Tuesday, October 20, 2009

426.தேசமறுப்பாளன்

தேசமறுப்பாளன்


பெரும்பகுதி மக்கள் பட்டினியில் கிடக்க

ராணுவத்தை பெருக்கும் தேசத்தையும்

அணுகுண்டுகளால் விளையும் நாசத்தையும்

போலிஸின் புல்லுருவித்தனத்தையும்

ராணுவவீரனின் மிருகத்தனத்தையும்

அரசாங்க இயந்திரத்தின் அவலத்தையும்

தேசம் எனும் கற்பிதத்தையும்

வல்லரசு பெருமிதத்தையும்

வசைபாட தேவைப்படுகிறது

அணு ஆயுதம் ஏந்திய ராணுவமும்

பன்னாட்டு கம்பனியின் சம்பளமும்

போலிஸ் அளிக்கும் பாதுகாப்பும்.

தேசத்தை மறுக்கவே

தேவைப்படுகிறது தேசம்

Sunday, October 11, 2009

423.அக்கம் பக்கம் 2

நிர்வாணம் ஸோ வாட்?

நடிகை ஹிலரி ஸ்வாங் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் நிர்வாணமாக தான் படுத்து தூங்குவதாக தெரிவித்தார்.சமூகத்தின் கற்பிக்கப்பட்ட இயல்புகளுக்கு அடிக்கப்பட்ட இயற்கையான சாவுமணியாக அந்த பேட்டி என் கண்களுக்கு தெரிந்தது.

ஹிலரி: என் காதலனின் மகனுக்கு ஆறு வயதாகிறது.அவனுக்கு எந்த வயதாகும்போது நான் நிர்வாணமாக இருப்பதை தவிர்க்கவேண்டும் என்று எனக்கு புரியவில்லை.தினமும் காலை அவன் எங்கள் அறைக்கு வருவான்.நான் நிர்வாணமாக அறையில் இருப்பேன்.அவன் அதை இதுவரை வித்தியாசமாக நினைத்ததில்லை.இரண்டாம் முறை பார்த்ததில்லை.நான் தூங்கும்போது அடிக்கடி புரண்டுபடுப்பேன்.அதனால் தூங்கும்போது உடை அணிவது அசுவகரியமாக இருக்கிறது.....

செக்சுவாலிட்டியிடமிருந்து குழந்தைகளை "பாதுகாப்பதை" விட அதை அவர்களுக்கு இயல்பாக அறிமுகப்படுத்தும் ஹிலரி பாராட்டுக்குரியவர்.

ஒபாமா&நோபல்

ஒபாமாவுக்கு நோபல் பரிசு தந்தது காக்கா பிடிக்க அல்ல.உலகில் அணுஆயுதத்தை ஒழிப்பேன் என அவர் (சிறுபிள்ளைதனமா) முயற்சி எடுத்து வருவதுதான் காரணம்.

அணுஆயுதம் இல்லாத உலகம் ஆபத்தான உலகம்.மூன்றாம் உலகபோர் மூளாமல் (ரஷ்யா-அமெரிக்கா) இருக்க காரணம் அணுஆயுதம் தான்.ஐரோப்பியர்களை அதனால் தான் மூளை கெட்டவர்கள் என்று திட்டினேன்.ஐந்து நிமிடத்தில் ஒரு உலகபோரையே தோற்கும் சக்தி படைத்தவர்கள் ஐரோப்பியர்கள்.1939ல் ஹிட்லரின் படைகள் சும்மா நாலைந்து வாரத்தில் மொத்த ஐரோப்பாவையும் பிடித்தன. அப்புறம் அமெரிக்கா வந்துதான் இவர்களை காப்பாற்ற வேண்டியிருந்தது.முதல் உலகபோரிலும் இதேமாதிரிதான் நடந்தது.

அணுஆயுதம் இருந்திருந்தால் எந்த உலகபோரும் மூண்டிருக்காது. அதில் செத்த சும்மர் பத்துகோடி மனிதர்கள் உயிர்பிழைத்திருப்பார்கள்.இன்றும் காங்கோவில் ஒரு மிகபெரிய யுத்தம் நடந்துவருவதும் அதில் 39 லட்சம் பேர் இறந்திருப்பதும் எத்தனை பேருக்கு தெரியும்?மூன்றாம் நாடு எதாவது தலையிடாமல் இம்மாதிரி யுத்தங்கள் நிற்காது.தலையிட்டால் அப்புறம் ஆகிரமிப்பு என்று கூச்சல்.உலகம் பைத்தியகார உலகமடா சாமி.

மனித இனம் வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் இனம்.இவர்கள் சண்டைபிடிககமல் ஒருவருகொருவர் அன்புடன் வாழ்வார்கள் என்பது பைத்தியகாரதனமான உடோபியா.ஒபாமாவால் செய்ய முடிந்தது தன்னிடம் இருக்கும் அணு ஆயுதத்தை கீழே போடுவதாகதான் இருக்கமுடியுமே தவிர சீனாவையோ, இந்தியாவையோ, பாகிஸ்தானையோ அணு ஆயுதத்தை கீழே போடும்படி அவரால் வலியுறுத்த முடியுமா என்பது சந்தேகமே.ஒரு ஒலிம்பிக்சை சிகாகோவுக்கு கொண்டுவரமுடியாதவர் சீனாவையும், இந்தியாவையும் அணு ஆயுதத்தை ஒழிக்க சொல்லி வலியுறுத்த போகிறாராம்:)

அமைதிக்கான நோபல் பரிசை தருவதாக இருந்தால் அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓப்பன் ஹேமருக்குதான் தரவேண்டும்.மூன்றாம் உலகபோரும், இந்தியா -பாகிஸ்தான் நாலாவது போரும் வராமல் இருக்கவும் கோடிகணனகான பேர் உயிர்பிழைக்கவும் அவர்தான் காரணம்.

Thursday, October 08, 2009

422.அக்கம் பக்கம்

அக்கம்

புவனேஸ்வரி விவகாரத்தில் நேற்றும், இன்றும் நடந்த சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. புவனேஸ்வரி பாலியல் தொழிலை நடத்தி வந்ததில் தனிபட்டு நான் எந்த குற்றமும் காணவில்லை.வயிற்றுபிழைப்புக்கு பாலியல் தொழிலை நடத்தும் மகளிர் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதுக்கு ஆண்கள் அனைவரும் பொறுப்பேற்கவேண்டும் என்றே கருதுகிறேன்.ஆனால் புவனேஸ்வரி இன்னும் இரு பெண்களை வைத்து தொழில் நடத்திவந்தது மன்னிக்கமுடியாத குற்றம்.அதற்கான தண்டனை அவருக்கு தரபட்டே ஆகவேண்டும்.

புவனேஸ்வரியை பொறிவைத்து போலிஸ் பிடித்ததும் அந்த ஆத்திரத்தில் அவர் பல நடிகைகளின் பெயரை விபசாரத்தில் ஈடுபடுவதாக எழுதிகொடுத்தார். அதை தினமலர் வெளியிட்டு கடும் எதிர்ப்பை சம்பாதித்துகொண்டது. இவ்விவகாரத்தில் தினமலரை தவிரத்த மற்ற பத்திரிகைகள் "குண்டு நடிகை, மலையாள ஷ நடிகை, கலைசேவை குடும்பம்" என்று மறைமுகமாக இதே மேட்டரை வெளியிட்டன.இப்படி கிசு கிசு பாணியில் எழுதாமல் தினமலர் நேரடியாக பெயர்களை எழுதியதால் நடிகர்கள் கொதித்துவிட்டனர்.

இத்தனைநாட்களாக தமிழ் பத்திரிகைகள் அனைத்தும் இப்படி கிசுகிசுக்களை எழுதிவந்தது வழக்கம்தான்.அதை நடிகர்களே மரைமுகமாக விரும்பவும் செய்தனர்.அவர்களே ஒருவருக்கொருவர் அடுத்தவர் காலைவாரவும் கிசு கிசுக்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்நிலை அவர்களாக உருவாக்கிகொண்டது எனினும் நேரடியாக பெண்களின் பெயரை எழுதி விபசாரி என குறிப்பிடுவது மன்னிக்கவே முடியாத குற்றம்.அதை மறைமுகமாக செய்த பத்திரிகைகளும், தினமலரும் நம் கண்டனத்துக்கு உரியவை என்பதில் மாற்றுகருத்தே இல்லை. "மூணுஷா நடிகைக்கும் வெற்றிநடிகருக்கும் காதல்" என்று செய்தி எழுதுவதற்கும் "ஷகீலா விபசாரம் செய்கிறார்" என நேரடியாக எழுதுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.

ஆனால் இதை கண்டிக்கிறேன் பேர்வழி என்ற பெயரில் கூட்டம் போட்ட நடிகைகள் தினமலரை கண்டிக்க பாஸ்டர்ட் என்ற பதத்தையும், பத்திரிக்கையாளரின் தாய்,தங்கை ஆகியோரை கேவலமாக அர்ச்சனை செய்ததும் நம் சமூகத்தில் புரொயோடி கிடக்கும் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிகாட்டுவதாக தான் அமைகிறது. ஒரு பெண் ஒரு ஆணை இகழ்வதென்றால் அவனை இகழாமல் அவன் மனைவி, மகள், தாய் போன்ற பெண்களின் கற்பை இழிவுபடுத்துவதை கண்டால் கடும் மனவருத்தம் வருவதை தவிர்க்க இயலவில்லை.

உங்கள் சண்டைகளுக்கும், விரோதங்களுக்கும் பெண்களின் நடத்தைதான் விளையாட கிடைத்த கைபொம்மையா?இம்மாதிரி செயல்களை ஆண்கள் செய்வதை கூட புரிந்துகொள்ளமுடிகிறது.ஆனால் பெண்களே செய்வது??

பக்கம்

பாகிஸ்தானில் தீவிர உள்நாட்டு யுத்தமே நடந்துகொண்டிருப்பதால் வெளிநாடுகள் பலவும் பாகிஸ்தானை தவிர்க்க ஆரம்பித்துவிட்டன.இதன் விளைவுகள் பாகிஸ்தான் மக்கள் மேல் விழுந்திருப்பதுதான் சோகம். பிரிட்டன் பாகிஸ்தானிலுள்ள தனது தூதரக் பணிகள் பலவற்றையும் வளைகுடா நாடுகளுக்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டது. விளைவாக பிரிட்டிஷ் விசா கேட்டு விண்ணபிக்கும் பாகிஸ்தான் மக்கள் விசா விண்ணப்பம் அனைத்தும் அபுதாபிக்கு செல்கிறது.அங்கே பாஸ்போர்ட்டை அனுப்பினால் அப்புறம் அது என்ன ஆச்சு என்றே தெரியவருவதில்லை.பிரிட்டிஷ் எம்பசிக்கு போன்போட்டால் கணிணிமயமாக்கப்பட்ட குரல் தான் பதிலளிக்கிறதாம்.

இதன் விளைவாக இந்த செப்டெம்பரில் பிரிட்டிஷ் பல்கலைகழகங்களில் சேர சீட்டு வாங்கிய பாகிஸ்தான் மாணவர்கள் யாரும் அங்கே போகமுடியாமல் ஒரு வருட கல்வியை, விண்ணப்ப கட்டணத்தை , விசாவுக்கு காட்ட கடன் வாங்கிய தொகைக்கான வட்டியை இழந்து பெரும் இழப்புகுள்ளாகியிருக்கிறார்கள்.இதனால் கடும்கோபமடைந்த பாகிஸ்தான் அரசை சமாதானபடுத்த பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் வந்து விசா விண்னப்பங்களை விரைந்து பரிசீலிப்பதாக உறுதியளித்துவிட்டு போயிருக்கிறார்.

