Thursday, April 13, 2006

மார்க்ஸும் காந்தியும்

தமிழோவியத்தில் வெளியான என் படைப்பு.இதை பிரசுரம் செய்த தமிழோவியத்துக்கு என் நன்றி ******************************** இருக்கும் உலகை வைத்து இந்த இரு ஞானிகளும் திருப்தி அடையவில்லை.புதியதொரு பொன்னுலகம் படைக்க விரும்பினார்கள். மார்க்ஸ் காட்டிய பொன்னுலகம் இறைநம்பிக்கையை அழித்த, வர்க்க பேதமற்ற உலகம். காந்தி காட்டிய பொன்னுலகம் இறைநம்பிக்கை கொண்ட அவரவர் மதத்தின் நல்ல கொள்கைகளை அடிப்படையாக கொண்ட ராமராஜ்ஜியம். பொருளாதார கொள்கைகளில் இருவருக்கும் பெரிதாக வித்யாசமில்லை. பணக்காரனை இருவரும் வேறு வேறு காரணங்களுக்காக விரும்பவில்லை. "பணக்காரன் சுரண்டுகிறான்" என்பது மார்க்ஸின் வாதம். பணக்காரனை திருத்தி ஏழைகளுக்க்காக அவனை செலவு செய்ய வைக்கலாம் என்பது காந்தியின் எண்ணம். பணக்காரன் மேன்மேலும் பணக்காரன் ஆவதை இருவரும் விரும்பவில்லை. பெரும் ஆலைகளை விட குடிசைத்தொழிலை மேம்படுத்தலாம் என்பது காந்திய சோஷலிசத்தின் வாதம். கைராட்டையை அவர் விரும்பி தேர்ந்தெடுத்தது இந்த காரணத்தால் தான். பணக்காரன் தானாக விரும்பி சோஷலிசத்தை ஏற்க வேண்டும் என்பது காந்தியின் எண்ணமாக இருந்தது. அவனாக திருந்தி ஏழைக்கு உதவ வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். மார்க்ஸுக்கு இந்த மென்மையான வழிமுறையில் எல்லாம் நம்பிக்கை இல்லை."பணக்காரன் தரமாட்டான். அவனிடம் எதையும் கேட்காதே. நீயாக எடுத்துக்கொள்" என்றார். "எதிரி அடித்தால் வாங்கிக்கொள், நீ அடிவாங்குவதை பார்த்து அவன் திருந்துவான்" என்றார் காந்தி. எதிரியின் மனதில் இருக்கும் அவன் மதநம்பிக்கை அவனை திருத்தும் என்பது காந்தியின் எண்ணம். அடுத்தவனை அடிமைப்படுத்தும் எவனும் தன் மதத்துக்கு விரோதமாக தானே செயல்படுகிறான் ?அதை அவனுக்கு எடுத்துச்சொல்ல நம்மை நாமே மெழுகுவர்த்தியாகிக் கொள்வோம் என்பது காந்தியின் எண்ணம். காந்தியை அடித்த பிரிடிஷார் அவர் திருப்பி அடிக்காததால் அதிசயமடைந்தனர். அடிக்க அடிக்க இன்னும் அடி என அவர் சொன்னது அவர்கள் குற்ற உணர்ச்சியை அதிகப்படுத்தியது. இதே போல் சொன்ன இன்னொரு நபர் ஏசு என்பது குறிபிடத்தக்கது. ஒருவன் ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என ஏசு சொன்னார். அதை காந்தி 2000 வருடம் கழித்து செய்து காட்டியதும் புராட்டஸ்டண்டு பிரிட்டன் மக்களுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. ஏசுவை அடித்த ரோமானியர்களின் இடத்தில் தாங்கள் இருப்பது போல் பிரிடிஷார் உணர்ந்தனர். கிறிஸ்தவத்தின் அடிப்படையே guilt எனப்படும் குற்ற உணர்ச்சிதான். "அயலானை நேசி" என்ற கிறிஸ்தவ கொள்கையை மிக அழகாக அவர்களுக்கு பாடமாக எடுத்து சொல்லி வெற்றி அடைந்தார் காந்தி. மார்க்ஸுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. வலிமையே வெல்லும் என்பதை அவர் அழகாக உணர்ந்திருந்தார். வலியோனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு சுத்தமாக இல்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வலியோன் செலுத்தும் ஆதிக்கம் ஒழிய மெலியோன் வலியோனாக மாறூவதே சரி என அவர் நினைத்தார். "உரிமை என்பது பிச்சை அல்ல. கேட்டுப்பெறாதே. எடுத்துக்கொள்" என்றார் அவர். இந்த