பெண்ணே, தன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்து விடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர்.

இது ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே, அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும், வளர்ப்பிலும் காட்டினால் இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி' போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.

ஐயோ என் ஐடியா மணியே.....எப்படி ராசா இப்படி எல்லாம்?கலக்குற போ..

Sunday, June 13, 2010

437.புரட்சிதலைவர் கிறிஸ் கிறிஸ்டி

நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் க்றிஸ்டி வரிகளை அதிகரிக்க மறுத்து, வெட்டி செலவுகளை குறைத்து வருவது தெரிந்ததே.அரசு ஊழியர், ஆசிரியரின் சம்பளத்தில் அவர் கை வைத்ததால் அரசு ஊழியர்கள் அனைவரும் கடுப்புடன் உள்ளார்கள்.சமீபத்தில் ஒரு பொதுகூட்டத்தில் மக்களிடம் தன் நடவடிக்கைகளை விளக்கி கொண்டிருந்தார் கிறிஸ்டி

அப்போது மைக்கை பிடித்த ரூதர்போர்ட் என்ற ஆசிரியை "நான் சொல்லிகொடுக்கும் ஒரு மாணவனுக்கு எனக்கு $3 சம்பளம் தந்தால் எனக்கு வருடத்துக்கு $83,000 சம்பளம் தரணும்.அதுதான் நியாயம்" என்றார்.

"உங்களுக்கு தரும் சலுகைகளை சேர்த்தால் அதுக்கு மேலேயே உங்களுக்கு சம்பளம் கிடைக்கிறது" என்றார் கிறிஸ்டி

"என் அனுபவத்துக்கும், படிப்புக்கும் இது போதாது" என்றார் ஆசிரியை

"அப்படியனால் இந்த கம்மி சம்பளம் தரும் வேலையை விட்டு விலகிவிடுங்கள்" என்றார் கிறிஸ்டி

அரங்கமே மக்களின் கைதட்டலால் அதிர்ந்தது....

அதிகாரத்தை நோக்கி உண்மையை பேசிய மக்களின் பிரதிநிதி கிறிஸ் கிறிஸ்டி அமெரிக்க ஜனாதிபதியாக இன்றே பிரார்த்தனையை துவக்கிவிட்டேன்.

வாழ்க கிறிஸ் கிறிஸ்டி....

அந்த விடியோ கீழே...

Wednesday, June 09, 2010

436.உதிர்ந்த முத்துக்கள்

காந்தியும், நேருவும் நல்ல தலைவர்கள்.ஆனால் மோசமான பொருளாதார நிபுணர்கள்.காந்தியன் சோஷலிசம், நேருவியன் சோஷலிசம் என்ற பெயரில் இந்த "பொருளாதார அறிஞர்கள்" கொண்டுவந்த கான்செப்டுகள் இந்தியாவை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாசம் செய்தன.அன்று ராஜாஜி ஒருவர் தான் சுதந்திர பொருளாதாரத்தை வலியுறுத்தி சுதந்திரா கட்சியை துவக்கினார்.ராஜாஜியின் பொருளாதார கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் நாடு அன்றே முன்னேறி இருக்கும்.என்ன செய்ய?நமக்கு கொடுப்பினை அவ்வளவுதான்.

இத்தனை தூரம் புலம்ப காரணம் என்ன என கேட்கிறீர்களா?காதி கிராப்ட் சமீபத்தில் செய்த கிறுக்குதனம்தான் காரணம். காதி என்ற கான்செப்டே இன்று எத்தனை தூரம் சரிப்பட்டு வரும் என்பது கேள்வி. அரசின் மானியத்தில் கடும் நஷ்டத்தில் வெள்ளையானையாக ஓடும் துறை இது. பாவம்,பரிதாபம் என்று இந்த துறைக்கு காசு வாங்காமல் ஒரு விளம்பரத்தில் நடித்து கொடுத்தார் மோகன்லால்.ஆனால் அந்த சமயத்தில் மது விளம்பரத்தில் மோகன்லால நடித்தது தெரிய வந்ததால் மோகன்லாலில் விளம்பரத்தை காந்தியவாதிகள் தடுத்துவிட்டார்களாம்.

தானம் கொடுத்த மாட்டின் பல்லை பிடித்து பார்ப்பது என்பது இதுதான் போல...சரி..காந்தி படத்தில் நடித்த பென்கிங்க்ஸ்லி மது அருந்துபவராகவும், காந்தியின் கொள்கைக்கு மாறாக மாட்டுகறி தின்பவராகவும் இருக்கும் வாய்ப்புகள் நூற்றுக்கு 99.99%(சராசரி ஐரோப்பியரை பற்றிய என் கணிப்பில் கூறூவது). அதுக்காக காந்தியவாதிகள் என்ன காந்தி படத்தை தடுத்தா நிறுத்தினர்?

