tag:blogger.com,1999:blog-20987560.post114953197141026621..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 98.இந்து வளர்ச்சி விகிதத்தை அழித்த மன்மோகன் சிங்Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-20987560.post-74688662802122189522008-01-22T19:29:00.000-08:002008-01-22T19:29:00.000-08:00மிக அருமையான பதிவு.பல புதிய விசயங்கள் தெரிந்துகொள்...மிக அருமையான பதிவு.<BR/><BR/>பல புதிய விசயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.<BR/><BR/>ஆரோக்கியமான பின்னூட்டங்களும் மிக அருமை.<BR/><BR/>நன்றி செல்வன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1152510613303115552006-07-09T22:50:00.000-07:002006-07-09T22:50:00.000-07:00ஒரு பத்தாயிரம் பணியாளர்கள் கொழுத்து வாழ நாட்டின் எ...ஒரு பத்தாயிரம் பணியாளர்கள் கொழுத்து வாழ நாட்டின் எதிர்காலத்துக்கு முட்டுகட்டை போட்டு கலைஞர் குழாம் விடுத்த "நடுவண் அரசில் இருந்து விலகல்" எச்சரிக்கை மிகவும் கண்டிக்கதக்கது.<BR/><BR/>ஒரு வேளை கஞ்சிக்கு இல்லாமல் கும்பி காய்பர்கள் கோடானு கோடி இந்த நாட்டில் இருக்கும்போது அரசு இவர்களுக்கு மட்டும் வேலை உத்திரவாதம் கொடுக்க வேண்டுமா?<BR/><BR/>இவர்களுடைய திறமைக்குறைவால் மின்சாரம் அதன் உண்மையான விலைக்கு விற்கப்படாமல் அதிக விலைகொடுத்து நாட்டுமக்கள் பல்லாயிரம் கோடி இழக்கிறார்கள். அது யார் கண்னிலும் படவில்லையா?இந்திய பொருட்களின் உற்பத்தி செல்வு கூடுவதால் வெளி நாட்டு வணிகத்தொடு போட்டி இடமுடியாமல் தொழில் அதிபர்கள் திண்டாடுகிறார்கள். <BR/><BR/>ஒரு 10 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்று அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை செய்யலாமே. எத்தனையோ ஏழைகளுக்கு நன்மைகள் செய்யலாம். <BR/> <BR/>டாடா, ரெலைன்யன்ஸ் போன்ற தனியார் தொழில்களில் வேலை செய்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? இவர்களுக்கு வேலை செய்வதற்கு என்ன கேடு.<BR/>கலைஞருக்கு இன்னமும் பொதுவுடைமை என்ற சனி விடவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149766071085823892006-06-08T04:27:00.000-07:002006-06-08T04:27:00.000-07:00//திராவிட் 3.5 ரேட்டில் அமைத்துக் கொடுத்த தளத்தில்...//<BR/>திராவிட் 3.5 ரேட்டில் அமைத்துக் கொடுத்த தளத்தில்தான் இன்று தோனி 8.5% அடிக்கமுடிகிறது :) மேலும் டீம் ஒத்துழைப்பு இல்லாமல் அதே மன்மோகனும் தடுமாறுகிறார்தானே.<BR/>//<BR/><BR/>திராவிட் 3.5 ரேட்டில் அடிப்பதற்காக தெண்டுல்கரையெல்லாம் விரட்டிவிட்டது எங்கே போய்ச் சொல்வது...அன்றே தெண்டுல்கர் ரேஞ்சில் அடித்திருக்கவேண்டியது...இன்று சீனாவை முந்தியிருக்கலாம், லேட் பிக் அப் ஆனது தப்பு என்பதை மறுக்கமுடியாது.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149746355087399672006-06-07T22:59:00.000-07:002006-06-07T22:59:00.000-07:00அருமையான இடுகை. இந்திய பொருளாதார கொள்கையின் வரலாற்...அருமையான இடுகை. இந்திய பொருளாதார கொள்கையின் வரலாற்றை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.<BR/>என்னைப் பொறுத்தவரை இக்கொள்கைகள் அவை எடுக்கப்படும் சூழல், காலம் மற்றும் ஏனய பிற காரணங்களால் ஏற்புடையவையாகின்றனவே தவிர ஒரு மனிதரால் திசை திருப்பப் படுவதாக சொல்ல இயலவில்லை. இந்திய பொருளாதாரத்தின் நல்லகாலம் அந்த திருப்பத்தின் துவக்கத்தின்போது தகுதியானவர் அமைந்ததுதான். மற்றபடி சுதந்திர இந்தியாவின் ஆரம்பகாலங்களில் இருந்த பற்றாக்குறை காலத்தில்,இருக்கும் ஆக்கசக்தியை மக்களுக்கு வேண்டிய வளர்ச்சிப் பணிகளில் ஒதுக்கிவிட அரசின் கட்டுப்பாடுகளும் பொதுத்துறை நிறுவனங்களும் வேண்டியிருந்தன. அரசு அமைத்த IIT,IIMதானே இன்று அசுர வளர்ச்சிக்கு வித்துட்டுள்ளன. கணினி கள் 1980களில் வர ஆரம்பித்தபிறகே குறைந்த மூலதனத்தில் தொழில் ஆரம்பிக்க முடிந்ததது. அதற்கு முன் அரசு கனரக தொழிற்சாலைகளை அமைத்ததாலே தானே வேலைவாய்ப்பு கொடுக்க முடிந்தது. இன்று இந்தியா பல துறைகளில் தன்னிறைவு தேசமாக உள்ளது; ஆசிய புலிகள் அவ்வாறு சொல்ல முடியுமா ?