இருவரும் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிடற்கரியது. இவர்கள் இருவரின் சீடர்களும் மிகப்பெரும் நாடுகளின் தலைவர்களானார்கள். மிகப்பெரும் இரு கட்சிகள் இவர்களின் கொள்கைகளை தாங்கி உருவெடுத்தன. இவர்களுக்கு பின் வந்தவர்களின் குளருபடியால் இந்த இரு கட்சிகளும் இன்று தமது குருநாதர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக சென்று மக்களால் புறக்கணிக்கப்பட்டு நிற்கின்றன. சொல்லி வைத்தாற்போல் இந்த இருவர் சொன்ன பொருளாதார கொள்கைகளும் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டன. இருவர் சொன்ன போராட்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன. அடையாள உண்ணாவிரதம், சிறைவாசம் போன்றவை இன்று ஜோக்காக மாறிவிட்டன. பஸ் எரிப்பு, கடைமறியல் என காந்தியின் சத்தியாக்கிரகம் வன்முறையாக மாறிவிட்டது. மார்க்ஸ் சொன்னபடி துப்பாக்கி தூக்கியவர்கள் அதை கீழே போடும் வழி தெரியாமல் திகைக்கிறார்கள். இந்த இருவரின் உண்மையான சீடகோடிகள் இன்று அருகிவிட்டார்கள். பொன்னுலகம் வரும், உலகெங்கும் தமது பாதைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இன்னும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை திருத்த முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் சில தியாகிகள் வைத்திருக்கின்றனர். ரஷிய கம்யூனிஸ்ட் கட்சியை திருத்தி மார்க்ஸின் பொன்னுலகை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இன்னும் பல காம்ரேடுகள் வைத்திருக்கின்றனர். எனக்கு தோன்றுவது என்னவென்றால் குறைபாடுகள் உள்ள உலகை சகித்துக்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான். ஏற்றத்தாழ்வுகள்,வர்க்க பேதங்கள், போலித்தனங்கள் அனைத்தும் நிரம்பிய உலகில் நாம் வாழ்கிறோம். விஞ்ஞான, பொருளாதார முன்னேற்றத்தால் பசியை, வறுமையை ஒழிக்க முடியும் என நான் நம்புகிறேன். அதை செய்ய நாம் முன்னேற வேண்டும்.கல்வி பயில வேண்டும். அப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள். ************ இக்கட்டுரையை முத்தமிழ் குழுவில் வெளியிட்டபோது அதற்கு என் நண்பர் வேந்தன் அரசு அளித்த மதிப்புரை.இதை பின்னூட்டமாக வெளியிடாமல் கட்டுரையிலேயே வெளியிடுகிறேன்(செல்வன்) வேந்தன் அரசு எழுதிய மதிப்புரை அருமையான கட்டுரை.காந்தி, மார்க்ஸ் இருவருமே மனிதனின் அடிப்படை உணர்வான சுயநலத்துக்கு மதிப்பு கொடுக்க மறுத்து விட்டார்கள். அவர்களுடைய கொள்கையின் தோல்விக்கு காரணம் அதுவே.தனி மனிதனின் சுயனலத்தை பொருதுநலத்துக்கு சாதகமாக திருப்புவதே இனி புதிய பொருளாராம். அம்பானியின் சுயநலத்தை பயன்படுத்தி இந்திய நாட்டை இழையால் இணைக்க முடிந்தது. டாடாவின் சுயனலத்தை பயன்படுத்தி நாட்டின் இரும்பு வளத்தை நாட்டு மக்களுக்கு வழங்க முடிந்தது. நாராயண மூர்்த்தியின் சுயனலம் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வி கற்கும் போதே எதிர்காலத்தில் நம்பிக்கை உணர்வை தருகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டிய அடிப்படை தேவைகளான உண்டி, உடை, உறையுள் என்ற மூன்றும் வழங்குவது சோசலிஸமா?அல்லது நாட்டின் இருக்கின்ற செல்்வத்தை எல்லோரும் சமமாக பகிர்ந்து கொள்வதுதான் சோசலிசமா?முன்னது சாத்தியம். பின்னது இல்லை?

27 comments:

ஜெயஸ்ரீ said...

நல்ல கட்டுரை.

மனிதனின் இயற்கையான இயல்புக்கு மாறான எந்தக் கோட்பாடும் தோல்வியடையும் என்பதற்கு இவர்கள் இருவரும் நல்ல உதாரணங்கள். வல்லவனே வாழ்வான் (survival of the fittest) என்பது இயற்கை நியதி.

A very famous conversation from Ayn Rand's "We the Living "

I loathe your ideals."
"Why?"
"For one reason, mainly, chiefly, and eternally, no matter how much your Party promises to accomplish, no matter what paradise it plans to bring mankind. Whatever your other claims may be, there's one you can't avoid, one that will turn your paradise into the most unspeakable hell: your claim that man must live for the state."

"What better purpose can he live for?"

"Don't you know," her voice trembled suddenly in a passionate plea she could not hide," don't you know that there are things, in the best of us, which no outside hand should dare touch? Things sacred because, and only because, one can say: 'This is mine'? Don't you know that we live only for ourselves, the best of us do, those who are worthy of it? Don't you know that there is something in us which must not be touched by any state, by any collective, by any number of millions?"

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு செல்வன். உங்கள் நண்பர் வேந்தன் அரசு அளித்த மதிப்புரையும் அருமையாக இருக்கிறது.

Unknown said...

don't you know that there are things, in the best of us, which no outside hand should dare touch? Things sacred because, and only because, one can say: 'This is mine'? Don't you know that we live only for ourselves, the best of us do, those who are worthy of it? Don't you know that there is something in us which must not be touched by any state, by any collective, by any number of millions?"////

அருமையான கருத்து ஜெயஸ்ரி,

இதை அடிப்படையாய் கொண்டு 1984 எனும் நூலை ஜார்ஜ் ஆர்வெல் எழுதினார்.மார்க்ஸின் சீடர்களான அமெரிக்க லிபரல்கள் இந்த கருத்தை இப்போது முன்னிறுத்துகிறார்கள்.(ரஷ்ய கம்யூனிஸ்டுகளிடமிருந்து அவர்கள் வேறுபட்டவர்கள்.)மார்க்ஸின் மதம் அரசியல் பிரிப்பும் இதை அடிப்படையாய் கொண்டதே.

Unknown said...

நல்ல பதிவு செல்வன். உங்கள் நண்பர் வேந்தன் அரசு அளித்த மதிப்புரையும் அருமையாக இருக்கிறது. //

நன்றி குமரன்,

வேந்தன் அரசு மிகச்சிறந்த தமிழ் அறிஞர்.இக்கட்டுரையை எழுதி தமிழோவியத்துக்கு அனுப்பி வைத்த பின் தான் அவரின் மதிப்புரை கிடைத்தது.அதனால் தமிழோவியத்தில் அதை இட முடியவில்லை

Unknown said...

பல இளைஞர்கள் இருக்கிறார்கள்
இதே சிந்தனையுடன்..
சிந்திக்கவேண்டிய பதிவு
நன்றி செல்வன்
சிந்திக்க வைத்தமைக்கு..!

--
நன்றி நித்யா
பலரை சிந்திக்க வைத்தது கலாம் தான்.அவர் கருத்துக்களை நான் எடுத்து சொல்ல மட்டுமே செய்கிரேன்

அன்புடன்
செல்வன்

Sivabalan said...

Very Good Blog.

Well Done!!!

Unknown said...

thanks sivabalan

சிவக்குமார் (Sivakumar) said...

நல்ல பதிவு.

சந்திப்பு said...

செல்வன் காந்தியும், மார்க்சும் இருவேறு துருவங்கள் இருவரின் பயணமும் வேறு, வேறு திசை வழியிலானது. இருவரையும் ஒப்பிடுவது என்பது பொருத்தமற்றது. மனிதனை, மனிதன் சுரண்டுவதை ஏற்றுக் கொண்டவர் மகாத்மா! மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறியவர் காரல் மார்க்சு. காந்திய போராட்டம் சாதித்ததைத் விட, சமரசத்திற்கு உள்ளானதுதான் அதிகம். மார்க்சின் போராட்டம் இன்றைக்கும் உலக மக்களில் 150 கோடிக்கும் அதிகமான மக்களிடையே வாழ்வொளியை ஏற்றி வைத்திருக்கிறது. எதிர்காலம் மார்க்சின் பாதையை நோக்கித்தானேயொழிய, காந்தியின் பாதையில் அல்ல!