நஷ்டத்தில் ஓடும் துறையை தொடர்ந்து நஷ்டத்திலேயே ஓட்டுவது என முடிவெடுத்து விட்டார்கள் போல.அப்புரம் நாம் என்ன சொல்லுவது?

Friday, June 04, 2010

435. ஆடாதிக்கம்

இன்று பிளானட் எர்த் என்ற பிரமிக்க வைக்கும் டிஸ்கவரி சானல் - பிபிசி டிவிடி பார்த்தேன்.பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகள், மிருகங்களை பற்றிய புதிய செய்திகளை அறிய முடிந்தது.

இஸ்ரேல் மலை ஆடுகள் மோதுவதை காட்டினார்கள்.அது சாதா மோதல் இல்லை.ஜெயிக்கும் ஆட்டுக்கு நிறைய பெண் ஆடுகள் கொண்ட மந்தை பரிசாக கிடைக்கும்.தோற்ற ஆடு காலம் முழுக்க கட்டை பிரமாசாரியாக காலம் தள்ளவேண்டியதுதான். சண்டையை சுவாரசியமாக பார்த்தேன்.இரண்டு ஆடும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்ததால் நான் சப்போர்ட் செய்த ஆடு ஜெயித்ததா இல்லையா என கண்டுபிடிக்க முடியவில்லை.இருந்தாலும் இந்த பலதார மண விவகாரம் ஆடுகளுக்கிடையே கூட குழப்பத்தை ஏற்படுத்துவதை நினைத்து ஆடாதிக்கத்துக்கு எதிராக பதிவு போடவேண்டும் என நினைத்துகொண்டேன். போட்டும் விட்டேன்.

*****

எறும்புகளை பற்றி ஒரு பயாலஜி மாணவனிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.பெண் எறும்புகள் தான் சுறுசுறுப்பனவையாம்.நாம பார்ப்பதெல்லாம் பெண் எறும்புகள் தானாம்.ஆண் எறும்புகள் புற்றை விட்டு வெளியே வராதாம்.புற்றுக்குள் இருந்துகொண்டு கலவி செய்தி பெண் எறும்பை கர்ப்பமாக்குவது மட்டும் தான் ஆண் எறும்பின் வேலையாம்.தின்பது, தூங்குவது, கலவி செய்வது...கொடுத்து வைத்த சுகவாசி வாழ்க்கைதான் இந்த ஆண் எறும்புகளுக்கு...மிருக இனந்திலும் கூட ஆணாதிக்கம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது பார்த்தீர்களா?(அடுத்த ஜென்மத்தில் பிறந்தால் ஆண் எறும்பா பிறக்கணும்)

*****

நேடலி ஹாலோவே என்ற 14 வயது அமெரிக்க பெண் டட்சு தீவு ஒன்றில் க்னாமல் போனார்.அவரை கொலை செய்ததாக வான்டெர்வட் என்ற டச்சு இளைஞன் விடியோவில் வாக்குமூலம் கொடுத்தான்.அதன்பின் அது குடித்துவிட்டு உளறியது என சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டான்.அமெரிக்க ஊடகங்கள் அவனை வறுத்தெடுத்து வந்தன.அவனை கைது செய்ய ஒத்துழைக்காத டச்சு அரசை திட்டி தீர்த்தன."இது அமெரிக்காவின் அத்துமீறிய செயல்.எங்கள் நாட்டு குடிமகன் நல்லவன்,வல்லவன்..அவனை கைது செய்ய சொல்ல நீங்கள் யார்/" என அலட்சியமாக இருந்தது டச்சு அரசு.இன்று அதே வன்டர்வாட் ஒரு பெரு நாட்டு பெண்ணை கொலை செய்தது கைது செய்யபட்டிருக்கிறான்.டச்சு அரசு இனியாவது திருந்துமா என்பது தான் கேள்வி?

*********

மார்க் பெரென்சன்..ரோடா பெரென்சன், இருவரும் புரபசர்கள்.கம்யூனிச சித்தாந்தம் பேசிய மார்க்கின் ஒரே மகள் லோரி திடீரென விடுமுறையில் பெருவுக்கு போய் அங்கே ஒரு கம்யூனிச தீவிரவாதியை கல்யாணம் செய்துகொண்டாளாம்.புரட்சிகர கல்யாணம் முடிந்த சில நாட்களில் போலிஸ் கணவனையும், மனைவியையும் கைது செய்ய அந்த பெண்ணுக்கு தீவிரவாதத்துக்கு உடந்தையாக இருந்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைத்தது.15 ஆண்டுகள் கழித்து ஜாமினில் விடுதலை ஆகி இருக்கிறார்.2015 வரை பெருவில் தங்கி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன்.