<BR/><BR/>திராவிட் 3.5 ரேட்டில் அமைத்துக் கொடுத்த தளத்தில்தான் இன்று தோனி 8.5% அடிக்கமுடிகிறது :) மேலும் டீம் ஒத்துழைப்பு இல்லாமல் அதே மன்மோகனும் தடுமாறுகிறார்தானே.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149737602052121422006-06-07T20:33:00.000-07:002006-06-07T20:33:00.000-07:00குமரன் நன்றி.பின்னூட்டம் இட்ட பலர் நல்ல கருத்துக்க...குமரன் நன்றி.<BR/><BR/>பின்னூட்டம் இட்ட பலர் நல்ல கருத்துக்களை சொன்னார்கள்.என்னுடைய சில பதிவுகளில் பின்னூட்டமிட்ட சிலர் பதிவை விட சூப்பரான கருத்துக்களை சொன்னார்கள்.(eg:இந்தி திணிப்பு பதிவு,பங்கு சந்தை பதிவு)இந்த மாதிரி பின்னூட்டங்கள் கிடைப்பது நம் அதிர்ஷ்டம் என்று தான் சொல்லணும்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149737381025908472006-06-07T20:29:00.000-07:002006-06-07T20:29:00.000-07:00நன்றி யாத்ரீகன்.//பலர் சொன்னதை போல், ஒருதலைபட்சமாக...நன்றி யாத்ரீகன்.<BR/><BR/>//பலர் சொன்னதை போல், ஒருதலைபட்சமாகவே உள்ளதாக காண்கின்றேன்... முந்தைய ஆட்சிகள் இதில் செய்த தவற்களை சுட்டிக்காட்டும்போது, அவர்கள் எடுத்த சில நல்ல முடிவுகளையும் பாராட்டவே வேண்டும் .. குறைந்தபட்சம் சுட்டிக்காட்டவாவது வேண்டும்.. //<BR/><BR/>ஆமாங்க.தமிழினி முத்து கூட இந்த கருத்தை தான் சொன்னார்.அடுத்த கட்டுரையில் இதை சரி செய்ய முயல்கிறேன்<BR/><BR/>நன்றி யாத்ரிகன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149731654723738122006-06-07T18:54:00.000-07:002006-06-07T18:54:00.000-07:00நல்ல கட்டுரை செல்வன். பின்னூட்டங்களும் நல்ல தகவல்க...நல்ல கட்டுரை செல்வன். பின்னூட்டங்களும் நல்ல தகவல்கள் தந்தன. மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149665573905369062006-06-07T00:32:00.000-07:002006-06-07T00:32:00.000-07:00இத்தகைய விஷயங்களை எழுதப்போக நிறைய கட்டுரைகள் சுவார...இத்தகைய விஷயங்களை எழுதப்போக நிறைய கட்டுரைகள் சுவாரசியத்தை இழந்துள்ளன.. ஆனால் உங்கள் கட்டுரை சுவாரசியமாகவே இருந்தது.. அந்த வகையில் உங்களுக்கு வெற்றி :-)<BR/><BR/> பலர் சொன்னதை போல், ஒருதலைபட்சமாகவே உள்ளதாக காண்கின்றேன்... முந்தைய ஆட்சிகள் இதில் செய்த தவற்களை சுட்டிக்காட்டும்போது, அவர்கள் எடுத்த சில நல்ல முடிவுகளையும் பாராட்டவே வேண்டும் .. குறைந்தபட்சம் சுட்டிக்காட்டவாவது வேண்டும்.. <BR/><BR/> இந்த கருத்தில், அடுத்த கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்திருக்கின்றேன்..யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149646006401865412006-06-06T19:06:00.000-07:002006-06-06T19:06:00.000-07:00அய்யாக்கண்ணுநன்றி.பங்கு சந்தை பற்றி முன்பு சில பதி...அய்யாக்கண்ணு<BR/><BR/>நன்றி.பங்கு சந்தை பற்றி முன்பு சில பதிவுகள் எழுதினேன்.அவ்வப்போது வணீகம் தொடர்பாக எழுதியே வருகிறேன்.வவ்வால் நல்ல வாதங்களை முன்வைத்தார்.அவருக்கு என் நன்றி.<BR/><BR/>அருமையான பின்னூட்டம் இட்ட உங்களுக்கும் நன்றி.என்னை வணிக சம்பந்தமாக எழுத இது மிகவும் ஊக்கமளிக்கிறது<BR/><BR/>நன்றி ஐயாக்கண்ணுAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149625688411033442006-06-06T13:28:00.000-07:002006-06-06T13:28:00.000-07:00பொருளாதாரக் கொள்கைகள் பற்றியோ, பங்குச்சந்தை, வளர்ச...பொருளாதாரக் கொள்கைகள் பற்றியோ, பங்குச்சந்தை, வளர்ச்சி விகிதம் பற்றியோ துறைசார் அறிவு இல்லாத எம்மைப்போன்ற பாமரன் முதலில் படிக்கும்போது வியப்பாக இருந்தது. நல்ல பொருளுடன் கூடிய பதிவு. பின்னர் வவ்வால், வெங்கட்ரமணி ஆகியோரின் மாற்றுக்கருத்துக்களுடன் மீண்டும் வாசிக்கும் போது கொஞ்சமாவது நாட்டு நடப்பு புரிகிறது. ஏதோ எழுதனும்கிறதுக்காக போறபோக்கில் பொகையப் போட்டுட்டு போகாம இந்த மாதிரி தேவையான விசயங்களை எழுதுவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மொரார்ஜி உபவாசம் இருந்தாரா, லால்பகதூர் சாஸ்திரி இருந்தாரா என்பதில் அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை. அப்படிப்பட்ட குப்பைகளை தேவைப்பட்டோர் மட்டும் சேகரித்து வைத்துக் கொள்ளட்டும். எவ்வித சார்புமின்றி விளக்கமாகவே எழுதுங்கள். பத்திரிக்கைகளில் வரும் துணுக்குகளையே காலங்காலமா தின்னு செரித்தவர்களுக்குத்தான் இது நீ...