Friday, July 03, 2009

400. சுதந்திர தேவிக்கு பிறந்தநாள்


பெண்கள் பூவாய் சிரிக்கும்

தேசத்தில் பொன்னாய் கொட்டும்


பாடசாலைகள் பெண்பிள்ளைகளால்

நிரம்பிவழியும் தேசத்தில்

ஆயகலைகள் அனைத்தும் செழித்தோங்கும்

மங்கலங்கள் பொங்கி வழியும்


இன்பங்கள் அனைத்தையும்

ஆணுக்கும் பெண்ணுக்கும்

சமமாக்கும் தேசத்தில்

இவ்விரு இனங்களுக்கிடையான

சகோதரத்துவமும் பூத்து குலுங்கும்.


பெண்ணியத்தையும், சுதந்திரத்தையும்

ஜனநாயகத்தையும், விஞ்ஞானத்தையும்

சமூகவியலையும், அதற்கும் மேலான

நம்பிக்கை ஒளியையும்

உலக மக்கள் அனைவருக்கும் தந்த

சுதந்திரதேவியே...


சூலைத்திங்கள் நாலாம் நாள்

இன்று உன் பிறந்தநாள்.

உன் விடுதலையொளி உலகெங்கும் பரவட்டும்

விடுதலையடைந்த மானிட இனத்தின்

திறனுக்கு உன் தேசம் ஒரு சான்றாய் இருக்கட்டும்.


அன்னியன் என்னை அள்ளி அணைத்த

என் அமெரிக்க அன்னையே

வானம் உள்ளவரை

வையகம் உள்ளவரை

உன் தேசம் வாழட்டும்!!!

No comments: