Wednesday, February 01, 2006

உயர்ந்த மனிதரை பார்க்க வேண்டும்

ஒரு இளைஞனுக்கு ஊரில் பிரச்சனை,வீட்டிலும் பிரச்சனை.வாழவிருப்பமின்றி மலையுச்சிக்கு போய் சாக முடிவெடுத்தான்.மலையுச்சியில் ஒரு குடியானவன் அவனை தடுத்து நிறுத்தினான்.தனது ஊரில் ஒரு உயர்ந்த மனிதர் இருப்பதாகவும் அவரை சந்தித்தால் அந்த இளைஞனின் பிரச்சனைகள் தீர ஆலோசனை சொல்வார் என்றும் குடியானவன் சொன்னான். அந்த விலாசத்தை வாங்கிக்கொண்டு இளைஞன் கிளம்பினான்.அந்த விலாசத்தில் ஒரு எளிய வீடு இருந்தது.அதன் திண்ணையில் ஒரு வயதானவர் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். "ஐயா..இந்த வீட்டில் ஒரு உயர்ந்த மனிதர் இருக்கிறாராமே.அவரை நான் பார்க்க முடியுமா?" என்று இளைஞன் அவரிடம் பணிவுடன் கேட்டான். "என்னப்பா விஷயம்?அவரை நீ ஏன் பார்க்க வேண்டும்?" என்று கேட்டார் வயதானவர். "ஐயா.எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்.வாழவே பிடிக்கவில்லை" என்றான் இளைஞன். "சரி அப்போது அவசியம் நீ உயர்ந்த மனிதரை சந்திக்கத்தான் வேண்டும்.உள்ளே வா" என்றார் பெரியவர். இருவரும் வீட்டுக்குள் போனார்கள்.சிறிய வீடு.அழகாக இருந்தது.முன்வாசல் வழியாக அவனை கூட்டிக்கொண்டு சென்றார் பெரியவர்.வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றான் இளைஞன்.நேராக பின்வாசலுக்கு சென்றார் பெரியவர்.பின்வாசல் கதவை திறந்தார்.குழப்பத்துடன் வெளியே வந்தான் இளைஞன். "போய் வா அப்பனே" என்றார் பெரியவர். "ஐயா என்ன சொல்கிறீர்கள்?உயர்ந்த மனிதரை நான் பார்க்கவே இல்லையே?" என்றான் இளைஞன். "இப்போது நீ பார்த்தது அவரைத் தான்" என்றார் பெரியவர்."இனி மேல் நீ வாழ்வில் பார்க்கும் ஒவ்வொரு மனிதரையும்,- அது குழந்தையானாலும் சரி,கிழவரானாலும் சரி- உயர்ந்த மனிதராகவே கருது.நடத்து.அப்படி நீ செய்தால் உன் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அது தானாகவே தீர்ந்து விடும்" என்றார் பெரியவர். தனது ஊரை நோக்கி நடக்கத் துவங்கினான் தெளிவு பெற்ற இளைஞன். (This is a zen story)

5 comments:

Unknown said...

selvan, I really don't get this? treating everyone equally will solve this guy's problem? how? //

The holy man advised the youth to treat everyone with respect.Once he does that they too will respect him and the youth's problems will be automatically solved.

//and who is that guy in the picture... One of the 'Uyarndha manithan'? :))) //

Since everybody is a 'uyarntha manithan' that guy in picture too is a uyarntha manithan:-)))

G.Ragavan said...

நல்ல கதை. நல்ல கருத்து.

Unknown said...

Thanks a lot ragavan

குமரன் (Kumaran) said...

செல்வன். நல்லாகீதுபா...

Unknown said...

Thanks a lot aanmika super star