ளமான கட்டுரை. பேசுபொருளின் அவசியம் கருதி ஆழமாகவே எழுதுங்கள். உங்களைப் போல் பொருளாதாரம், சந்தைப்படுத்துதல் துறையில் ஆய்வு செய்யும் வல்லுனர்களே நம் நாட்டின் உண்மையான ஊன்றுகோல்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள் செல்வன்.<BR/><BR/>வவ்வால், வெங்கட்ரமணி மற்றும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பதிவுகளில் பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லா இடத்திலயும் உலவும் ஜோக்கர்களுக்கும் நன்றி.<BR/><BR/>அன்புடன் அய்யாக்கண்ணுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149623579462177882006-06-06T12:52:00.000-07:002006-06-06T12:52:00.000-07:00இந்தியர்கள் செய்த நல்வினைகள் 1991ல் ஒரு அரசியல்வாத...இந்தியர்கள் செய்த நல்வினைகள் 1991ல் ஒரு அரசியல்வாதி அல்லாத பொருளாதார நிபுணர் நிதி அமைச்சராக வர உறுதுணையாய் இருந்தது.<BR/><BR/>இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கத் தேவையில்லை.///<BR/><BR/>முற்றிலும் உண்மை பிரபுராஜா.இந்தியா செய்த பெரும்பேறு நிதி மன்மோகன் அமைச்சராக வந்தது.அவர் இல்லாவிட்டால் இன்போசிஸ்,சத்யம்,விப்ரோ என எதுவும் இல்லை.<BR/><BR/>நன்றி பிரபுராஜா.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149623463609966612006-06-06T12:51:00.000-07:002006-06-06T12:51:00.000-07:00அன்பின் வவ்வால்//சில பன்னாட்டு நிறுவங்களை வெளியெற்...அன்பின் வவ்வால்<BR/><BR/>//சில பன்னாட்டு நிறுவங்களை வெளியெற்ற காரணம் அவர்களின் தேச விரோத நடவடிக்கையே,//<BR/><BR/>முழு உண்மை.சில பன்னாட்டு நிறுவனங்கள் அப்படி செய்தது உண்மைதான்.அப்படிப்பட்ட சமயங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் கூட தப்பில்லை.உதாரணத்துக்கு போபால் சம்பவத்துக்கு காரணமான பன்னாட்டு கம்பனி நிர்வாகத்தை சொல்லலாம்.ஆனால் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் அப்படி அல்ல.உதாரணத்துக்கு கோக் ஐபிஎம் ஆகிய கம்பனிகளை இந்தியாவை விட்டு துரத்தியதற்கு எக்காரணமும் இல்லை.<BR/> <BR/>//உண்மையில் நேரு ,இந்திரா கால கட்டத்தில் தான் இந்தியா முழுதும் பெரிய ,அணைக்கட்டுகள்,பன்னோக்கு திட்டங்கள் ,தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டது.//<BR/><BR/>அணைகள் சரி.ஆனால் அவர்கள் துவக்கிய பல கம்பனிகள் நஷ்டத்தில் மூழ்கின.இந்திய பொதுதுறை நிறுவனங்கள் வெள்ளை யானை என்று பல கமிட்டிகள் சொல்ல்யிருக்கின்றன.மக்கள் வரிபணம் பல்லாயிரம் கோடிகளை இவை விழுங்கியுள்ளன.<BR/><BR/>//பியட் கார்கள் பற்றி சொல்ல நினைத்தேன் நீளம் கருதியே தவிர்த்தேன். அந்த காலத்திலேயே இத்தாலிய பியட் நிறுவனத்துடன் கூட்டாக இந்தியாவில் துவங்கப்பட்ட ஒன்று பியட். அவர்களும் புதிய மாடல் எல்லாம் விட்டு பார்த்து விட்டு இப்போது தயாரிப்பையே நிறுத்தி விட்டார்கள்.சியல்லோ கார் அந்நிய கூட்டில் புதிய மாடலில் தான் தயாரிக்கப்பட்டது மூடிவிட்டு போகவில்லையா. ஆனால் அம்பாசிடர் இன்றும் லாபகரமாக இயங்குகிறது. தனித்தன்மை இழக்காமல் இருப்பதும் தேவையே.///<BR/><BR/>45 ஆண்டுகளாக தனிக்காட்டு ராஜாவாக இருந்த சந்தையில் ஒரு நிறுவனம் லாபம் சம்பாதிப்பதிலும்,விசுவாசமான வாடிக்கையாளர்களை சம்பாதிப்பதிலும் அதிசயமில்லை வவ்வால்.இந்திய ஆட்டொமொபைல் சந்தையே அம்பாசிடர் எனும் ஒரே கம்பனி தயாரித்த ஒரே மாடலுக்குள் அடங்கிவிட்டதே என்ற வருத்தம் எனக்கு அதிகம் உண்டு.நிரைய கம்பனிகள் இருந்திருந்தால் இன்று இந்திய சந்தையில் இத்தனை வெளிநாட்டு கார்கள் வந்து குவிந்திருக்காது அல்லவா?<BR/><BR/>நான் குற்றம் சாடுவது அம்பாசிடர் மீது மட்டும் அல்ல.அதற்கு காரணமான பொருளாதார கொள்கையையே.<BR/><BR/>///டொயொட்டா போல ஏன் வளரவில்லை எனக்கேட்கலாம் நாம் மோட்டார் வாகன தயாரிப்பில் ஆராய்ச்சி,மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யவில்லை. ஒரு மாடல் எந்திரத்தை தயாரிக்க ராயல்டி கொடுத்து வாங்கியே தாயாரிக்க பழகி விட்டோம் ,தயாரிப்பு உரிமை தரும் போது சில கட்டுப்பாடுகள் விதித்தே தருவார்கள் எனவே தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.நமது எந்திரங்களின் குதிரை திறனும் குறைவு.