சொல்லி வைத்தாற்போல் இந்த இருவர் சொன்ன பொருளாதார கொள்கைகளும் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டன. இருவர் சொன்ன போராட்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன. அடையாள உண்ணாவிரதம், சிறைவாசம் போன்றவை இன்று ஜோக்காக மாறிவிட்டன. பஸ் எரிப்பு, கடைமறியல் என காந்தியின் சத்தியாக்கிரகம் வன்முறையாக மாறிவிட்டது. மார்க்ஸ் சொன்னபடி துப்பாக்கி தூக்கியவர்கள் அதை கீழே போடும் வழி தெரியாமல் திகைக்கிறார்கள்.
இருவரின் போராட்ட முறைகளும் ஒன்றல்ல: மார்க்சின் போராட்டம் முற்றிலும் சுரண்டலுக்கு முடிவு கட்டுவது. காந்திய போராட்டம் நிலவுடைமை சமூகத்தில் நீ உனக்கு கிடைத்ததை வைத்து பிழைத்துக் கொள்ளும் எனும் எளிய சுயதொழில் அடிப்படையான பொருளாதாரத்தைச் சார்ந்தது. காந்திய பொருளாதார வழி சமூக முன்னேற்றத்திற்கு - மக்களின் பொருளாதார தேவைகளுக்கு வழிகாட்டுவதாகாது! மார்க்சின் பொருளதாரம் மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவதோடு, மனிதனின் சுரண்டலுக்கும் முடிவு கட்டும் உயர்ந்த நோக்குடையது. இது அமுல்படுத்தக்கூடிய ஒன்றே, இன்றைக்கும் கியூபாவில், சீனாவில், வியட்நாமில், முன்னாள் சோவியத்தில், வடகொரியாவில் அமலாகியது. இன்றைக்கு புதியதாக வெனிசுலா, பொலிவியா என பல நாடுகள் மார்க்சின் அடிப்படையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் பாதையில் இந்தியாவும் பயணிக்கும் அதற்கு வழிகாட்டுவதுதான் மேற்குவங்கம் - கேரளம்.



இந்த இருவரின் உண்மையான சீடகோடிகள் இன்று அருகிவிட்டார்கள்

மார்க்சு இந்த நூற்றாண்டின் மகத்தான மனிதர் என்று பி.பி.சி. தேர்ந்தெடுத்தது எதை காட்டுகிறது. அத்துடன் உலகில் சுரண்டல் இருக்கும், தொழிலாளர்கள் இருக்கும் மார்க்சும் இருப்பார். இன்றைக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஆத்மாவாக மார்க்சு திகழ்கிறார். இது அருகக் கூடிய ஒன்றல்ல பெருகக்கூடிய ஒன்று செல்வன்.



எனக்கு தோன்றுவது என்னவென்றால் குறைபாடுகள் உள்ள உலகை சகித்துக்கொள்ள நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்பதுதான்.
இதுபோன்ற தத்துவ ஞானிகளுக்காகத்தான் மார்க்சு ஒன்றை கூறுகிறார். உலகை வியாக்கினாம் செய்வதல்ல இன்றைய பிரச்சினை, அதை எப்படி மாற்றுவது என்பதுதான்.


அப்துல்கலாம் சொன்ன வழி தான் எனக்கு சரியென படுகிறது. காந்தியும் மார்க்ஸும் சாதிக்க முடியாததை அப்துல்கலாமின் வழி சாதிக்குமோ இல்லையோ இருக்கும் உலகை மேம்படுத்த அது உதவும் என நான் நம்புகிறேன். பொன்னுலகமும், ராமராஜ்ஜியமும் எப்போதுமே சாத்தியமில்லை என்ற முடிவுக்கும் நான் வந்துவிட்டேன். அவை இரு மனிதர்களின் கனவுலகங்கள். உடோபியாக்கள்.
இன்றைய இந்தியாவில் அப்துல் கலாமின் கனவுகள், வெறும் கனவுகளோக இருக்கும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அப்துல் கலாமிற்கு தேவை பலமான இந்தியா, சூப்பர் பவர் இந்தியா, அதாவது மக்கள் எலும்பும், தோலுமாக இருந்தாலும் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும், சூப்பர் பவர் நாடாக இருக்க வேண்டும் இதுஒரு தத்துவமா?

இறுதியாக மார்சு என்றைக்கும் கடவுளாக மாட்டார்! அவரை கடவுளாக்கும் முயற்சியை தயவு செய்து கைவிடுங்கள்.

Unknown said...

நன்றி பெருவிஜயன் மற்றும் அஷ்லின்.

பதிலுக்கு நன்றி சந்திப்பு.உங்கள் வாதங்களுக்கு விரிவான பதில் தரவேண்டும்.இந்திய நேரம் ஞாயிற்றுக்கிழமை அன்று பதில் இடுகிறேன்.

மார்க்ஸ் பற்றி நான் இதே பதிவில் எழுதிய இன்னொரு கட்டுரை இதோ

http://holyox.blogspot.com/2006/02/blog-post_04.html

அன்புடன்
செல்வன்

Muthu said...

செல்வன்,

நல்ல பதிவு.ஆனால் சில பொருள்குற்றங்கள் உள்ளன.


காந்தியின் வழிமுறை வெள்ளையர்கள் இடம் மட்டுமே செல்லுபடியாக கூடியவை.(இதை நீங்களே எழுதிவிட்டீர்கள்)

மார்க்சியம் உலகை வெறும் சுரண்டப்படுபவர்கள் இடமாக பார்க்கிறது என்று முக்கியமான கருத்து எனக்கும் நண்பர் சந்திப்பு மூலமாக சமீபத்தில் தான் தெரிந்தது.நீங்களும் சொல்லி உள்ளீர்கள்.