பிரிட்டன் தான் இப்படி என்றால் பாகிஸ்தான் தனது நட்புநாடாக கருதும் பல நாடுகளும் பாகிஸ்தான் மக்களை இப்படி துன்பதுகுள்ளககுவதில் முண்ணனியில் நிற்கின்றன.சக ஆசியநாடான இந்தொனேஷியாவும் பாகிஸ்தான் விசாவுக்கு கடும் கட்டுபாட்டை விதித்திருக்கிறது.இந்தோனேஷியா வரும் ஒவ்வொரு பாகிஸ்தானிக்கும் ஒரு இந்தோன்சேஷிய குடிமகன் உத்திரவாதம் அளிக்கவேண்டும்.அதன்பின் இந்தொனேஷியா வரும் பாகிஸ்தான் பயணி வரும் ஏர்போர்ட்டில் அந்த ஜாமீந்தாரர் வருகைதந்து மீண்டும் குடியேற்ற அதிகாரிகளிடம் உறுதிமொழி வழங்கினால் மட்டுமே அவர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்.கம்போடியாவிலும் இதே விதிகள்தான்.பாகிஸ்தானை தவிர எந்த நாட்டுக்கும் இம்மாதிரி விதிகளை இந்நாடுகள் விதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

பாகிஸ்தான் நெருங்கிய நட்புநாடாக கருதும் சீனாவிலும் பாகிஸ்தனியருக்கு விசா வழங்குவதிலும், வருகை புரிவதிலும் ஏகப்பட்ட கட்டுபாடுகள்.குவைத்தும் அவ்வபோது பாகிஸ்தானுக்கு ஒட்டுமொத்த விசா நிராகரிப்பு தடையை விதிக்கிறது.அரசுகள் அடிக்கும் இம்மாதிரி கூத்தால் பல பாகிஸ்தானிய மக்கள் தேவையின்றி துன்பத்துகுள்ளாவது வருத்ததுகுரியது.

Monday, October 05, 2009

421.நாணயம்

"பரந்தாமன் ட்ரான்ஸ்போர்ட்ஸ் ரிலேஷன்ஷிப்பை கான்சல் செய்துடலாம்" இளநீர் குடித்தபடி அமைதியாக சொன்னார் அப்பா.

"என்னாப்பா சொல்கிறீர்கள்?" அதிர்ச்சியோடு நிமிர்ந்தேன். அது ஒருவருட இருவருட உறவல்ல.முப்பது வருட உறவு.

"தேங்காய உடைச்சு தரட்டுமா சார்/" இளநி விற்கும் கிழவனார் பரிவோடு கேட்டார்.

"வேண்டாம்.மிச்சம் சில்லரைய குடு" என ஐம்பது ரூபாய் தாளை நீட்டினார் அப்பா.

"சில்லறை இல்லையே சார்" எனறபடி கிழவனார் மடியை தடவியபடி சில்லறை மாற்ற பக்கத்து கடைக்கு போனார்.

"பிசினஸ்ல செண்டிமெண்ட் கூடாதுடா செந்தில்" அப்பா என் முதுகை தட்டினார்."பரந்தாமன் என் கூட பிறந்த தம்பிமாதிரி.தலை போகும் நேரத்தில் எல்லாம் காசை காசுன்னு நினைக்காம உதவியிருக்கான்.ஆனால் புதுசா வந்திருக்கற சிவிஆர் கம்பனி நமக்கு பரந்தாமனை விட சுமார் 20% குறைவான மார்ஜினில் சரக்குகளை எடுத்து போவதா கொடேஷன் தந்திருக்காங்க.யோசிச்சு பாரு..வருஷத்துக்கு 20 கோடி மிஞ்சும்.."

"நம்ம வருட லாபம் 100 கோடி.20 கோடி ஒண்ணும் பெரிய விஷயமில்லை.இந்த நாற்பது வருஷமா பரந்தாமன் அங்கிள் நம்ம போட்டியாளர்கள் எத்தனையோ பேர் கூப்பிட்டப்ப அவர்கள் சரக்கை எடுக்க மறுத்திருக்கிறார்.இப்ப நாம கான்சல் செய்தா அவர் பிசினஸ் அடுத்த நிமிடம் காலி.."