///<BR/><BR/>இது அனைத்துக்கும் காரணம் என நான் சொல்வது நாம் பின்பற்றிய தவறான பொறுளாதார கொள்கையே.<BR/><BR/>நன்றி வவ்வால்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149610707879106352006-06-06T09:18:00.000-07:002006-06-06T09:18:00.000-07:00நான் 1978 இரண்டும் சிறு தொழில்கள் கோவையில் தொடங்கி...நான் 1978 இரண்டும் சிறு தொழில்கள் கோவையில் தொடங்கினேன். தொழில் என்றால் தொலைபேசி இல்லாமல் இயலுமா> ஆயிரம் ருப்பாய் முன்பணம் கட்டி விண்ணப்பி்த்தேன்.<BR/><BR/>1988 ல் அமெரிக்கா புலம் பெயரும் வரையில் தொலைபேசி வரவில்லை.<BR/>கொடுமை இதனினும் உண்டோ?<BR/><BR/>ஒரு பக்கம் பொருளுக்கு தேவை உள்ளது. அதை செய்யும் தொழில் நுணுக்கமும் உள்ளது, இருந்தும் ஏன் செய்யப்படவில்லை. அதுவே அரசின் தொழிற்கொள்கை. பணம் இல்லை என்றால் நான் கட்டிய 1000 எவன் சாப்பிட்டான்?<BR/><BR/>இன்று நரிக்குறவனிடம் கூட அலைபேசி.<BR/><BR/> இது மாயமோ மருட்கைத்தே!!<BR/>---------<BR/>வேந்தன் அரசு<BR/>சின்சின்னாட்டி<BR/>(வள்ளுவம் என் சமயம்)<BR/>--~--~---------~--~----~------------~-------~--~----~Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149607973871156562006-06-06T08:32:00.000-07:002006-06-06T08:32:00.000-07:00//மன்மோஹன் சிங் ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. மாம...//மன்மோஹன் சிங் ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. மாமேதை ராஜாஜி அவர்களது சுதந்திரக் கட்சியின் திட்டங்களைத்தான் அவர் நிறைவேற்றினார்.//<BR/><BR/>யார் திட்டத்தை யார் நிரைவேற்றினால் என்ன? இடையில் பல பேர் செய்யாததை செய்திருக்கிறாரே.<BR/><BR/>இந்தியர்கள் செய்த நல்வினைகள் 1991ல் ஒரு அரசியல்வாதி அல்லாத பொருளாதார நிபுணர் நிதி அமைச்சராக வர உறுதுணையாய் இருந்தது.<BR/><BR/>இதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கத் தேவையில்லை.<BR/><BR/>1991ல் இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். <BR/><BR/>செல்வன் அவரை பாராட்டுவதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை.Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149577247169415732006-06-06T00:00:00.000-07:002006-06-06T00:00:00.000-07:00வணக்கம் செல்வன்!பியட் கார்கள் பற்றி சொல்ல நினைத்தே...வணக்கம் செல்வன்!<BR/><BR/>பியட் கார்கள் பற்றி சொல்ல நினைத்தேன் நீளம் கருதியே தவிர்த்தேன். அந்த காலத்திலேயே இத்தாலிய பியட் நிறுவனத்துடன் கூட்டாக இந்தியாவில் துவங்கப்பட்ட ஒன்று பியட். அவர்களும் புதிய மாடல் எல்லாம் விட்டு பார்த்து விட்டு இப்போது தயாரிப்பையே நிறுத்தி விட்டார்கள்.சியல்லோ கார் அந்நிய கூட்டில் புதிய மாடலில் தான் தயாரிக்கப்பட்டது மூடிவிட்டு போகவில்லையா. ஆனால் அம்பாசிடர் இன்றும் லாபகரமாக இயங்குகிறது. தனித்தன்மை இழக்காமல் இருப்பதும் தேவையே.<BR/><BR/>இந்த இரண்டை தவிர வேறு உற்பத்தியாளர்கள் முன் வரவில்லை காரணம் அப்போதைய இந்தியர்களின் வாங்கும் சக்தி அவ்வளவு தான்.இடையில் கொஞ்ச காலம் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் வந்தது ,இதன் நிறுவனர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகரின் மகன் ஆனால் தொடர்ந்து செயல் படமுடியாமல் மூடப்பட்டது.எனவே சந்தை நிலவரம் ,வாங்கும் திறன் எல்லாம் பார்க்காமல் தயாரித்து விட முடியாது,தற்போது தான் காலம் கனிந்து வருகிறது இந்தியா பக்கம் எனவே பொத்தாம் போதுவாக அந்த காலத்தில் குட்டி சுவராக ஆக்கிவிட்டார்கள் என்பது சரியல்லவே.<BR/><BR/>எனவே அந்த காலகட்டத்தில் பல கார் தயாரிப்பு நிறுவனங்களை துவக்குவது வணிக ரீதியாக லாப கரமாக இல்லை.இப்போது வேறு பல மாடல்கள்,விலைகளில் தேவை ஏற்பட்டுள்ளது எனவே சாத்தியமாகிறது.டொயொட்டா போல ஏன் வளரவில்லை எனக்கேட்கலாம் நாம் மோட்டார் வாகன தயாரிப்பில் ஆராய்ச்சி,மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யவில்லை. ஒரு மாடல் எந்திரத்தை தயாரிக்க ராயல்டி கொடுத்து வாங்கியே தாயாரிக்க பழகி விட்டோம் ,தயாரிப்பு உரிமை தரும் போது சில கட்டுப்பாடுகள் விதித்தே தருவார்கள் எனவே தான் பெரும்பாலும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.நமது எந்திரங்களின் குதிரை திறனும் குறைவு.