நான் மார்க்சியத்தை மாய்மை இல்லாத பிரபஞ்ச நோக்கு என்பதாகத்தான் எடுத்துக்கொண்டேன்.அந்த இடத்தில் இருந்து தத்துவத்தை வேறு விதமாக எழுதவேண்டும் என்பது என் கருத்து.சந்திப்பு கூறும் மார்க்சியம் இறுக்கமானது.இப்போதைக்கு இவ்வளவுதான்.மீண்டும் வருவேன்.

Muthu said...

அப்துல்கலாம் கனவையும் உட்டோப்பியா என்றெ என்னால் வகைப்படுத்த முடிகிறது.

Unknown said...

அன்பின் முத்து,

கலாம் சொல்லும் முன்னேறிய இந்தியா என்பது பொருளாதார மற்றும் ராணுவ வல்லரசு.கலாமின் வரிகளில்

"தற்போது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எப்படி உள்ளனவோ அதுபோல் இந்தியாவையும் நாம் ஆக்க வேண்டும்"

இது கண்டிப்பாக உடோபியா இல்லை என நான் நம்புகிறேன்.

அன்புடன்
செல்வன்

Unknown said...

சகோதரரே சந்திப்பு,

//மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கூறியவர் காரல் மார்க்சு.//

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லியவண்னம் செயல்"

வல்லவன் வாழ்வான் எனும் இயற்கை விதியை(நன்றி ஜெயஸ்ரி) மீற முயலும் எத்தத்துவமும் தோல்வியை தான் தழுவும்.

லெனின் திருடனையும் பணக்காரனையும் ஒப்பிட்டு இருவரும் செய்வது திருட்டே என்றார்.அந்த மனப்பான்மையில் தான் நீங்கள் சுரண்டல் என்பதை பயன்படுத்துகிறீர்கள் என நினைக்கிறேன்.

பொருளாதார சமத்துவம் சாத்தியமில்லை.செல்வம் சேர்ப்பதை சுரண்டல் என சொல்லிக்கொண்டிருப்பதால் அது சுரண்டல் ஆகாது.மனிதனுக்கு மனிதன் திறமையில் ஆற்றலில் அறிவில் வேறுபடும்போது பொருளாதார சமத்துவம் எக்கலத்திலும் சாத்தியமில்லை.


//மார்க்சு இந்த நூற்றாண்டின் மகத்தான மனிதர் என்று பி.பி.சி. தேர்ந்தெடுத்தது எதை காட்டுகிறது.//

அவர் உண்மையிலேயே மகத்தான மனிதர் என்பதை காட்டுகிறது.

மார்க்ஸின் தத்துவங்கள் மீது எனக்கு மிகப்பெரும் மதிப்பு உண்டு.பின்நவீனத்துவத்தின்,பெண்ணியத்தின்,ஆராய்ச்சித்துறைகளின் தந்தையும் தாயும் மார்க்ஸ் தான்.ஆனால் அவர் பொருளாதார கொள்கைகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

//இதுபோன்ற தத்துவ ஞானிகளுக்காகத்தான் மார்க்சு ஒன்றை கூறுகிறார். உலகை வியாக்கினாம் செய்வதல்ல இன்றைய பிரச்சினை, அதை எப்படி மாற்றுவது என்பதுதான்//

உலகை மாற்ற வேண்டும் என மார்க்ஸ் சொன்னதை ஏற்ருக்கொள்கிறேன்.ஆனால் அவர் மாற்றுவதற்கு சொன்ன வழிமுரைகளையும் உலகம் எப்படி மாற்றப்பட வேண்டும் என்று சொன்னதையும் தான் ஏற்கமுடியவில்லை

//இன்றைய இந்தியாவில் அப்துல் கலாமின் கனவுகள், வெறும் கனவுகளோக இருக்கும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. அப்துல் கலாமிற்கு தேவை பலமான இந்தியா, சூப்பர் பவர் இந்தியா, அதாவது மக்கள் எலும்பும், தோலுமாக இருந்தாலும் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும், சூப்பர் பவர் நாடாக இருக்க வேண்டும் இதுஒரு தத்துவமா?//

தவறு.கலாம் சொன்ன இந்தியா அது அல்ல

கலாம் சொல்லும் முன்னேறிய இந்தியா என்பது பொருளாதார மற்றும் ராணுவ வல்லரசு.கலாமின் வரிகளில்

"தற்போது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எப்படி உள்ளனவோ அதுபோல் இந்தியாவையும் நாம் ஆக்க வேண்டும்"

///இறுதியாக மார்சு என்றைக்கும் கடவுளாக மாட்டார்! அவரை கடவுளாக்கும் முயற்சியை தயவு செய்து கைவிடுங்கள். //

ஐயா அதை நான் தான் சொல்லவேண்டும் என நினைக்கிறேன்.

