கிறிஸ்துமஸ் விடுமுறையை இந்த பட டிவிடியை பார்ப்பதில் இருந்து துவக்கினேன்
.தெலுங்கு, தமிழ் இரண்டிலும் தயாரித்த படம் போல் தெரிகிறது. என்.டி.ஆர் நாயகன். எஸ்.வி.ரங்காராவ் வில்லன். கே மாலதி என்பவர் கதாநாயகி.
கதை: மன்னர் அரண்மனையில் வசிக்கும் தோட்டகாரன் மகன் ராமன் இளவரசியை ஒருதலையாய் காதலிக்கிறான்.இளவரசிக்கு அவன் மேல் இன்பாச்சுவேஷன்.ஆனால் காதல் பலிக்காது எனும் அச்சத்தால் தன் காதலை வெளியே சொல்லுவதில்லை.தோட்டராமன் பொறுமைஇழந்து அந்தபுறத்தில் அத்துமீறி நுழைந்து பிடிபடுகிறான்.மன்னர் அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறார்.இளவரசி மன்றாடிகேட்டு கொண்டதன் பேரில் "நீ எனக்கு சமமான அந்தஸ்து கொண்டவனாக மாறி இளவரசியை பெண் கேட்டு வந்தால் உனக்கு அவரை கட்டி வைக்கிறேன்" என சொல்லி விடுவித்து அனுப்புகிறான்.
தோட்டராமனை ஒரு மந்திரவாதி (ரங்காராவ்) காளிக்கு பலியிட முயல்கிறான்.தப்பிய தோட்டராமன் மந்திரவாதியை பலியிட்டு பாதாளபைரவி எனும் கேட்டதை தரும் சிலையை பரிசாக பெறுகிறான்.அதன் பலனாக பெரும் செலவத்தையும், ராஜ்ஜியத்தையும் அடைந்து மன்னர் மகளை மணம் புரிய போகும் தருணத்தில் மன்னரின் அத்தை மகன் பாதாளபிரவி சிலையை திருடி விடுகிறான்.மந்திரவாதியை அவர் சீடன் உயிர்பிக்கிறான்.பாதாளபிரவி சிலையை கைபற்றிய மந்திரவாதி தோட்டராமனை ஏழையாக்கி மன்னர் மகளை கடத்தி கொண்டு போகிறான்.தோட்டராமன் மீண்டும் மந்திரவாதியை ஜெயித்து பாதாளபைரவி சிலையையும், காதலியையும் அடைகிறான்.சுபம்.
மன்னராக நடிக்கும் நடிகர் மிக அற்புதமாக நடித்துள்ளார்.இரக்கமுள்ள மன்னராக வருகிறார்.தன் மனைவியின் தம்பியை அடித்த தோட்டராமனை தண்டிக்காமல் மன்னித்து அனுப்புகிறார்.அதை செய்யும்போது மன்னர் மனைவியின் முகத்தில் தீபொறி பறக்கிறது.ஆனால் நைச்சியமாக மனைவியை சமாதானபடுத்தி தோட்டராமனை மன்னித்து விடுகிறார்.அந்தபுரத்தில் நுழைந்த தோட்டராமனை மகள் கள்ளதனமாக சிரையில் சந்தித்து தப்ப சொல்லும்போது மன்னர் அதை பார்த்துவிடுகிறார்.ஆனால் அப்போதும் தோட்டராமனை அவர் கொல்வதில்லை.இரக்க சுபாவத்துடனே நடந்து கொள்கிறார்.
இளவயது என்.டி.ஆர் நடிப்பு அற்புதம்.எந்த காட்சியிலும் மிகை நடிப்பு இல்லை.சண்டை காட்சிகள் இயல்பாக உள்ளன.கண்டசாலா குரலில் "அமைதி இல்லாத என் மனமே" போன்ற தேனினும் இனிய பாடல்கள் மனதை மயக்குகின்றன. எஸ்வி ரங்காராவ் இயல்பாக, கம்பீரமாக நடிக்கிறார்.அவர் வில்லன் என்பதே தெரியாத வண்ணம், மிகை நடிப்பின்றி அச்சுறுத்தும் வசனம்,உருவ தோற்றம், மிரட்டல் இன்றி அழகாக நடிக்கிரார்.
பாதாளபைரவி மனதுக்கு மிகவும் நிறைவை அளித்த படம்
0 comments:
Post a Comment