<BR/><BR/>டாடா கனரக வாகனத்தின் எந்திரம் பென்ஸ் வடிவமைப்பு,அஷோக் லெய்லான்ட் ,லெய்லான்ட் பிரிட்டன் வடிவமைப்பு அம்பாசிடர் ரினால்ட் ,வடிவைப்பு ,பியாட் இத்தாலிய பியாட் வடிவமைப்பு, மாருதி சுசுகி ஜப்பான் வடிவமைப்பு ,இப்போது தான் கொஞ்சம் சுயமாக வடிவமைக்க துவங்கி உள்ளோம் டாடா இன்டிகா போன்ற கார்களை.மோட்டார் சைக்கிள்களில் பஜாஜ்,TVS மட்டுமே சுயமாக வடிவமைக்கின்றன.<BR/><BR/>இவர்களும் ஆரம்பத்தில் இரவல் வடிவமைப்பை தான் நம்பி இருந்தார்கள்! அயல் நாட்டு வடிவமைப்பிற்கு தர வேண்டிய உரிமத்தொகை அதிகம் ஆகவே சொந்தமாக வடிவமைக்க ஆரம்பித்தார்கள்.சொந்த வடிவமைப்பு சிக்கனமா வெளியில் வாங்கி தயாரிப்பது சிக்னமா எனப்பார்த்து இவ்வாறு மாறிக்கொள்கிறார்கள். எனவே சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தான் செயல் பட முடியும் ஒரு நிறுவனம். அதிகம் மக்கள் வாங்கும் போது துணிந்து பல மாடல்கள் தயாரிக்க முதலீடு செய்ய முன்வருவார்கள். அந்த காலத்தில் இதனாலேயே சாத்தியப்படவில்லை இவை எல்லாம்வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149574242485328762006-06-05T23:10:00.000-07:002006-06-05T23:10:00.000-07:00அன்பின் முத்து,நன்றி.முன்பிருந்த பொருளாதார மாடலின்...அன்பின் முத்து,<BR/><BR/>நன்றி.முன்பிருந்த பொருளாதார மாடலின் குறைகளையே பட்டியலிட்டேன்.நிறைகளும் இருந்தன.ஆனால் என்னை பொறுத்தவரை நாம் அதன் மூலம் அடைந்த வளர்ச்சி போதவே போதாது என்றே சொல்வேன்.3.5% வளர்ச்சி 40 வருடமாக தந்த ஒரு பொருளாதார கொள்கையை விமர்சிக்கும் போது குறைபாடுகளே அதிகம் கண்ணுக்கு தென்படும்.இதன் இன்னொரு பகுதியை அடுத்த வாரம் இட்டு நிறைகளை எழுதுகிறேன்.சுட்டிக்காட்டியதற்கு நன்றி முத்து.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149574014806650152006-06-05T23:06:00.000-07:002006-06-05T23:06:00.000-07:00அன்பின் வெங்கட்விவசாயிகள் முன்பு தம் விளைபொருட்களை...அன்பின் வெங்கட்<BR/><BR/>விவசாயிகள் முன்பு தம் விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதிலிருந்து தடுக்கப்பட்டனர்.பஞ்சு விவசாயிகள் பஞ்சை ஏற்றுமதி செய்ய முன்பு மில் அதிபர்கள் அரசிடம் பேசி தடை பெற்றுக்கொண்டிருந்தனர்.வெங்காயம்,உணவுபொருட்கள் ஏற்றுமதி செய்ய தடை இருந்ததால் விவசாயிகள் வாழ்வு சீரழிந்தது என்பதுதான் உண்மை.<BR/><BR/>நீங்கள் சொன்னதுபோல் எதை இறக்குமதி செய்கிறோம் என்பதை பார்த்து தான் செய்யவேண்டும்.தடை இல்லா வாணிகத்தை நான் வலியுறுத்தவில்லை.அதீத கட்டுப்பாடுகளையே சுட்டிக்காட்டினேன்.<BR/><BR/>இடஒதுக்கீடு பற்றி இந்த பதிவில் ஏதும் சொல்லவில்லை ரமணி அவர்களே.பொருளாதாரம் குறித்தே பேசினேன்.ஐ.ஐடிக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஒருவிதத்தில் நல்லதுதான்.ஆனால் தகுந்த infrastructure ஏற்படுத்த வேண்டியது அவசியம்.இன்னும் அதிக ஆசிரியர்களை நியமித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அதிக ஐ.ஐ.டிக்கள் உருவானால் இந்திய தொழில்துறைக்கு நல்லதுதானே?<BR/><BR/>உங்கள் பதிவை படித்து என் கருத்தை இடுகிறேன்.<BR/><BR/>நன்றி வெங்கட் <BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149573685054378902006-06-05T23:01:00.000-07:002006-06-05T23:01:00.000-07:00செல்வன்,ஒரு வரலாற்று பார்வையை தந்துள்ளீர்கள்.ஆனால்...செல்வன்,<BR/><BR/>ஒரு வரலாற்று பார்வையை தந்துள்ளீர்கள்.ஆனால் ஒரு பக்கச்சார்பாக உள்ளது. தவறில்லை.ஆனால் எதிர்சைடில் உள்ள எந்த ஒரு நியாயத்தையும் கணக்கில் எடுக்காமல் எழுதப்பட்டுள்ளது.<BR/><BR/>ஆனால் மிகவும் தேவையான ஒரு பதிவு. என்னை போன்றவர்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149573596011685732006-06-05T22:59:00.000-07:002006-06-05T22:59:00.000-07:00செல்வன், நல்ல கட்டுரை. எந்தெந்த பொருட்களை வெளிநாட்...