மார்க்ஸ் சொன்னார் என்பதால் எதுவும் வேதவாக்கல்ல.அவர் தத்துவ மேதை.அவர் தத்துவங்களை ஏற்கலாம்.ஆனால் அவர் பொருளாதார நிபுணரல்ல.அதனால் அவர் சொன்ன பொருளாதாரக் கருத்துக்களை ஏற்கவேண்டியதில்லை.

Anonymous said...

நன்று

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நல்ல பதிவு செல்வன்.வாழ்த்துக்கள்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...

அப்துல் கலாம் கனவை நானும் ரசிக்கிறேன். வழி என்று ஏதாவது சாத்தியமான ஒன்றை வைத்திருக்கிறாரா?

அவர் கூறும் நடப்பதெல்லாம் நன்மைக்கே,தனிமனிதன் தானாக திருந்துவது இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக நாம் (மனிதகுலம்) காணும் கனவுகள்தான்.

சந்திப்பு said...


மார்க்ஸ் சொன்னார் என்பதால் எதுவும் வேதவாக்கல்ல.அவர் தத்துவ மேதை.அவர் தத்துவங்களை ஏற்கலாம்.ஆனால் அவர் பொருளாதார நிபுணரல்ல

செல்வன் தங்களிடம் உள்ள பாசிட்டிவ் அணுகுமுறை என்னை கவர்ந்திருக்கிறது. அதே சமயம் நீங்கள் கடக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளதையும் காட்டுகிறது. மார்க்சை பொருளாதார மேதையல்ல என்று சொன்ன முதல் நபர் நீங்களாத்தான் இருக்க முடியும். மார்க்சின் கேபிடலை படிக்காத எந்த பொருளாதார மாணவரையாவது நீங்கள் காட்ட முடியுமா? இது சவால் அல்ல. நிதர்சனம்.


"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லியவண்னம் செயல்"

வல்லவன் வாழ்வான் எனும் இயற்கை விதியை(நன்றி ஜெயஸ்ரி) மீற முயலும் எத்தத்துவமும் தோல்வியை தான் தழுவும்.

வல்லவர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. மார்க்சிய சித்தாந்தப்படி இந்த உலகை சிருஷ்டித்த உழைப்பாளிகள்தான் வல்லவர்கள். உலகில் 400 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த உழைப்பாளிகள்தான். அதனால்தான் மார்க்சு கூறினால் உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்! என்று இந்த உலகத் தொழிலாளர்களும், உள்ளூர் தொழிலாளர்களும் ஒன்றுபட்டால் அற்ப ஜீவிகளாக இருக்கும் முதலாளிகள் இவர்களோடு சேர்ந்து தொழிலாளிகளாக மாறிவிடுவர். தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டாமல் முதலாளிகள் ஜீவிக்கவே முடியாது! மார்க்சியம் ஒரு கற்பனாவாத தத்துவமல்ல - விஞ்ஞானப்பூர்வமான தத்துவம். இது ஒரு சமூக விஞ்ஞானம் இந்த விஞ்ஞானம் முதன் முதலில் ரஷ்யாவில் மனிதனை மனிதன் சுரண்டும் முதலாளித்துவ ஈனத்தனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து தொழிலாளிகளை உலகின் தலை சிறந்த தலைவர்களாக - எஜமானனாக மாற்றியது. இன்று அது கியூபாவிலும், சீனாவிலும், வடகொரியாவிலும், வியட்நாமிலும் மக்களை முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்துள்ளது. இன்னும் மீதமிருக்கும் ஒட்டுமொத்த உலகையும் மார்க்சியம் விடுவிக்கும். அந்த பயணத்தில் நீங்களும் இருப்பீர்கள் என நம்புகிறேன்.


பின்நவீனத்துவத்தின்,பெண்ணியத்தின்,ஆராய்ச்சித்துறைகளின் தந்தையும் தாயும் மார்க்ஸ் தான்.

செல்வன் தயவு செய்து இதை வெளியில் சொல்லி விடாதீர்கள். மார்க்சு பின்நவீனத்துவவாதியல்ல. பின் நவீனத்துவவாதிகள் பொதுவுடைமை விரோதிகள். அது ஒரு மாயாவாத தத்துவம். இது மார்க்சியத்தை மறுக்கும் தத்துவம். மார்க்சியம் எதார்த்தவாதம் - உலகை முன்னோக்கி எடுத்துச் செல்லும் எதார்த்தவாதம். அது ஒரு விஞ்ஞான தத்துவம். பெண்ணியம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை. இன்றைய பெண்ணியம் - ஆண்களை மறுக்கும் பெண்ணியவாதமாகத்தான் இருக்கிறது மார்க்சியம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சமூகத்தில் ஆணும் - பெண்ணும் அனைத்துவிதத்திலும் சமம் என்றே பார்க்கிறது. இருவரின் உரிமைகளும் சமத்தன்மை உடையது என்று மார்க்சியம் பார்க்கிறது. நன்றி செல்வன்.