"20 கோடின்னா உனக்கு அத்தனை இளப்பமா?காசோட அருமை உனக்கு தெரியுமாடா?" அப்பா கோபத்துடன் கத்தினார்.

"இல்லப்பா...அவருக்கும் நமக்கும் மத்தியில் "உனக்கு நான், எனக்கு நீன்னு" எழுதப்பட்டாத ஒப்பந்தம் இருக்கு.நீங்க கம்பனி ஆரம்பிச்ச புதுசுல ரெண்டுபேரும் பேசி வெச்சுகிட்டு ஒப்பந்தம் மாறாம இன்னைவரைக்கும் நடந்துவந்திருக்கீங்க.இப்ப திடீர்னு வார்த்தை மாறினா நியாயமாப்பா?"

"வார்த்தை என்னடா பெரிய வார்த்தை?பிசினஸ்ல இன்னைக்கு சொன்னது அடுத்த நிமிடம் உண்மையில்லை.இங்கே காசுதாண்டா கடவுள்.வார்த்தை இல்லை.." அப்பா இளநீரை கீழே விட்டெறிந்தார்.காரில் ஏறினார்.

தலைகுனிந்தபடி காரில் ஏறினேன்.

"ஒவ்வொரு பைசாவும் முக்கியம்டா முக்கியம்.20 கோடி ஒண்ணுமில்லை, எப்பவோ கொடுத்த வாக்குறுதி தான் முக்கியம்னு அசால்டா சொல்றியே? உன்னை நம்பி இத்தனை பெரிய கம்பனிய எப்படிடா ஒப்படைப்பேன்?"

எனக்கு பேச பதிலே கிடைக்கவில்லை.

கார் ரயில்வே சிக்னல் ஒன்றில் நின்றது.

கார் கண்னாடியை யாரோ தட்டினார்கள்.திறந்தேன்.

"மீதம் சில்லறை வாங்காம வந்துட்டியே கண்ணு.நான் பதறி அடிச்சுட்டு சைக்கிள எடுத்துட்டு ஓடியாந்தேன்" இளநிகடை கிழவர் மீதம் முப்பது ரூபாயை நீட்டினார்.

"முப்பது ரூபாயை திருப்பி தரவா கடையை விட்டுட்டு இத்தனை தூரம் வந்தாய்?" அப்பா ஆச்சரியமானார்."முப்பது ரூபாய் எனக்கு பிச்சைகாசு பெரியவரே..அதை திருப்பிதர கடைய விட்டுட்டு ஓடிவந்த நேரத்தில் எவனாவது இளநியை திருட்டிட்டு ஓடியிருந்தா என்ன செய்வீர்கள்?"

"சில்லரை தருவதா சொல்லிட்டு போனேன்.யாவாரம்னா சொன்ன வார்த்தையை காப்பாத்தணும் இல்லீங்களா?" என்றார் பெரியவர்.

நிமிர்ந்தார் அப்பா.

"இளநி திருட்டு போயிருந்தா போயிட்டு போவுதுங்க.நாணயத்தை தவறவிட்டா நாளைக்கு யாருங்க எங்கடைக்கு வந்து யாவாரம் செய்வாங்க?"

அப்பா கண் இமைக்காமல் அவரையே பார்த்தார்

"வர்ரேனுங்க..." பெரியவர் விடை பெற்றார்.

அப்பா திரும்பி என்னை பார்த்தார். "ஏழை ஏன் ஏழையாகவே இருக்கிறான், பணகாரன் ஏன் பணகாரனாக இருக்கிறான் என்பது புரிகிறதா?" என்று கேட்டார்.

நான் தலையை ஆட்டினேன்.

"செண்டிமெண்ட், வெறும் செண்டிமெண்ட்டை வைத்து வியாபாரம் செய்யமுடியாது.." அப்பா தலையை வேகமாக ஆட்டினார்."

ரயில்வே கேட் திறந்து கார் வேகமாக குதித்தோட துவங்கியது