செல்வன், நல்ல கட்டுரை. எந்தெந்த பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது என்பது கவனமாக முடிவெடுக்கவேண்டிய ஒன்று. அமெரிக்கா இந்த விஷயத்தில் சாமர்த்தியமாக இயங்கும். இந்தியாவைப்பொறுத்தவரை காரை இறக்குமதி செய்யலாம், உணவுப்பொருட்களை ஏகத்துக்கு இறக்குமதி செய்தால் ஆந்திராவில் நடந்தமாதிரி விவசாயிகள் தம் விளைபொருட்களை விற்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்வார்கள். உலகமயமாக்கம் என்பது அணையை திறந்துவிடுவதுபோல. வெளிப்படும் காட்டாற்று வெள்ளத்தில் இடைப்படுபவை எல்லாம் நாசமாகும். <BR/><BR/>மன்மோகன்சிங் IT துறையை வளர்க்க பெரிதும் உதவினார், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், அதே மன்மோகன்சிங் இப்போது 50% இட ஒதுக்கீட்டுக்கும் கையெழுத்து போட்டிருக்கிறாரே. இட ஒதுக்கீடு அவசியம் தேவை. ஆனால் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளவாறு செய்வதால் உள்ள பிரச்சனைகளை இந்த பதிவில் சொல்லியிருந்தேன்.<BR/><BR/>http://silandhivalai.blogspot.com/2006/04/blog-post.html<BR/><BR/>அவர் வாக்கு கொடுத்திருப்பதுபோல் IIT, IIM, AIIMSல் இடங்களை அதிகரிக்காவிட்டால, அல்லது தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை force செய்தால், இப்போதுள்ள 7%, 8% GDP வளர்ச்சி தொடர்ந்து நிலைக்குமா என்பது சந்தேகமே.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149573507350240932006-06-05T22:58:00.000-07:002006-06-05T22:58:00.000-07:00விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி வவ்வால்.இதற்கு விர...விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி வவ்வால்.<BR/><BR/>இதற்கு விரிவாக நாளை பதில் சொல்கிறேன்.நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது.இருப்பினும் இப்போது ஒரு சில வைக்கிறேன்.<BR/><BR/>அம்பாசிடர் கம்பனி மாறாமல் இருக்க காரணம் பாரம்பரியம் என்றீர்கள்.ஆனால் இந்தியாவில் இருந்தது அதுவும் பியட்டும் மட்டுமே.பியட்டும் தன் மாடலை மாற்றிக் கொள்ளவில்லை.100 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இரண்டே இரண்டு மாடல்க் கார்கள் 40 வருடமாக விற்றுள்ளன.இதே காலகட்டத்தில் உலக கார்சந்தை எப்படி வளர்ந்தது என பாருங்கள்.டயோட்டா கம்பனி இன்று எப்படி உள்ளது,ஹூண்டாய் எப்படி உள்ளது(இந்த கம்பனிகள் அம்பாசிடர் கம்பனிக்கு பிறகு துவங்கப்பட்டவை)<BR/><BR/>வங்கிதேசிய மயம் வங்கிகளின் வளர்ச்சியை முடக்கியது.ஸிடிவங்கி,பாங்க் ஆப் அமெரிக்கா போன்ற வங்கிகள் எப்படி வளர்ந்தன என்று பாருங்கள்.குப்பனுக்கும் சுப்பனுக்கும் லோன் தரவேண்டியதுதான்.வேண்டாம் என்று சொல்லவில்லை.அரசு பின் எதற்கு இருப்பது?ஒரு சில வங்கிகளையாவது தனியார் வசம் விட்டு வைத்திருக்கலாமே?ரிசர்வ் வங்கியின் பல கட்டுப்பாடுகள் இருந்த ஒரு சில தனியார் வங்கிகளையும் முடக்கிதான் வைத்திருந்தன.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149572743662115632006-06-05T22:45:00.000-07:002006-06-05T22:45:00.000-07:00வணக்கம் செல்வன்!இந்த பதிவு எனக்கு ஏமாற்றத்தையே தரு...வணக்கம் செல்வன்!<BR/><BR/>இந்த பதிவு எனக்கு ஏமாற்றத்தையே தருகிறது! ஒரு தலைப்பட்சமாக பிட்ஸா சாப்பிடும் மேல் தட்டு வர்க்கத்தின் பொருளாதார பார்வையாக உள்ளது!<BR/><BR/>விளக்கமாக சொல்ல வேண்டிய நிலை ஆனால் எங்கே மட்டையடிகிறான் என முத்திரை குத்தப்படுமோ என தயக்கம் தடுக்கிறது! எனினும் சில கருத்துகளை சொல்லாமல் இருக்க முடியாதே!<BR/><BR/>//ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 1960ல் இருந்து 1992 வரை ஒரே வடிவமைப்பில் வந்த அம்பாசிடர் காரை குறிப்பிடலாம்//<BR/><BR/>இதில் அம்பாசிடர் வியாபார ரீதியாக தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்று பார்ப்பது தவறு நெல்லை இருட்டு கடை அல்வா கேள்விப் பட்டு இருக்கிறீர்களா, அகர்வால் இனிப்பகம்,ச்ரி கிருஷ்ணா இனிப்பகம் போன்று எல்லாம் அலங்காரமாக இருக்காது ஆனால் திருநெல்வேலி அல்வா என்றால் இருட்டு கடை அல்வா தான்.ஏன் அவர்கள் அழகான கடை கட்டவில்லை,காரணம் கொள்கை முடிவு,ஒரு பாரம்பரியம் காப்பது என்ற எண்ணம்!<BR/><BR/>ஹார்லீ டேவிட்சன் மோட்டார் சைக்கிள்,ரோல்ஸ் ராய்ஸ் கார், போன்றவையின் சிறப்பு என்ன தெரியுமா ,மோட்டார் வாகன தயாரிப்பில் அசெம்பிலி லைன் என்ற தானியங்கி வாகன தயாரிபை ஜெனரல் மோட்டார்ஸ் கொண்டு வந்து புரட்சி செய்தார்கள்,ஆனால் இன்று வரை மனிதர்களை கொண்டே இந்த இரண்டு வாகனங்களும் தயாரித்து பொருத்தப்படுகிறது.