உலகை மாற்ற வேண்டும் என மார்க்ஸ் சொன்னதை ஏற்ருக்கொள்கிறேன்.ஆனால் அவர் மாற்றுவதற்கு சொன்ன வழிமுரைகளையும் உலகம் எப்படி மாற்றப்பட வேண்டும் என்று சொன்னதையும் தான் ஏற்கமுடியவில்லை

அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் புரிந்து கொண்டதை விரிவாக விளக்கவும்.
மார்க்சிய தத்துவத்தின் அடிப்படை இதுதான்
--மாறும் என்ற வார்த்தையைத் தவிர அனைத்தும் மாறக்கூடியதே--
எனவே இப்போது இருக்கும் முதலாளித்துவம் காணாமல் போவது தவிர்க்க முடியாதது.
நன்றி செல்வன்.

ranjit kalidasan said...

கட்டுரையும் அதற்கு வேந்தன் அளித்த மதிப்புரையும் உன்மையையே பறைசாற்றுகின்றன. அருமையான கட்டுரை செல்வன். வலைப்பூக்களிலே உங்களது மிகவும் வித்தியாசமானதும் அதே சமயத்தில், சிந்திக்க வைப்பதுமாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.

மஞ்சூர் ராசா said...

மார்க்ஸியம் சுரண்டுபவர்களுக்கு எதிரானது என்றாலும் இன்றும் அதன் வழி சிறந்த வழியாகத்தான் இருக்கிறது. காந்தியவழி இன்றைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அப்துல் கலாமின் வழி நிதர்சனமான வழியாக எனக்கு தெரிகிறது.

விளக்கமான கட்டுரையை எழுதியதற்காக செல்வனுக்கு ஒரு ஓ போடும் அதே நேரத்தில், பின்னூட்டங்களிலும் விளக்கமாக கருத்துக்களை எடுத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

Unknown said...

மார்க்சை பொருளாதார மேதையல்ல என்று சொன்ன முதல் நபர் நீங்களாத்தான் இருக்க முடியும். மார்க்சின் கேபிடலை படிக்காத எந்த பொருளாதார மாணவரையாவது நீங்கள் காட்ட முடியுமா? இது சவால் அல்ல. நிதர்சனம்////

சகோதரரே,

மார்க்ஸ் சட்டம் படித்தவர்.தத்துவ மேதை.அவர் டாக்டர் பட்டம் பெற்றது தத்துவத்தில் தானே தவிர பொருளாதாரத்தில் அல்ல.

மார்க்ஸின் டாஸ் கேபிடலை பொருளாதார மாணவர்கள் படிப்பது உண்மைதான்.சூரியன் தான் பிரபஞ்சத்தின் மையம் என்ற கலீலியோவை இன்றைய விஞ்ஞானிகள் படிக்கிறார்கள் அல்லவா?அது போல் தான்.

மார்க்ஸீயம் 19ம் நூறாண்டின் பொருளாதார கொள்கை.அதன்பின் சிறந்த பொருளாதார கொள்கைகளே வரவில்லை என்று சொல்ல முடியுமா?
மார்க்ஸீயம் விஞ்ஞானமென்றால் அதில் தேக்கம் இருக்க கூடாது.பழைய கொள்கைகள் மறுக்கப்பட்டு புது கொள்கைகள் நிறுவப்படுவது தான் விஞ்ஞானம்.

//மார்க்சிய சித்தாந்தப்படி இந்த உலகை சிருஷ்டித்த உழைப்பாளிகள்தான் வல்லவர்கள். உலகில் 400 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த உழைப்பாளிகள்தான்.//

எண்ணிக்கையை வைத்து வலிமை தற்போது மதிப்பிடப்படுவதில்லை.

தற்போது knolwedge is power.

///இந்த உலகத் தொழிலாளர்களும், உள்ளூர் தொழிலாளர்களும் ஒன்றுபட்டால் அற்ப ஜீவிகளாக இருக்கும் முதலாளிகள் இவர்களோடு சேர்ந்து தொழிலாளிகளாக மாறிவிடுவர். தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டாமல் முதலாளிகள் ஜீவிக்கவே முடியாது! ///


முதலாளியும் ஒரு தொழிலாளிதான் சகோதரரே.அவன் கடின உழைப்பு உழைக்கவில்லை என்கிறீர்களா?அல்லது ஒரு தொழிற்சாலை இயங்க முதலாளியே தேவை இல்லை என்கிறீர்களா?