ஏன் அவர்களுக்கு தொழில் நுட்பம் தெரியாமல் போய்விட்டதா? அவர்கள் தங்கள் தனி தன்மையை தொடர்ந்து வைத்திருக்க விரும்புபுகிறார்கள்,வாங்குவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.ரோலக்ச் கைக்கடிகாரங்களும் அப்படியே கையால் தயாரிக்கப்படும் எந்திர வகை அவை.இந்த மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் இல்லை.<BR/><BR/>வியாபார உலகத்திலும் தங்கள் அடையாளம் இழக்காமல் இருக்க அம்பாசிடர் விரும்புகிறது.அதனை வாங்க விரும்பும் மக்களும் இருக்கிறார்கள்.இந்திய மோட்டார் வாகனங்களின் பாரம்பரிய அடையாளம் அம்பாசிடர்.அதனை பொருளாதார கொள்கையுடன் சம்பந்த படுத்துவது தவறான பார்வையே! அம்பாசிடர் கார்களை தயாரிப்பது பிர்லா குழுமம் அவர்கள் நினைத்தால் எந்த வடிவிலும் தயாரிக்க தங்களை மாற்றிக் கொள்ள முடியும்.தங்களை வித்தியாசபடுத்திக்காட்டவே அதே மாடலில் தயாரிக்கிறார்கள்.இதே வடிவுல் அம்பாசிடர்கார்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி கூட ஆகிறது காரணம் இதன் வடிவம்! பழமையானது என்பதாலே!<BR/><BR/>தரம் குறைவானவை போல சொல்கிறீர்கள் பஜாஜ்,லாம்ப்ரட்டா போன்றவை உண்மையில் அந்த வண்டிகள் உழைத்த அளவுக்கு இப்போதைய வண்டிகள் உழைப்பதில்லை என்பதை அவற்றை பயன்படுத்தியோரை கேட்டால் சொல்வார்கள்.<BR/><BR/>//இந்திரா காந்தி கிட்டத்தட்ட தொழில் துறையை முடித்தே கட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும்.தேசியமயமாக்கல் என்பதை ஒரு வெறியோடு அவர் செயல்படுத்தினார்.எல்.ஐ.சி,வங்கிகள் ஆகியவை அரசுமயமாக்கப்பட்டன//<BR/><BR/>வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது உண்மையில் ஒரு புரட்சி.அந்த காலத்தில் வங்கிகள் ஒரு சில சமூக மக்களின் வங்கியாகவே செயல்பட்டு வந்தன.சாதாரண குப்பனும் ,சுப்பனும் கடன் வாங்குவது ,ஏன் கணக்கு துவங்கவே முடியாது.தற்போது தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி எப்படி செயல் படுகிறது,அதில் கணக்கு வைத்து இருப்போர் கடன் வாங்கியோர் எனப் பார்த்தால் அது ஒரு சமூக மக்களுக்காகவே செயல் படுவது புரியும்.அதே போன்ற ஒரு நிலையை ஒழித்து அனைவருக்கும் சம வாய்ப்பு ஏற்படுத்தியவர் தான் இந்திராகாந்தி!<BR/><BR/>இதனாலேயே மன்னர் மானியம் ஒழிப்பு வங்கிகள் தேசியமயமாக்களுக்கு பிந்திய பொது தேர்தலில் இந்திரா அமோக வெற்றி பெற்றார்!<BR/><BR/>சில பன்னாட்டு நிறுவங்களை வெளியெற்ற காரணம் அவர்களின் தேச விரோத நடவடிக்கையே, இந்தியாவில் இருந்த ஷெல் எண்ணை நிறுவனம் பங்களாதேச போரின் போது அமெரிக்க அரசின் பேச்சை கேட்டு இந்தியா ராணுவத்திற்கு எரி பொருள் தரமால் காலை வாரியது எனவே தான் பதில் நடவடிக்கையா அந்நிறுவனம் துறத்தப்பட்டு ONGC துவங்கப்பட்டது!<BR/><BR/>உண்மையில் நேரு ,இந்திரா கால கட்டத்தில் தான் இந்தியா முழுதும் பெரிய ,அணைக்கட்டுகள்,பன்னோக்கு திட்டங்கள் ,தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டது. தனியார்கள் மிக அதிகமாக லாப நோக்கோடு தான் செயல்படுகிறார்கள் எனவே அவர்கள் எல்லா துறைகளிலும் தொழில் துவங்க முன்வருவதில்லை எனவே அரசின் செயல் பாடு தேவைப்படுகிறது.<BR/><BR/>இந்தியா சுதந்திரம் அடைந்த போது அனைத்து தொழில்களிலும் பின் தங்கி பொருளாதாரம் பலவீனமாக இருந்தது முதலில் அதனை நாமே சீரமைத்த பிறகே இப்போது உள்ளது போல் ஒரு திறந்த சந்தை நிலைக்கு போக முடியும்.எனவே அவரிகள் செய்தது இந்தியாவை சீரமைத்த பணியே, அந்த அடித்தளத்தின் மீதே இப்போது நமது பொருளாதாரம் வளர்ந்து நிற்கிறது!<BR/><BR/>தற்போதையா திறந்த சந்தை தான் சிறந்தது என்பது போல் ஒரு கருத்து சொல்லி இருக்கிறீர்கள் அதனை விவாதிக்க போனால் நீண்டு விடும் பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாகா பேசலாம்!<BR/><BR/>இந்தியா பொருளாதாரத்தை முடக்கினார்கள் என்பது உண்மை தெரியாமல் தற்போதைய ஆங்கில பத்திரிகைகளில் வரும் பொருளாதார கட்டுரைகளை படித்து அப்படியே எழுதினால் இப்படி தான் இருக்கும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149572520924437612006-06-05T22:42:00.000-07:002006-06-05T22:42:00.000-07:00ஆம்.ராஜாஜியின் தாராள பொருளாதார கொள்கைகளை அப்போதைய ...ஆம்.ராஜாஜியின் தாராள பொருளாதார கொள்கைகளை அப்போதைய கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர்.1967ல் திமுக கூட்டணியில் சுதந்திரா கட்சி சேர அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக ஞாபகம்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149572383910272752006-06-05T22:39:00.000-07:002006-06-05T22:39:00.000-07:00டோண்டு ஐயாமொரார்ஜி தேசாய் காலத்தில் உபவாசம் என்று ...டோண்டு ஐயா<BR/><BR/>மொரார்ஜி தேசாய் காலத்தில் உபவாசம் என்று நான் சொன்னது தப்பு என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஊர்ஜிதமாகிறது.மந்திரியாக இருந்த காலத்தில் தான் உண்ணாவிரத ஐடியா வந்தது என்பதை போட்டு குழப்பிவிட்டேன் போலிருக்கிறது.பிழையை சுட்டிக்காட்டிய உங்களுக்கும் எஸ்.கேவுக்கும் நன்றி.<BR/><BR/>தங்ககட்டுப்பாடு பற்றி நான் எழுதவில்லை.பதிவின் நீளம் அதிகமாகிவிடும் என்பதால்.ஒரு காலகட்டத்தில் நேருவின் பஞ்சசீல கொள்கையை பேசி,பேசியே நாம் உருப்படாமல் போய்விட்டோம்.சுயநலவாத கொள்கையை கடைபிடிக்காமல் நீதி நேர்மை என்று பேசியே நாம் 45 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்.<BR/><BR/>மன்மோகன் பொருளாதார கொள்கையை கொண்டுவந்தபின் பொற்கொல்லர்களும் தங்கவியாபாரிகளும் தான் முதலில் பட்டாசு வெடித்தனர்.வெளிநாட்டு இந்தியர்கள் ஐந்துகிலோ தங்கம் கொண்டுவரலாம் என்று அவர் சொன்னது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது<BR/><BR/>அன்புடன்<BR/>செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149571839001209682006-06-05T22:30:00.000-07:002006-06-05T22:30:00.000-07:00மன்மோஹன் சிங் ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. மாமேத...மன்மோஹன் சிங் ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. மாமேதை ராஜாஜி அவர்களது சுதந்திரக் கட்சியின் திட்டங்களைத்தான் அவர் நிறைவேற்றினார்.<BR/><BR/>இது பற்றி ராஜாஜி பற்றிய என் பதிவுகளில் கூறியுள்ளேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1149571748153066292006-06-05T22:29:00.000-07:002006-06-05T22:29:00.000-07:00சில பொருட்குற்றங்கள். திங்கட்கிழமை விரதம் லால் பஹத...சில பொருட்குற்றங்கள். <BR/><BR/>திங்கட்கிழமை விரதம் லால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் சமீபத்தில் 1965-ல் கொண்டு வந்தது, இந்திய பாக்கிஸ்தான் யுத்தம் சமயத்தில். அப்போது மொரார்ஜி அவர்கள் பதவியிலேயே இல்லை. அதே காலக் கட்டத்தில் வியாழன் அன்று உபவாசத்தை தமிழக அப்போதைய முதல் மந்திரி பக்தவத்சலம் அவர்கள் கொண்டு வந்தார்.<BR/><BR/>1962-ல் இந்தோ சைனா யுத்தத்தின்போது தங்கக் கட்டுப்பாடு வந்தது, 22 கிராமுக்கு பதில் 18 கிராம் சுத்த தங்கம் என்று வந்தது. அப்போது நிதி மந்திரி மொரார்ஜி தேசாய் அவர்கள். ஆனால் எல்லோரும் கூறுவது போல அவர் மட்டும் அதற்கு பொறுப்பில்லை. அவர் நேருவின் கீழ் மந்திரி. மீதியை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்.<BR/><BR/>1977-லிருந்து 1979 வரைதான் ஜனதா கட்சி பதவியிலிருந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் விலைவாசி கட்டுப்பாட்டில் வந்தது என்பதை நான் நேரடியாகப் பார்த்தவன் என்ற முறையில் அறிவேன். வேறு பல அரசியல் காரணங்களால் நாடின் நிர்வாகம் மறுபடியும் சர்வாதிகாரி இந்திராவிடம் சென்றது.<BR/><BR/>"லால்பகதூர் காலத்தில் உணவுபஞ்சம் வந்த மாதிரி தெரியவில்லை."<BR/>உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். பி.எல். 480-ல் அமெரிக்க கோதுமை வந்துதான் அறுபதுகளில் நம்மைப் பஞ்சத்திலிருந்து காப்பாற்றியது. கோதுமையை இந்திய ரூபாயில் அமெரிக்கர் தந்தனர். அந்த ரூபாய்களை மார்க்கெட்டில் விட்டிருந்தால் இந்தியப் பொருளாதாரமே சீரழிந்திருக்கும். அதை செய்யாமல் வெறுமனே ரூபாய்களை அப்படியே வைத்திருந்தது அமெரிக்கா. அதற்கு நன்றி எல்லாம் இந்தியா கூறாது, சோவியத் யூனியனோடு சேர்ந்து கொண்டு ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்காவை வசை பாடியது. <BR/><BR/>அதெல்லாம் வேறு கதை. உங்கள் பதிவில் உள்ள பொருட்குற்றத்தை சுட்டிக் காட்டிக் கொள்வதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com