முதலாளி சிந்தனாசக்தி,நிர்வாகத்திறன்,சந்தைப்படுத்தும் திறன்,மனோதத்துவம் என பல கலைகளையும் அறிந்தவனாக இருக்க வேண்டும் நண்பரே.

இப்படி ஒரு முதலாளியை ஒழித்துவிட்டு எந்த நிர்வாகமும் இயங்க முடியாது.அரசு முதலாளியை replace செய்ய முடியாது.

//இன்று அது கியூபாவிலும், சீனாவிலும், வடகொரியாவிலும், வியட்நாமிலும் மக்களை முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்துள்ளது. இன்னும் மீதமிருக்கும் ஒட்டுமொத்த உலகையும் மார்க்சியம் விடுவிக்கும்.//

வடகொரியாவில் எலிகளையும்,புல்லையும் உண்டு மக்கள் ஜீவிக்கிறார்கள்.50 ஆண்டுகளாக முடியாட்சி நடக்கிறது அங்கு.கியூபாவில் தேர்தல் நடத்தப்பட்டால் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவரும்.சீனாவிலும் ரஷ்யாவிலும் கோக்கும்,பெப்சியும்,மைக்ரோசப்ப்டும் சக்கைப்போடு போடுகின்றன.


//மார்க்சு பின்நவீனத்துவவாதியல்ல. பின் நவீனத்துவவாதிகள் பொதுவுடைமை விரோதிகள். அது ஒரு மாயாவாத தத்துவம். இது மார்க்சியத்தை மறுக்கும் தத்துவம். மார்க்சியம் எதார்த்தவாதம் - உலகை முன்னோக்கி எடுத்துச் செல்லும் எதார்த்தவாதம்.//

நண்பரே

மார்க்ஸின் சிஷ்யரான டெர்ரிடா,ரோர்ட்டி போன்றவர்கள் பின்நவீனத்துவ தத்துவ உலகில் புரட்சியையே உருவாக்கினார்கள்.மார்க்ஸை இவர்கள் பின்நவீனத்துவத்தின் குருவாக ஏற்கிறார்கள்.

மார்க்ஸ் பழைய தத்துவங்களை விமர்ஸித்தது போல் இவர்கள் மார்க்ஸின் தத்துவங்களை விமர்ஸித்தார்கள்.மார்க்ஸின் குரு .மார்க்ஸ் இவரது தத்துவங்களை கடுமையாக சாடினார்.இதே போல் மார்க்ஸின் சிஷ்யர்கள் மார்க்ஸின் தத்துவங்களை கடுமையாக விமர்சித்தார்கள்.

இது மரியாதை குறைவு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.குருநாதருக்கு சிஷ்யர்கள் செய்யும் மரியாதை.பின்நவீனத்துவத்தில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென்று ஏதும் கிடையாது.

Paths to the Postmodern: From Kierkegaard through Marx and Nietzsche

Unknown said...

மார்க்ஸின் குரு hegel.

Unknown said...

மிக்க நன்றி ரஞ்சித்

Unknown said...

அப்துல் கலாம் கனவை நானும் ரசிக்கிறேன். வழி என்று ஏதாவது சாத்தியமான ஒன்றை வைத்திருக்கிறாரா?

அவர் கூறும் நடப்பதெல்லாம் நன்மைக்கே,தனிமனிதன் தானாக திருந்துவது இதெல்லாம் பல நூற்றாண்டுகளாக நாம் (மனிதகுலம்) காணும் கனவுகள்தான். ////

நண்பரே முத்து,

தனிமனிதன் திருந்தாவிட்டால் தேசம் உருப்பட வாய்ப்பே இல்லை.அமெரிக்காவில் தனிமனிதன் திருந்தினான்.இந்தியாவில் ஏன் முடியாது?

கலாம் சொல்லும்ம் வழி குழந்தைகளை அணுகுவது.இன்ரைய குழந்தைகள் நாளைய குடிமக்கள்.அதனால் அவர்களை அணுகி பேசுகிறார்.நல்ல குடிமக்களாக இருக்க சொல்கிரார்.

அவர் மட்டும் தனியாக அதை செய்ய முடியாது.நாமும் ஒத்துழைக்க வேண்டும்.நாம் நல்ல குடிமக்களாக இருந்து முடிந்தவரை மற்ற்வர்க்ஜளுக்கும் எடுத்து சொல்ல வேண்டும்.

Unknown said...

அப்துல் கலாமின் வழி நிதர்சனமான வழியாக எனக்கு தெரிகிறது///.

நன்றி மஞ்சூர் அண்ணா,
இதுவே என் கருத்தும்